Jump to content

ஒரு கொலை; ஒரு கதை: ஒரு முடிவின் தொடக்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கொலை; ஒரு கதை: ஒரு முடிவின் தொடக்கம்

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ   / 2020 ஜனவரி 09

சில செயல்கள் செய்யத்தகாதவை; அவ்வாறு செய்யத்தகாத செயல்களுக்குக் கொடுக்கும் விலை, இறுதியில் மிக அதிகமாக இருக்கும்.   

எல்லாவற்றுக்கும் மேலாக, அச்செயலை ஏன் செய்தோம் என்று, என்றென்றைக்கும் வருந்தும் வகையில், செய்த செயல்களுக்கான எதிர்விளைவுகள் அமைந்து விடுவதுண்டு. இது, தனிமனிதர்களுக்கு மட்டுமல்ல, அரசுகளுக்கும் அரசாங்கங்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் பொருந்தும்.   

இவ்வாறு செய்யத்தகாத செயல்களைச் செய்தவர்களை, வரலாறு மிக மோசமாகத் தண்டித்துள்ளது; சில சமயங்களில் வஞ்சித்தும் உள்ளது.  

கடந்த வாரம், அமெரிக்கா ‘ட்ரோன்’ தாக்குதல்களின் மூலம், ஈரானின் இராணுவத் தளபதி குவாசிம் சொலெய்மானியை கொலை செய்தது.  இத்தாக்குதல்கள், ஈராக்கின் தலைநகரில் அமைந்துள்ள பக்தாத் விமான நிலையத்துக்கு வெளியே நடத்தப்பட்டது. அமெரிக்க - ஈரான் முறுகல் நிலையில், தவிர்க்கவியலாத மோதலை, இக்கொலைகள் சாத்தியமாக்கி உள்ளன.  

image_074da85b28.jpgஈரானிய அரசியலிலும் சமூகத்திலும் அதன் மீயுயர் தலைவர் அயதுல்லா கொமேனிக்கு அடுத்தபடியாக, மிகவும் செல்வாக்கும் மரியாதையும் கொண்டிருந்த சொலெய்மானியின் கொலை, ஈரானை மட்டுமன்றி, முழு உலகையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.   

இந்தக் கொலை தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், மிகுந்த பெருமிதத்துடன் மேற்கொண்டார். அமெரிக்காவின் மிகப்பெரிய எதிரி, வீழ்த்தப்பட்டது போன்றதொரு பாவனையை, அவர் உருவாக்கினார்.   

இன்னொரு வகையில், ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டபோதும், ஐ.எஸ் தலைவர் அபூபக்கர் அல்-பக்தாதி கொல்லப்பட்ட போதும், எவ்வாறு அமெரிக்க ஜனாதிபதிகள் அவற்றைப் பெருமிதத்துடன் அறிவித்தார்களோ, அதேபோலவே குவாசிம் சொலெய்மானியின் கொலையும் அறிவிக்கப்பட்டது.   

ஒசாமா, அல்-பக்காதி போன்ற பயங்கரவாதிகள் போலல்ல சொலெய்மானி. இவர், உலக நாடொன்றின் இராணுவத்தின் தளபதி. இவர், இன்னொரு நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த வேளை, கொல்லப்பட்டிருக்கிறார். இவை, இக்கொலையின் தீவிரத்தை உணர்த்துகின்றன.   

ஒரு கொலையும் அதன் கதையும்  

இந்தப் பத்தியில், 2019ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஏழாம் திகதி, ‘2019ஆம் ஆண்டின் சிந்தனையாளர்கள்’ என்ற கட்டுரையில், அமெரிக்காவில் இருந்து வெளிவரும், அயலுறவுக் கொள்கைகளுக்கான முதன்மைச் சஞ்சிகையான ‘Foreign Policy’ இல், 2019ஆம் ஆண்டில், உலகின் முக்கியமான 100 சிந்தனையாளர்களில், பாதுகாப்புக் காவலர்கள் பிரிவில், முதலாவது இடம் குவாசிம் சொலெய்மானிக்கு வழங்கப்பட்டு இருந்ததையும் அதன் முக்கியத்துவத்தையும் குறிப்பிட்டிருந்தேன். அவரே, கடந்த வெள்ளிக்கிழமை (03) கொல்லப்பட்டிருக்கிறார்.   

