Jump to content

கலைஞர் கருணாநிதியின் குடும்பம்-'புருஷோத்தம' நாடகம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் இனிய வலைத்தமிழ் மக்களே...!

"புரட்டுக்காரியின் உருட்டு விழிகளில் உலகைக் காண்பவரே.." என்று என்றைக்கோ 'மனோகரா' படத்திற்காக கலைஞர் கருணாநிதி எழுதிய வசனம், இன்று அவரையே திரும்பிப் பார்க்கவும், படிக்கவும் வைத்திருக்கிறது.

'அன்பான அப்பா', 'பாசமான தாத்தா' என்று தமிழகம் முழுவதும் அறியப்பட்ட கலைஞர் கருணாநிதிக்கு, தற்போது ஏற்பட்டுள்ள சோதனை குறித்து தமிழகம் முழுக்கவே, சாலமன்பாப்பையா தலைமை தாங்காதப் பட்டிமன்றங்களாக ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கிறது.

'தினகரன்' பத்திரிக்கை தாக்கப்பட்டபோது தயாநிதி மாறன் டெல்லியில் இருந்தார். அங்கிருந்தே கலைஞரைத் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். அப்போதே "தலைவர் ரொம்பக் கோபமா இருக்கார்.. நீங்க மெட்ராஸ¤க்கு வந்துட்டு, அப்புறமா பேசுங்க.." என்று கலைஞரின் பி.ஏ. சண்முகநாதனே தயாநிதிக்கு அட்வைஸ் செய்துள்ளார்.

அதே போல் அன்று மாலை சென்னை வந்தவுடனேயே தயாநிதி கலைஞரைச் சந்திக்க முயன்றுள்ளார். "இப்போது வர வேண்டாம்.. நிலைமை சரியில்லை.. நீங்கள் வீட்டில் இருங்கள். பிறகு பார்க்கலாம்.." என்று சொல்லியிருக்கிறார்கள்.

பின்பு மறுநாள் கோபாலபுரம் சென்றால் அடித்தாலும் அடித்துவிடுவார்கள் என்பதால் காத்திருந்து மதியம் லன்ச்சுக்கு கலைஞர் சிஐடி வீட்டுக்கு வந்த பின்பு அங்கு சென்றுள்ளார் தயாநிதி. கலாநிதி வராமல் தயாநிதி மட்டுமே வந்திருக்கிறார் என்பதையறிந்தவுடனேயே மிக கோபமாகிவிட்டாராம் கலைஞர். "நான் பார்க்க முடியாதுன்னு சொல்.." என்று சொல்லியிருக்கிறார் கலைஞர்.

பிரதமர் வீட்டில்கூட பின் வாசல் வழியாக உள்ளே நுழையும் பாக்கியம் பெற்ற தயாநிதிக்கு.. இதே வீட்டில்கூட மீன் குழம்பை செய்துவைத்துவிட்டுத் தனக்காக அனைவரும் காத்திருந்ததையும் நினைவுபடுத்திப் பார்த்த தயாநிதிக்கு.. இன்றைய அனுபவம் மிகவும் அதிர்ச்சியையும், சோகத்தையும் தந்திருக்கக் கூடும். கூடுதலாக ராஜாத்தியம்மாளும், கனிமொழியும் மாடியைவிட்டு இறங்கி வரவேயில்லை என்கிறார்கள்.

"இனிமே என்னைப் பார்க்க வர்றதுன்னா எதுக்கு, என்ன விஷயமான்னு அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிட்டு வந்து பார்க்கச் சொல்லு.. இப்ப பார்க்க முடியாது. போகச் சொல்லுங்க.." என்று கலைஞர் உறுதியுடன் சொல்ல இதை அப்படியே வெளியில் காத்திருந்த தயாநிதியிடம் சொல்லியிருக்கிறார்கள். ஆனாலும் தாத்தாவைப் பார்த்தே தீருவது என்ற வைராக்கியத்தில் வெகுநேரம் பொறுமையாக அமர்ந்திருந்தாராம் தயாநிதி.

