Jump to content

2019 இல் தமிழ் மக்கள் பெற்றவை பெறாதவை – நிலாந்தன்…


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

2019 இல் தமிழ் மக்கள் பெற்றவை பெறாதவை – நிலாந்தன்…

January 5, 2020

2019.png?resize=800%2C348

கடந்த ஆண்டில் தமிழ் மக்கள் பெற்றவை பெறாதவை பற்றிய ஓர் ஐந்தொகை கணக்கைக் கணிப்பது என்றால் முதலில் தமிழ் மக்கள் மத்தியிலுள்ள தரப்புக்களை வகைப்படுத்த வேண்டும். தமிழ் மக்கள் மத்தியில் மூன்று பிரதான தரப்புக்கள் உண்டு.

முதலாவது கூட்டமைப்பு.

இரண்டாவது கூட்டமைப்புக்கு எதிரான அணி

மூன்றாவது சிவில் சமூகங்கள்

இவைதவிர தென்னிலங்கை மையக் கட்சிகளோடு இணங்கிச் செயற்படும் கட்சிகளும் உண்டு.

முதலில் கூட்டமைப்பு கடந்த ஆண்டு பெற்றவை எவை பெறாதவை எவையெவை என்று பார்ப்போம்.
கடந்த ஆண்டு கூட்டமைப்பைப் பொறுத்தவரை கம்பெரலிய ஆண்டுதான். தனது யாப்புருவாக்க முயற்சிகள் பிசகி விட்ட காரணத்தால் கூட்டமைப்பு அபிவிருத்தி அரசியலில் முழுமூச்சாக இறங்கிய ஒரு காலகட்டம் அதுவாகும். யாப்புருவாக்கும் முயற்சிகளில் முழு நம்பிக்கை கொண்டிருந்த சம்பந்தர் நல்ல நாள் பெருநாட்களின் போது தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதத்தில் வாக்குறுதிகளை வழங்கி வந்தார். ஆனால் அந்த நம்பிக்கைகளை மைத்திரிபால சிறிசேன கவிழ்த்து கொட்டி விட்டார். 2018டில் இடம்பெற்ற ஆட்சி குழப்பத்தோடு கூட்டமைப்பின் கனவுகள் தகர்ந்து விட்டன. இனி அரசியல் தீர்வு இல்லை என்று கண்டதும் அக்கட்சி ரணில் விக்கிரமசிங்கவோடு கூட்டுச் சேர்ந்து கம்பெரலிய அபிவிருத்தித் திட்டத்தை முன்னெடுத்தது. அதாவது வீட்டுத் சின்னத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட ஒரு இணக்க அரசியல் அது.

ஆனால் அதையும் கோட்டாபய தோற்கடித்து விட்டார். கடந்த ஆண்டின் இறுதியில் அவருக்கு கிடைத்த பெரு வெற்றியானது கூட்டமைப்பின் அபிவிருத்தி அரசியலைத் தலைகீழாக்கி விட்டது. இனி இணக்க அரசியல் செய்ய முடியாது. ஏனெனில் தமிழ் மக்கள் கோட்டாபயவுக்கு எதிராக வாக்களித்து விட்டார்கள். அந்த வாக்களிப்புக்கு கூட்டமைப்பு உரிமை கோருகிறது. ஆனால் உண்மையில் அது அவர்கள் கேட்டு பெற்ற வாக்குகள் அல்ல. தமிழ் மக்கள் இயல்பாகவே கோட்டாபய வரக்கூடாது என்று தீர்மானித்து வழங்கிய வாக்குகள் அவை.

இந்நிலையில் தமிழ் மக்கள் வழங்கிய ஆணைக்கு எதிராக புதிய அரசாங்கத்தோடு இணக்க அரசியல் செய்ய கூட்டமைப்பால் முடியாது. இனி எதிர்ப்பு அரசியலைத் தவிர அவர்களுக்கு வேறு வழி உண்டா? இவ்வாறாக கடந்த ஆண்டின் தொடக்கத்தில் இணக்க அரசியலில் வெளிப்படையாக இறங்கிய கூட்டமைப்பு ஆண்டின் முடிவில் எதிர்ப்பு அரசியலில் வந்து நிற்கிறது. மணிக் கூட்டின் பெண்டுலம் ஓர் அந்தத்தில் இருந்து இன்னொரு அந்தத்துக்கு வந்துவிட்டது. இது அந்தக் கட்சியின் வெற்றியா தோல்வியா?

