Jump to content

உக்ரைன் விமானம் இரானில் நொறுங்கி விழுந்தது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

hqdefault.jpg

180 பேருடன் பயணித்த விமானம் விபத்து!

180 பேருடன் பயணித்த விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உக்ரைனுக்கு சொந்தமான போயிங் 737 என்ற விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலெழுந்து சிறிது நேரத்திலேயே குறித்த விமானம் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

விமானத்தில் ஏற்பட்ட திடீர் தொழிநுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விமான விபத்தில் காயமடைந்தவர்கள் உள்ளிட்ட தகவல்கள் எவையும் இதுவரையில் வெளியாகவில்லை.

எனினும்,  இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது

இதேவேளை, அமெரிக்காவிற்கும், ஈரானிற்கும் இடையில் மோதல் போக்கு அதிகரித்துள்ள நிலையில், இது அமெரிக்காவினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகவும் இருக்கலாம் என சில சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

http://athavannews.com/ukrainian-airliner-crashes-near-tehran/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைன் விமானம் இரானில் நொறுங்கி விழுந்தது

உக்ரைன் விமானம் இரானில் நொறுங்கி விழுந்ததுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

உக்ரைன் போயிங்-737 விமானம் ஒன்று இரானில் நொறுங்கி விழுந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதில் 180 பேர் பயணம் செய்துள்ளனர்

உக்ரைன் சர்வதேச விமானசேவையை சேர்ந்த இந்த விமானம், இரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள இமாம் காமெனி விமானநிலையத்தில் இருந்து கிளம்பி சென்ற உடனே இந்த விபத்து நடந்துள்ளதாக ஃபார்ஸ் அரசு செய்தி முகமை தெரிவித்துள்ளது.

உக்ரைன் தலைநகரான கீவ்-விற்கு இந்த விமானம் சென்று கொண்டிருந்ததாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் பெரிதாகியுள்ள இரான் - அமெரிக்கா இடையேயான மோதலுக்கு இந்த விபத்திற்கும் தொடர்பு இருக்கிறதா என்று தெளிவாக தெரியவில்லை.

கடந்து செல்க யூடியூப் பதிவு இவரது BBC News Tamil
எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

முடிவு யூடியூப் பதிவின் இவரது BBC News Tamil

விமானம் நொறுங்கி விழுந்த இடத்திற்கு மீட்புப்படைகள் அனுப்பப்பட்டுள்ளன. 

''விமானம் எரிந்துகொண்டிருக்கிறது. நாங்கள் எங்கள் மீட்பு குழுவினரை அனுப்பியிருக்கிறோம். எங்கள் குழு   சில பயணிகளின் உயிரை காப்பாற்றக்கூடும்''  என இரான் அவசரகால சேவைப்  பிரிவு தலைவர் ஃபிர்ஹொசைன் கொலிவாண்ட் கூறியுள்ளதாக, இரான் அரசு தொலைகாட்சி தெரிவித்துள்ளது என ராய்ட்டர்ஸ் செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது. 

https://www.bbc.com/tamil/global-51030131

Link to comment
Share on other sites

 

விமானத்தில் பயணித்த 180 பயணிகளும் இறந்துவிட்டனர்

https://www.aljazeera.com/news/2020/01/ukrainian-airliner-crashes-tehran-iranian-media-200108032720868.html

 

 

Link to comment
Share on other sites

3 hours ago, தமிழ் சிறி said:

மேலெழுந்து சிறிது நேரத்திலேயே குறித்த விமானம் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

விமானத்தில் ஏற்பட்ட திடீர் தொழிநுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதில் ஈரானோ இல்லை அமெரிக்காவோ சம்மந்தப்பட சாத்தியமில்லை 😶

2 hours ago, ஏராளன் said:

உக்ரைன் போயிங்-737 விமானம் ஒன்று இரானில் நொறுங்கி விழுந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதில் 180 பேர் பயணம் செய்துள்ளனர்

ஏற்கனவே போட்டிங் 737 மாக்ஸ் இனால் பிரச்சனை இந்த நிறுவனத்திற்கு. இது மேலும் ஒரு அடி !

Link to comment
Share on other sites

ஈரானில் விழுந்தது விமானம் 

  • 63 கனேடியர்கள் ;
  • 03 ஜெர்மானியர்கள் 
  • 03 பிரித்தானியர்கள் 
  • 10 சுவீடன் 
  • 82 ஈரானியர்கள் 
  • 04 ஆப்கானிஸ்தானியார்கள் 
  • 11 உக்ரேனியர்கள் 

உட்பட 176 பேர் மரணம்.