அறிவாலயம் செல்வதற்காகக் கிளம்பி வெளியே வந்த கலைஞர் தயாநிதியைப் பார்த்தவுடன், "என்னடா..? யாருன்னு நினைச்சு யார்கிட்ட விளையாடுறீங்க.. அழகிரி யார் தெரியுமில்ல. என் மகன்.. என் மகன்டா.." என்று பேசிக் கொண்டே சென்றுவிட்டாராம். நாகரிகம் தெரிந்த பேரன் அப்படியே நிற்க.. தாத்தா போயோ போய்விட்டார்.

பின்பு அன்றிரவு மீண்டும் கலைஞருடன் போனில் பேச முயன்றுள்ளார் தயாநிதி. ஆனால் இரண்டு முறை லைனில் வர மறுத்த முதல்வர், மூன்றாவது முறை தன் பி.ஏ.சண்முகநாதன் மூலமாகவே, "என்ன விஷயம் என்று கேளுங்கள்.." என்று கூறினாராம். அவரிடம், "நான் ராஜினாமா செய்யட்டுமா?" என்று கேட்க வேண்டும் என்று தயாநிதி கேட்டுள்ளார். இந்த விஷயத்தை முதல்வர் காதில் போட்டுள்ளார் சண்முகநாதன். ஆனால் முதல்வரோ, "அதை ஏன் என்னிடம் கேட்க வேண்டும்? அவரையே முடிவெடுத்துக் கொள்ளச் சொல்லுங்கள்.." என்று கறாராகச் சொல்லியிருக்கிறார்.

பொன்விழா நிகழ்ச்சியைக் காண்பதற்காக சென்னை வந்த ரவுடி அழகிரி, உள்ளாட்சித் துறை அமைச்சரான தன் தம்பி ஸ்டாலினைத் துணைக்கு அழைத்துக் கொண்டு வந்து கலைஞரை சந்தித்தாராம்.

"அவனைத்(தயாநிதி மாறனை) திடீர்ன்னு எம்.பியாக்குனீங்க.. அப்படியே மினிஸ்டராக்கிட்டீங்க.. அப்பல்லாம் ஏன் அந்தச் சின்னப் பயலுக்கு மந்திரி பதவி கொடுக்கிறீங்கன்னு நாங்க ஒண்ணும் கேட்கலியே.. ஆனால் நான், ஸ்டாலின், கனிமொழி மூணு பேரும் நெருக்கமாகுறதைப் பார்த்திட்டு எங்களைப் பிடிக்காம, இப்படி சர்வே போட்டு பிரச்சினையைக் கிளப்புகிறார்கள். அதுவும் உங்க பொன்விழாவின்போது இந்த சர்வேயை ஏன் போடணும்..?

பொன்விழா நடத்தக்கூடாதுன்னு ஜெயலலிதாதான் சொல்லிட்டு வர்றார். அவர் பிரச்சாரத்திற்குத் தீனி போடுவதைப் போல் இந்த நேரம் பார்த்து ஏன் சர்வேயை போட வேண்டும்? இப்ப உங்களுக்கு பிள்ளைகளாகிய நாங்க வேணுமா? அவனுக வேணுமான்னு நீங்களே முடிவு பண்ணிக்குங்க.." என்று மூத்த மகன் என்கிற தோரணையில் மிரட்டியே இருக்கிறார் ரவுடி அழகிரி.

இந்தப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர முதல்வரின் மகள் செல்வி, முதல்வரின் அக்கா(முரசொலி மாறனின் அம்மா) ஆகியோரால்தான் முடியும் என்கிறார்கள்.

இரண்டு நாட்களுக்கு முன்னால்தான் தன் அம்மா தயாளு அம்மாவின் சிகிச்சைக்காக அவரை லண்டன் அழைத்துச் சென்று திரும்பி பத்திரமாக அழைத்து வந்த செல்வி, இந்தச் சம்பவத்தால் படு அப்ஸெட்டாகிவிட்டாராம்.

