Jump to content

கோட்டபாய அரசு ஜெனிவாவை எவ்வாறு எதிர்கொள்ளும்?  -யதீந்திரா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கோட்டபாய அரசு ஜெனிவாவை எவ்வாறு எதிர்கொள்ளும்?  -யதீந்திரா


கோட்டபாய ராஜபக்சவிற்கும் இலங்கையின் முன்னைய ஜனாதிபதிகளுக்கும் அடிப்படையிலேயே ஒரு வித்தியாசமுண்டு. அதாவது, கோட்டபாய ஒரு ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி. 1971இல் இலங்கை இராணுவத்தில் இணைந்துகொண்ட கோட்டபாய, விடுதலைப்புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முக்கிய தாக்குதல் நடவடிக்கைகளில் நேரடியாக பங்குகொண்ட ஒருவர். உதாரணமாக ஓப்பிரேசன் திரிவிட பலய, ஓப்பிரேசன் லிபரேசன் (வடமாராட்சி ஒப்பிரேசன்) போன்றவற்றை குறிப்பிடலாம். வடமாராட்சி ஓப்பிரேசன் விடுதலைப் புலிகளுக்கு எதிராக பெருமெடுப்பில் மேற்கொள்ளப்பட்ட ஒரு கூட்டு இராணுவ நடவடிக்கை. யாழ்குடாநாட்டை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ஒன்று. இந்த இராணுவ நடவடிக்கையில் கோட்டபாய ஒரு முக்கிய இராணுவ அதிகாரியாக பங்குகொண்டிருந்தார். தாக்குதலில் இராணுவம் முன்னேறிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில்தான், ஓப்பிரேசன் பூமாலை என்னும் பெயரில் இந்திய கடற்படை விமானங்கள் உணவுப்பொதிகளை போட்டது. இதனைத் தொடர்ந்து, அந்த தாக்குதல் நடவடிக்கையை முன்னெடுக்க முடியாமல் போனது. இந்தியா அப்போது தலையீடு செய்யாதிருந்திருந்தால், தாங்கள் அப்போதே விடுதலைப் புலிகளை தோற்கடித்திருக்கலாம் ஆனால் இந்தியா விடயங்களை குழப்பிவிட்டது என்றவாறான ஒரு கருத்து கொழும்பில் உண்டு.

1992இல் இராணுவத்திலிருந்து ஒய்வுபெற்ற கோட்டபாய, 1998இல் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். 2005இல் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, கோட்டபாய இலங்கையின் பாதுகாப்புச் செயலராக நியமிக்கப்பட்டார். விடுதலைப் புலிகளை இராணுவ ர்Pதியில் தோற்கடிக்கலாம் என்னும் நம்பிக்கை இலங்கையில் எவருக்குமே இருந்திருக்கவில்லை. இவ்வாறானதொரு பின்புலத்தில், அதனை செய்ய முடியும் என்பதில் கோட்டபாய மிகவும் உறுதியாக இருந்ததாக எரிக் சொல்கெய்ம் கூறுகின்றார். 2011இல் நோர்வேயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேசுகின்ற போதே, சொல்கெய்ம் இதனை கூறியிருந்தார். அதவாது, இந்த உலகத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ வெற்றியொன்று சாத்தியமென்று எவருமே கூறியிருக்கவில்லை. அப்போது இராணுவத் தளபதியாக இருந்த, ஜெனரல் சரத்பொன்சேகா விடுதலைப் புலிகளை இராணுவரீதியில் பலவீனப்படுத்துவது சாத்தியமே தவிர, முழுமையாக அழிக்க முடியாது என்றே கூறியிருந்தார். ஆனால் ஒருவர் மட்டுமே இதில் விதிவிலக்காக இருந்தார். அவர்தான் கோட்டபாய ராஜபக்ச. அதே வேளை பிறிதொரு உரையாடலில் கோட்டபாய பத்து வருடங்களுக்கு பின்னர் இலங்கையின் ஜனாதிபதியாக வரக் கூடுமென்றும் சொல்கெய்ம் கூறியதாகவும் ஒரு தகவலுண்டு. திருகோணமலை மூலோபாய கற்கை நிலையத்திற்காக வழங்கிய பிரத்தியேக நேர்காணல் ஒன்றின்போது, இந்தக் கேள்வியை நான் முன்வைத்திருந்தேன். நீங்கள் இவ்வாறு கூறியதாக சொல்லப்படுகின்றது ஆனால் தற்போது அவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளார். அவர் வெற்றிபெறும் பட்சத்தில் அது இலங்கையை மையப்படுத்தி நிகழும் புவிசார் முரண்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்துமா? இதற்கு சொல்கேய்ம் நேரடியாக எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை அதே வேளை தான் அவ்வாறு கூறவில்லை என்றும் மறுக்கவில்லை. கோட்டபாயவின் வெற்றியை சொல்கெய்ம் பத்து வருடங்களுக்கு முன்னரே கணித்திருக்கின்றார் என்னும் முடிவுக்கே வரலாம்.