Link to comment
Share on other sites

கொல்லப்பட்ட கனேடியர்களில் பலர் மாணவர்கள். விடுமுறைக் காலம் முடிந்த பின் கனடா நோக்கி பயணமாணவர்கள் என பிபிசி சொல்கின்றது. இந்த வழியினூடான ரொரண்டோவுக்கான பயணம் செலவு குறைந்தது என்பதால் தான் கனேடியர்கள் பலர் கொல்லப்பட்டு இருக்கின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

கொல்லப்பட்ட கனேடியர்களில் பலர் மாணவர்கள். விடுமுறைக் காலம் முடிந்த பின் கனடா நோக்கி பயணமாணவர்கள் என பிபிசி சொல்கின்றது. இந்த வழியினூடான ரொரண்டோவுக்கான பயணம் செலவு குறைந்தது என்பதால் தான் கனேடியர்கள் பலர் கொல்லப்பட்டு இருக்கின்றனர்.

நன்றி தகவலுக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்மா சாந்தியடையட்டும் 

Link to comment
Share on other sites

18 hours ago, பெருமாள் said:

நன்றி தகவலுக்கு .

176 பயணிகளில் 138 பேர் கனடா நோக்கி பயணித்தவர்கள். அனேகமானோர் உக்ரைன் நாட்டில் இருந்து படிக்க கனடா வந்த மாணவர்கள். உக்ரைனில் இருந்து ரொரண்டோ வருவதற்கான Transit ஆக தெஹ்ரான் இருப்பதால் பலர் அதனூடாக பயணித்துள்ளார்கள். இதில் 63 பேர் கனடா குடியுரிமை பெற்றவர்களாகவும் மிகுதிப் பேர் தற்காலிக வதிவிட வீசா பெற்றவர்களாகவும் (மாணவர் வீசா மற்றும் நிரந்தரக் குடியுரிமை) உள்ளனர். கொல்லப்பட்ட கனடாவைச் சேர்ந்தவர்களில் 1 வயதுக் குழந்தையும் அடங்கும். தாயும் தகப்பனும் குழந்தையின் 1 வயது பிறந்த தினத்தை டிசம்பர் 2 இல் அவர்களது பெற்றோருடன் கொண்டாடி விட்டு திரும்புகையில் பலியாகியுள்ளனர். நான் வசிக்கும் நகரிற்கு அண்மையில் இருக்கும் Ajax நகரை சேர்ந்தவர்கள்

இந்த விமான விபத்து ஏவுகணையால் அல்லது anti missile system இனால் நிகழ்த்தப்பட்டு இருக்கலாம் என இப்ப சந்தேகின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பயணிகள் விமானம் ஈரானின் தலைநகரிலிருந்து கிளம்பிய சில நிமிடங்களில் ஈரானின் ரஷ்ஷியத் தயாரிப்பு தோர் ஏவுகணையினால் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கிறது. 

தாம் அமெரிக்கத் துருப்புக்களின்மேல் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியவேளை அமெரிக்க விமானங்கள் தம்மீது எதிர்த்தாக்குதல் நடத்தும் சாத்தியமிருப்பதால், தமது தானியங்கி விமான எதிர்ப்பு ஏவுகணைகளை ஆக்டிவாக ஈரான் வைத்திருக்கிறது. பயணிகள் விமானம் எது, போர்விமானம் எது என்று கண்டறியும் தொழிநுட்பம் ரஷ்ஷிய தோர் ஏவுகணைக்கு இருப்பினும்கூட, நேற்று அதனை இயக்கிய ராணுவ வல்லுனரின் அசட்டையினால் தமது தலைநகரிலிருந்து கிளம்பிய பயணிகள் விமானத்தை தானே சுட்டு வீழ்த்தியிருக்கிறது ஈரான்.