அவருக்கோ அழகிரிக்கு அப்பா ஓவராக சப்போர்ட் செய்வதாக பீலிங். இதை அப்பாவிடமே சொல்ல.. தந்தை என்றைக்கும் இல்லாத திருநாளாக "எனக்குக் கட்சிதான் பெரியது.." என்று கடிந்து கொண்டாராம். கோபமான செல்வி அப்பாவின் பொன்விழா நிகழ்ச்சியையே புறக்கணித்துவிட்டாராம். அநேகமாக செல்வி, தன் தந்தை கலைஞரின் நிகழ்ச்சியைப் புறக்கணிப்பது தி.மு.க. வரலாற்றிலேயும், அவரது சொந்த வாழ்க்கையிலும் இதுவே முதல் முறை என்கிறார்கள்.

அதே நேரம் செல்வியின் வீட்டில் வசித்து வரும் கலைஞரின் அக்கா(முரசொலி மாறனின் அம்மா) மட்டுமே கலைஞரிடம் உரிமையாக சமாதானத்திற்குச் சென்றுள்ளார். "ஏதோ சின்னப் பயலுக.. செஞ்சுட்டானுக.. எம்புள்ளைக்கே நீதான் அப்பா மாதிரி இருந்து எல்லாத்தையும் செஞ்ச.. இப்ப அந்தப் புள்ளைகளுக்கு அப்பாவும் இல்ல. நீதான எல்லாம் செய்யணும்.. அவங்களைக் கை விட்ராதப்பா.." என்று உருக்கமாக வேண்டிக் கொண்டாராம்..

இவ்விவகார வெடிப்பின் பின்னணியில் இருப்பது மாறன் குடும்பத்தினரின் வளர்ச்சிதானாம்.

முரசொலி மாறனின் தம்பியும், கலைஞரின் மூத்த மகள் செல்வியின் கணவருமான முரசொலி செல்வம், தற்போது பெங்களூரில் தங்கியிருந்து சன் நெட்வொர்க்கின் உதயா டிவி நிர்வாகத்தைக் கவனித்து வருகிறார். தற்போதைய நிலையில் சன் டிவியில் முரசொலி செல்வத்தின் குடும்பத்திற்கு மட்டுமே பங்கு உண்டு. அதுவும் கோடிக்கணக்கில்..

ஆனால் கலைஞரின் மற்ற வகை சொந்தங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் கலைஞரின் முதல் மனைவி பத்மாவதியின் மூலமாகப் பிறந்த மூத்த பிள்ளை மு.க.முத்து தறுதலையாகிப் போனது ஊர் அறிந்த ரகசியம். மு.க.முத்துவிற்கு இரண்டு பிள்ளைகள். மு.க.முத்துவின் மகன் அறிவுநிதி டாக்டராக இருக்கிறார். மாதச் சம்பளத்தில் ஜி.ஜி.மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். இவருடைய சகோதரிக்கும் திருமணமாகி அவரும் தனியாக இருக்கிறார். இவர்கள் இருவரின் குடும்பத்திற்கும் ஆக வேண்டியவைகள் அனைத்தையும் கருணாநிதி தானேதான் செய்து வந்தார்.

இப்படி ரத்தச் சொந்தத்தில் பிறந்தவர்கள் மாதச் சம்பளத்தில் உழைப்பவர்களாக இருக்க... ஒருவகையில் பேரனானவர்கள் ஆசியாவிலேயே பெரும் கோடீஸ்வரர்களாக இருப்பதுதான் குடும்பத்திற்குள் வினையை உருவாக்கியிருக்கிறது.

மு.க.முத்துவின் மகன் குடும்பத்துடன் ஸ்டாலினுக்கும் இன்றுவரையில் தொடர்பில்லை. மு.க.முத்து மகன் அறிவுநிதியின் திருமணம் தஞ்சாவூரில் நடந்தபோது அதற்கு வராதவர்கள் ஸ்டாலின், கலாநிதி, தயாநிதி ஆகியோர்தான் என்கிறார்கள்.

ஆனால் அழகிரியும் மு.க.முத்துவும் நெருங்கிய நண்பர்கள். தா.கிருட்டிணன் கொலை வழக்கில் அழகிரி கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் இருந்தபோது மூன்று முறை வந்து பார்த்தார் மு.க.முத்து.