Gota and Mahinda

எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கை பிரச்சினை மீளவும் பேசு பொருளாகப் போகின்றது. முன்னைய ஆட்சியாளர்கள் மனித உரிமைகள் பேரவையுடன் ஒத்துப் போகும் அணுகுமுறையை கடைப்பிடித்திருந்தனர். 2015இல் கொண்டுவரப்பட்ட பேரவையின் பிரேரணைக்கு இணையனுசரனை வழங்கியதன் மூலம், உலகிற்கு பொறுப்புக் கூறும் கடப்பாட்டை ஏற்றுக்கொண்டனர் ஆனால், ஏற்றுக்கொண்டது போன்று விடயங்களை நிறைவேற்றவில்லை. அரசாங்கத்திற்குள் இருந்த உள் முரண்பாடுகளை காரணம் காட்டி பொறுப்புக் கூறலை இழுத்தடித்தனர். இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் மீளவும் யுத்த வெற்றியின் சொந்தக்காரர்களிடம் ஆட்சி சென்றிருக்கின்றது. அவர்கள் இனி இந்த விடயத்தை எவ்வாறு கையாளுவர்?

மைத்திரி-ரணில் அரசாங்கம் மனித உரிமைகள் பேரவையுடன் ஒத்துப் போவதாக கூறியிருந்தாலும் கூட, இராணுவத்தை குற்றவாளியாக்கும் எந்தவொரு சர்வதேச தலையீடுகளும் இடமளிக்க முடியாது என்றே கூறிவந்தனர். இத்தனைக்கும் இணையனுசரனை வழங்கி ஏற்றுக்கொள்ளப்பட்ட, பிரேரணையில், வெளிநாட்டு நீதிபதிகளின் பங்குபற்றலுடன் கூடிய, நீதி விசாரணை தொடர்பில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. மனித உரிமைகள் பேரவையுடன் ஒத்துப் போவதாக உறுதியளித்த அரசாங்கமே அவ்வாறு கூறியிருக்கின்ற நிலையில், யுத்தத்திற்கு தலைமை தாங்கிய, பிரதான நபரே இலங்கையின் ஜனாதிபதியாக இருக்கின்ற நிலையில், நிலைமைகள் எவ்வாறிருக்கும் என்பதை விளங்கிக்கொள்வதில் சிரமமிருக்காது. ஜனாதிபதி கோட்டபாய இராணுவம் குற்றம் செய்ததாக ஒப்புக்கொண்டால், அது அவர் தன்னையே குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதற்கு சமமானது. எனவே கோட்டபாயவின் அதிகார எல்லைக்குள் இந்த விடயங்களை விவாதிப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லவே இல்லை. அதற்காக மனித உரிமைகள் பேரவையுடனான தொடர்பை அரசாங்கம் துண்டித்துக் கொள்ளாது. தங்களின் நியாயத்தை சொல்லுவதற்கான ஒரு சர்வதேச களமாக அதனையும் அரசாங்கம் பயன்படுத்தும்.

