Jump to content

தர்பார் - விமர்சனம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நடிப்பு - ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ்
தயாரிப்பு - லைகா புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - ஏ.ஆர்.முருகதாஸ்
வெளியான தேதி - 9 ஜனவரி 2020
நேரம் - 2 மணி நேரம் 40 நிமிடம்
ரேட்டிங் - 3.25/5

தமிழ் சினிமாவில் வந்திருக்கும் மற்றுமொரு போலீஸ் படம். ஆனால், இது ரஜினிகாந்த் படம். அதுதான் படத்தின் வித்தியாசம். அதுதான் படத்தையும் தூக்கியும், தாங்கியும் பிடிக்கிறது.

இன்றைய தலைமுறை ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் போலீசாக நடித்தால் எப்படி இருக்கும் என்பது தெரியாது. அவரது பழைய படங்களைப் பார்த்திருந்தால் தான் தெரியும். இருந்தாலும் போலீஸ் உடையில் ரஜினியின் ஸ்டைல் என்ன என்பதை இந்தப் படம் மூலம் இன்றைய ரசிகர்கள் புரிந்து கொள்ளலாம்.

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், ரஜினிகாந்த் முதல் முறையாக இணைந்திருப்பதால் இந்தக் கூட்டணி மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தார்களோ இல்லையோ, ஏமாற்றத்தைத் தரவில்லை. ஒரு முழுமையான ரஜினிகாந்த் படமாகக் கொடுக்க நினைத்திருக்கிறார் முருகதாஸ். அதில் முழு மூச்சாக செயல்பட்டிருக்கிறார்.

கதை என்று சொன்னால் அதே வழக்கமான போலீஸ் பார்முலா பழி வாங்கல் கதைதான். மும்பை மாநகரில் போதைக் கும்பலின் நடமாட்டமும், பெண்கள் கடத்தலும் அதிகமாக இருக்கிறது. அவற்றை ஒடுக்க, அதிரடி போலீஸ் அதிகாரியான ரஜினிகாந்த் மும்பை கமிஷனர் ஆக நியமிக்கப்படுகிறார். தனது அதிரடியால் அவற்றைக் கட்டுப்படுத்துகிறார் ரஜினிகாந்த். ஒரு பெரிய தொழிலதிபரின் மகனை அதற்காக கைது செய்து சிறையிலடைத்து, ஒரு காரணத்திற்காக என்கவுண்டரும் செய்கிறார். அதன்பின் ரஜினிகாந்த்தின் மகள் நிவேதா தாமஸ் விபத்து ஒன்றில் கொல்லப்படுகிறார். அந்த தொழிலதிபரும் கொல்லப்படுகிறார். அவர்களைக் கொன்றது யார் என்று தெரியாமல் ரஜினிகாந்த் தேட ஆரம்பிக்கிறார். அந்த கொலையாளி வில்லனை, ரஜினி கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

கமிஷனர் ஆதித்யா அருணாச்சலம் ஆக ரஜினிகாந்த். அவருடைய ஸ்டைல், பேச்சு, நடிப்பு என ஒவ்வொன்றிலும் அவரது ரசிகர்களை ஆகா சொல்ல வைக்கிறார். இப்படி ஒரு ரஜினியைப் பார்த்து எவ்வளவு காலம் ஆகிவிட்டது என நமக்கும் உற்சாகம் தொற்றிக் கொள்ளும் அளவிற்கு நடித்திருக்கிறார் ரஜினி. “காலா, கபாலி, பேட்ட” என கொஞ்சம் வயதான, வேறு விதமான ரஜினியைப் பார்த்து சோர்ந்து போயிருந்த ரசிகர்களுக்கு இந்தப் படத்தில் மிகப் பெரும் விருந்து படைத்திருக்கிறார் ரஜினிகாந்த். தன்னை ஒரு ரசிகராகவே மாற்றிக் கொண்டு ரஜினியை ரசித்து ரசித்து எடுத்திருக்கிறார் இயக்குனர் முருகதாஸ். இந்த வயதிலும் இவ்வளவு உற்சாகமா என ரஜினி இடத்தைப் பிடிக்க ஆசைப்படும் மற்ற ஹீரோக்களுக்கு இன்னும் கொஞ்ச வருடங்களுக்கு அந்த ஆசை வரவே வராது.

கஜினி படத்திற்குப் பிறகு மீண்டும் நயன்தாரா இந்தப் படத்தில் ஏமாந்து போய் விட்டார் அல்லது ஏமாற்றப்பட்டுவிட்டார். இடைவேளைக்கு முன் இரண்டு காட்சிகள், இடைவேளைக்குப் பின் நான்கு காட்சிகள் என அவர் வேலை முடிந்து போகிறது. இருவரையும் கொஞ்ச நேரம் கொஞ்சிப் பேச வைத்து, ஒரு டூயட் பாடலாவது சேர்த்திருக்கலாம். அதைவிட்டு சம்பந்தமே இல்லாமல் ஒரு கல்யாண வீட்டுப் பாடலை தேவையில்லாமல் வைத்திருக்கிறார்கள். நயன்தாராவை இளமையாகவும் காட்டாமல், கொஞ்சம் ஆன்ட்டி ஆகவும் காட்டாமல் இரண்டுக்கும் இடையில் காட்டியிருக்கிறார்கள். கஜினி படத்திற்காக புலம்பியது போல மீண்டும் இந்தப் படத்திற்காகவும் நயன்தாரா புலம்பினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

படத்தின் நாயகி என்று சொன்னால் ரஜினியின் மகளாக நடித்திருக்கும் நிவேதா தாமஸைத்தான் சொல்ல வேண்டும். ஒரு சில காட்சிகள் தவிர படம் முழுவதும் வருகிறார். அப்பா மீதான பாசத்தை வெளிப்படுத்துவதிலும், அப்பா நன்றாக இருக்க வேண்டும என்பதற்காகவும் அவர் செய்யும் செயல்கள் சுவாரசியமானவை. அதிலும் ஒரு காட்சியில் நினைவிழந்து இருக்கும் அப்பா மீது படுத்துக் கொண்டு கண்ணீர் விட்டு அழும் காட்சியில் நம்மையும் கண் கலங்க வைத்துவிடுகிறார்.

படத்தில் நகைச்சுவைக்காக ஒருவர் வேண்டும் என்பதற்காக யோகி பாபுவைச் சேர்த்திருக்கிறார்கள். அவரும் தன் பங்கிற்கு பல இடங்களில் சிரிக்க வைக்கிறார். வில்லனாக சுனில் ஷெட்டி. நாயகனும், வில்லனும் மோதிக் கொள்ளும் ஒரே ஒரு காட்சி கிளைமாக்சாக மட்டுமே அமைவது படத்திற்கு மைனஸ். எதிரி யாரென்றே தெரியாமல் ஹீரோ மோதுவதில் ஹீரோயிசம் அதிகம் வெளிப்படாது. இருப்பினும் அது தெரியாத அளவிற்கு சமாளித்துவிட்டார் இயக்குனர்.

படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு பாட்டு வரப் போகிறது, ரஜினி ஆடப் போகிறார் என்று தெரிந்ததுமே, தட்லாட்டம் தாங்க, தர்லாங்க நீங்க என நம் வாய் பாட ஆரம்பித்துவிடுகிறது. அட, அது பேட்ட பாட்டுதானே என ஞாபகம் வந்த பிறகுதான், இந்தப் படத்தில் சும்மா கிழி பாட்டுதானே வரணும் என நம்மை நாமே திருத்திக் கொள்ள நேரிடுகிறது. அது போலவே இசையமைப்பாளர் அனிருத்தும் திருத்திக் கொண்டால் நல்லது. அந்த ஒரு பாடல் தவிர மற்ற பாடல்கள் ஒரு முறை கூட கேட்கும் ரகமல்ல.

ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ரஜினிகாந்த்தை எவ்வளவு ஸ்மார்ட் ஆக காட்ட முடியுமோ அவ்வளவு காட்டியிருக்கிறார். படத் தொகுப்பாளர் ஒரு 20 நிமிடத்தை கட் பண்ணியிருக்கலாம்.

ஆரம்பத்தில் போதைப் பொருளைக் கடத்துவது யார் என ரஜினி கண்டுபிடிப்பதே ஒரு அரை மணி நேரம் போகும் போலிருக்கிறது. அந்தக் காட்சிகளுக்கு அவ்வளவு நேரம் தேவையா ?. ஒரு கல்யாணப் பாடல், ரயில்வே ஸ்டேஷன் பாடல் இரண்டுமே தேவையில்லை. அவை படத்திற்கு ஸ்பீட் பிரேக்கர்கள்.

போதைப் பொருள் கடத்தல், ஒரு வில்லன், மகள் இழப்பு, அதிரடி போலீஸ் என ஒரு சிறிய வட்டத்திற்குள்ளேயே கதை நகர்கிறது. இதுதான் நடக்கப் போகிறது என யூகிக்கக் கூடிய டெம்ப்ளேட் காட்சிகள் என ஆங்காங்கே சில குறைகள். இருந்தாலும் தன்னுடைய தாறுமாறான ஸ்டைலால் அதையெல்லாம் மறக்க வைக்கிறார் தனி ஒருவன் ரஜினிகாந்த்.

தர்பார் - ரஜினி ராஜ்ஜியம்

https://cinema.dinamalar.com/movie-review/2807/Darbar/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்......வரட்டும் பார்க்கலாம்......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, suvy said:

ம்......வரட்டும் பார்க்கலாம்......!   😁

தமிழ் துவக்கில் தொடங்கி போட்டதாக  கதைக்கிறார்கள் தோழர்.. 👍..😊 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தமிழ் துவக்கில் தொடங்கி போட்டதாக  கதைக்கிறார்கள் தோழர்.. 👍..😊 

"மென்டலின்" ரசிக குஞ்சுகள்...

 

 

Link to comment
Share on other sites

ரஜினியின் தர்பார் திரைப்படம் இணையத்தில் வெளியானது

  •  
தர்பார் திரைப்படம்படத்தின் காப்புரிமை Lyca

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தர்பார் திரைப்படம் இன்று (வியாழக்கிழமை) திரையரங்குகளில் வெளியான நிலையில் அப்படத்தின் தியேட்டர் பிரிண்ட் இணையத்தில் வெளியாகிவிட்டது.

தமிழ் கன் மற்றும் தமிழ் ராக்கர்ஸ் போன்ற தளங்களின் பிராக்ஸி தளங்களில் அத்திரைப்படத்தின் தியேட்டர் பிரிண்ட் வெளியாகியுள்ளது.

தர்பார் திரைப்படம்

இன்று அதிகாலை சுமார் ஐந்து மணியளவில்தான் தர்பார் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. திரைப்படம் வெளியாகி 24 மணிநேரம் கூட முடியாத நிலையில், முழுத் திரைப்படமும் இணைத்தில் வெளியாகி இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இணையத்தில் பலர் தர்பார் படத்தை டவுன்லோட் செய்யும் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

https://www.bbc.com/tamil/arts-and-culture-51045537

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"மென்டலின்" ரசிக கு(ஞ்)சுகள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிக வசூல் தமிழ் திரை வரலாற்றில் முக்கியப்படம் வெளியிட்ட அனைத்து திரையரங்குகளிலும்  கவுஸ் புல்  

இப்படி முதலில் சேதிகள்  வரும் முதலாவது கிழமை 2019 வெளி வந்த தமிழ் படங்களின் வசூலை முந்தியது என்பார்கள் உண்மையில் திரையரங்குகளில்  இவரின் படம் ஊத்தி கொண்டு நிக்கும் இரண்டாவது கிழமை காதும் காதும் வைத்த்து போல் ரஜனி வீட்டு வாசலில் தர்ணா பண்ணுவார்கள் மேலதிக நட்டத்தை கிழவனை பொறுக்க சொல்லி இது வழமை யான ஒன்று .

இந்த கன்னட மெண்டலின்  ரசிககுன்சுகள் திருந்த இடமில்லை .

Link to comment
Share on other sites

11 minutes ago, பெருமாள் said:

அதிக வசூல் தமிழ் திரை வரலாற்றில் முக்கியப்படம் வெளியிட்ட அனைத்து திரையரங்குகளிலும்  கவுஸ் புல்  

இப்படி முதலில் சேதிகள்  வரும் முதலாவது கிழமை 2019 வெளி வந்த தமிழ் படங்களின் வசூலை முந்தியது என்பார்கள் உண்மையில் திரையரங்குகளில்  இவரின் படம் ஊத்தி கொண்டு நிக்கும் இரண்டாவது கிழமை காதும் காதும் வைத்த்து போல் ரஜனி வீட்டு வாசலில் தர்ணா பண்ணுவார்கள் மேலதிக நட்டத்தை கிழவனை பொறுக்க சொல்லி இது வழமை யான ஒன்று .

இந்த கன்னட மெண்டலின்  ரசிககுன்சுகள் திருந்த இடமில்லை .

அப்படி எனில் ஏன் தொடர்ச்சியாக அவரை நம்பி பல நூறு கோடிகள் முதலீடு செய்து படம் தயாரிக்கின்றார்கள்? 2019 இல் நல்ல வசூல் தந்த முதல் 10 தமிழ் சினிமாக்களில் பேட்ட படமும் ஒன்று என்று விகடன் தொடக்கம் தமிழ் இந்து வரைக்கும் பட்டியலிட்டு இருக்கு,

https://www.sacnilk.com/entertainmenttopbar/Kollywood_Box_Office_2019?hl=en

தமிழ் நாட்டு வியாபாரம் மட்டுமல்ல, இந்தியா பூராவுக்குமான வியாபாரம், வெளினாட்டு வியாபாரம், செட்டிலைட் உரிமை, தளங்களுக்கான உரிமை என்று பலவும் இணையும் போது இப்பவும் நல்ல முதலீடு செய்யக் கூடியதாகத்தான் ரஜனிகாந்த் இருக்கின்றார். இதனால் தான் இவரின் அடுத்த படத்தையும் லைகா தயாரிக்கப் போவதாக சொல்லப்படுகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

முதல் பார்வை:  தர்பார் 

போதைப்பொருள் கடத்தல், பெண்கள் கடத்தல் என குற்றச்செயல்கள் அதிகம் நடக்கும் மும்பையைச் சுத்தப்படுத்த ஒரு காவல் ஆணையர் வந்தால், அவர் ஆபத்துகளைச் சந்தித்தால், அதனால் துவண்டு விழுபவர் பின் மீண்டு எழுந்து திருப்பி அடித்தால் அதுவே 'தர்பார்'.