இந்த மதுரை தினகரன் மேட்டர் வெடித்த பிறகு தயாநிதி மாறனை கட்சியும், கருணாநிதியும் புறக்கணித்த பிறகு முதல்முறையாக வெளிச்சத்திற்கு வந்துள்ளார் அறிவுநிதி.

சட்டசபையில் கலைஞரின் பொன்விழாக் கூட்டத்திற்கு தன் மனைவி, பிள்ளைகளுடன் வந்திருந்த அறிவுநிதி சட்டசபை மாடத்தில் அமர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இன்னொரு மாடத்தில் ரவுடி அழகிரி தன் குடும்பத்தினருடன் அமர்ந்திருந்தார்.

ஆக.. "இனிமேல் தூரத்துச் சொந்தங்களுக்கு அதிகாரமில்லை.. அதிகாரம் முழுவதும் எங்களுக்குத்தான்.." என்று ரத்த வழிச் சொந்தங்கள் முடிவு கட்டிவிட்டார்கள். இந்தக் கூட்டணியில்தான் இவர்கள் கனிமொழியை இணைத்துக் கொண்டார்கள். இதுவே இப்போது குழப்பத்திற்கு ஒரு காரணமாகிவிட்டது.

மூத்த மகள் செல்விக்கு கனிமொழியை முன்னிலைப்படுத்துவது பிடிக்காமல் போய்விட்டது. காரணம் பழங்கால, அரதப் பழசான கதையான 'சின்ன வீட்டு'க்குப் பிறந்தவர் என்பதால்தான். கலைஞரின் மூன்றாவது திருமணத்தை அகில உலகமும் ஏற்றுக் கொண்டாலும், இன்னமும் கலைஞரின் இரண்டாவது மனைவி தயாளு அம்மையார் ஏற்றுக் கொள்ளவில்லை. ராஜாத்தி அம்மையாருடன், இதுவரை தயாளு அம்மையார் ஒரு வார்த்தைகூட பேசிக் கொண்டதில்லை.

ஆலிவர் ரோடு வீட்டில் நடந்த கனிமொழி-அரவிந்தன் திருமணத்தின்போதுகூட தயாளு அம்மையார் அந்த வீட்டுக்கு வரவில்லை. அப்போது பெண்ணின் தோழியாக இருந்தவர் அக்கா செல்விதான். அதன்பின் கன்னிமாரா ஹோட்டலில் நடந்த ரிசப்ஷனுக்கு மட்டுமே வந்து தலையைக் காட்டினார் தயாளு அம்மையார்.

இப்படி ஆலிவர் ரோடு வீட்டுப் பக்கம் காரில்கூட வரமாட்டேன் என்ற விரதத்தில் இருந்த தயாளு அம்மாவை, அங்கே போக வைத்த பெருமையும், இரண்டுபட்டுக் கிடந்த குடும்பத்தை அப்போதே ஒன்று சேர்த்த பெருமையும் ஜெயலலிதா அம்மையாருக்கு உண்டு.

அவருடைய போன ஆட்சியில் கலைஞரை நள்ளிரவில் கைது செய்தார்களே. அப்போது கலைஞரை 'காவலர்கள்' என்ற பெயரில் வந்த 'வேட்டை நாய்கள்' தூக்கிச் சென்ற பிறகு கீழே இறங்கி வெளியே வந்த முரசொலி மாறன் தன் காரிலேயே ராஜாத்தி அம்மையாரை ஏற்றிக் கொண்டு கிளம்ப.. அப்போது அங்கே தன் மகள் செல்வியோடு வந்து சேர்ந்தார் தயாளு அம்மையார்.

முரசொலி மாறன் மத்திய அமைச்சராக இருந்தால் அவருடைய காரில் சென்றால்தான் எங்கும் உள்ளே நுழையலாம் என்ற எண்ணத்தில் முரசொலி மாறனின் காரிலேயே செல்வியும், தயாளு அம்மையாரும் ஏறிக் கொள்ள அன்றைக்குத்தான் அவ்வளவு பக்கத்தில் பத்திரிகையாளர்களே அவர்கள் இருவரையும் பார்த்தார்கள்.