இன்றைய உலக ஒழுங்கில் மனித உரிமைகள் மீதான உலகளாவிய கரிசனை என்பது பலம்பொருந்திய நாடுகளின் அதிகார நலன்களோடு தொடர்புபட்டிருக்கின்றது. இதனை ஒவ்வொரு ஆட்சியாளரும் நன்றாக புரிந்து வைத்திருக்கி;ன்றார். இலங்கையின் ஆட்சியாளர்களும் இதில் கைதேர்ந்தவர்கள். 2009இற்கு பின்னரான சூழலில் சில விடயங்களில் மேற்குலகுடன் (அமெரிக்காவுடன்) ஒத்துப்போகாத காரணத்தினால்தான், அமெரிக்கா மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் மீது, சில மென் அழுத்தங்களை பிரயோகித்தது. ஆனாலும் அந்த மென் அழுத்தங்களை மகிந்த பொருட்படுத்தவில்லை. மேற்குடன் ஒரு பிடிவாதமான அரசியல் அணுகுமுறையையே மகிந்த கடைப்பிடித்தார். மகிந்த மேற்குடன் நெகிழ்வான போக்கை கடைப்பிடித்திருந்தால் அமெரிக்காவின் அழுத்தங்கள் தொடர்ந்திருக்காது. இவ்வாறானதொரு சூழலில்தான் மகிந்த எதிர்பாராத தோல்வியை சந்தித்தார். மகிந்த அதிகம் சீனாவை நோக்கிச் சாய்ந்து கொண்டிருந்த பின்புலத்தில்தான் அவர் ஆட்சியை இழந்தார். ஆரம்பத்தில் அது சீனாவிற்கு வைக்கப்பட்ட ஒரு செக் என்றே பார்க்கப்பட்டது. ஆனால் பின்னர் இடம்பெற்ற விடயங்களோ அதனை தவறென்று உணர்த்தியது. ஆட்சி மாற்றங்களின் மூலம் இலங்கைத் தீவில் சீனாவின் செல்வாக்கை முற்று முழுதாக தடுத்துநிறுத்த முடியாது என்னும் உண்மை தெளிவானது. ஏனெனில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருடங்களுக்கு கொடுத்ததும், கூடவே 15000 ஏக்கர் காணிகளை சீனாவிற்கு கொடுத்ததும் மகிந்த ராஜபக்ச அல்ல. அதனை செய்தது, மேற்குடனும் இந்தியாவுடனும் நிற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட புதிய ஆட்சியாளர்கள்தான். எனவே மகிந்தவை ஆட்சியிலிருந்து அகற்றுவதன் ஊடாக, சீனாவை சற்று எட்ட வைக்கலாம் என்னும் கணிப்பு வெற்றியளிக்கவில்லை. இதன் காரணமாகத்தான் 2019 – தேர்தலில் இந்தியாவோ அல்லது மேற்கோ பெரிய ஆர்வங்களை காண்பிக்கவில்லை. அவர்களின் விருப்பங்கள் எதுவாக இருந்தாலும் கூட, வருபவர்களை கையாளுதல் என்னும் அடிப்படையிலேயே விடயங்களை கையாண்டனர்.

