Jump to content

ஜனாதிபதி கோத்தாபய சரியானதை செய்வார் என்ற நம்பிக்கையுள்ளது - சம்பந்தன்


Recommended Posts

ஜனாதிபதி கோத்தாபய சரியானதை செய்வார் என்ற நம்பிக்கையுள்ளது - சம்பந்தன்

Published by J Anojan on 2020-01-08 15:58:17

 
 

(ஆர்.யசி, எம்.ஆர்..எம்.வசீம்)

அதிகார பரவலாக்கல் மூலமாக தமிழ் மக்களின் மனங்களை வெற்றிகொள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்தால் நாம் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்குவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் சபையில் தெரிவித்தார். 

IMG_3386.jpg

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அரசியல்வாதியாக இருக்காத காரணத்தினால் அவர் உண்மைகளை பேசுகின்றார். ஆகவே அவர் சரியானதை செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது. எனினும் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள  ஜனாதிபதியால் முடியாமல் போயுள்ளதென்றால் அதற்கு தமிழ் மக்களின் மனங்களை வெற்றிகொள்ள முடியாமல் போனமையே காரணமாகும்.

அரசியல் அமைப்பு உருவாக்கத்தின் மூலமாக தீர்வு காணப்பட வேண்டும் என்ற முயற்சிகள் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டது. ஆனால் தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு காணப்பட முடியவில்லை. 

எனவே இந்த புதிய அரசாங்கம் உறுதியான தீர்வு ஒன்றினை பெற்றுக்கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது எனவும் அவர் வலியுறுத்தினார். 

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான இரு நாட்கள் விவாதம் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நிலையில் விவாதத்தில் உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் இந்த கருத்துக்களை முன்வைத்தார். 

இந்த நாட்டில் பல்லின சமூகங்கள் வாழ்கின்றனர். எனினும் இந்த நாட்டில் பெளத்த சிங்களமக்கள் பெரும்பான்மை மக்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. எனினும் ஏனைய சமூகங்களும் வாழ்ந்கின்றனர். அவர்களை புறக்கணிக்க முடியாது. ஏனைய மக்களின் கலாசரம், சமூக கட்டமைப்பை மதிக்க வேண்டும். நீண்டகாலமாக இந்த கட்டமைப்பு உள்ளது. எமக்கு எவருடனும் முரண்பட வேண்டும் என்ற நோக்கம் இல்லை, அனைத்து மக்களுடனும் ஒன்றுபட்ட நாட்டுக்குள் நல்லிணக்கமாக வாழ வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே உள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

https://www.virakesari.lk/article/72819

Link to comment
Share on other sites

பாராளுமன்றத்தில் இவ்வாறாக பேசுவது சரி. 

ஆனால், இந்த பேச்சுக்களால் தொரடந்தும் தமிழ் மக்களை ஏமாற்றுவதாக மட்டுமே இருந்துவிடும் என்ற பயம் உள்ளது. 

மாறாக, சிங்கள அரசின் மீது என்ன நெருக்கடியை கூட்டமைப்பு செய்யும் என்பதே இன்றைய தேவை. அதை பகிரங்கமாக சொல்லவேண்டிய தேவை இல்லை.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் கோட்டாபயவில்  நம்பிக்கை உள்ளது. (உண்மையாகத்தான் சொல்லுகிறேன்) ஆனால் நம்பிக்கை எதில் என்று கேட்கக் கூடாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அரசியல்வாதியாக இருக்காத காரணத்தினால் அவர் உண்மைகளை பேசுகின்றார்.

அப்படிஎன்றால் அரசியல்வாதியாக இருப்பவர்கள் (சம்பந்தன் உள்பட) பொய் பேசுவார்கள் என்று தான் அர்த்தம்கொள்ளவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

CyaDmVmXcAADyJg.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜே ஆர் வந்த போதும் இவர் இதை தான் சொன்னார்

பிரேமதாச வந்த போதும் இவர் இதை தான் சொன்னார்

டிங்கிரி பண்டா வந்த போதும் இதை தான் சொன்னார்

சந்திரிக்கா வந்த போதும் இதை தான் சொன்னார்

மகிந்த வந்த போதும் இதை தான் சொன்னார்

மைத்திரி வந்த போதும் இதை தான் சொன்னார்

இப்ப கோத்தா வந்த போதும் இதை தான் சொல்கிறார்.

அவரின் மூளையில் இது மட்டும் தான் இப்ப சொல்ல ஞாபகத்தில் இருக்குது போல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் கெஞ்சுவதை பாத்தால் பாவமாக இருக்கிறது. காற்றுள்ள போது சும்மா இருந்து விட்டு இப்போ வாயால் ஊதி விடலாம் என்று முயற்சிக்கிறார். இதுதான் இவரது கடைசி முயற்சி. இனியும் மக்களை ஏமாற்ற முடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, nunavilan said:

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அரசியல்வாதியாக இருக்காத காரணத்தினால் அவர் உண்மைகளை பேசுகின்றார். ஆகவே அவர் சரியானதை செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது.

ஐயா நீங்கள் சொன்னால் சரியாய்த்தானிருக்கும்.ஏனெண்டால் நீங்கள் ஒரு பெரீய அரசியல் சாணக்கியன் எல்லே 😎

Link to comment
Share on other sites

5 hours ago, Kavi arunasalam said:

5-B2-DC75-C-B452-4-F21-83-D9-2-DC84-F824

சூப்பரோ சூப்பர்!

சொதப்பல் சம்பந்தன் தனது சொதப்பல் பணியை திறம்பட செய்கிறார்!

Link to comment
Share on other sites

On 1/8/2020 at 4:16 PM, nunavilan said:

ஜனாதிபதி கோத்தாபய சரியானதை செய்வார் என்ற நம்பிக்கையுள்ளது - சம்பந்தன்

தன்ர பொக்கற்றுக்குள்ளை நிறைய காசுகளை திணிப்பார் என்டு சம்பந்தன் நம்புறார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.