இவர்களை ஏற்றிக் கொண்டு வந்த காரால்தான் முரசொலி மாறன் அரசினர் தோட்டத்தில் இருந்த சிபிசிஐடி அலுவலக கேட்டை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தது அனைவருக்கும் நினைவிருக்கும்.

அப்போது கலைஞர் சிறையில் இருக்க.. ஆலிவர் ரோடு வீட்டிலேயே ஆதி காலத்திலிருந்தே அடைக்கலமாயிருந்த கலைஞரின் மாமியார்(ராஜாத்தி அம்மாவின் தாயார்) திடீரென்று மரணமடைந்தார். அப்போது மட்டும்தான் தயாளு அம்மாள் அந்த வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்தார். அப்போதும் ராஜாத்தியிடம் பேசாமல் கனிமொழியிடம் மட்டுமே பேசி ஆறுதல் சொல்லிவிட்டு வந்தார் தயாளு அம்மையார்.

அப்போதே தி.மு.க.வினர் ஜெயலலிதாவை நைஸாக இந்த ஒரு விஷயத்துக்காகவே பாராட்டத்தான் செய்தார்கள். "கலைஞர் 35 வருடமாக முயற்சித்ததை, ஜெயலலிதா ஒரே நிமிடத்தில் செய்துவிட்டார்.." என்றார்கள்.

கலைஞரின் மகள் செல்வி என்றே பிரபலமான செல்விக்கு தனக்குப் போட்டியாக இன்னொரு மகள் வெளிச்சத்திற்கு வருவது அரவே பிடிக்கவில்லை. இதற்காகவே தனது கணவரின் அண்ணன் மகன்களான கலாநிதி மாறன், தயாநிதி மாறனுடன் கூட்டணி வைத்துக் கொண்டார். இது ஸ்டாலினுக்கும், அழகிரிக்கும் பிடிக்காமல் போய் சகோதரியுடன் சமீபகாலமாக ஏகத்துக்கும் முறைத்துக் கொண்டுள்ளார்களாம்.

கலைஞரின் மற்றொரு சகோதரியின் மகன்களான அமிர்தம், சொர்ணம் இருவரின் குடும்பத்தினருக்கும் பங்காளிகளான மாறன் குடும்பத்தினரின் அனுக்கிரகமும், பண ஆசியும் கிடைக்காததால் அவர்களும் ஸ்டாலின் பின்னால் அணிவகுத்துள்ளனர்.

பூம்புகார் புரொடெக்ஷன்ஸ் சார்பில் எடுக்கப்படும் படங்களை இயக்கியிருக்கும் இயக்குநர் அமிர்தம், சமீப காலமாக வேலை வாய்ப்பின்றி சும்மாதான் இருந்து வருகிறார். முரசொலி மாறன் இருந்தவரையிலும் அவருடைய பாதுகாப்பில்தான் தனது குடும்பத்துத் திருமணங்களை நடத்தி முடித்துக் கொண்டார்.

இதே போல் சொர்ணம்.. இவரும் கலைஞரின் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு திரைப்படக் கல்லூரியின் முதல்வராக இருந்து தனது குடும்பத்தைக் கவனித்துக் கொண்டவர். இவரும் தற்போது தனது பிள்ளைகளின் சிறிய small businessல் தான் வீட்டில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.

முரசொலி மாறன் இருந்தவரையிலும் இந்த பங்காளிகளுக்கும், தன் குடும்பத்தினருக்கும் பிரச்சினை வராமல் பார்த்துக் கொண்டார். அவர் போன பின்பு தலையெடுத்திருக்கும் கலாநிதி மாறன் இக்கால இளைஞர்களுக்கே உரித்தான கோபத்தில், "அவங்கவுங்க உழைச்சு சம்பாதிக்க வேண்டியதுதான.. எதுக்கு எங்ககிட்ட வரணும்?" என்று பிச்சைக்காரர்களை விரட்டுவதைப் போல் விரட்டியதுதான் ஒட்டு மொத்தக் குடும்பமும் மாறன் குடும்பத்திற்கு சூன்யம் வைக்கக் காரணமாக அமைந்துவிட்டது.