விமானம் சுட்டுவீழ்த்தப்பட்ட சில மணிநேரத்தில், அதனது தகவல் அடக்க கறுப்புப் பெட்டியை அமெரிக்காவிடமோ அல்லது விமான உற்பத்தி நிறுவனமான போயிங்கிடமோ கொடுக்கப்போவதில்லை என்று ஈரான் தடாலடியாக அறிவித்தபோதே இதில் தவறு நடந்திருக்கிறதென்று தெளிவாகியிருந்தது. அவ்வாறே, தனது செய்திச் சேவையில் இயந்திரக் கோளாறினால் விமானம் வீழ்ந்ததாக முதலில் தலைப்பிட்ட உக்ரேனின் அரசு, பின்னர் அத்தலைப்பினை திருத்தி சந்தேகமான முறையில் விமானம் வீழ்ந்திருக்கிறதென்று செய்தி வெளியிட்டிருந்தது. இதற்கேற்றாற்போல், பத்திரிகையாளரின் கேள்வியொன்றிற்குப் பதிலளித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், இது சந்தேகத்திற்கிடமான நிகழ்வு, விமானம் இயந்திரக் கோளாறினால் வீழ்ந்ததென்பதை நாம் நம்பவில்லை என்று விமானம் வீழ்ந்த சிலமணி நேரங்களிலேயே கூறியிருந்தார்.

ஆக, ஈரான் தனது ராணுவ வீரப் பிரதாபங்களைக் காட்டுவதாக நினைத்து வெற்று ஏவுகணைகளை ஈராக் முழுதும் வீசியிருப்பதுடன், ஒரு பயணிகள் விமானத்தையும் சுட்டு வீழ்த்தி அப்பாவிகள் 176 பேரையும் கொன்றிருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கே தெரியாத காரணங்களுக்காக கனடா என்னைக் கவர்ந்து வைத்திருக்கிறது. ஆகவே, அங்கே எதுநடந்தாலும் அது என்னைப் பாதிக்கிறது. அப்பாவிகள் அநியாயமாகக் கொல்லப்பட்டமைக்காக எனது அனுதாபங்கள். 

Link to comment
Share on other sites

ஈரானிய அரசு கனேடிய விசாரணையாளர்களை விமான விபத்து பற்றி விசாரிக்க அழைத்துள்ளது. இவ்விபத்தில் 63 கனேடியர்கள் கொல்லப்பட்டது அறிந்ததே.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரான் உக்ரைன் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கான ஆதாரம் உள்ளது' - அமெரிக்கா

இரானில் விமான விபத்து: நொறுங்கி விழுந்த உக்ரைன் விமானம்படத்தின் காப்புரிமைGEOFF ROBINS / GETTY IMAGES Image captionஉயிரிழந்தவர்களில் 82 பேர் இரான் நாட்டவர்கள், 63 பேர் கனடாவைச் சேர்ந்தவர்கள். டொரோண்டோவில் நடந்த அஞ்சலி கூட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்.

இரானில் புதன்கிழமையன்று விழுந்து நொறுங்கிய உக்ரைன் பயணிகள் விமானம் இரான் அரசினரால், ஒரு வேளை தவறுதலாக, சுட்டு வீழ்த்தப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக மேற்கத்திய நாடுகள் கூறுகின்றன.

176 பேர் உயிரிழந்த இந்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் வலியுறுத்தியுள்ள நிலையில், தங்கள் வான் பாதுகாப்பு அமைப்புகள் எதுவும் அந்த விமானம் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தவில்லை என்று இரான் மறுப்பு தெரிவித்துள்ளது.

தங்கள் ராணுவத் தளபதி ஜெனெரல் காசெம் சுலேமானீ அமெரிக்காவால் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது இரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்திய சில மணி நேரங்களில், தலைநகர் டெஹ்ரானில் இருந்து கிளம்பிய இந்த விமானம் விழுந்து நொறுங்கியது குறிப்பிடத்தக்கது.

மேற்கு நாடுகள் என்ன சொல்கின்றன?

தாங்கள் அமெரிக்க ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதற்கு அமெரிக்கா எந்த நேரமும் பதிலடி தரலாம் என்று முன்னெச்சரிக்கையாக இருந்த இரான், இந்த பயணிகள் விமானத்தை அமெரிக்காவின் போர் விமானம் என்று தவறுதலாக எண்ணி தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று அமெரிக்க ஊடகங்கள் ஊகிக்கின்றன.

'உக்ரைன் விமானத்தை இரான் சுட்டு வீழ்த்தியதற்கான ஆதாரம் உள்ளது'

அமெரிக்க செயற்கைகோள் ஒன்றுக்கு ஏவுகணைகள் ஏவப்பட்டதற்கான இரு அகச்சிவப்பு கதிர் சமிக்ஞைகள் கிடைத்ததாகவும், அதன்பின் வெடிப்பு ஒன்று நிகழ்ந்ததற்கான ஒரு சமிக்ஞை கிடைத்ததாகவும் அமெரிக்க புலனாய்வு துறைமூலம் தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக சி.பி.எஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட 'தோர் எம்-1' ஏவுகணை மூலம் பிஎஸ்752 எனும் அந்த உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையின் தலைமையகமான பென்டகன் மற்றும் மூத்த அமெரிக்க மற்றும் இரானிய அதிகாரிகள் கருதுவதாக நியூஸ்வீக் செய்தி கூறுகிறது.