பஞ்சாப்பில் மிகப்பெரிய ஆப்ரேஷனை முடித்துவிட்டு தன் மகள் வள்ளியுடன் (நிவேதா தாமஸ்) ஒரு பார்ட்டியில் பாட்டுப் பாடி நடனம் ஆடி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார் ஆதித்யா அருணாச்சலம் (ரஜினி). மும்பையில் கேங்ஸ்டர்களைக் களையெடுக்குமாறு டெல்லி தலைமை ரஜினிக்குக் கட்டளையிடுகிறது. முக்கியமான மூன்று நிபந்தனைகளுடன் மும்பை கமிஷனராகப் பணியில் அமர்கிறார் ரஜினி.

 

பொறுப்பேற்கும் முன்பே டெல்லி துணை முதல்வரின் மகள் கடத்தப்பட்ட செய்தி பெரிதாக வெடிக்கிறது. இந்நிலையில் ரஜினி இரண்டே மணிநேரத்தில் அவரை மீட்கிறார். இதற்குக் காரணமான மாபியா தலைவன் அஜய் மல்ஹோத்ராவைக் கைது செய்கிறார். மகனை ஜாமீனில் விடுவிக்க தொழிலதிபர் வினோத் மல்ஹோத்ரா முயன்றும் முடியவில்லை. அஜய் மல்ஹோத்ராவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. சிறையில் இருக்கும் அஜய் மல்ஹோத்ராவை விசாரணைக்காகப் பார்க்க வருகிறார் ரஜினி. அங்கு அஜய் மல்ஹோத்ரா பெயரில் வேறு ஒரு இளைஞர் இருக்கிறார்.

ரஜினியின் அந்த மூன்று நிபந்தனைகள் என்ன, அந்த நிபந்தனை அவருக்கே ஆபத்தாக முடிவது எப்படி, அஜய் மல்ஜோத்ராவின் பின்னணி என்ன, வெளிநாட்டுக்குத் தப்பி ஓடிய அஜய் மல்ஹோத்ராவைக் கண்டுபிடிக்க முடிந்ததா, வினோத் மல்ஹோத்ரா ஏன் கொல்லப்படுகிறார், ரஜினியால் மும்பையைச் சுத்தப்படுத்த முடிந்ததா, எதிரிகளைச் சம்பாதித்ததால் ரஜினிக்கு நேர்ந்த இழப்பு என்ன போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.

1578562760751.jpg

முழுக்க முழுக்க ரஜினியை மனதில் வைத்து மாஸ் மசாலா பாணியில் ஏ.ஆர்.முருகதாஸ் திரைக்கதை எழுதியிருப்பது நன்றாகத் தெரிகிறது. அது படமாக்கப்பட்ட விதம் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெறுகிறது.

ஸ்டைல், ஆக்‌ஷன், காமெடி என படம் முழுவதும் ரஜினி ராஜ்ஜியமே பரவி நிறைந்துள்ளது. சமீபத்திய முந்தைய படங்களைக் காட்டிலும் ரஜினி இளமைத் துள்ளலுடன் நடித்துள்ளார். வசன உச்சரிப்பு, நுட்பமான அசைவுகளில் தான் கிங் என்பதை நிரூபித்துள்ளார். நாயகியைப் பார்த்தவுடன் பேச்சு வராமல் பம்முவது, பேச முடியாமல் தொண்டைக்குள் சிக்கிக்கொண்டதைப் போன்று உளறுவது, கை- கால்கள் உதறுவது, நயன்தாராவிடம் பேச ரிகர்சல் செய்வது என ரஜினிக்கான வழக்கமான நகைச்சுவை அம்சங்கள் இதிலும் உள்ளன. அவை அத்தனையையும் தனக்கே உரிய ஸ்டைலில் ரஜினி செய்யும்போது இன்னும் ரசிக்க வைக்கிறார்.

1578562801751.jpg

புத்திசாலித்தனமான ஐடியாக்களை வேண்டுமென்றே உதிர்த்துவிட்டு வில்லன்களின் பலத்தை அறியும் மதி நுட்பத்தையும் ரியாக்‌ஷன்களில் காட்டி அசத்துகிறார். மகள் மீதான பாசத்தில் பரிதவிக்கும்போதும், நிலைமையைச் சரிசெய்ய வெளியில் செல்ல ஸ்பிரிட்டுடன் கிளம்பும்போதும் இயல்பான தகப்பனைக் கண்முன் நிறுத்துகிறார். எதிர் நாயகன் கொடுக்கும் தொல்லைகளால் அவனை எப்படி முடிப்பது விரல்களால் வித்தை செய்யும் விதத்தில் நடிப்பில் கவர்கிறார். யோகி பாபுவைப் படம் முழுக்க கலாய்க்க விட்டு அப்ளாஸ் அள்ளுகிறார். பில்டப் காட்சிகள் அத்தனையிலும் அதகளம் செய்து சினிமாவில் தனக்கான இடத்தில் வெற்றிடமே இல்லை என்பதை நிரூபித்துள்ளார்.

துணை இல்லாமல் இருக்கும் ரஜினி, கமல் ஹீரோயினுக்கு முத்தம் கொடுக்கும் காட்சியை செல்போனில் பார்த்துவிட்டு ஏங்குவது, அனிருத்தின் காதல் பாடலுக்கு ஹம்மிங் பண்ணுவது என ரஜினி ரகளை செய்யவும் தவறவில்லை.

லில்லி கதாபாத்திரத்தில் நயன்தாரா சில காட்சிகளில் ஒப்புக்கு வந்து போகிறார். படத்தில் அவருக்கு எந்த முக்கியத்துவமும் வழங்கப்படவில்லை. சில நகைச்சுவைக் காட்சிகளுக்கும் படத்தின் அழகியல் தன்மைக்கும் உதவியுள்ளார். திருமணப் பாடல் காட்சியும் அவருக்காகவே வைக்கப்பட்டுள்ளது.

1578562839751.jpg

யோகி பாபு போகிற போக்கில் சிக்ஸர் அடிக்கிறார். ''பேசிட்டு வாங்கன்னு சொன்னா பேஷண்ட் ஆகி டோக்கன் வாங்கி வர்றீங்க'', ''அஷ்டமி நவமி கௌதமி'', ''காதலர் தினம் குணால் நெனப்பு. ரோஸ் கொடுக்கப் போறீங்களா'', ''லவ் பண்ணச் சொன்னா டிரைவிங் கிளாஸ் எடுக்குறீங்களா?'' என்று விதம் விதமாகக் கலாய்க்கிறார். தியேட்டர் வெடித்துச் சிரிக்கிறது. ரஜினியும் அதனை அனுமதித்த விதம் செம்ம.