இரண்டாவதாக கூட்டமைப்புக்கு எதிரான அணிகள். அரங்கில் இப்பொழுது இரண்டு அணிகள் உண்டு. ஒன்று விக்னேஸ்வரன் மற்றது கஜேந்திரகுமார். இந்த இரண்டு அணிகளையும் இணைத்து ஓர் ஐக்கிய முன்னணியை இன்று வரையிலும் கட்டி எழுப்ப முடியவில்லை. எனவே கூட்டமைப்புக்கு எதிராக ஒரு பலமான மாற்று அணியாக இந்த அணி இன்னமும் எழுச்சி பெறவில்லை.

கூட்டமைப்பு செய்வது பிழை, அது அரசாங்கத்தோடு இணக்க அரசியல் செய்கிறது, எதிர்ப்பு அரசியலைக் கைவிட்டு விட்டது, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கூட்டமைப்பு பேரம் பேசவில்லை, பேர அரசியல் ஒழுக்கம் அதனிடம் இல்லை……. என்றெல்லாம் கூட்டமைப்பை குற்றம்சாட்டிய மேற்படி கட்சிகள் அவ்வாறு பேரம் பேசுவது என்று சொன்னால் அதற்கு முதலில் மக்கள் ஆணையைப் பெறவேண்டும். மக்கள் ஆணையைப் பெற்ற பிரதிநிதிகளோடுதான் அரசாங்கமும் பேசும் வெளிநாடுகளும் பேசும். ஐநா போன்ற உலகப் பொது அமைப்புக்களும் பேசும்.  எனவே கூட்டமைப்பு செய்வது பிழை என்றால் சரியானதை செய்ய முற்படும் கட்சிகள் தங்களுக்கிடையே ஐக்கியப்பட்டு மக்கள் ஆணையைப் பெற வேண்டும.

ஆனால் அப்படி ஒரு ஜக்கியம் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இன்று வரையிலும் ஏற்படவில்லை. எனவே தமிழ் மக்கள் ஒரு திரட்சியாக மக்கள் ஆணையை வழங்கக்கூடிய வாய்ப்புகளும் குறைவு. அதாவது தமிழ் தரப்பு இப்பொழுது மூன்றாக உடைந்து கிடக்கிறது. இதனால் தமிழ் வாக்குகள் மூன்றாக சிதறிப்போகும். தென்னிலங்கைக் கட்சிகள் அந்த வாக்குச் சிதறலை நன்கு பயன்படுத்தி தமக்குரிய பிரதிநிதித்துவத்தை பெறக்கூடும். தமிழ் கட்சிகளுக்கு கிடைக்கக்கூடிய போனஸ் ஆசனங்களும் குறையக் கூடிய வாய்ப்புகள் தெரிகின்றன. ஆக மொத்தத்தில் தமிழ்க் கட்சிகள் சிதறிக் காணப்படுகின்றன. அது தமிழ் வாக்குகளையும் சிதறடிக்கும்.

மூன்றாவது தரப்பு தமிழ் சிவில் சமூகங்கள். கடந்த ஆண்டில் தமிழ் சிவில் சமூகங்கள் தமிழ்க் கட்சிகளின் மீது தார்மீகத் தலையீடு ஒன்றை செய்தன. குறிப்பாக ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் மக்கள் பேரவையால் தொடங்கி வைக்கப்பட்ட சுயாதீனக் குழு தமிழ் கட்சிகளின் மீது தார்மீகத் தலையீடு ஒன்றை செய்ய முற்பட்டது. திருமலை ஆயர், யாழ் கத்தோலிக்க ஆதீனத்தின் குரு முதல்வர், திருகோணமலை தென் கயிலை ஆதீனத்தின் குருமுதல்வர், யாழ்ப்பாணம் சின்மயா மிஷனின் குரு முதல்வர் இவர்களோடு தமிழில் இப்பொழுது எழுதிக் கொண்டிருக்கும் சில கருத்துருவாக்கிகளும் இணைந்து உருவாக்கியதே மேற்படி சுயாதீனக் குழுவாகும்.