நிலத்தில் இருந்து செலுத்தப்படும் ஏவுகணை மூலம் இந்த விமானம் வீழ்த்தப்பட்டதாக தமக்கு பல்வேறு இடங்களில் இருந்து தகவல் கிடைத்திருப்பதாகவும், அவ்வாறு தாக்கும் நோக்கம் இரானுக்கு இல்லாமலேயே தவறுதலாக தாக்கப்பட்டிருக்கலாம் என்றும் கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.

உயிரிழந்தவர்களில் 63 பேர் கனடிய குடிமக்கள். கனடிய குடிமக்கள் மட்டுமல்லாது டெஹ்ரானில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவ் சென்ற அந்த விமானத்தில் இருந்து, வேறு இணைப்பு விமானம் மூலம் கனடா செல்ல திட்டமிட்டிருந்தவர்கள் பலரும் இறந்தவர்களில் அடக்கம்.

கருப்பு பெட்டியை அமெரிக்காவிடம் தர முடியாது என்று இரான் கூறியுள்ளதுபடத்தின் காப்புரிமைAFP Image captionகருப்பு பெட்டியை அமெரிக்காவிடம் தர முடியாது என்று இரான் கூறியுள்ளது

விமானம் விழுந்து நொறுங்கியது குறித்து அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்பும் சந்தேகம் தெரிவித்துள்ளார். எனினும் பென்டகன் அதிகாரபூர்வமாக இதுவரை எதையும் தெரிவிக்கவில்லை.

இரான் கூறுவது என்ன?

விமானத்தின் கருப்பு பெட்டியை அமெரிக்கா அல்லது விமானத்தை தயாரித்த போயிங் நிறுவனத்துக்கு தர முடியாது என்று கூறியுள்ளது இரான் அரசு. எனினும் விமானம் விழுந்து நொறுங்கியது தொடர்பான விசாரணையில் போயிங் பங்கேற்கலாம் என்று இரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விமான நிலையத்தில் இருந்து கிளம்பி மேற்கு நோக்கிச் சென்ற அந்த விமானம், கிளம்பிய சற்று நேரத்தில் வலப்பக்கம் திரும்பி மீண்டும் விமான நிலையம் வர முற்பட்டதாக இரான் விமானப் போக்குவரத்து அமைப்பின் தலைவர் அலி ஆபேத்சாடே கூறியுள்ளார்.

விமானம் விழுந்து நொறுங்கும் முன்னர் அதில் தீ பற்றியிருந்ததை சம்பத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். திரும்பும் முன்னர் அலி காமேனி விமான நிலையத்துக்கு அபாய உதவிகள் கோரி விமானி எந்த அழைப்பையும் விடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் 'தோர்' ஏவுகணைகள் இரானிடம் உள்ளதாக அறியப்படுகிறதுபடத்தின் காப்புரிமைAFP / GETTY Image captionரஷ்யாவின் 'தோர்' ஏவுகணைகள் இரானிடம் உள்ளதாக அறியப்படுகிறது

ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக கூறுவது அறிவியல்பூர்வ தர்க்கமற்றது என்றும் அவர் மறுத்துள்ளார்.

'இரானுக்கு சங்கடமான சூழல்'

இரானின் வான் பாதுகாப்பு கட்டமைப்புகளே தவறுதலாக விமானத்தை வீழ்த்தி இருக்கலாம் என்று கருதப்படும் நிலையில், சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சற்று முன்புதான் கிளம்பிய அந்த விமானத்தை பயணிகள் விமானம் என்று எளிதில் அடையாளம் கண்டிருக்க முடியும் என்று பிபிசியின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான செய்தியாளர் ஜொனாதன் மார்கஸ் கூறுகிறார்.

ஒருவேளை இரான் தரப்பில் இந்த விமானம் வீழ்த்தப்பட்டிருந்தால், சோவியத் ஒன்றியத்தின் காலத்தில் தயாரிக்கப்பட்ட ரஷ்யாவின் 'தோர்' ஏவுகணையை ஏவியவர்கள் எதைப்பார்த்து தாக்கும் முடிவுக்கு வந்தார்கள் என்பது தெரியவில்லை என்கிறார் ஜொனாதன் மார்கஸ்.