ரஜினியின் மகளாய் நிவேதா தாமஸுக்கு முக்கியமான கதாபாத்திரம். அதை அழுத்தமாகச் செய்துள்ளார். அப்பாவை விட்டுக்கொடுக்காதது, அப்பாவுக்காக ஒரு துணையைத் தேடுவது, தனக்கு நேர்ந்ததை நினைத்து ஒற்றைக் கண்ணில் கண்ணீர் வழிய நிலைகுலைந்துபோவது, மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் அப்பாவின் மீது பாசமாய்ப் படுத்துக்கொள்வது என கதாபாத்திரத்தின் நோக்கத்தை நிறைவேற்றுகிறார். மோகன்லால், கமலுக்கு அடுத்து ரஜினியின் மகளாய் நடித்ததின் மூலம் அவரது கெரியரில் முக்கியமான படமாக 'தர்பார்' அமைந்துள்ளது.

கூட்டத்தில் ஒருவராக வரும் ஸ்ரீமன், ரஜினியின் வீட்டுக்கு வந்து அவரிடம் பேசும் காட்சியில் தன் இருப்பைப் பதிவு செய்கிறார். வினோத் மல்ஹோத்ராவாக நடித்த நவாஸ் பக்குவமான நடிப்பை வழங்கியுள்ளார். புத்திசாலித்தனமான நடிப்பில் சுனில் ஷெட்டி தேர்ந்த நடிப்பைக் கொடுத்துள்ளார்.

1578562890751.jpg

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் மும்பையின் பரபரப்பையும், சண்டைக் காட்சிகளில் விறுவிறுப்பையும் பார்க்க முடிகிறது. ஒளி அமைப்பிலும் ரஜினி- நயனை இன்னும் அழகாகக் காட்டியதிலும் சந்தோஷ் சிவன் கேமரா மேஜிக் செய்துள்ளது. அனிருத் சும்மா கிழி பாடலில் மட்டும் அட போட வைக்கிறார். மற்றபடி ஒட்டுமொத்த உழைப்பையும் பின்னணி இசையில் கொட்டி, பாடல்களில் ஏமாற்றுகிறார்.

பீட்டர் ஹெய்ன், ராம்- லஷ்மண் சண்டைக்காட்சிகள் ஓ.கே.ரகம். ரயில்வே ஸ்டேஷன் சண்டைக் காட்சி ரஜினியின் புஜபல பராக்கிரமத்துக்காகவே வலிந்து திணிக்கப்பட்டுள்ளது.

காக்கிச் சட்டையில் கலர்ஃபுல் ரஜினியைக் காட்ட ஏ.ஆர்.முருகதாஸ் ரொம்பவே மெனக்கிடல் செய்துள்ளார். வெறுமனே அழகியலை மட்டும் நம்பாமல் திரைக்கதையையும் வலுவாகக் கையாண்டுள்ளார். ஒரே நேர்க்கோட்டுக் கதை என்பதால் எந்தக் குழப்பமும் இல்லை. சுவாரஸ்யமான நகைச்சுவைக் காட்சிகள், எமோஷன் காட்சிகள் என்று படத்தைத் தாங்கிப் பிடித்து நிமிர வைக்கிறார். கூட்டம் கூட்டமாக கருத்து சொல்வது இப்படத்தில் தவிர்க்கப்பட்டுள்ளது. ஒரு டிவி விவாத நிகழ்ச்சியில் மட்டும் மக்கள் கருத்து சொல்வதைப் போல காட்சியை வடிவமைத்துள்ளார். அதே சமயம், 'ரமணா' பாணியிலான விசாரணைப் படலங்கள் மட்டும் படத்தில் உள்ளன.

1578563036751.jpg

''நான் அப்பவே வில்லன்மா'', ''ஐ யாம் எ பேட் காப்'' போன்ற பன்ச் வசனங்களைப் பொருத்தமான இடத்தில் பயன்படுத்தியது என ரஜினியிஸத்துக்கு வலு சேர்க்கும் அம்சங்களை முருகதாஸ் பயன்படுத்தியிருக்கும் விதம் சிறப்பு.

ஜெயில்ல காசு இருந்தா ஷாப்பிங் கூட போகலாம், தென்னிந்தியாவுல ஒரு சிறைக் கைதி அப்பப்போ வெளியே போய்ட்டு உள்ளே வர்றாங்க என்று அரசியல் ரீதியிலும் மறைமுகமாக ஒரு விமர்சனத்தை முருகதாஸ் முன்வைத்துள்ளார்.

இவ்வளவு செய்த முருகதாஸ் படத்தில் மருந்துக்குக் கூட லாஜிக் பார்க்கவில்லை என்பதுதான் உண்மை. என்கவுன்ட்டர் என்கிற பெயரில் இஷ்டத்துக்குக் கொலை செய்வது, அதை விசாரிக்க வந்த மனித உரிமை ஆணைய உறுப்பினர்களை துப்பாக்கி முனையில் மிரட்டுவது, அவர்களின் அறிக்கை இப்படித்தான் இருக்கவேண்டும் என்று ரஜினியே எழுதி கையெழுத்து வாங்குவது, மும்பையை ஆட்டிப் படைக்கும் எல்லா வழக்குகளுக்கும் தனிப்படைகள் அமைக்காமல் எல்லாவற்றையும் ரஜினியே விசாரிப்பது, தம்மாத்துண்டு வில்லனாக இருந்தாலும் ரஜினியே நேரில் சென்று பந்தாடுவது, இரு நாடுகள் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் தனி நபராக யாரின் அனுமதி இல்லாமலும் டீல் செய்வது, டெல்லி தலைமையே சவால் விடுவது போன்ற அபத்தங்கள், லாஜிக் இடறல்கள் ஏராளம். மும்பை காவல் ஆணையர் சகல அதிகாரங்களும் சர்வ வல்லமையும் படைத்த அதிகாரியாகக் காட்டியிருப்பது எந்தவிதத்திலும் நம்பும்படியாக இல்லை.

1578563001751.jpg

ரஜினி என்கிற சூப்பர் ஹீரோ பிம்பம் இதையெல்லாம் மறக்கடிக்க வைக்கும் என்று நம்பி முருகதாஸ் லாஜிக் பற்றிக் கவலைப்படாமல் இயக்கியுள்ளார். இது சில இடங்களில் மட்டும் வொர்க் அவுட் ஆகிறது. இரண்டாம் பாதியின் சில இடங்கள் இழுவையாக இருப்பதால் தொய்வு ஏற்படுகிறது. நீளத்தை மட்டும் குறைத்திருந்தால் இப்பிரச்சினை வந்திருக்காது.

இவற்றைத் தவிர்த்தால், ரஜினி ரசிகர்கள் தர்பாரை திரும்பியும் விரும்பியும் பார்க்கலாம். மற்றவர்களும் எனர்ஜி பிளஸ் ரஜினிக்காக தர்பாருக்கு விசிட் அடிக்கலாம்.