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை நிறுத்துமாறு தமிழ் கட்சி தலைவர்கள் மீது மேற்படி சுயாதீனக் குழு தலையீடு செய்தது. தமிழ் கட்சிகளின் மீது இப்படி ஒரு குழு தார்மீக தலையீடு ஒன்றை செய்ய முடிந்தமை என்பது அரிதானது. அது என்ன விளைவுகளை ஏற்படுத்தியது என்பதை விடவும் அப்படி ஒரு நடைமுறை தமிழ் அரசியலில் உருவாக்கியமை தமிழ் ஜனநாயகத்தை பொறுத்தவரையிலும் செழிப்பான ஒரு மாற்றம்.

சுயாதீனக் குழுவின் தலையீட்டிலிருந்து தப்ப முயன்ற தமிழ் கட்சிகளுக்கு யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் ஒரு நகர்வு வாய்ப்பைக் கொடுத்தது. சுயாதீன குழுவின் முயற்சிகளை ஓரங்கட்ட முயன்ற சில புலம்பெயர்ந்த தமிழ் தரப்புக்களும் பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து மேற்கொண்ட ஒரு முயற்சி தமிழ் கட்சித் தலைவர்களுக்கு தப்பிச் செல்ல ஒரு வழியைத் திறந்துவிட்டது.

இதன் விளைவாக ஏற்பட்டதே ஆறு கட்சிகள் சேர்ந்து உருவாக்கிய 13 அம்ச கோரிக்கைகள் அடங்கிய ஓர் ஆவணம் ஆகும். அந்த ஆவணம் ஒரு வெற்றிகரமான அடைவு. திம்பு கோரிக்கைகளிலிருந்து தொடங்கி தமிழ் மக்கள் தொடர்ச்சியாக முன்வைத்து வரும் தமது கோரிக்கைகள் அடங்கிய ஆவணங்களில் ஆகப் பிந்தியது அது. இந்த அடிப்படையில் அந்த ஆவணத்துக்கு ஒரு வரலாற்று முக்கியத்துவம் உண்டு.

எனினும் அந்த ஆவணத்தை உருவாக்கும் முயற்சிகளில் முன்னின்று உழைத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியை இறுதிவரை கூட்டுக்குள் வைத்திருக்க முடியவில்லை. இதனால் அந்த ஆவணம் வெளியிடப்பட்ட பொழுது அதில் 5 கட்சிகளை கையெழுத்திட்டன. அந்த ஆவணத்தில் கையெழுதிட்ட பின் அங்கு பிரசன்னமாகியிருந்த சிறீகாந்தா பல்கலைக்கழக மாணவர்களைப் பார்த்து பின்வரும் தொனிப்படக் கருத்துத் தெரிவித்துள்ளார்….ஒரு தசாப்தத்துக்கு முன் ஆயுதங்களோடு விடுதலைப்புலிகள் இயக்கம் சாதித்த ஒரு ஐக்கியத்தை இப்பொழுது நீங்கள் ஆயுதமின்றிச் சாதித்திருக்கிறீர்கள்…என்று அவர் அப்படிக் கூறிய போது சுமந்திரன் அதை ஆமோதித்துக் கை தட்டியிருக்கிறார். அங்கிருந்த பலரும் அதை ஆமோதித்திருக்கிறார்கள்.