ஒருவேளை இரான் இந்த விமானத்தை ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியிருந்தால் இது அந்நாட்டுக்கு சங்கடமான சூழலை உருவாக்குவதுடன், அந்தப் பிராந்தியத்தின் அரசியலையும் மோசமாக்கும்.

https://www.bbc.com/tamil/global-51058287

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

iran-1225360-720x450.jpg

விபத்துக்குள்ளான உக்ரேன் விமானம் குறித்து ஈரான் புதிய தகவல்!

ஈரானில் விபத்துக்குள்ளான உக்ரேன் விமானம், கீழே விழுந்து நொறுங்குவதற்கு முன்னரே, அதில் தீப்பிடித்ததாக ஈரான் புதிய தகவலொன்றை வெளியிட்டுள்ளது.

தெஹ்ரானில் இருந்து விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில், மீண்டும் அந்த நிலையத்துக்கு விமானத்தைக் கொண்டு வர விமானிகள் முயன்றதாகவும், அதற்குள் விமானம் விழுந்து நொறுங்கியதாகவும் ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும், ஈராக்கின் பாக்தாத்தில் அமெரிக்க படைகளை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்திய போதே, குறித்த விமானம் விபத்துக்குள்ளானதால், இது ஈரானாலேயே வீழ்த்தப்பட்டதாக அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் சந்தேகம் வெளியிட்டுள்ளன.

அத்தோடு, அத்தோடு விபத்துக்குள்ளான உக்ரேன் விமானத்தில் இருந்து மீட்கப்பட்ட கருப்பு பெட்டியை அதன் உற்பத்தியாளரான அமெரிக்காவை சேர்ந்த போயிங் நிறுவனத்திடமோ அல்லது அமெரிக்க அரசிடமோ ஒப்படைக்க மாட்டோம் என்று ஈரான் அறிவித்துள்ளது.

இதுவே தற்போது ஈரான் ஏவுகணை தாக்குதலால் விமானம் வீழ்த்தப்பட்டதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்த முகக்கிய காரணமாக அமைந்துள்ளது.

ஈரானின் தெஹ்ரானில் இருந்து கையவ் சென்ற விமானத்தில் ஏழு நாடுகளைச் சேர்ந்த 176 பேர் பயணித்த உக்ரேன் இன்ரர்நஷனல் ஏயார்லைன்ஸின் பி.எஸ்.752 விமானம், நேற்று (புதன்கிழமை) விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர்.

இதற்கிடையில், உக்ரேன்;; விமானத்தை ஏவுகணை தாக்குவது போன்ற காணொளியை அமெரிக்க அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

http://athavannews.com/விபத்துக்குள்ளான-உக்ரேன/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ee.jpg

உக்ரேனிய விமானத்தினை ஈரானே சுட்டு வீழ்த்தியது – அதிரடி தகவலினை வெளியிட்டது அமெரிக்கா!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் அருகே கடந்த புதன்கிழமை 180 பேருடன் விபத்துக்குள்ளான உக்ரேனிய விமானத்தை ஈரான் தவறுதலாக சுட்டு வீழ்த்தியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்க மற்றும் கனேடிய அதிகாரிகள் இவ்வாறு சந்தேகம் வெளியிட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தரவுக்கமைய நடத்தப்பட்ட அமெரிக்காவின் வான்வழித் ஏவுகணைத் தாக்குதலில் ஈரானின் உயர்மட்ட ராணுவத் தளபதியான காசிம் சோலெய்மனி கடந்த வெள்ளிக்கிழமை கொல்லப்பட்டார்.

இந்தச் சம்பவத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈராக்கில் அமெரிக்கத் துருப்புக்கள் நிலைகொண்டுள்ள தளங்களில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நேற்று முந்தினம் முன்னெடுத்திருந்தது.

இதனிடையே உக்ரைன் நாட்டு விமானம் ஈரான் தலைநகர் தெஹ்ரான் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் விழுந்து நொறுங்கியது.

விமானத்தில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றதாக உக்ரைன் மற்றும் ஈரான் அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.