 

https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/534224-darbar-review-5.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஜினி – முருகதாஸின் ‘காட்டு தர்பார்’

 
73169727.jpg


 
பொதுவாக ரஜினியின் வணிக சினிமா அரசியல் மீதும் அல்லது அவர் அரசியலுக்கு வருவதாக சொல்லிக் கொண்டிருக்கும் பூச்சாண்டி விளையாட்டு மீதும் பல விமர்சனங்களை வைத்தாலும் அவர் திரைப்படம் வரும் போது ‘பார்த்துதான் வைப்போமே’ என்கிற மெல்லிய ஆவல் சராசரியான நபருக்கு எழுவது இயல்புதான். வெறித்தனமான ரசிகர்கள் உருவாக்கும் ஆரம்ப அலை அடங்கியவுடன் குடும்பம் குடும்பமாக சென்று அவரின் திரைப்படங்களைப் பார்ப்பது ஒரு தமிழ் மரபு. அந்த வகையில் ரஜினியின் charisma இன்னமும் பெரிதாக அடங்கி விடவில்லை என்பது உண்மை.

ஆனால் ‘தர்பார்’ வெளியீட்டில் இவ்வகையான சந்தடிகள் எதையும் அதிகம் பார்க்க முடியவில்லை. ரஜினி மறுபடியும் ‘கமர்சியல்’ சந்தைக்குள் நுழைந்திருப்பது மக்களுக்கு சலிப்பை ஏற்படுத்தி விட்டதா?

தர்பார் - இது எதைப் பற்றிய திரைப்படம்?

ஆதித்யா அருணாச்சலம் (ரஜினிகாந்த்) ரவுடிகளை ‘கன்னா பின்னாவென்று’ என்கவுன்டரில் போட்டுத்தள்ளும் ஒரு வெறி கொண்ட காவல்அதிகாரியாக நமக்கு அறிமுகமாகிறார். அவர் ஏன் அப்படி மூர்க்கத்தனமாகிறார் என்பதை ஒரு பின்கதையின் வழியாக சொல்கிறார்கள்.

ஆக.. காவல்துறை அதிகாரியின் வீரத்தை, பெருமிதத்தை, அரச பயங்கரவாதத்தின் கொலைகளை கண்மூடித்தனமாக ஆராதிக்கும் திரைப்படம் இது. ஹரியின் ‘சாமி’ ‘சிங்கம்’ போன்றவைகளின் இன்னொரு வெர்ஷன். அவ்வளவே. புதுமையாக எதுவுமில்லை.

ஒருவகையில் இது எழுபது, எண்பதுகளில் வெளியாகும் திரைப்படத்தைப் போலவே பலவிதமான கிளிஷேக்களுடன் உள்ளது. ஒரு நேர்மையான காவல் அதிகாரி, எதிரிகளால் தன் பிரியமான உறவை இழப்பார். அதற்கு பழிவாங்க கிளம்புவார். ‘தர்பாரின்’ ஒன்லைனும் இதே அரதப்பழசுதான்.

**

முதலில் இந்தத் திரைப்படத்திலுள்ள நல்ல (அப்படியாகத் தோன்றும்) விஷயங்களை பார்த்து விடுவோம்.

முன்பே குறிப்பிட்டது போல ரஜினியின் வசீகரம் இன்னமும் குறையவில்லை என்பதை ஒப்புக் கொண்டேயாக வேண்டும். இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்தின் வேறெந்த முன்னணி நடிகருக்கு கூட இப்படியொரு வசீகரத்தன்மை பெரிதும்  குறையாமல் இருக்குமா என்று தெரியவில்லை. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் ஒரு காலத்தில் இளசுகள் முதல் பெரிசுகள் வரை செல்வாக்கு பெற்றிருந்த ஜாக்கிசானின் வெற்றி கூட இப்போது அடங்கி விட்டது.

‘தர்பாரில்’ ரஜினி ஸ்டைலாக நடக்கிறார், ஆக்ஷன் செய்கிறார், குறும்புகள் செய்கிறார். சில காட்சிகள் காமெடியாக இருந்தாலும் பார்ப்பதற்கு அப்படியொன்றும் பெரிய முரணாகத் தெரியவில்லை. மனதிற்குள்ளாக ரசிக்கத்தான் செய்கிறோம். (இளமைப் பருவம் முதல் ரஜினியைப் பார்த்து வளர்ந்ததால் அப்படித் தோன்றுகிறதா அல்லது தமிழ் சினிமாவின் தொடர்ச்சியான அபத்தங்கள் நம்மை அவ்வாறு கண்டிஷன் செய்து விட்டதா என்பது ஆய்வுக்குரியது). ஆக்ஷன் காட்சிகள் போலி என்பதை அறிந்தாலும் இந்த வயதில் இப்படி வேகமாக உடலை அசைப்பதே ஒரு சாகசம்தான்.

திரைப்படத்தின் முதல் பாதியில் வரும் ‘ஆள்மாறாட்ட’ குற்றங்கள், அதைப் பற்றிய விசாரணைகள் போன்றவை சற்று நிமிர்ந்து உட்கார வைக்கின்றன. அதற்குப் பிறகு படம் முழுக்க டொங்கலாகி விடுகிறது. பாவம் சுனில் ஷெட்டி. திடகாத்திரமான உடம்புடன் தமிழில் வில்லனாக அறிமுகமாகியிருக்கிறார். ஆனால் எக்ஸ்ட்ரா நடிகர் போலவே அவரை குறைவாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். திடகாத்திரமான ஒருவரைத் தேர்ந்தெடுத்து விட்டு அவரது சுண்டுவிரலை மட்டுமே திரைக்கதையில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

மெயின் வில்லனின் பாத்திரம் அழுத்தமாகவும் சுவாரசியமாகவும் அமைந்தால்தான் நாயகனின் சாகசங்களும் அதிகம் எடுபடும். எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து இது நிரூபிக்கப்பட்டதொன்று.

இவற்றைத் தாண்டி ரஜினி செய்யும் தனிநபர் சாகசங்கள் பலவும் ‘காமெடியாக’ இருக்கின்றன. கமிஷனர் என்கிற அதிகாரத்தில் இருந்தாலும் எந்தவொரு குற்றவாளியைப் பிடிக்க வேண்டுமானாலும் மற்றவர்களை ஓரமாக நிற்க சொல்லி விட்டு இவரே தன்னந்தனியாக சென்று ‘ஹீரோத்தனத்தை’ நிறுவுகிறார். இப்படிப்பட்ட காட்சிகள் அபத்தமாகவும் காமெடியாகவும் இருக்கின்றன. ஒரு இண்டர்நேஷனல் குற்றவாளியைப் பிடிக்க சம்பந்தப்பட்ட நாடுகள் உதவி செய்ய முன்வந்தாலும் ‘நானே தனியாப் பிடிக்கறேன்’ என்று ஹீரோத்தனம் செய்ய இவர் அடம்பிடிக்கும் போது இந்த காமெடியின் அளவு உச்சத்திற்குப் போகிறது.

ஒருபக்கம் என்கவுன்டர் போலீஸாக இருந்து கொண்டு இன்னொரு பக்கம் அழகான பெண்ணிடம் பேசுவதற்கு வாய் குழறுவதாக இவர் செய்யும் நகைச்சுவை இருக்கிறதே.. அபத்தம். ஒரு காரெக்ட்டரின் நம்பகத்தன்மை எப்படி சீரழிந்தால் என்ன, ஒரு திரைப்படத்தில் ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ் என்று அனைத்து நவரசக்குப்பைகளும் வந்து விட வேண்டும் என்று இயக்குநர்கள் கிணற்றுத் தவளையாக யோசிப்பதால் வரும் வினை இது.

