Jump to content

கிழக்கின் நிலை உணர்ந்த ஈ.பி.ஆர்.எல்.எப்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கின் நிலை உணர்ந்த ஈ.பி.ஆர்.எல்.எப்

-இலட்சுமணன்  

இன்றைய சமகால அரசியல் சூழ்நிலையில் தமிழர் தேசிய அரசியல் போக்குகளும் அதுதொடர்பான கருத்தாடல்களும்  ஆரோக்கியமானதாகத் தெரியவில்லை. 

கட்சிகளுக்கு இடையில் நிலவும் அதிகாரப் போட்டிகளும் தனிப்பட்ட குத்து வெட்டுகளும் காழ்ப்புணர்வுகளும் தமிழ்த் தேசிய அரசியலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பது, இன்று தமிழ் மக்களுக்குள் எழுந்துள்ள அச்ச நிலையாக உள்ளது. 

இத்தகைய சூழலில், தமிழ்த் தேசிய அரசியலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகப் பல்வேறு வியூகங்கள், பெரும்பான்மை அரசியல் கட்சிகளாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போக்குகளுடனும் செயற்பாடுகளுடனும் ஒத்துவராத, முரண்பட்ட கட்சிகளாலும் அமைப்புகளாலும் வகுக்கப்பட்டு வருகின்றன. 

தனிப்பட்ட கோபதாபங்களின் நிமித்தமும் தம்மைத்தாமே மாற்றுத் தலைமைகள் என மக்களின் அங்கிகாரத்தை பெறாமல் கூறிக்கொள்ளும் கட்சிகளும் தேர்தலில் போட்டி போட வேண்டும்; எனக்கும் ஒரு கட்சி இருக்கிறது என்ற சித்தாந்தத்தில் வாக்கு வங்கிகளற்ற புதிதாக உதயமாகிக் கொண்டிருக்கும் தமிழரின் தேசியக் குரலாகத் தங்களைத் தாங்களே வரிந்து கட்டிக் கொண்டிருக்கும் பல்வேறு தமிழ் கட்சிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மாத்திரம் விமர்சித்துக் கொண்டு, தேர்தல் ஒன்றே இலக்காகக் கொண்டு செயற்படுகின்றன. 

இக் கட்சிகள், தமது வேலைத்திட்டம் தொடர்பான தௌிவுபடுத்தல்களை மக்கள் முன்வைக்க வேண்டும். தமது தேவை, எதிர்கால நிகழ்ச்சித்திட்டம், அதை முன்நகர்த்திச் செல்வதற்கான செயற்பாட்டுத்திட்டம், அதன் காலப்பகிர்வு போன்றவை தொடர்பான விளக்கங்களை இக்கட்சிகள் மக்கள் முன்வைக்க வேண்டும். 

அதை விடுத்து, ஊடகங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் அதன் தலைமையையும் ஊடகப் பேச்சாளரையும் விமர்சித்துக் கொண்டிருப்பது ஆரோக்கியமான அரசியல் அல்ல; மாறாக, இது தனிப்பட்ட குரோதத்துக்காக, வஞ்சம் தீர்ப்பது போலவே அமைகிறது.

ஏனெனில், தமிழர் இருப்புத் தொடர்பாகக் கூட்டமைப்பு எதையும் செய்யவில்லை என்று விமர்சனம் செய்பவர்கள், முதலில் தாங்கள் எத்தகைய வேலைத்திட்டங்களைச் செய்துள்ளார்கள் என்பது பற்றி நிரூபிக்க வேண்டும். 

ஏட்டிக்குப் போட்டியாக, கட்சி உருவாக்கியமையையும் கூட்டமைப்புத் தலைமைகளை விமர்சித்ததையும் தவிர, வேறு எதையும் சாதிக்கவில்லை என்றே மக்கள் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இந்தச் செயற்பாடுகள், கூட்டமைப்பைப் பொறுத்தவரையில், எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. மாறாக, செவிடன் காதில் ஊதிய சங்காகவே காணப்படுகின்றன.

இந்நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ள இச்சூழ்சிலையில், கட்சிகளுக்கான ஆசனப்பங்கீடு, கூட்டமைப்பைப் பொறுத்த வரையில் சுமூகமாக அமைந்துவிட்டது என்றே அறியமுடிகிறது. 

ஆனால், மாற்றுத் தலைமை வேண்டும் எனக் கூறிக் கொண்டு, புதிதாக சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் உருவாகியுள்ள அணிகளிடையே ஆசனப் பகிர்வில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. 

கட்சி பதிவாகும் முன்பே, கூட்டுச் சேர்ந்து உள்ளவர்களுக்குள்ளே, ஆசனப்பங்கீடு தொடர்பாகச் சலசலப்புகள் ஏற்பட்டுள்ளன. இவர்களுடன் இன்னும் பல கட்சிகள் இணையும் பொழுது, கட்சிகளுக்கு எவ்வாறு ஆசனங்களை ஒதுக்கீடு செய்வது என்பது சிந்திக்கப்பட வேண்டிய விடயமாக இருக்கப் போகின்றது. 