ஆனால் கூட்டமைப்பு கடைசி நேரத்தில் அந்த ஆவணத்தை அனாதை ஆக்கியது. அந்த ஆவணத்தை மீறி அது சஜித் பிரேமதாசவை நிபந்தனையின்றி ஆதரிப்பது என்ற முடிவை எடுத்தது. இதனால் ஐந்து கட்சிகளின் கூட்டும் உடைந்தது. அவ்வாறு தான் உருவாக்கிய கூட்டையும் அது வெளியிட்ட 13 அம்ச கோரிக்கைகள் அடங்கிய ஆவணத்தையும் பாதுகாப்பதற்கு பல்கலைக்கழக மாணவர்களால் முடியவில்லை. அதற்குரிய கொள்ளளவும் முதிர்ச்சியும் அவர்களிடம் இருக்கவில்லை. சுயாதீன குழு அந்த முயற்சியை தொடர்ந்து முன்னெடுத்திருந்தால் சில சமயம் வேறுவிதமான திருப்பங்கள் ஏற்பட்டிருக்கக் கூடும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக சுயாதீன குழுவை வெட்டியோடி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட நகர்வு எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இப்படிப் பார்த்தால் கடந்த ஆண்டு தமிழ் சிவில் சமூகம் ஆணித்தரமாக ஒரு நகர்வை முன்னெடுத்திருக்கிறது. முன்னுதாரணம் மிக்க இந்நகர்வின் மூலம் தமிழ் கட்சிகளின் மீது தமிழ் சிவில் சமூகங்கள் நிர்ணயகரமான தலையீட்டை செய்ய முடியும் என்பதனை சுயாதீனக் குழு நிரூபித்தது. எனவே கடந்த ஆண்டு முழுவதிலும் தமிழ் தரப்பில் முன்னெடுக்கப்பட்ட எல்லா அரசியல் நகர்வுகளையும் தொகுத்துப் பார்த்தால் பின்வரும் விடயங்கள் தெளிவாக தெரியவரும.

முதலாவது கூட்டமைப்பு அதன் தீர்வு மற்றம் அபிவிருத்தி முயற்சிகளில் தோல்வி கண்டுள்ளது. அக்கட்சி மேலும் உடைந்திருக்கிறது. டெலோ இயக்கத்தின் ஒரு பகுதி அக்கட்சியிலிருந்து உடைந்து ஒரு புதிய கட்சியை உருவாக்கி இருக்கிறது.

அதேசமயம் மாற்று அணிக் கட்சிகள் தங்களுக்கிடையே ஐக்கியத்தை உருவாக்கத் தவறிவிட்டன. கூட்டமைப்புக்குச் சவாலாக ஒரு பலமான ஜக்கிய முன்னணி இன்னமும் தோன்றவில்லை.

இவை இரண்டையும் தவிர தமிழ் சிவில் சமூகங்கள் கட்சிகளின் மீது தார்மீகத் தலையீடு செய்யும் ஒரு முன்னுதாரணம் காட்டப்பட்டிருக்கிறது. இவை அனைத்தையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் கிடைப்பது என்ன?

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ஒரு முன்னுதாரணத்தை காட்டியிருக்கிறார்கள். சிங்கள மக்களைப் போலவே அவர்களும் ஒரு பேரலையாகத் திரண்டு தமது ஆணை எதுவென்பதைத் துலக்கமாகவும் கூர்மையாகவும் வெளிக்காட்டினார்கள். அத்தேர்தலில் ஓர் இன அலை மேலெழுந்த போது அந்த அலைக்குள் தென்னிலங்கை மையக் கட்சிகளை ஆதரித்த தமிழ் கட்சிகளின் வாக்கு வங்கிகளும் முஸ்லிம்களுக்கு எதிராக தமிழ் வாக்குகளைத் தாமரை மொட்டை நோக்கிச் சாய்த்துச் செல்ல முற்பட்ட தமிழ் கட்சித் தலைவர்களின் தனிப்பட்ட வாக்கு வங்கிகளும் கரைந்து போய்விட்டன. எல்லாவிதமான எழுச்சிகளுக்கும் வீழ்ச்சிகளுக்கும் அப்பால் தமிழ் மக்கள் ஒரு பேரலையாகத் திரள்வார்கள் என்பதற்கு ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் அகப் பிந்திய எடுத்துக்காட்டுககளாகும்.