இந்தநிலையில் குறித்த விமானத்தினை ஈரான் நாட்டு படைகளே தவறுதலாக சுட்டு வீழ்த்தியுள்ளதாக அமெரிக்க மற்றும் கனேடிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரான் ஏவுகணை தாக்குதலில் உக்ரைன் விமானம் நொறுங்கியதாக அமெரிக்க அதிகாரிகளும் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

ஏவுகணை தாக்குதலில் விமானம் விழுந்ததாக பல்வேறு உளவுப்பிரிவுகள் தகவல் தெரிவித்துள்ளதாக கனேடிய பிரதமரும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் உக்ரைன் விமானத்தை ஏவுகணை தாக்குவது போன்ற காணொளியினை அமெரிக்க அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

http://athavannews.com/உக்ரேனிய-விமானத்தினை-ஈரா/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

“உக்ரைன் விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்தினோம்” - இரான் ராணுவம் ஒப்புதல்

இரான்

உக்ரைன் பயணிகள் விமானத்தை 'தவறுதலாக' சுட்டு வீழ்த்திவிட்டதாக இரான் ராணுவம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டின் அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக உள்ளூர் நேரப்படி, இன்று (சனிக்கிழமை) காலை இரான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரானின் புரட்சிகர ராணுவ படைக்கு சொந்தமான முக்கிய தளத்தை ஒட்டி உக்ரைன் விமானம் பறந்தபோது, 'மனித தவறுகளின்' காரணமாக அதை சுட்டு வீழ்த்திவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் பொறுப்பாக்கப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரான்படத்தின் காப்புரிமைAFP

இரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள விமான நிலையத்தில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவ்வை நோக்கி பறக்க தொடங்கிய பயணிகள் விமானம் ஒன்று சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கியது, இந்த விபத்தில் அதில் பயணித்த 176 பேருமே உயிரிழந்தனர்.

இரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில்தான் இந்த விமானம் சிக்கியதாக அமெரிக்கா, கனடா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் குற்றஞ்சாட்டி வந்ததை தொடர்ந்து மறுத்து வந்த இரான் தற்போது முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக முழு விசாரணை நடத்தப்படும் என்று இரான் உறுதியளித்துள்ளது. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை அன்று விமானம் விழுந்து நொறுங்கிய இடத்திலுள்ள குப்பைகள் இயந்திரத்தை கொண்டு அகற்றப்படுவது போன்ற புகைப்படங்கள் தொலைக்காட்சிகளில் வெளியானது.

இதன் மூலமாக, விமான விபத்து குறித்த முக்கிய ஆதாரங்கள் அப்புறப்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற கவலை எழுந்துள்ளது. 

விழுந்து நொறுங்கிய விமானம்

உக்ரைன் இண்டெர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இந்த விமானம் ஜனவரி 8ஆம் தேதி டெஹ்ரானில் உள்ள இமாம் காமேனீ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய சற்று நேரத்திலேயே விபத்துக்கு உள்ளானது.

விமான ஊழியர்கள் உள்பட இதில் பயணித்த 176 பெரும் உயிரிழந்தனர். உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி சென்று கொண்டிருந்த அந்த விமானம், அங்கிருந்து கனடாவில் உள்ள டொரண்டோ நகருக்கு செல்ல இருந்தது.

உயிரிழந்தவர்களில் 82 பேர் இரான் நாட்டவர்கள், 63 பேர் கனடாவைச் சேர்ந்தவர்கள், ஒன்பது விமான ஊழியர்கள் உள்பட 11 உக்ரைன் நாட்டவர்கள் ஆவர்.

பத்து சுவீடன் நாட்டவர்கள், நான்கு ஆப்கானியர்கள், மூன்று பிரிட்டானியர்கள் மற்றும் மூன்று ஜெர்மானியர்களும் இறந்தவர்களில் அடக்கம்.

https://www.bbc.com/tamil/global-51074214

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஒரு கேவலமான உலகம். நீயா நானா போட்டியில் ஒன்றுமே அப்பாவிகள் கொல்லப்படுகின்றார்கள்.  


இதே போல் உக்ரரைனும் சில வருடங்களுக்கு முன் ஒரு மலேசிய ஏர்லைன் பயணிகள் விமனத்தி சுட்டு வீழ்த்தியது. அநியாயமாக அத்கில் உள்ளவர்கள் இறந்து எல்லோரும் இறந்து போனார்கள்.

உறவை இழந்த குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அநியாயமாய் இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும்.....ஆழ்ந்த இரங்கல்கள்.....!   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிந்திக் கிடைத்த செய்திகளின்படி இந்த விமானம் ஈரான் நாட்டு படையினரால் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டுவிட்டது என்பதை ஈரான் அதிகாரபூர்வமாக ஒத்துக்கொண்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vanangaamudi said:

பிந்திக் கிடைத்த செய்திகளின்படி இந்த விமானம் ஈரான் நாட்டு படையினரால் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டுவிட்டது என்பதை ஈரான் அதிகாரபூர்வமாக ஒத்துக்கொண்டுள்ளது.

