Jump to content

இந்தியாவுக்காக காத்திருத்தல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்காக காத்திருத்தல்

 image_ad137d1028.jpg

 

தமிழ் மக்களின் எதிர்காலம், தமிழ் மக்களின் கைகளில் அன்றி, வேறு யாருடைய கைகளிலும் இல்லை என்பதை, இப்போதாவது நாம் உணர்ந்திருக்க வேண்டும்.   

எமது விடுதலையை, யாராவது வாங்கித் தருவார்கள் என்று, இனியும் நம்பி இருப்பது, முட்டாள்தனமன்றி வேறில்லை.   

“தீபாவளிக்குத் தீர்வு வரும்” என்று சொன்னவர்கள், இப்போது கதையைக் கொஞ்சம் மாற்றி, “இந்தியா தீர்வைப் பெற்றுத்தரும்” என்று சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள்.   

இதில் மெச்சத்தக்க விடயம் யாதெனில், தாங்கள் பிரதமர் மோடியைத் தரிசிப்பதற்காகக் காத்துக் கிடப்பதாக, ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆக, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள், யாருடைய நலன்களுக்காக வேலை செய்கிறார்கள் என்பதும், யாருடைய கட்டளைகளை நிறைவேற்றுகிறார்கள் என்பதும், இப்போது இன்னும் தெளிவாகிறது.   

மோடியைச் சந்திப்பதற்கான அழைப்பு, நீண்ட நாள்களுக்கு முன் விடுக்கப்பட்டாலும், பிரதமர் மோடிக்கு நேரம் கிடைக்காமையால், இது சாத்தியமாகவில்லை என்று காரணமும் சொல்கிறார்கள்.  

இந்தத் தமிழ்ப் பிரதிநிதிகளைச் சந்திப்பதற்கு, ஓராண்டுக்கு மேலாக நேரம் கிடைக்காமல் இருந்த பிரதமர் மோடிக்கு, இலங்கையின் புதிய ஜனாதிபதியைச் சந்திக்கப் போதுமான நேரம் கிடைத்திருக்கிறது.  

இது, இந்தியா எதை முதன்மைப்படுத்துகிறது என்பதை விளக்கப் போதுமானது. ஆனால், தமிழ் அரசியல் தலைவர்கள், புதிய பொய்களை அவிழ்த்து விடுகிறார்கள்.   

இன்னொரு தேர்தல் வருகிறது. தீபாவளியைச் சொல்ல முடியாது. எனவே, இப்போது இந்தியாவைச் சொல்லுவோம் என்று முடிவெடுத்து இருக்கிறார்கள் போலும்.   

தமிழ் மக்கள், யாரையும் நம்பாமல், தங்களது சொந்தக் கால்களில் நின்று, போராடி வெல்லும் வரை, தமிழ் மக்களின் விடிவு சாத்தியமில்லை.   

13 என்ற மாயமானை, இப்போது மீண்டும் கையில் எடுத்திருக்கிறார்கள். இது, கொஞ்சம் வசதியானது. இந்தியா, ஈழத்தமிழர், அரசமைப்பு என்ற பல்வேறு பெட்டிகளில், இதை அடைக்கவியலும். தமிழருக்கான தீர்வில், இந்தியா உறுதியாக இருக்கிறது என்று சொல்பவர்கள், இரண்டு விடயங்களைத் தெளிவாகவும் வெளிப்படையாகவும் சொல்ல வேண்டும்.   

முதலாவது, தமிழருக்கு, இந்தியா வலியுறுத்துகின்ற தீர்வு, என்ன என்பதாகும்.  

 இரண்டாவது, தமிழர்களுக்குத் தீர்வு வழங்குவதில், எந்த அடிப்படையில் இந்தியா உறுதியாக இருக்கிறது என்று சொல்கிறார்கள்? யாருக்கு, யாரால், எப்போது, எங்கே இதுதொடர்பிலான உறுதிமொழி அளிக்கப்பட்டது.   

இவ்விரு கேள்விகளுக்கான விளக்கமான பதிலை, இந்தியாவை நம்பச் சொல்லுகின்ற தமிழ்த் தலைவர்கள், உடனடியாகச் சொல்லியாக வேண்டும். ஏனெனில், இவர்கள் மக்களை நம்பாமல், இந்தியாவை நம்பச் சொல்பவர்கள் ஆவார்.   

மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து, எதுவித கருத்தும் தெரிவிக்காமல், வெறுமனே வெற்றுக் கோஷங்களால், தங்கள் தேர்தல் ஆசனங்களைக் காப்பாற்றுவதற்கான போட்டியில், இப்போதே இறங்கி இருக்கிறார்கள்.   

தமிழ் மக்களது அஹிம்சை வழியிலான போராட்டத்திலும் சரி, அதைத்தொடர்ந்த ஆயுத வழியிலான போராட்டத்திலும் சரி, போர் முடிவுக்கு வந்த நிலையில், ஏற்பட்ட புதிய நிலைமைகளின் அடிப்படையிலும் சரி, தமிழ் மக்களுக்கு ஆதரவாக, இந்தியா என்ன செய்தது என்ற கேள்வியை, மீண்டும் மீண்டும் நாம் கேட்டாக வேண்டும்.  

இந்தியா, இலங்கைக்குக் குழி பறிக்கிறது 

இலங்கையின் பொருளாதாரம், பாதுகாப்பு, தேசிய இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு, தேசிய இனப்பிரச்சினைக்கான நியாயமான தீர்வு, அமைதியான எதிர்காலம் ஆகிய எல்லாவற்றுக்குமே இந்தியா, குழிபறித்து வந்துள்ளது. இதுதான் எமது கடந்த 50 ஆண்டு கால வரலாறு ஆகும்.  

இன்று, இந்தியா ஒரு பாசிச அபாயத்தை எதிர்நோக்கி நிற்கிறது. இலங்கையும் அவ்வாறே.   
இந்தியா, தனது சொந்த மக்களையே நசுக்குகிறது; அடிப்படை உரிமைகளை இல்லாமல் செய்கிறது. இந்தியாவின் பல பகுதிகளில் வாழுகின்ற மக்கள், தங்களது உரிமைகளைக் கோரிப் போராடுகிறார்கள். அவர்களுடைய உரிமைகளையே வழங்காத இந்தியா, இலங்கைத் தமிழர்களுக்கான அரசியலை முன்னின்று நடத்தி, தீர்வைப் பெற்றுத்தரும் என்று சொல்வது, எவ்வளவு பெரிய ஏமாற்று.  

இன்று, இலங்கையும் இந்தியாவும் அடிப்படை ஜனநாயகத்தைத் தக்க வைப்பதற்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இதுதான், இன்றைய யதார்த்தம். இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல், அரசியல்தீர்வு பற்றியும் அதற்கான இந்தியாவின் வலியுறுத்தல் பற்றியும் பேசுவது அபத்தமானது.    

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இந்தியாவுக்காக-காத்திருத்தல்/91-243756

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.