தமிழ்க் கட்சிகள் நான்குக்கு மேற்பட்ட நிலைப்பாடுகளோடு காணப்பட்ட ஒரு தேர்தலில் தமிழ் மக்களோ ஒரு பெரிய திரட்சியைக் காட்டினார்கள். இப்படிப் பாத்தால் தமிழ் மக்கள் தன்னியல்பாகத் திரள்வார்கள் என்ற மற்றொரு முன்னுதாரணத்தைக் காட்டிய ஆண்டு கடந்த ஆண்டாகும். ஆனால் அவ்வாறு ஜனாதிபதி தேர்தலில் ஒரு பேரலையாகத் திரண்ட மக்கள் கூட்டம் இன்னும் சில மாதங்களில் வரவிருக்கும் தேர்தலகளில் மூன்றுக்கு மேற்பட்ட துண்டுகளாகச் சிதறி நிற்கப் போகிறதா? ஒரு நாடாளுமன்றத் தேர்தலும் மாகாணசபைத் தேர்தலும் நடக்க இருக்கும் ஒராண்டில் தமிழ்க் கட்சிகள் சிதறிக் கிடக்கின்றன என்பது எதைக் காட்டுகிறது? ஜனாதிபதித் தேர்தலில் இனமாகத் திரண்டு நின்ற மக்களுக்கு தலைமை தாங்க தமிழ்க் கட்சிகளால் முடியவில்லை என்பதையா?   #தமிழ்க்கட்சிகள் #மாகாணசபை #தமிழ்மக்கள் #கூட்டமைப்பு

 