இந்தக் கொலையைத் “தற்காப்புக்கான தாக்குதல்” என்று, அமெரிக்கா சொல்லிக் கொண்டாலும், இது கொலை என்பதில், எந்தவொரு சந்தேகமும் இல்லை. சர்வதேசச் சட்டங்களை, அமெரிக்கா மீறி இருக்கிறது.   

ஈராக்கின் அனுமதியின்றி, அமெரிக்க விமானங்கள், ஈராக்கிய வான்பரப்பைப் பயன்படுத்தி உள்ளன. ஈராக்கின் அனுமதி இன்றியே, இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.  

இந்தத் தாக்குதல்களுக்குக் கட்டாயம் விடையளிப்பதாக, ஈரான் தெரிவித்துள்ள நிலையில், ஈராக்கில் உள்ள அல்-அசாத், இர்பிலில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது, கண்டம்விட்டுக் கண்டம் பாயும் குண்டுத் தாக்குதலை ஈரான் நடத்தியுள்ளது. தாக்குதல்  இடம்பெற்றுள்ளதாக அமெரிக்கப் பாதுகாப்பு அலுவலகமான ‘பென்டகன்’ கூறியுள்ளது.   

image_47a283232b.jpg

ஈரான் பதில் தாக்குதல் நடத்தினால், மிக விரைவில் அதற்கான எதிர்வினை இருக்கும் என, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அச்சுறுத்தல் விடுத்துள்ள நிலையிலேயே இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதற்கு மேலாக, “ஈரானின் முக்கியமான 52 இடங்கள், அடையாளம் காணப்பட்டுள்ளன எனவும் அவற்றின் மீது தாக்குதல் நடத்தப்படும்” எனவும் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.   

கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஈரானை இந்தப் போருக்குள் தள்ளுவதற்கு, அமெரிக்கா தொடர்ச்சியாக முயன்று வந்துள்ளது. இதன் ஒரு பகுதியாகவே, ஈரானுடன் செய்துகொண்ட அணுசக்தி உடன்படிக்கையில் இருந்து, அமெரிக்கா வெளியேறியது; ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது; கிளர்ச்சிகளைத் தூண்டிவிட்டு, ஈரானில் ஆட்சி மாற்றத்துக்கான முயற்சிகளை நடத்தியது.  

 இன்று, இதன் அடுத்த கட்டமாக, ஈரானின் இராணுவத் தளபதியைக் கொலை செய்துள்ளது. ஈரானை ஒரு போருக்குள் தள்ளுவதன் ஊடாக, அதைப் பலமிழக்கச் செய்வதனூடாக, மத்திய கிழக்கில், தனது ஆதிக்கத்தை முழுமையாகத் தக்கவைக்க, அமெரிக்கா முயல்கிறது.  

கடந்த இரண்டு தசாப்தங்களாக, ஈரானின் செல்வாக்கு, மத்திய கிழக்கில் தொடர்ச்சியாக அதிகரித்து வந்துள்ளது. குறிப்பாக, சிரிய யுத்தத்தில், அமெரிக்க - நேட்டோ கூட்டுப் படைகளுக்கு எதிராக, சிரிய - ரஷ்ய - ஈரான் - ஹிஸ்புல்லா ஆகியவற்றின் இணைந்த கூட்டணி, வலுவான எதிர்ச் சக்தியாக மாற்றம் அடைந்துள்ளது.   

அமெரிக்காவின் மேலாதிக்க நலன்களுக்கு எதிரான கூட்டணியை உருவாக்கிய, பிரதான சிந்தனையாளரும் செயற்பாட்டாளரும் ஆகிய குவாசிம் சொலெய்மானியின் கொலை, மிகப்பெரிய சவாலை இந்த அமைப்புகளுக்கு ஏற்படுத்தியுள்ளது. இது, நீண்டு வளரும் முரண்பாட்டுக்கான தொடக்கப்புள்ளி எனக் கருத முடியும்.   