நாயகி என்றொருவர் இருக்க வேண்டும் என்கிற சம்பிரதாயத்திற்காக நயன்தாரா. நல்லவேளை, டூயட் எல்லாம் வைத்து இயக்குநர் நம்மைச் சோதிக்கவில்லை. ஆனால் டூயட் இல்லையே.. தவிர இதர அசட்டுத்தனமான ரொமான்ஸ் எல்லாம் நடக்கிறது.

ரஜினியின் மகளாக நிவேதா தாமஸ். கமலின் மகளாக ஒரு படத்தில் நடித்து விட்டதால் ரஜினியின் மகளாக இன்னொன்றில் நடிக்க விரதம் இருந்தாரோ. என்னமோ. ஒரு தந்தைக்கும் மகளுக்குமான உறவு இதில் அழுத்தமாக வெளிப்படவில்லை. ஒருவகையில் இதுதான் பழிவாங்கலின் அடிப்படையே. என்றாலும் தன் ‘கடைசி வீடியோ’வில் இவர் பேசுவது நன்று.

முகத்தை விறைப்பாக வைத்துக் கொண்டு மொக்கையான கவுண்ட்டர் வசனம் பேசுவதை இன்னமும் எத்தனை நாளைக்கு ‘காமெடி’ என்று யோகிபாபுவும் பெரும்பான்மையான தமிழ் ரசிகர்களும் நினைத்துக் கொண்டிருக்கப் போகிறார்களோ என்று தெரியவில்லை.

‘கல்யாணம் பண்ண வேண்டிய வயசுல ஒரு பொண்ணை வெச்சிக்கிட்டு.. இந்த வயசுல.. எங்க வீட்டு பெண்ணை லவ் பண்றியே.. நியாயமா?” என்று ரஜினியை ஒரு பாத்திரம் கேள்வி கேட்கிறது. ‘ஹே.. சூப்பர்பா..’என்று தோன்றியது அந்தக் காட்சியில்தான். தன் மகள் வயது நாயகிகளுடன் ரஜினி டூயட் பாடிய அத்தனை காட்சிகளும் அந்த ஒரு நொடியில் நம் கண் முன் வந்து போகின்றன. ரஜினி படத்திலேயே அவரை நாசூக்காக சவட்டியிருக்கும் முருகதாஸிற்கு பாராட்டு.

‘படையப்பா’ திரைப்படத்தில் உடம்பை முறுக்கி ரஜினி சண்டையிடும் காட்சியைப் பார்த்து ‘வாட் அ மேன்?’ என்று அப்பாஸ் வியக்கும் நகைச்சுவைக் காட்சி ஒன்று உண்டல்லவா? அப்படியே இதிலும் ஒன்று இருக்கிறது. உடற்பயிற்சி செய்யும் ரஜினியின் முறுக்கேறிய உடலை க்ளோசப்பில் காட்டுகிறார்கள். தமிழ் சினிமாவில் VFX டிபார்ட்மெண்ட் எத்தனை தரமாக முன்னேறியுள்ளது என்பதற்கு இந்தக் காட்சி ஓர் உதாரணம்.

இதைப் போலவே, தங்கப் பதக்கம்’ திரைப்படத்தில் மனைவி இறந்த செய்தியைக் கேட்டவுடனேயே விறைப்பு குறையாமல் சல்யூட் அடித்து விட்டு தடுமாறி விழச் சென்று பிறகு சமாளித்துக் கொண்டு சிவாஜி செல்வார் அல்லவா? அப்படியொரு நகைச்சுவையும் இதில் உண்டு. முருகதாஸின் டீமில் அறுபதைக் கடந்த உதவி இயக்குநர் எவரோ இருக்கிறார் போலிருக்கிறது. அவர் ‘சிவாஜி’யின் வெறிபிடித்த ரசிகராகவும் இருக்கக்கூடும்.

மும்பையின் நிழல் உலகு பின்னணியில் நிகழ்ந்திருக்கும் இந்தக் காமெடி கலாட்டாவை இயக்குநர் ‘ராம்கோபால் வர்மா’ ஒருவேளை பார்த்தால் எப்படியெல்லாம் டிவிட்டரில் கிண்டலடிப்பார் என்றொரு கற்பனை ஓடியது. அப்படி கந்தர கோலமாக ரவுடிகளை ஹாண்டில் செய்திருக்கிறார்கள்.

மிகுந்த போராட்டங்களுக்குப் பிறகு திருநங்கைகள், காவல்துறை உள்ளிட்ட அரசு பதவிகளில் அமரத் துவங்கி விட்ட காலம் இது. ஆனால் இயக்குநருக்கோ நடிகருக்கோ இது குறித்த சமூக உணர்ச்சி எதுவுமில்லை. ‘பணம் கொடுத்தால் அவர்கள் வாழ்த்தி நடனமாடுவார்கள்’ என்பதையே காட்டியிருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் ஒரு திருநங்கையை ‘எக்ஸ்ட்ரா’ நிமிடங்கள் கட்டிப்பிடித்து கிளுகிளுப்பாகிறார் ரஜினி. காமெடியாம்.

சந்தோஷ் சிவன் போன்ற திறமையான ஒளிப்பதிவாளர்கள், இது போன்ற சாதாரண திரைப்படங்களுக்கு தங்களின் உழைப்பைக் கொட்டுவது அநீதி. அனிருத்தின் பாடல்களும் சரி, பின்னணி இசையும சரி. எதையும் அவர் ‘கிழிக்க’வில்லை. நம் காதுகள்தான் கிழிகின்றன.

‘இளம் வயது நாயகிகளுடன் டூயட் பாடி நடிப்பது எனக்கே சங்கடமாக இருக்கிறது. இனி என் வயதிற்கு ஏற்ற பாத்திரங்களில் நடிக்கவிருக்கிறேன்” என்று சுயபரிசீலனையுடன் தன்னை உணர்ந்து அறிவித்த ரஜினி, (அதற்கு லிங்கா போன்ற சில தோல்விகளும் காரணம்) ‘கபாலி’ ‘காலா’ என்று சரியான திசைக்கு தடம் மாறினார். அவையும் வணிகத் திரைப்படங்கள்தான் என்றாலும் ரஜினி நடிப்பதற்கு ஏற்ற இடம் அந்தத் திரைக்கதையில் இருந்தது. ஆனால் ஒரு தீவிர ரசிகனாக எண்பதுகளின் ரஜினியை மீண்டும் கொண்டு வருகிறேன் பேர்வழி என்று ‘பேட்ட’யின் மூலம்  ரஜினி என்கிற தேரை இழுத்து வந்து பழைய சாக்கடையில் இறக்கி விட்டார் கார்த்திக் சுப்புராஜ்.

‘அடடா.. சொல்லியிருக்கக்கூடாதா.. நானும் இந்த மாதிரி பண்றதுல.. பெரிய ஆளாச்சே’ என்று முருகதாஸூம் தேர் பயணத்தை சாக்கடையில் இன்னமும் ஆழமாக இறக்கியிருக்கிறார். விளைவு ‘தர்பார்’.