கோட்டபாய ராஜபக்ச ஜனாபதியாக வந்ததிலிருந்து பல்வேறு விடயங்களை கூறிவருகின்றார். அவர் கூறும் விடயங்கள் நாட்டின் அபிவிருத்தி என்னும் கண்ணோட்டத்தில் பார்த்தால் நல்ல திட்டங்கள்தான் ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டுமாயின் இலங்கைக்குள் அதிக முதலீடுகள் வர வேண்டும். அவ்வாறு நடக்க வேண்டுமாயின் அவர் பல்வேறு விடயங்களில் மேற்கின் நலன்களோ ஒத்துப் போகத்தான் வேண்டும். அப்படி நடக்கவில்லை என்றால் அவரால் முன்னோக்கி நகர முடியாமல் போகும். இதெல்லாம் அவர்கள் அறியாததும் அல்ல. சிங்கள ராஜதந்திரம் கடந்த காலத்திலிருந்து கற்றுக்கொண்டு பயணிப்பதில் வல்லமை மிக்கது. சூழ்நிலைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளக் கூடியது. இந்தப் பின்புலத்தில் நோக்கினால் இந்தியாவையும் அமெரிக்காவையும் சினேக வட்டத்திற்குள் வைத்துக் கொள்வதிலேயே கோட்டபாய கவனம் செலுத்துவார். முதலில் இந்தியா அதன் பின்னர் அமெரிக்கா என்பதே அவரது அணுகுமுறையாக இருக்கலாம். கோட்டபாய நிச்சயம் ஜெனிவாவில் இராணுவத்தின் மீதான குற்றச்சாட்டுக்களை ஒரு போதுமே ஏற்றுக்கொள்ள மாட்டார். அந்த வகையில் அவர் ஜெனிவாவை சில விடயங்களில் எதிர்ப்பார். ஜெனிவாவை எதிர்த்துக் கொண்டும் அமெரிக்காவுடன் நிற்க முடியுமென்னும் உலக யதார்த்தத்தை நாம் மறந்துவிடக் கூடாது.
 

http://www.samakalam.com/செய்திகள்/கோட்டபாய-அரசு-ஜெனிவாவை-எ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வந்துட்டாய்ங்கய்யா  வந்துட்டாய்ங்க .

கோட்டாபயவிடம் சொல்லி இந்த ஆய்வாளர்களை முதலில் பிடித்து உள்ளே போடவேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உலகின் முதன் முதல் வந்த நகைச்சுவை...  எம்பெருமான் முருகன், ஔவையார் பாட்டியிடம், சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?  என்று கேட்டது தான். 😂 காலத்ததால் முந்தியதும்.... இன்றும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் நகைச்சுவை இதுதான் என்று அடித்து சொல்வேன். 😁 🤣
    • ஏன் செய்தார்களெனத் தெரியவில்லை. ஹோபோகன் நகரம்  அனேகமாக நியூயோர்க்கில் வேலை செய்வோர் ஹட்சன் நதிக்கு இக்கரையில் வாழும் செல்வந்தமான நகரம். இவர்கள் அங்கேயே வசிப்பவர்களாக இருந்தால் பலசரக்குக் கடையில் களவெடுக்கும் அளவுக்கு வறுமையில் இருக்கும் வாய்ப்பில்லை. அல்லது, காசு கட்டிப் படிக்க வந்து, பணத்தட்டுப் பாட்டில் செய்து விட்டார்களோ தெரியவில்லை. இப்படியான இளையோர் நியூ ஜேர்சியில் இருக்கிறார்கள் என அறிந்திருக்கிறேன். இந்த குறிப்பிட்ட ஷொப்றைற் கடையின் self checkout மூலம் பலர் திருடியிருக்கிறார்கள். இதனாலேயே வீடியோ மூலம் கண்காணிப்பை அதிகரித்து இவர்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். 
    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள். வாய்பில்லை - ஒரு கிரிமினல் குற்றம் மூலம் வரும் தண்டனை காலம் - வதிவிடத்துக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வதிவிடத்துக்கு கணக்கில் எடுக்க அந்த காலம் சட்டபூர்வமானதும், தொடர்சியானதாயும் இருக்க வேண்டும். சிறைவாச காலம் சட்டபூர்வமானதல்ல. அதேபோல் ஒரு குற்றத்துக்காக சிறை போனால் “தொடர்சி” சங்கிலியும் அந்த இடத்தில் அறுந்து விடும். வெளியே வந்த பின், நாடு கடத்தாமல் விட்டால், தாமதித்தால் - சூரியின் பரோட்டா கணக்கு போல், சட்டபூர்வ & தொடர்சியான காலம் மீள பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும்.  
    • புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச   அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்?   ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம்  ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது?      எல்லோருக்கும் எனது தாழ்மையான நன்றி 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.