இந்தக் கொலையை நிகழ்த்தியதன் மூலம், இரண்டு விடயங்களை அமெரிக்கா செய்துள்ளது.   
முதலாவது, ஈராக்கை விட, நில அளவில் நான்கு மடங்கு பெரியதும் இரண்டு மடங்கு அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட ஈரான் மீது, போர் ஒன்றை ஏவியுள்ளது.   

இரண்டாவது, 2003இல் ஈராக்கை ஆக்கிரமித்ததன் மூலம், அமெரிக்கா அடைய விரும்பிய பலன்களை, அடையவில்லை என்பதையும் இது காட்டுகிறது.   

குவாசிம் சொலெய்மானி, ஈரானின் செல்வாக்கை மத்திய கிழக்கில் அதிகரிப்பதில், முக்கிய பங்காற்றி இருக்கிறார். அத்துடன், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு, முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டதற்கும் இவரின் பங்களிப்பு முக்கியமானது. சிரிய யுத்தத்தில், அமெரிக்காவில் எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போனதற்கான காரணங்களில், சொலெய்மானி முக்கிய பாத்திரம் வகித்தார்.  

ஈரானை ஆத்திரமூட்டுவதன் மூலம், வலிந்து போருக்கு இழுக்கும் அமெரிக்காவின் தந்திர வலைக்குள் சிக்காமல், ஈரானைத் தொடர்ச்சியாகத் தடுத்து வந்ததில், சொலெய்மானின் செயற்பாடுகள் முக்கியமானவை.  இன்றுவரை, ஈரான் எந்தவொரு போரிலும் சிக்கிச் சீரழியாமல் இருப்பதற்கு, குவாசிம் சொலெய்மானின் தலைமைத்துவம் முக்கியமானது. அவரால் பழக்கப்பட்ட, தெளிந்த மூலோபாயச் சிந்தனைகள், தொடர்ந்தும் ஈரானில், அவரது கொள்கைகளைத் தீர்மானிக்குமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.   

இந்தக் கொலையின் மூலம், மத்திய கிழக்கில் அமெரிக்காவுக்குப் பாதுகாப்பற்ற நிலை உருவாகி உள்ளது. எந்தவோர் அமெரிக்கப் படை வீரனோ, அமெரிக்க இராஜதந்திரியோ, அமெரிக்கச் சுற்றுலாப் பயணியோ சுதந்திரமாக உள்ளார் எனக் கருத முடியாத நிலை, மத்திய கிழக்கு எங்கும் ஏற்பட்டுள்ளது.  இந்த நிலையில், தன்னையும் தனது மக்களையும் தற்காத்துக்கொள்ள, ஏராளமான பணத்தையும் வளங்களையும் செலவழிக்க வேண்டிய கட்டாயத்தில், அமெரிக்கா இருக்கிறது.   

ஈரான் தனது பதிலை, எந்த வகையிலும் எந்த இடத்திலும் எப்போதும் செய்ய முடியும் என்பதை, செவ்வாய்க்கிழமை (07) தாக்குதல் நிரூபித்துள்ளது. இது, அமெரிக்க இராணுவத்தில் மிகப்பெரிய நெருக்கடி நிலையைத் தோற்றுவித்துள்ளது. இந்த அபாயம், அமெரிக்காவுக்கு மட்டுமன்றி அமெரிக்காவின் கூட்டாளி நாடுகளான ஏனைய நாடுகளுக்கும் உண்டு.   

image_ec48251868.jpg

விரும்பியோ விரும்பாமலோ, அமெரிக்காவின் கூட்டாளியாக இருப்பதன் மூலம், குவாசிம் சொலெய்மானியின் கொலைக்கு, அவர்கள் அனைவரும் பொறுப்பு கூற வேண்டியவர்கள் ஆகிறார்கள். இது, மத்திய கிழக்கில், புதிய அதிகாரச் சமநிலையை ஏற்படுத்தி உள்ளது.   

