Jump to content

கோட்டாவின் நேரடிக் கண்காணிப்பில் 12 விடயங்கள் உடன் அமுல்படுத்தப்பட்டது மக்களோடு மக்களாக 2,500 பொலிஸார் அவதானிப்பு


Recommended Posts

ஜனாதிபதி கோட்டாவின் நேரடிக் கண்காணிப்பில் 12 விட யங்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் அமுல்படுத்தப்பட் டுள்ளதாக தென்னிலங்கை ஊட கங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

1. குடிபோதையில் வாகனம் செலுத்தி விபத்து ஏற்பட்டால் 10 வருட கடூழியச் சிறை.

2.முச்சக்கரவண்டிகள் இற க்குமதி செய்வது முற்றாகத் தடை.

3. பாடசாலை அனு மதியின்போது நேரடியாகவோ மறைமுகமாகவோ லஞ்சம் கோரப்பட்டால் 48 மணித்தி யாலத்திற்குள் பணி நீக்கம் செய்யப்படுவர்.

4.பகிடிவதை செய்து சிக்கினால் 8 வரு டம் பரீட்சை எழுத தடை விதிக்கப் படும்.

5. பாராளுமன்ற உறுப்பினர் 80மூ மேல் அமர்வுகளில் சமுகமளித்திருத்தல் வேண்டும். தவறினால் 5 வருடங் களுக்கு எந்தவித வாக்கெடுப்பிற்கும் விண்ணப்பிக்க முடியாது.

6. அரச ஊழியர்கள் சேவை துஷ்பிர யோகம் செய்தால் 48 மணி நேரத்திற் குள் பணி நீக்கம் செய்யப்படுவர்.

7. ஜனாதிபதித் தேர்தலில் ஒருவர் போட்டியிட்டு 1  வீதத்திற்கு குறைவான வாக்குகளை பெறுவாரேயானால் 1 கோடி ரூபாய் அரசாங்கத்திற்கு தண் டப்பணமாக செலுத்த வேண்டும்.

8. அரசியல்வாதிகளின் சிபாரிசின் மூலம் வருபவர்களுக்கு வாழ் நாள் முழுதும் அரச சேவையில் இணையத்தடை.

9. வைத்தியரின் சிபாரிசு இல்லாமல் மருந்து வழங்கும் மருந்தகங்களில் அனுமதிப்பத்திரம் 48 மணித்தியாலத் திற்குள் ரத்துச் செய்யப்படும்.

10. சொத்துக்களை வாங்கி 5 வருடங் களுக்கு முன் விற்பனை செய்யப்பட் டால் விற்கப்படும் தொகையில் 50மூ வரியாக செலுத்தப்பட வேண்டும்.

11. மோட்டார் வாகன பொலிஸார் இரக சிய பொலிஸாரால் கண்காணிக்கப்படு வர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 48 மணி நேரத்திற்குள் பணி நீக்கம்.

12. தனியார் வைத்தியசாலையில் அற விடப்படும் கட்டணங்களுக்கு விலை நிர்ணயம் செய்யப்படும்.

இவை அனைத்தையும் மக்களோடு மக்களாக இருக்கும் 2500 இரகசிய பொலிஸார் அவதானிப்பர்.

வழமையாக மக்களை ஏமாற்றி மக்களை அடிமையாக நடத்திய அதிகாரிகள் பலர் அதிர்ச்சியில் உள்ளதாக தென்னிலங்கை ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.   

http://valampurii.lk/valampurii/content.php?id=20287&ctype=news

 

Link to comment
Share on other sites

இலஞ்சம் பெறுவோரை உடனடியாகக் கைது செய்ய நடவடிக்கை

அரசாங்க நிறுவனங்களில் சேவைகளைப்  பெற்றுக் கொள்வதற்காக வரும் பொதுமக்களிடம் இலஞ்சம் பெறும் நபர்களை, அதே இடத்தில் வைத்துக் கைது செய்வதற்கான  விசேட நடவடிக்கைகளை  அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

lanjam.jpg

மேல் மாகாணத்தைக் கேந்திரமாகக் கொண்டு இதற்கென தனியான  பொலிஸ் பிரிவு ஒன்று செயற்பட்டு வருவதுடன், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவர் இதன் தலைமை அதிகாரியாகச் செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைவாகச் செயற்படும் இந்த விசேட பிரிவில் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் சிலரும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பொதுமக்களிடம் இலஞ்சம் பெற்றுவருவதற்கான குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்படும் பல நிறுவனங்கள் தொடர்பில், அரசாங்கத்துக்கு தற்போது தகவல்கள் கிடைத்துள்ளதைக் கவனத்தில் கொண்டே, இவ்விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/72661

Link to comment
Share on other sites

ஒரு சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு அது பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடனாவது நிறைவேற்றப்பட்டு இருத்தல் வேண்டும். ஆனால் இந்த சட்டங்கள் எதுவும் பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டதாகவோ, விவாதிக்கப்பட்டதாகவோ ஒரு செய்தியும் வரவில்லை. சனாதிபதிக்கும் இப்ப இருக்கும் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களைக் கொண்டு இவ்வாறு நிறைவேற்றப்படுவதும் சாத்தியமும் இல்லை.