மேற்குலகில் ஈரான் மீதிருந்த கொஞ்ச நஞ்ச அனுதாபமும் போய்விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலிகள்..

Link to comment
Share on other sites

 
Flight 752 | பிந்திய செய்தி : எதிரியின் ஏவுகணை என நினைத்து ஈரானிய இராணுவம் சுட்டு வீழ்த்தியது!

 

இராணுவத்தின் தொடர்பு கருவி ‘ஜாம்’ (jam) செய்யப்பட்டிருந்ததனால் ஏற்பட்ட குழப்பமே காரணம்
Screen-Shot-2020-01-11-at-10.39.40-AM-35

ஈரானைத் தாக்க ஏவுகணையொன்று வந்துகொண்டிருக்கிறது என நினைத்து ஈரானின் ஏவுகணை இயக்கும் இராணுவத்தினர் ஒருவர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக இராணுவமான இஸ்லாமிய புரட்சிக் காவலர் படையின் (Islamic Revolutionary Guard Corps (IRGC)) மூத்த தளபதியான பிரிகேடியர் ஜெனெரல் அமிர் அலி ஹாஜிசாடெ தெரிவித்திருக்கிறார்.

 

அவர் தொடர்புகொள்ளும் ரேடியோ சாதனம் ‘ஜாம்’ செய்யப்படிருந்தபடியால் கட்டுப்பாட்டுத் தளத்துடன் தொடர்புகொள்ள முடியாமல் ஏவுகணை இயக்குனர் தன்னிச்சையாக முடிவெடுக்க வேண்டிய சூழலில் அவர் அப்படிச் செய்திருக்கிறார் எனவும் 10 செக்கண்டுகளில் அவர் அந்த முடிவை எடுக்க வேண்டியிருந்தது எனவும் ஹாஜிசாடே தெரிவித்தார்.

விமானம் திரும்பி வந்ததா?

அதே வேளை, விமான நிலையத்துக்கு அருகேயுள்ள பராண்ட் நகருக்கு மேல் விமானம் பறந்துகொண்டிருந்த வேளையில் அதை ஒரு ஏவுகணை தாக்கியது எனவும் ஆனால் விமானம் அப்போது வெடித்துச் சிதறவில்லை எனவும் அது தொடர்ந்து சில நிமிடங்கள் பறந்துவிட்டுப் பின்னர் விமான நிலையத்தை நோக்கித் திரும்பி வந்துகொண்டிருந்த வேளையில் எரிந்து பின்னர் வெடித்துச் சிதறியது எனவும் காணொளிகளை ஆதாரமாகக் கொண்டு நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. அந்த வேளையில் விமானத்துக்கும் நிலக்கட்டுப்பாட்டுக்குமிடையில் ரேடியோ தொடர்புகள் ‘ஜாம்’ பண்ணுப்பட்டிருந்ததால் விமானிகளால் தொடர்புகளை ஏற்படுத்த முடியவில்லை எனத் தெரிய வருகிறது.

 

கறுப்புப் பெட்டி

தற்போது கறுப்புப் பெட்டி யூக்கிரெயின் வசம் இருப்பதால் விரைவில் விமானிகளின் உரையாடல்களின் பதிவுகள் மூலம் மேலும் சில உண்மைகளை அறியக்கூடியதாகவிருக்கும்.

‘ஜாமிங்’ (Jamming) என்றால் என்ன?

‘ஜாமிங்’ (jamming) என்பது போர்க்களங்கள், படைத் தளங்கள், விமான நிலையங்கள் போன்றவற்றில் இராணுவத்தினர் பாவிக்கும் சமிக்ஞைத் தடை (signal blocking). இது இரண்டு வகைப்படும். ஒன்று ‘எலெக்ட்றோனிக் ஜாமிங்க்’ (electronic jamming). இதன்போது இராணுவத்தினர் பிரத்தியேகமாகவும் இரகசியமாகவும் பேசிக்கொள்ளும் ரேடியோ அலைவரிசையில் எதிரிகள் வேண்டுமென்றே ‘இரைச்சலை’ (noise) அனுப்பிக் குழப்பும் (electronic jamming) நடைமுறை. இரண்டாவது, ரேடார் இயக்குனரின் சமிக்ஞைகளை வேண்டுமென்றே திருப்பி அனுப்புவதன் மூலம் (mechanical jamming) அவரைக் குழப்புவதும் இன்னுமொரு நடைமுறை. றேடார் என்பது அனுப்பப்படும் சமிக்ஞை (signal) ஒரு பொருளில் பட்டுத் தெறிப்பதைக் கொண்டு அப் பொருளின் நிலையை அல்லது நடமாட்டத்தை அறியும் முறை.