இந்தக் கொலை, பொருளாதாரத்திலும் உலகளாவிய ரீதியிலும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.  குவாசிம் சொலெய்மானி கொலையைத் தொடர்ந்து, ஆசிய பங்குச் சந்தைகள், சரிவை அடைந்தன; சர்வதேச சந்தையில், எண்ணெய் விலை அதிகரித்தது; போருக்கான தொடக்கமாக, இதை அனைவரும் காண்கிறார்கள்.   

முடிவின் தொடக்கம்: மத்திய கிழக்கில் முடிவுக்கு வரும் அமெரிக்கச் செல்வாக்கு  

குவாசிம் சொலெய்மானி கொலையைத் தொடர்ந்து, “நேரடியான இராணுவ மோதலில் ஈடுபடத் தமக்கு விருப்பமில்லை” என, சுவிட்சலாந்து தூதுவராலயம் மூலம், ஈரானுக்கு அமெரிக்கா அறிவித்துள்ளது. இதன் மூலம், தனது செயலுக்கான விலையைக் கொடுக்காமல், தப்பிப் பிழைக்க அமெரிக்கா முனைந்தது.   

ஆனால், “அனைத்துப் பேச்சுவார்த்தைகளும் முடிவடைந்து விட்டன; சொலெய்மானி கொலைக்கு, நிச்சயம் தண்டனை உண்டு” என ஈரான் பதிலளித்துள்ளது.   

இவ்வளவு காலமும், ஈரான் அவசரப்பட்டது கிடையாது. ஈரானுக்கு அவசரப்பட வேண்டிய தேவையும் இல்லை. களங்களும் காலமும் ஈரானுக்கு மிகவும் சாதகமாகவே உள்ளன.   

இந்தத் தாக்குதல்கள், ஈராக்கிலிருந்து மட்டுமல்ல; மத்திய கிழக்கில் இருந்தும், அமெரிக்காவை வெளியேற்றுவதற்கான சாத்தியக்கூறுகளைத் தமக்குள் பொதிந்து வைத்திருக்கின்றன.  இன்னொரு வகையில் சொல்வதானால், அமெரிக்கா கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக, மத்திய கிழக்கின் மீது, செல்வாக்குச் செலுத்தி வந்த தனது ஆதிக்கத்தை, முழுவதுமாக இழப்பதற்கான தொடக்கப் புள்ளியை, இப்போது இட்டுள்ளது.   

இப்போது, ஈரான் - அமெரிக்க அதிகாரப் போட்டியில், புதிய மய்யமாக, ஈராக் உருவாகியுள்ளது. ஈரானில் இனிவரும் காலங்களில் நடக்கும் நிகழ்வுகள், ஈராக்கின் எதிர்காலத்தை மட்டுமன்றி, மத்திய கிழக்கின் எதிர்காலத்தையும் தீர்மானிக்க வல்லவை.   

ஒரு தாக்குதலை அமெரிக்கா நடத்தி முடித்துள்ளது. ஒரு நாட்டின் இராணுவத் தளபதியை அது கொன்றுள்ளது. சர்வதேச சட்டங்களைத் துச்சமென நினைத்து உள்ளது.   

இதேவேளை, இந்தக் கொலை தொடர்பில், ஐக்கிய நாடுகளில் உரையாற்றுவதற்கு முனைந்த, ஈரானின் வெளியுறவு அமைச்சருக்கு விசாவை, அமெரிக்கா மறுத்துள்ளது. இது ஒருபுறம் சட்டவிரோதமானது; இன்னொருபுறம், ஐக்கிய நாடுகள் சபையையே கேள்விக்கு உட்படுத்துகிறது.   

சொலெய்மானினின் கொலையின் பின், ஒரு பதற்றத்தை மத்திய கிழக்கில் அமெரிக்கா ஏற்படுத்தியுள்ளது. இப்போது வேறு வழியின்றி, பாதுகாப்பான எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. இதன் தாக்கங்கள், உலகெங்கும் உணரப்படும்.
 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஒரு-கொலை-ஒரு-கதை-ஒரு-முடிவின்-தொடக்கம்/91-243755

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.