இந்த அழகில் தமிழ் சினிமாவில் ‘கதை’ என்கிற வஸ்து இருப்பதாக நம்பி அதற்காக கதை, திருட்டு, பஞ்சாயத்து எல்லாம் நடப்பதாக கேள்விப்படும் போது எப்படி சிரிப்பது என்றே தெரியவில்லை.


**

இப்படிப்பட்ட க்ளிஷேக்கள், காமெடிகள், பொழுபோக்கு  போன்றவற்றைத் தாண்டி கருத்தியல் ரீதியாகவும் இதுவொரு ஆபத்தான திரைப்படம். ஏனெனில் இதில் வரும் காவல்அதிகாரியான ‘ஆதித்யா அருணாச்சலம்’ கண்மூடித்தனமான ‘என்கவுன்டர்’ ஸ்பெஷலிஸ்ட்டாக இருக்கிறார். இவர் சுட்டுத் தள்ளுகிறவர்கள் எல்லாம் நிச்சயம் ரவுடிகள்தானாம். இந்த லட்சணத்தில் ‘மனித உரிமை கமிஷன்’ அதிகாரியையே துப்பாக்கி முனையில் தனக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத வகையில் மிரட்டுகிறார். முருகதாஸின் வித்தியாசமான ‘சிந்தனை’ இது.

இந்தியாவில் இதுவரை நடந்த என்கவுன்டர் கொலைகளில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் எளிய சமூகத்தினராக இருப்பதில் ஏதோ ஒரு விந்தையுள்ளது. குற்றம் செய்ததாக வலுவாக சந்தேகப்படும் ஒரு அமைச்சரின் மகனோ, அரசாங்கத்தின் உயர் அதிகாரியின் மகனோ ‘என்கவுண்டரில்’ போட்டுத் தள்ளப்பட்டதாக வரலாறு இல்லை. .

காவல்துறையும் நீதித்துறையும் பெரும்பாலும் அழுகிப் போயிருக்கும் சூழலில் ‘கொடூரமான குற்றவாளி’ என்று உறுதிப்படுத்தப்பட்ட ஒரு ஆசாமியை, சட்டத்தின் வழியாக சென்று தண்டிக்க முடியாது என்கிற நடைமுறை காரணம் கருதி, ஒரு நேர்மையான காவல்துறை ஆசாமி ‘என்கவுன்டராக’ கொலை கூட ஏதோ ஒருவகையான நியாயமுள்ளது. நான் சட்டத்தையும் நீதியையும் முழுக்க நம்புபவன் என்றாலும் இதையும் சொல்லித்தான் ஆக வேண்டியுள்ளது. ஆனால் நடக்கும் ‘என்கவுன்டர்கள்’ எல்லாமே இப்படிப்பட்ட ‘நேர்மையுடனா” நடக்கின்றன?

ஒரு சமூகத்தின் கூட்டு மனச்சாட்சியை தற்காலிகமாக திருப்திப்படுத்தவும், உண்மையான குற்றவாளிகளைக் காப்பாற்றி ஒளித்து விட்டு அந்த இடத்தில் எளியவர்களை பலியிடும் சடங்காக அல்லவா ‘என்கவுன்டர்கள்’ அமைந்திருக்கின்றன?

இந்தச் சூழலில் தமிழ் சினிமாவும் ‘என்கவுன்டர்களை’ பெருமிதப்படுத்தி உருவாக்குவதில் உள்ள ஆபத்தை உணர்ந்திருப்பது போல் தெரியவில்லை. குருதிப்புனல் திரைப்படத்தில் கமலுக்கும் நாசருக்கும் ஒர் அற்புதமான உரையாடல் நடைபெறும். குறைந்தபட்சம் அப்படியொரு சமநிலையான காட்சி கூட இது போன்ற ‘போலீஸ்’ திரைப்படங்களில் இருப்பதில்லை.

இந்த நோக்கில் ரஜினியும் முருதாஸும் இணைந்து ‘காட்டு தர்பார்’ நடத்தியிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 3 people

வயோதிபர் எண்டும் பாக்காமல், ரசனியை... கொடுமைப் படுத்தும்,  
முருகதாசை கைது செய்ய வேண்டும். :grin:  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, தமிழ் சிறி said:

Image may contain: 3 people

வயோதிபர் எண்டும் பாக்காமல், ரசனியை... கொடுமைப் படுத்தும்,  
முருகதாசை கைது செய்ய வேண்டும். :grin:  🤣

41nhmyWWscL._SR600,315_PIWhiteStrip,Bott

101 % உண்மை தோழர்..  உள்ளே தள்ளி களி தின்ன விட்டால்தான் சரிவரும் ..😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

வயோதிபர் எண்டும் பாக்காமல், ரசனியை... கொடுமைப் படுத்தும்,  
முருகதாசை கைது செய்ய வேண்டும்.

சும்மாவா? சம்பளம் மட்டும் 100 கோடிக்கு மேல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தர்பார் சர்ச்சை: ’சிறைக்கைதிகள் வெளியே செல்வது’’ குறித்த வசனம் நீக்கம்

தர்பார் திரைப்படத்தில் சசிகலா குறித்து வருவதாக கூறப்படும் வசனங்களை நீக்குவதாக லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் திரைப்படம் நேற்று (வியாழக்கிழமை) இந்தியா முழுவதும் வெளியானது.

நடிகர் ரஜினிகாந்த் போலீஸ் வேடம் ஏற்று நடிப்பதால் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்புகள் இருந்தன.

இந்த படத்தில் ரஜினி மும்பை நகர காவல் ஆணையராக அதித்யா அருணாச்சலம் என்ற வேடத்தில் நடித்துள்ளார். இதில் ரஜினி சிறையில் அடைத்த குற்றவாளிக்கு பதில் வேறொரு நபர் இருப்பது போன்ற காட்சி வரும்; அதன் தொடர்ச்சியாக தென் இந்தியாவில் இம்மாதிரியாக சிறையிலிருந்து வெளியே சென்று ஷாப்பிங் எல்லாம் சென்றுவருவதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவிப்பார்.

மேலும் காசு இருந்தால் சிறையிலிருந்தும்கூட ஷாப்பிங் போகலாம் என்றும் வசனம் வரும்.

ஆனால் அதில் எந்த ஒரு பெயரையும் குறிப்பிடாமல் அவர் பொதுவாகவே அந்த வசனத்தை பேசுவார்.

ரஜினிகாந்த்படத்தின் காப்புரிமை Darbar

தற்போது இந்த வசனம் தொடபாகவே சர்ச்சை எழுந்துள்ளது.

தர்பார் படத்தில் வரும் அந்த வசனத்தை நீக்க வேண்டும்; இல்லையேல் நடவடிக்கை எடுக்கப்படும் என சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் நேற்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அந்த வசனத்தை நீக்குவதாக தர்பார் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.