இந்நிலையில், வடக்கின் முன்னாள் முதலமைச்சர் தலைமையில், ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிடப் போகின்றவர்களுக்கான மக்கள் ஆதரவு, எவ்வாறிருக்கிறது என்பதும் நாடி பிடித்துப் பார்க்கப்பட வேண்டியதாகும். 

அவ்வாறாயின், தமது வேட்பாளர்கள் முதல் தேர்தலில் எத்தனை ஆசனங்களைப் பெறக் கூடியதாக இருக்கும் என்பது தொடர்பான தெளிவான தீர்மானம் இவர்களிடம் உள்ளதா? ஊகங்களின் அடிப்படையில், கற்பனை வெற்றிக் கனியை சுவைக்கின்றார்களா என்ற பல கேள்விகள் மக்களிடம் இருக்கின்றன. இவற்றுக்கு எல்லாம், அவர்கள் சாதகமான விடைகளை மக்கள் முன், தமது செயல்களாலும் வாக்குகளாலும் உறுதிப்படுத்த வேண்டும். 

உண்மையில், இவர்கள் அனைவரும் தமிழ்த் தேசியத்தை நேசிப்பதாக இருந்தால், தமிழ்த் தேசியத்தின் ஒருமித்த வேண்டுகோள், ‘அனைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதாகும். தமிழ்க் கட்சிகள் குரோதங்களை மறந்து, இச்சந்தர்ப்பத்தில் ஒன்றிணையாவிட்டால் தமிழர்கள் மீண்டும் ஒருமுறை தமிழ்த் தேசியத்துக்கு எதிரான வரலாற்றுத் தவறொன்றை முன்னெடுத்ததாக வரலாற்றில் பதிவாகும்’ என்பதாகவே காணப்படுகின்றன. 

இந்த வரலாற்றுத் தவறைத்திருத்திக் கொள்ள, தமிழ்த் தேசியத்தின் பால் அக்கறையும் ஈடுபாடும் உள்ளவர்கள் ஓரணியாக அணிசேர்ந்து, தேர்தலில் போட்டியிட வேண்டும். அப்போதுதான் தமிழ்ப் பிரதிதித்துவத்தைக் காப்பாற்றுவதுடன், தமிழ்த் தேசியப் பிரச்சினை தொடர்பாக, மக்களது விருப்பங்களையும் அடையாளப்படுத்த முடியும். 

மாறாகத் தமிழ்க் கட்சிகள் பிளவுபட்டு, தமிழ் மக்களின் வாக்குகளையும் சிதறடித்து, பிரதிநிதித்துவத்தையும் இழந்து, எதிர்காலத்தில் தமிழ் மக்களை நட்டாற்றில் விட்டுவிட்டுச் செல்லும் நிலைக்கு வந்துவிடக்கூடாது. 

இத்தகைய நிலைமை, எதிர்வரும் தேர்தலில் உருவானால் தமிழ்த் தேசியமும் அதன் அபிலாசைகள் தொடர்பான  கருத்தாடல்களும் போராட்டங்களும் அரசியல் நகர்வுகளும் அஸ்தமனம் ஆகிவிடும் அபாயம் காணப்படுகின்றது. 

மாறாகத் தமிழ் மக்கள், தங்கள் தனிப்பட்ட இருப்புகளுக்காகப் பெரும்பான்மைக் கட்சிகளுக்கு ஆதரவு அளித்து, தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்ளும், சுயநலத் தற்காப்பு அரசியலுடன் சங்கமிக்கும் முடிவுகளை எடுக்கக் கூடாதெனப்  பல்வேறு புத்திஜீவிகளும் கருதுகிறார்கள். இக்கருத்து, சாதாரண தமிழ் மக்களிடமும் ஆழமாக காணப்படுவதையும் காணலாம்.   

இத்தகைய சூழ்நிலையில், தமிழரின் அரசியல் நிலைவரம் தொடர்பாகத் தமிழ்க் கட்சிகளிடையே எத்தகைய குத்து வெட்டுகள் இருந்தாலும், அரசியலில் வடக்கு நிலைவரம் வேறு; கிழக்கு நிலைவரம் வேறு என்ற யதார்த்தம் அனைத்து அரசியல் தலைமைகளாலும் உணரப்பட வேண்டும். 

இவ்வாறான, கிழக்கு மக்களின் கருத்துகளையும் கள நிலைவரத்தையும் கருத்தில் கொண்டு, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு தெரிவிக்க முன்வந்திருக்கிறது. இத்தகைய செயற்பாடானது, தமிழ் மக்களை நேசிக்கும் ஒரு கட்சியாகத் தன்னை மீண்டும் ஒருமுறை அடையாளப்படுத்தி உள்ளது எனலாம்.