கோத்தா பற்றிய பிம்பத்தை மேலும் பெரிதாக்கி, அதன் மூலம் பாராளுமன்ற தேர்தலில் வெல்வதற்காக அரச தரப்பு சமூக வலைத்தளங்களில் மேற்கொள்ளும் போலிப் பிரச்சாரம் போலிருக்கின்றது இது.

Link to comment
Share on other sites

4 hours ago, ampanai said:

இவை அனைத்தையும் மக்களோடு மக்களாக இருக்கும் 2500 இரகசிய பொலிஸார் அவதானிப்பர்

காவல்துறை ஆதாரத்துடன் கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும்.

அப்பொழுது இந்த 'அதிரடி' மாற்றங்கள் உண்மையாக சட்டத்தில்  உள்ளனவா இல்லையா என தெரிந்துவிடும்.

ஆனாலும், அது தெரிவதற்கு முன்னர் தேர்தலில் வென்றுவிடலாம் 😞 

4 hours ago, ampanai said:

7. ஜனாதிபதித் தேர்தலில் ஒருவர் போட்டியிட்டு 1  வீதத்திற்கு குறைவான வாக்குகளை பெறுவாரேயானால் 1 கோடி ரூபாய் அரசாங்கத்திற்கு தண் டப்பணமாக செலுத்த வேண்டும்.

சுயேட்சையாக யாரும் போட்டியிட முடியாத நிலை !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"குடிபோதையில் வாகனம் செலுத்தி விபத்து ஏற்பட்டால் 10 வருட கடூழியச் சிறை"

இதன்படி பார்க்கும்போது குடிபோதையில் விபத்து நிகழ்ந்தால் மட்டுமே சிறை தண்டனை கிடைக்கும் என்றால் இந்த விதியால் எதுவித பயனும் இல்லை. உண்மையில் "குடிபோதையில் வாகனம் செலுத்தினால் 10 வருட கடூழியச் சிறை" என்றுதான் சொல்லப்பட்டிருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/6/2020 at 12:44 PM, நிழலி said:

ஒரு சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு அது பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடனாவது நிறைவேற்றப்பட்டு இருத்தல் வேண்டும். ஆனால் இந்த சட்டங்கள் எதுவும் பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டதாகவோ, விவாதிக்கப்பட்டதாகவோ ஒரு செய்தியும் வரவில்லை. சனாதிபதிக்கும் இப்ப இருக்கும் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களைக் கொண்டு இவ்வாறு நிறைவேற்றப்படுவதும் சாத்தியமும் இல்லை.

கோத்தா பற்றிய பிம்பத்தை மேலும் பெரிதாக்கி, அதன் மூலம் பாராளுமன்ற தேர்தலில் வெல்வதற்காக அரச தரப்பு சமூக வலைத்தளங்களில் மேற்கொள்ளும் போலிப் பிரச்சாரம் போலிருக்கின்றது இது.

இதில் பெரும்பான்மையானவை ஏற்கனவே சட்டத்தில் உள்ளவை தான்.

ஆனால் இதுவரை சட்டம் ஒழுங்கை சரியான வகையில் கையாளவில்லை.

இனியும் கையாள முடியாது.

இவர் சொல்வதை நடைமுறைப்படுத்டுவதாக இருந்தால் முதலில் மந்திரிமாரில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

On 1/7/2020 at 12:43 AM, ampanai said:

காவல்துறை ஆதாரத்துடன் கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும்.

அப்பொழுது இந்த 'அதிரடி' மாற்றங்கள் உண்மையாக சட்டத்தில்  உள்ளனவா இல்லையா என தெரிந்துவிடும்.

ஆனாலும், அது தெரிவதற்கு முன்னர் தேர்தலில் வென்றுவிடலாம் 😞 

சுயேட்சையாக யாரும் போட்டியிட முடியாத நிலை !

இவை ஊடக செய்திகளே தவிர இன்னும் சடடமகவில்லை. இதை பாராளுமன்றில் நிறைவேற்றி வர்த்தமானியில் வெளியிடட பின்னர்தான் சடடமாகும். இப்போது யாரையும் தண்டிக்கவேண்டுமாக இருந்தால் இருக்கிறதான சடடத்தின்கீழ்தான் நடவடிக்கை எடுக்கலாம்.

சுயேட்ச்சியாக போட்டியிடுபவர் எதோ ஒரு நோக்குடன்தான் போட்டியிடுகிறாரே தவிர வெல்லும் நோக்கம் அவருக்கு இல்லை. கடந்த தேர்தலில் முப்பதுக்கும் மேட்படடோர் போட்டியிட்டு நேர காலம் பணத்தை வீணாக்கினார்கள். எனவே இப்படியாக கடுமையான நிபந்தனைகளை இடுவதன்மூலம் இந்த proxy வேட்பாளர்களை தடை செய்யலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/7/2020 at 1:55 AM, ampanai said:

இவை அனைத்தையும் மக்களோடு மக்களாக இருக்கும் 2500 இரகசிய பொலிஸார் அவதானிப்பர்.

பாலுக்கு பூனையை காவல் வைத்த கதைதான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.