https://marumoli.com/flight-752-பிந்திய-செய்தி-எதிரியி/?fbclid=IwAR033aO0yEMHhnb4awZhnvXyokP5lanhECcsaW82NQCH1ilUxOxzpVEKcNQ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரானால் சுடப்பட்ட உக்ரைன் விமானம்; தொடங்கியது கைது நடவடிக்கை

இரானில் சுடப்பட்ட உக்ரைன் விமானம்; பலர் கைதுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionவிமான விபத்தில் இறந்தவர்களில் பெரும்பாலனோர் இரான் மற்றும் கனடாவின் குடிமக்கள் ஆவர்.

உக்ரைன் நாட்டுக்கு சொந்தமான பயணிகள் விமானத்தை, ஏவுகணை தாக்குதல் நடத்தி தவறுதலாக சுட்டு வீழ்த்தியது தொடர்பாக பலரை கைது செய்துள்ளதாக இரான் நாட்டு நீதித்துறை தெரிவித்துள்ளது.

தற்போது நடந்துவரும் விசாரணைகளின் ஒரு பகுதியாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நீதித் துறை செய்தித் தொடர்பாளர் குலாம் ஹுசைன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார். எனினும் அவர் மேற்கொண்டு எந்த விவரங்களையும் வெளியிடவில்லை.

விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பான விசாரணை சிறப்பு நீதிமன்றம் ஒன்றில் நடக்கும் என்று இரான் அதிபர் ஹசன் ருஹானி தெரிவித்துள்ளார்.

இந்த சோகமான சம்பவத்துக்கு ஏவுகணையை ஏவுவதற்கான பொத்தானை அழுத்திய ஒரு நபர் மீது மட்டும் குற்றம் சாட்டக்கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

"தங்கள் தவறை இரான் படைகள் ஒப்புக்கொண்டுள்ளது ஒரு நல்ல முதற்படி. இது போன்ற தவறுகள் மேற்கொண்டு நடக்காது," என்று ருஹானி உறுதியளித்துள்ளார்.

Iran plane downingபடத்தின் காப்புரிமைAFP Image captionவிபத்து நடந்த முதல் மூன்று நாட்களுக்கு தங்களுக்கும் விமான விபத்துக்கும் தொடர்பு இல்லை என்று இரான் அதிகாரிகள் கூறி வந்தனர்.

விமான விபத்தின் பின்னணி

ஜனவரி 8ஆம் தேதி, இரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள விமான நிலையத்தில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவ்வை நோக்கி பறக்க தொடங்கிய பயணிகள் விமானம் ஒன்று சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் அதில் பயணித்த 176 பேருமே உயிரிழந்தனர்.

தங்கள் ராணுவத் தளபதி ஜெனெரல் காசெம் சுலேமானீ அமெரிக்காவால் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது இரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்திய சில மணி நேரங்களில், இந்த விமானம் விழுந்து நொறுங்கியது.

இரானில் சுடப்பட்ட உக்ரைன் விமானம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionவிமானத்தை சுட்டு வீழ்த்திய இரான் படையினர் மீது நடவைடிக்கை கோரி இரானில் பெரும் போராட்டங்கள் நடந்தன.

தாங்கள் அமெரிக்க ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதற்கு அமெரிக்கா எந்த நேரமும் பதிலடி தரலாம் என்று முன்னெச்சரிக்கையாக இருந்த இரான், இந்த பயணிகள் விமானத்தை அமெரிக்காவின் போர் விமானம் என்று தவறுதலாக எண்ணி தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று அமெரிக்கா , கனடா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கூறின.

மேற்கத்திய நாடுகளின் குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வந்தது இரான்; இந்நிலையில் விமானத்தை 'தவறுதலாக' சுட்டு வீழ்த்திவிட்டதாக இரான் ராணுவம் கடந்த சனிக்கிழமை ஒப்புக்கொண்டது.

https://www.bbc.com/tamil/global-51105753

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.