காலத்துக்குக் காலம் கட்சிகளின் ஜனநாயகத்துக்காகத் திம்புப் பேச்சுவார்த்தை முதல், இன்றுவரை இப்பணியை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அர்ப்பணிப்புடன் செய்திருக்கிறது என்பது வரலாறு. 

இந்த வரலாற்று உண்மையை, கடந்த சில நாள்களுக்கு முன், அதன் தலைமை ஊடக அறிக்கையாகவும் வெளியிட்டிருந்தது. வடக்கு அரசியல் நிலைக்கு ஏற்ப, மாற்றுத் தலைமை இருப்பதில் பிரச்சினை இல்லை. ஆனால், கிழக்கு மக்களுக்காக, அவர்களது அரசியல் அபிலாசைகளைக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயத் தேவை என்பதை ஈ.பி.ஆர்.எல்.எப் உணர்ந்திருக்கிறது. அதன் வெளிப்பாடே, பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினருமான துரைரட்ணம் ஊடங்களுக்கு வெளிப்படுத்திய கருத்தாகும்.

கிழக்கைப் பொறுத்தவரையில், ஈ.பி.ஆர்.எல்.எவ் எடுத்துள்ள இந்த ஆரோக்கியமான முடிவானது, இழக்கப்படவிருந்த  பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்றும் என்பது உறுதி. 

கிழக்குத் தமிழர்களின் நலன்களில் அக்கறையின்றி, வடக்கின் முடிவுகள் எட்டப்படுமாக இருந்தால், அது ஒட்டுமொத்த தமிழினத்துக்கும் சாவுமணி அடிக்கும் முடிவாகவே இருக்கும். 

எனவே, காலத்தின் தேவை அறிந்து, கிழக்கு நிலைவரம் தொடர்பாக எடுத்துள்ள முடிவானது,   யதார்த்தமானது.  இது தமிழ் மக்களால் ஏகமனதாக வரவேற்கப்பட்டுள்ளது. 

 இந்த முடிவை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு பார்க்கப்போகிறது, அதற்கு நேசக்கரம் நீட்டப் போகிறதா, ஒன்றிணைந்து செயற்பட வாய்ப்பளிக்குமா? என்ற வினாக்களுக்கு நிச்சயம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் தலைமையும் சாதகமாகப் பதிலளிக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. 

ஏனெனில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதைச் செய்யாதுவிடின், அதுவும் தமிழரின் தனித்துவத்தை இழக்கச் செய்வதற்கு துணைபோன கட்சியாகவே கிழக்கு மக்களால் பார்க்கப்படும்.

தமிழ் மக்களின் இன்றைய தேவை, கிழக்கின் இருப்பும் தமிழர் தாயகமும் அதன் பண்பாடும் வரலாறும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே ஆகும். கடந்த இரு தசாப்தங்களாகப் பல்வேறு வழிகளிலும் படிப்படியாகக் கபளீகரம் செய்யப்பட்டுள்ள இந்தக் கிழக்கு மண்ணின் தமிழர் தாயகம், மிகவும் சுருங்கிக் கொண்டு வருகிறது. 

தொழில் வாய்ப்பு, அபிவிருத்தி, கலை, பண்பாடு தொடர்ச்சியாகக் கபளீகரம் செய்யப்படுகிறது. தமிழ்த் தேசியம் அதன் சுயத்தை இழந்து போகிற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

இத்தகைய களநிலவரங்களை, யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள், விளங்கிக் கொள்ளாதவர்கள், வாக்குகளைப் பிரித்து, பிரதிநிதித்துவத்தை இழக்கத் துணை போவார்கள். 

எனவே, கிழக்கின் மீது அக்கறை இருந்தால், கூட்டமைப்பில் இணைந்து, ஆதரவுக் கரம் கொடுக்க வேண்டும். இல்லையேல், தேர்தல் களத்தை விட்டு, தமிழ் மக்களுக்காக ஒதுங்கிவிட வேண்டும். ஏனெனில், கிழக்கில் தமிழரின் இருப்பு, பாதுகாக்கப்படுவதுதான் இன்றைய முக்கிய தேவை.

காலத்தின் தேவை உணர்ந்து, ஈ.பி.ஆர்.எல்.எவ் இந்த முடிவை எடுத்திருப்பது, கிழக்கின் அரசியல் தளம்பலில் இருந்த அச்ச நிலை நீங்குவதற்கு வழிவகுத்துள்ளது எனலாம். இது, தமிழர் அரசியலில் ஆரோக்கியமான செல்நெறியாகும். 

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கிழக்கின்-நிலை-உணர்ந்த-ஈ-பி-ஆர்-எல்-எப்/91-243757

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.