http://globaltamilnews.net/2020/135771/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
    • நூறாவ‌து சுத‌ந்திர‌ தின‌த்தின் போது இந்தியா என்ற‌ நாடு இருக்காது என்று ப‌ல‌ர் சொல்லி கேள்வி ப‌ட்டு இருக்கிறேன்.............மோடியே போதும் இந்தியாவை உடைக்க‌............இந்தியாவில் வ‌சிக்கும் முஸ்லிம்க‌ளும் இந்திய‌ர்க‌ள் ஆனால் மோடி முற்றிலும் முஸ்லிம்க‌ளுக்கு எதிராக‌ இருக்கிறார் ......................நீங்க‌ள் சொன்ன‌து போல் சோவியத் யூனியன் ம‌ற்றும் முன்னால் யூகேசுலோவியா உடைந்த‌து போல் இந்தியாவும் உடையும்.......................இன்னும் 10வ‌ருட‌ம் மோடி என்ற‌ கேடி ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்து ஆட்சியை பிடித்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் ஆயுத‌ம் தூக்கி ச‌ண்டை பிடிப்பின‌ம் பிற‌க்கு ஜ‌ம்மு க‌ஸ்மீர் போல் எல்லா மானில‌மும் வ‌ந்து விடும்.......................
    • ஆரம்பத்தில் புலிகளை சாடியே தொடர் சென்றது, ஆனால் அதில் வந்த காலபதிவுகள்  பெரும்பாலும் உண்மையாகவே இருந்ததினால் புலம்பெயர் நாடுகளில் அதற்கான வாசகர்கள் படிப்படியாக அதிகமாயினர். தொடரின் ஆரம்பத்தில் எந்த கிட்டுவை சாடி வெளிவந்ததோ பின்னாளில் அதே கிட்டுவை ஆஹா ஓஹோ எனு புகழ்ந்து அற்புதன் எழுத தொடங்கினார் படிப்படியாக புலிகள் சார்பு செய்திகளை வெளியிட  தொடங்கினார் அற்புதன், ஒருகட்டத்தில் புலிகளின் உத்தியோகபூர்வ பத்திரிகை ரேஞ்சுக்கு புலி சார்புநிலைக்கு  வந்தது தினமுரசு. தினமுரசு இதழின் கடல்கடந்த விற்பனை எகிற தொடங்கியது,  காலப்போக்கில்  ஐரோப்பிய அமெரிக்க தமிழர்கள் தினமுரசு பத்திரிகையின் வரவுக்காக தவம் கிடக்க தொடங்கினர், புலம்பெயர் தேசத்தில் இலங்கையிலிருந்து வரும் ஒரு நாளிதழுக்காக  மக்கள் அலை மோதியது முதலும் கடைசியும் தினமுரசுக்கு மட்டுமேயாகதான் இருக்க முடியும். கொஞ்சம் லேற்றா போனால் விற்று முடிந்துவிடும் நிலைக்கு இருந்தது. ஜெயசிக்குறு ஆரம்ப காலகட்டத்தில் அசரடிக்கும் துல்லியமான கணிப்புக்களை வெளியிட்டார் அற்புதன், அந்த காலகட்டத்திலேயே கொல்லப்பட்டார். அற்புதனின் புலி சார்பு நிலை தொடருக்கு புலம்பெயர் தேசத்தில் தினமுரசுக்கு எதிர்பாராமல் கொட்டிய வெளிநாட்டு காசுதான் பிரதானமான காரணம். அதனால் டக்ளசினால் எச்சரிக்கப்பட்டதாகவும், கட்சிவேறு பத்திரிகை தொழில்வேறு என்று அற்புதன் டக்ளசுடன் முரண் பட்டதாகவும் அதனாலேயே டக்ளஸ் குழுவினால் சுட்டுகொல்லப்பட்டதாகவும் கதை உலாவியதுண்டு. அதை உறுதிப்படுத்தும் விதமாக ஜெயசிக்குறு சமரில் புலிகளின் வீரம்பற்றி வந்த தொடர் , அற்புதன் கொல்லப்பட்ட பின்னர் வந்த இதழ்களில் ’’ பூனையொன்றை ஒரு அறையில் மூடிவிட்டு ஒரு ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டு மிரட்டினால், அது ஜன்னல் வழியாக ஓடிவிடும்,  படையினரின் பின்வாங்கலுக்கு அதுதான் காரணம்’’ மற்றும்படி புலிகள் வீரம் என்றெல்லாம் கிடையாது என்ற அர்த்ததில் செய்தி வந்தது, அத்துடன் புலி சார்பாக செய்தி வெளியிடுவதும் நின்று போனது கூடவே தினமுரசு வியாபாரமும் படுத்துக்கொண்டது, அதன்போதே புரிந்துவிட்டது அற்புதன் என்ன காரணத்துக்காகவும் யாராலும் கொல்லப்பட்டிருப்பார் என்பது, உலவிய வதந்தியும் ஓரளவு உண்மையாக போனதாகவும் பேசிக்கொண்டார்கள். ஆனால் புலிகள் அற்புதன் புலிசார்பு நிலையில் தொடர் எழுதினாலும் அதை கண்டுகொள்ளவேயில்லை,  அதனால்தான் அவர் கொல்லப்பட்டபோது புலிகளின் குரல் செய்தியில் ‘’பாராளுமன்றத்தில்  அவசரகாலநிலை சட்டத்துக்கு ஆதரவாக கையுயர்த்திவிட்டு வெளியே வந்து போராட்டத்திற்கு ஆதரவாக எழுதும் அற்புதன் கொல்லப்பட்டார் ‘’ எனு செய்தி பகிர்ந்தார்கள்.  
    • உற‌வே நானும் ப‌ல‌ வ‌ர‌லாறுக‌ளை தேடி தேடி ப‌டிச்ச‌ நான் ஆனால் நான் ஒரு போதும் இல‌வ‌ச‌ அறிவுறை சொல்வ‌து கிடையாது................அதுக்காக‌ உங்க‌ளை த‌ப்பா சொல்லுகிறேன் என்று நினைக்க‌ வேண்டாம் பொதுவாய் சொல்லுறேன்................. 500வ‌ருட‌த்துக்கு முத‌ல் உல‌க‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று பாட‌சாலையில் ப‌டித்த‌ கால‌த்தில்  டெனிஸ் வாத்தியார் எங்க‌ளுக்கு சொல்லி த‌ந்த‌வ‌ர்................. நானோ புல‌வ‌ர் அண்ணாவோ இந்தியா மீது இருக்கும் கோவ‌த்தில் எழுத‌ வில்லை கேடு கெட்ட‌ ஆட்சியால‌ர்க‌ளால் இந்தியா என்ற‌ நாடு நாச‌மாய் போச்சு அத‌க்கு முத‌ல் கார‌ண‌ம் இந்திய‌ அள‌வில் ஊழ‌ல்...............ஊழ‌ல் இருக்கும் நாடு சிறு முன்னேற்ற‌த்தை கூட‌ காணாது................. ஒரு சில‌ சிற‌ப்பு முகாமில் வ‌சிக்கும் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு க‌ழிவ‌ரை இல்லை அதுக‌ள் காட்டுக்கு போக‌ வேண்டிய‌ நிலை.............இது தான் திராவிட‌ம் ஈழ‌ ம‌க்க‌ளை  க‌வ‌ணிக்கும் ல‌ச்ச‌ன‌ம்.................
    • கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பற்றி சில வரிகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்து, மறந்துவிட்டேன். நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.........👍
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.