Jump to content

கண்மணிக்குள் சிக்கிய பெண்புறா!


Recommended Posts

கவிதை பிறந்த கதை :

மாமன் மகள் பூப்பெய்திய செய்தி கேட்டு மலைப்பதியிலே (மலையகத்திலே) இருக்கும் மச்சாளை நினைந்து பிறந்த கவிதை ((கற்பனைக்)கவிதையை ரசிக்க உதவும் என்பதால் சொன்னேன்)

மலைப் பதியிலே என் மனங்கவர்ந்த

மங்கை மலந்திருக்கின்றாள்

மணிப் புறாவே உன்ணணிப் பறவை - என்

மனங்கவர் இளமை

உற்றவள் பால் தூது ஏகாயோ?

மல்லிகை சூடி மனதில் என்னை

நிறுத்தக் கூறாயோ?

சந்தனத்தின் சாயல் எடுத்து

வெண்மதியில் முகமெடுத்து

ஆனந்தத்தின் சுளையெடுத்து

அழகூற இலங்கும் மங்கையவள் என்

அண்டை வந்து இன்ப மூட்ட வேண்டும்

காதல் கொண்ட ஏழை நெஞ்சம்

பாவையவள் படுத்துறங்கும்

மஞ்சமாக வேண்டும்

காதல் கொண்டு அர்ச்சிக்க

கன்னியவள் கருத்தொருமிக்க வேண்டும்

காளை எந்தன் நெஞ்சம்

களிப்பில் ஊர்ந்து

இன்பம் காணவேண்டும்

மணிப்புறாவே என் எண்ணப்புறா

அப்பெண்புறா பால் செல்லத் துடிக்கிறது

வழி ஒன்று கண்டு கூறமாட்டாயா?

Link to comment
Share on other sites

மச்சாளை நினைத்து எழுதிய கவிதை நல்லா இருக்கு

Link to comment
Share on other sites

10-12 வயது சிறுமியை நினைத்து இப்படியா கவிதை எழுதுவது.

கவிதை எழுதியது 16 வயதுப் பையன் அல்லவா... :huh:

Link to comment
Share on other sites

செய்கை ரீதியாக பிஞ்சிலே முத்தாமல், கருத்து ரீதியில் முத்துவது ஒன்றும் தப்பில்லை லிசான். நீங்கள் எழுதிய விமர்சனம் என் கவிதைக்கல்ல என்று புரிகிறது.

நீங்கள் ,

மாமன் மகள் பூப்பெய்திய செய்தி கேட்டு மலைப்பதியிலே (மலையகத்திலே) இருக்கும் மச்சாளை நினைந்து பிறந்த கவிதை ((கற்பனைக்)கவிதையை ரசிக்க உதவும் என்பதால் சொன்னேன்)

மேற்சொன்ன செய்திக்கு தான் உங்கள் விமர்சனம் வந்திருக்கிறது. கவிதையின் களம் தெரிந்தால் ரசனைக்கு நல்லா இருக்குமென்பதாலே மேற்சொன்ன செய்தியை இடவேண்டி வந்தது. யாரையும் இங்க ஒப்பிட வேண்டிய அவசியம் கூட இல்லை... களத்தில் அவர்கள் அடிக்கடி வந்து கருத்துச் சொல்வதால் பழுத்துவிட்டார்கள் என்று சொல்வது பொருந்தாது... கருத்து ரீதியில் செறிவான அறிவும் வார்த்தையாடலும் இருப்பது விரும்பத் தக்கது தானே லிசான்...

Link to comment
Share on other sites

செய்கை ரீதியாக பிஞ்சிலே முத்தாமல், கருத்து ரீதியில் முத்துவது ஒன்றும் தப்பில்லை லிசான். நீங்கள் எழுதிய விமர்சனம் என் கவிதைக்கல்ல என்று புரிகிறது.

நீங்கள் ,

மேற்சொன்ன செய்திக்கு தான் உங்கள் விமர்சனம் வந்திருக்கிறது. கவிதையின் களம் தெரிந்தால் ரசனைக்கு நல்லா இருக்குமென்பதாலே மேற்சொன்ன செய்தியை இடவேண்டி வந்தது. யாரையும் இங்க ஒப்பிட வேண்டிய அவசியம் கூட இல்லை... களத்தில் அவர்கள் அடிக்கடி வந்து கருத்துச் சொல்வதால் பழுத்துவிட்டார்கள் என்று சொல்வது பொருந்தாது... கருத்து ரீதியில் செறிவான அறிவும் வார்த்தையாடலும் இருப்பது விரும்பத் தக்கது தானே லிசான்...

உங்கள் கருத்திற்கு மதிப்பளித்து எனது முன்னைய பதிவை மாற்றிவிட்டேன். நான் குறை கூறியது உங்களையல்ல.

Link to comment
Share on other sites

உங்கள் புரிதலுக்கு நன்றி லிசான்... தொடர்ந்து வாருங்கள்...

நன்றிகள்

Link to comment
Share on other sites

கவி _ ரூபன்..

உண்மையான கவி யார் என்றால்..எல்லா விதமான விடயங்களையும் பற்றி கவி புரிபவராம்!

அது நிஜமோ..கற்பனையோ..சம்பவமோ..எதுவ

Link to comment
Share on other sites

பிரியசகி,

முதலில் நன்றிகள்...

நீங்க சொல்வதை உண்மை என்று ஏற்றுக் கொள்ளலாம் என்று யோசித்தாலும் முடியவில்லை. (வேற ஒண்ணுமில்லைங்க... அவையடக்கமாம்.... அட பாவி.... இல்லைங்க அப்பாவி... :huh: )

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
    • “அந்த மக்களிடம் அற்ப விலைக்கு வாங்கி, புலம் பெயர் மக்களிடம் அறாவிலைக்கு விற்கும் கந்துவட்டி வகை வியாபாரிகளை” இதனை எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? உதாரணமாக ஓர் பொருளின் சிறீலங்கா v பிரித்தானிய விலையை கூறுங்கள். எனக்கு தெரிந்தவர்களிடம் அதனை விசாரித்து கூறுகிறேன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.