இப்போது கலைஞரின் கோபம் சீக்கிரத்தில் ஆறிவிடும்.. அதன் பின்பு பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று 'மாறன்களுக்கு' சித்தப்பா முரசொலி செல்வம் அட்வைஸ் செய்துள்ளாராம்.

ஆனாலும் தான் நேரில் போய் பேசினால் எதுவும் நடக்காது என்பதை உணர்ந்திருக்கும் கலாநிதி மாறன், அமெரிக்காவில் டாக்டராகப் பணியாற்றும் தன் சகோதரியின் வீட்டில் இருக்கும் அம்மா மல்லிகா மாறனை அழைத்து வர அமெரிக்கா சென்றுள்ளார்.

மல்லிகா மாறன் சென்னை வந்தவுடன் முழுமையான சமாதானப் படலம் மீண்டும் துவங்கும் என்கிறார்கள். ஏனெனில் தயாளு அம்மாவுக்கு ஆரம்பக் காலத்திலிருந்தே மிக நெருங்கியவர் மல்லிகா மாறன்தான். அவர் சொன்னால் கலைஞர் குடும்பத்துப் பெண்கள் கேட்பார்கள். பெண்கள் மூலமாக அணுகினால்தான் இப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் என்று கோபாலபுரத்திற்குள் உலா வரும் போஸ்ட்மேன்கள் வரை அனைவரும் சொல்கிறார்கள்.

இப்போதைக்கு கலைஞரின் கோபம் ஆறினாலும் குடும்பத்து ஆண்கள் 'சொத்து' என்பதில் விட்டுக் கொடுப்பதாக இல்லை என்றே தெரிகிறது. ஏனெனில் தி.மு.க. என்ற கட்சியும், கலைஞரின் ஆட்சியும் இல்லாமல் போயிருந்தால் மற்றத் தொலைக்காட்சிகளை 'ஒழித்துக்' கட்டிய சுமங்கலி கேபிள் விஷனை, சன் டிவியால் நடத்தியிருக்கவே முடியாது. ஆக நம்மை வைத்து காசு சம்பாதித்தவர்கள் இப்போது வளர்ந்தவுடன் கட்சிக்காரனைப் போல் நம்மையே எட்டி உதைக்கிறார்கள் என்ற கேள்விக்கு மாறன்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்பதில்தான் இந்த நாடகத்திற்கு விடை கிடைக்கும்.

இப்படி சென்னை வெயிலைவிடவும் கோபாலபுரம் சூட்டில் வெந்து கொண்டிருக்க...

எதைப் பற்றியும் கவலைப்படாமல் திருவாரூரில் தன் நான்காவது 'ஆசை நாயகி'யுடன் ஒரு குடிசை வீட்டில் பட்டப் பகலிலேயே 'சரக்கு' அடித்துக் கொண்டு டூயட் பாடி வருகிறார் கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து.

ஆண்டவன் அத்தனை பேருக்கும் அளந்துதான் கொடுத்திருக்கிறான்..

http://truetamilans.blogspot.com/2007/05/blog-post_14.html

Link to comment
Share on other sites

  • 3 months later...

தினகரன் வெளியிட்ட பிரச்னைக்குரிய கருத்துக் கணிப்பு, அதைத் தொடர்ந்து நடைபெற்றத் தாக்குதல் ஆகியவற்றைப் பற்றி, சட்டசபையில் முதல்வர் கருணாநிதி பேசிய பேச்சின் ஒரு பகுதி இது :

".....கனிமொழி இப்போதுதான் தி.மு.க., கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளின் கலைப் பிரிவுகள் நடத்தும் நிகழ்ச்சிகளில் ஒரு கவிஞர் என்ற முறையில் கலந்து கொண்டிருக்கிறாரே தவிர, அவரும் பல பேட்டிகளில் தனக்கு அரசியலில் நுழைய விருப்பம் இல்லை என்பதை வெளிப்படையாகவும், சூசகமாகவும் தெரிவித்திருக்கிறார்.."