'எங்களின் தர்பார் திரைப்படத்தில், கைதி சிறைச்சாலையைவிட்டு வெளியே செல்வதை குறிக்கும் வார்த்தைகள் பொதுவாக எழுதப்பட்டதே தவிர, எந்த ஒரு தனிப்பட்ட நபரையும் குறிக்கவோ அல்லது யார் மனதையும் புண்படுத்தவோ எழுதப்பட்டது அல்ல. இருப்பினும் அந்த குறிப்பிட்ட சில வார்த்தைகள் மனதை புண்படுத்துவதாக தெரிய வந்ததால், அது படத்திலிருந்து நீக்கப்படுவதாக தெரிவித்துக் கொள்கிறோம்'' என லைகா நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா மற்றும் அவரின் உறவினர் இளவரசி ஆகியோ கடந்த 2017ஆம் ஆண்டு சிறையிலிருந்து ஷாப்பிங்கிற்கு வெளியே சென்று வருவது போன்ற வீடியோ ஒன்று வெளியானது குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/india-51064945

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Kavi arunasalam said:

சும்மாவா? சம்பளம் மட்டும் 100 கோடிக்கு மேல்.

இஞ்சை ஜேர்மனியிலை தர்பார் பாத்துக்கொண்டிருந்த எங்கடை பொடியன் ஒண்டு நித்திரையிலை கோமா வரைக்கும் போட்டுதாம் மெய்யே? உங்கை பரவலாய் எல்லா இடமும் சனம் கதைக்குது.:grin:

https://www.ruhr24.de/ruhrgebiet/uci-bochum-kino-nrw-polizei-film-zr-13428874.html?fbclid=IwAR2oCJsL9HzcvB9bdWqXxuDbll_tAkBrkw5BwtIzeylNPmehDXyuYFdyiEA

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/9/2020 at 2:43 PM, பெருமாள் said:

அதிக வசூல் தமிழ் திரை வரலாற்றில் முக்கியப்படம் வெளியிட்ட அனைத்து திரையரங்குகளிலும்  கவுஸ் புல்  

இப்படி முதலில் சேதிகள்  வரும் முதலாவது கிழமை 2019 வெளி வந்த தமிழ் படங்களின் வசூலை முந்தியது என்பார்கள் உண்மையில் திரையரங்குகளில்  இவரின் படம் ஊத்தி கொண்டு நிக்கும் இரண்டாவது கிழமை காதும் காதும் வைத்த்து போல் ரஜனி வீட்டு வாசலில் தர்ணா பண்ணுவார்கள் மேலதிக நட்டத்தை கிழவனை பொறுக்க சொல்லி இது வழமை யான ஒன்று .

இந்த கன்னட மெண்டலின்  ரசிககுன்சுகள் திருந்த இடமில்லை .

✔️

18 hours ago, தமிழ் சிறி said:

வயோதிபர் எண்டும் பாக்காமல், ரசனியை... கொடுமைப் படுத்தும்,  
முருகதாசை கைது செய்ய வேண்டும். :grin:  🤣

உண்மை தான்.

 

Link to comment
Share on other sites

பொறுமையாக இந்த படத்தை, ஒரு நிமிடம் தானும் நித்திரை கொள்ளாமல் பார்ப்பவர்களுக்கு ஆகக் குறைந்தது ஒரு எவர் சில்வர் பாத்திரமாவது பரிசாகக் கொடுக்க வேண்டும். ....சத்தியமா முடியல!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, நிழலி said:

பொறுமையாக இந்த படத்தை, ஒரு நிமிடம் தானும் நித்திரை கொள்ளாமல் பார்ப்பவர்களுக்கு ஆகக் குறைந்தது ஒரு எவர் சில்வர் பாத்திரமாவது பரிசாகக் கொடுக்க வேண்டும். ....சத்தியமா முடியல!

அன்பர்களே!   தோழர் நன்றாக பாதிக்கப்பட்டு விட்டார் என்பது தெட்டத் தெளிவாகத் தெரிகின்றது. 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, குமாரசாமி said:

அன்பர்களே!   தோழர் நன்றாக பாதிக்கப்பட்டு விட்டார் என்பது தெட்டத் தெளிவாகத் தெரிகின்றது. 😎

ஏன் நீங்க இன்னும் பார்க்கல அந்தக்கால ரசனி ரசிகர் தானே நீங்க 

அதோ வாராண்டி வாராண்டி வில்லேந்தி ஒருத்தன் என்மேலே எய்தானடி 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதியோர் வதை தடுப்புச் சட்டத்தின் 😜கீழ் தயாரிப்பாளர், இயக்குனர் இருவரையும் உள்ளே தள்ளலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம் நான் தியேட்டர் போகேல்ல 🤣
 

Link to comment
Share on other sites

14 minutes ago, ரதி said:

நல்ல காலம் நான் தியேட்டர் போகேல்ல 🤣
 

டிவிடியில் கூட பார்க்க லாயக்கில்லாத படம். முருகதாசுக்கு ரஜனி மீது என்ன வன்மமோ தெரியாது. வச்சு செய்துட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

டிவிடியில் கூட பார்க்க லாயக்கில்லாத படம். முருகதாசுக்கு ரஜனி மீது என்ன வன்மமோ தெரியாது. வச்சு செய்துட்டார்.

இந்த தோல்வி தொடரனும்  கன்னட பக்கமா கிளம்பிடுவான் அந்த கிழட்டு பயல் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
    • இவர்கள் காலத்தில் இருந்த தமிழ்நாடோ அரச பாடசாலைகளோ இப்போதில்லை. ஆனாலும் அரச பாடசாலைகளில் இன்னமும் மாணவ மாணவியர் படிக்கிறார்கள். வேறு கட்சிகளின் முழு கட்டுப்பாட்டில் உள்ள மாநிலங்களில் தில்லுமுல்லு பண்ணுவது கொஞ்சம் சிரமமாக இருக்குமோ? அமெரிக்காவிலேயே இந்தப் பிரச்சனை இன்மும் ஓயவில்லை. சிலர் நிரூபித்தும் இருக்கிறார்கள்.
    • 🤣...... அதுவும் சரிதான். எங்களுக்கு தெரிந்த குழுவில் எந்தக் குழுவிற்காவது பரிசு விழுந்தால், எப்படி 'ரியாக்ட்' பண்ண வேண்டும் என்று, வேறு எதுவும் யோசிக்க இல்லாத ஒரு நேரத்தில், முன்னரே யோசித்து வைக்க வேண்டும்.....😀
    • இது உங்க‌ட‌ க‌ற்ப‌னை நிஜ‌ உல‌கிற்க்கு வாங்கோ விற‌த‌ர்.......................... இதை தான் ப‌ல‌ர் சொல்லுகின‌ம் இது தேர்த‌ல் ஆனைய‌ம் இல்லை மோடியின் ஆனைய‌ம் என்று.............அட‌க்குமுறை தேர்த‌ல‌ முறைகேடாய் ந‌ட‌த்தினால் ம‌க்க‌ள் புர‌ட்சி ஒன்றே தீர்வாகும்...................ப‌ல‌ நாள் க‌ள்ள‌ன் ஒரு நாள் பிடிப‌டுவான் 2024 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் ந‌ட‌ந்த‌ அநீதிக‌ள் முறைகேடு  ஒரு நாள் வெளிச்ச‌த்துக்கு வ‌ரும்.....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.