Jump to content

’இந்தியா நெருக்கடி நிலையில் உள்ளது’ - தலைமை நீதிபதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடந்துவரும் போராட்டங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி, நாட்டின் அமைதியை கெடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஒருவர் மனு தொடுத்திருந்தார்.

அந்த மனுவிற்கு பதிலளித்த உச்ச நீதிமன்றம் "நாடு நெருக்கடி நிலையில் உள்ளது. நாட்டில் அமைதியை கொண்டுவரும் முயற்சிகள் வேண்டும். இம்மாதிரியான மனுக்கள் அதற்கு உதவாது," என தெரிவித்துள்ளது.

வன்முறை நிறுத்தப்பட்டவுடன் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டம் இந்திய அரசமைப்பு ரீதியானது என அறிவிக்க வேண்டும் என்று கோரி, அவரின் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை விடுத்ததால் இந்த வழக்கு விசாரணைக்கு வந்ததாக பிபிசியிடம் சட்ட விவகார செய்தியாளர் சுசித்ரா மொஹந்தி தெரிவித்துள்ளார்.

இவ்வாறான வழக்குகள் தொடரப்படுவதன் மூலம், நீங்கள் பதற்றத்தை அதிகரிக்க செய்கிறீர்கள் என்று வழக்கறிஞர் தாண்டாவிடம் தலைமை நீதிபதி பாப்டே தெரிவித்தார்.

அரசமைப்புக்கு உட்பட்டு இயற்றப்பட்ட ஒரு சட்டத்தை மீண்டும் அரசமைப்பு சட்டமாக மாற்ற வேண்டும் என்பதை நாங்கள் இதுவரை கேள்விப்பட்டது இல்லை என்றும் பாப்டே தெரிவித்துள்ளார்.

பல விமர்சனங்களுக்கு மத்தியில் இந்த வழக்கை நீதிமன்றம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், பல்வேறு உயர்நீதிமன்றங்களில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்டு நிலுவையில் உள்ள வழக்குகளை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என மத்திய அரசு கோரியது.

இதுகுறித்து தலைமை நீதிபதி எஸ் ஏ போப்டே தலைமையிலான அமர்வு ஜனவரி 10ம் தேதி முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் கட்டமாக குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான வழக்குக குறித்து உயர் நீதிமன்றங்கள் விசாரணை மேற்கொள்ளும், பிறகும் அதில் எதுவும் குழப்பம் நேரிட்டால், அல்லது வழக்கை விசாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டால், உச்சநீதிமன்றம் தலையிடும் என நீதிபதிகள் பி ஆர் கவாய் மற்றும் சூரிய காந்த் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சொலிசிட்டர் ஜெனரல் ஜி மேத்தா கூறுகையில், குடியுரிமை திருத்த சட்டம் குறித்து வெவ்வேறு உயர் நீதிமன்றங்கள் முரண்பட்ட கருத்துகளை கூற வாய்ப்புள்ளது. மேலும் வழக்கறிஞர்கள் தொடர்ந்து பல மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ளவேண்டியிருக்கும், எனவே இதில் பல சிக்கல்கள் உள்ளன என கருத்து தெரிவித்துள்ளார்

https://www.bbc.com/tamil/india-51046926

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.