- சட்டசபையில் முதல்வர் கருணாநிதி பேச்சு (முரசொலி : 11.5.2007)

இதன் பிறகு மே 26-ம் தேதி, கனிமொழியை ராஜ்யசபை உறுப்பினர் பதவிக்கு தி.மு.க. வேட்பாளராக அறிவித்ததை ஒட்டி வந்த செய்தி இது :

".....கனிமொழி ஏற்கெனவே அரசியலில் இருக்கிறார். அதனால்தான் தி.மு.க. வேட்பாளராகப் போட்டியிட அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.."

- ஒரு கேள்விக்குப் பதிலளிக்கையில் கருணாநிதி கூறியது ('தி ஹிந்து' : 27.5.2007)

அதாவது மே 10-ம் தேதி வரை கனிமொழி அரசியலில் இருக்கவும் இல்லை; அரசியலில் நுழைய விரும்பவுமில்லை. "தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகளின் கலைப் பிரிவுகள் நடத்தும் நிகழ்ச்சிகளில், ஒரு கவிஞர் என்ற முறையில் மட்டுமே கலந்து கொண்டிருந்தார்.." என்பது முதல்வரே கூறியது..

ஆனால் திடீரென்று 26-ம் தேதி அவர், "ஏற்கெனவே அரசியலில் இருப்பராகிவிட்டார். அவர் இப்போதுதான் அரசியலுக்கு வந்தார் என்று வைத்துக் கொண்டாலும் வந்து, உடனே ராஜ்யசபை அங்கத்தினராகவிருக்கிறார். வரலாறு காணாத வளர்ச்சி!

இந்த நியமனத்தை விளக்குவதற்கு, மாற்றி மாற்றிப் பேசி முதல்வர் திண்டாட வேண்டியதில்லை.

'கழகம் ஒரு குடும்பம்' - 'அது என் குடும்பம்' என்று வெளிப்படையாகச் சொல்லிவிடலாம். அதற்குப் பின் கேள்விக்கு ஏது இடம்!

Link to comment
Share on other sites

கருணாநிதியை பற்றி ஒரு சில வரிகள், தமிழ் மக்களுக்காக எதுவும் செய்ய(நல்லது) போவதில்லை.மிக பெரும் சுய நலவாதி.மதில் மேல் பூனையாக இருந்து கொண்டிருப்பார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்திய‌ அள‌வுக் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
    • சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் தமிழ் தேசியம் இன்னமும் உயிருடன் இருப்பது போலவே உணர முடிந்ததே?
    • நீங்களே தனியா நிண்டு வெல்ல முடியாது என நினைக்கும் கட்சியின் சின்னத்தை அப்படி எல்லாம் முடக்கி யாரும் மினகெட மாட்டார்கள். இது பல வருடமாக உள்ள இந்திய தேர்தல் விதி. நாதக போனமிறைக்கு முதல் முறை இரெட்டை மெழுகுதிரி, பின் விவசாயி, இப்போ மைக். போதியளவு வாக்கு எடுத்த கட்சிக்குத்தான் நிரந்தர சின்னம். லெட்டர்பேட் கட்சிக்கு எல்லாம் தற்காலிக சின்னம் என்பது பால வருட நடைமுறை. நடப்பு லோக்சபா எம்பிகள், சட்ட மன்ற உறுப்பினர் உள்ள விடுதலை சிறுத்தை, மதிமுகவுக்கே அவர்கள் சின்னம் இல்லை. ஒரு உள்ளாட்ட்சி சீட்டும் இல்லாத நாதக மட்டும் என்ன ஸ்பெசலா? நாதக 7%. நோட்டா 9% என நினைக்கிறேன். ஓம்.  பிஜேபி இப்போ தன் தலைமையில் கூட்டணி வைக்கிறது. அடுத்தடுத்த தேர்தல்களில் வாக்கை பிரிக்கும் வேலை முடிந்ததும், பி டீம், ஏ டீமுடன் இணையும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.