Jump to content

யாழ் மாநகர சபையில் அநாகரீகமான வாய்த் தர்க்கம்


Recommended Posts

 யாழ்மாநகர சபையின் இன்றைய அமர்வில் கெளரவ உறுப்பினர்கள் தெருச்சண்டை பிடிக்கும் ரவுடிகள் போல் நடந்து கொண்ட காட்சி.  

மதுபானச்சாலைகளில்  கூட அமைதியாக   உரையாட வேண்டும் என்ற பண்பு ஊக்குவிக்கப்படும் உலகில் ஈழத்தமிழரின் பண்பாட்டு தலைநகர் என்று போற்றப்படும  யாழ்பாண மாநகர சபை உறுப்பினர்களின் இச்செய்கை ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களையும் வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது. 


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

1 hour ago, tulpen said:

 யாழ்மாநகர சபையின் இன்றைய அமர்வில் கெளரவ உறுப்பினர்கள் தெருச்சண்டை பிடிக்கும் ரவுடிகள் போல் நடந்து கொண்ட காட்சி.  

மதுபானச்சாலைகளில்  கூட அமைதியாக   உரையாட வேண்டும் என்ற பண்பு ஊக்குவிக்கப்படும் உலகில் ஈழத்தமிழரின் பண்பாட்டு தலைநகர் என்று போற்றப்படும  யாழ்பாண மாநகர சபை உறுப்பினர்களின் இச்செய்கை ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களையும் வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது. 


 

ஈழத் தமிழர்களிடம் பண்பாடு இருப்பதாக நீங்களாக கற்பனை செய்துகொண்டால் அதற்கு நாங்கள் பொறுப்பேற்க இயலாதுதானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

😂 யாழ்கள நியானினை அனுப்பி மட்டுறுத்தினாலும் ஆகாது போல இருக்கே.

ஒரு மாநகர சபை கூட்டத்தில் சாதிப்பேச்சும்,  ம*-* என்பதும். 

2009 ற்கு பின்னான எம் சமூகத்துக்கு தனிநாடு ஒரு சாபக்கேடாகவே அமையும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, goshan_che said:

😂 யாழ்கள நியானினை அனுப்பி மட்டுறுத்தினாலும் ஆகாது போல இருக்கே.

ஒரு மாநகர சபை கூட்டத்தில் சாதிப்பேச்சும்,  ம*-* என்பதும். 

2009 ற்கு பின்னான எம் சமூகத்துக்கு தனிநாடு ஒரு சாபக்கேடாகவே அமையும்.

நீங்கள் அடைய  விரும்பும் ஒரு விடையத்திற்கு / பொருளுக்கு  எப்போது தகுதியடைகிறீர்களோ அப்போது அது உங்களை வந்தடையும்  என்பதுதான் உளவியலின் அடிப்படை.

எங்களின் அழிவிற்கான அடிப்படை உளவியல் - நாம் விடுதலை  அடைவதற்கு தகுதி இல்லாதவர்கள் என்பதே.

இதுவே உண்மையும் ஆகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

 யாழ்மாநகர சபையின் இன்றைய அமர்வில் கெளரவ உறுப்பினர்கள் தெருச்சண்டை பிடிக்கும் ரவுடிகள் போல் நடந்து கொண்ட காட்சி.  

மதுபானச்சாலைகளில்  கூட அமைதியாக   உரையாட வேண்டும் என்ற பண்பு ஊக்குவிக்கப்படும் உலகில் ஈழத்தமிழரின் பண்பாட்டு தலைநகர் என்று போற்றப்படும  யாழ்பாண மாநகர சபை உறுப்பினர்களின் இச்செய்கை ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களையும் வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது. 


 

கொஞ்ச நாட்களுக்கு முன் பாராளுமன்றில் நடந்ததை விட இது பரவாயில்லை.

பெரிய சபைக்கு பெரிய சண்டை.

சிறிய சபைக்கு சிறிய சண்டை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை சனத்துக்கு  கையிலை பிரம்போடை ஒரு வாத்தியார் கட்டாயம்  எப்பவும் வேணும்.
மீன்சந்தையை விட கேவலமாய் கிடக்கு.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, குமாரசாமி said:

எங்கடை சனத்துக்கு  கையிலை பிரம்போடை ஒரு வாத்தியார் கட்டாயம்  எப்பவும் வேணும்.
மீன்சந்தையை விட கேவலமாய் கிடக்கு.
 

சந்தையில் உரக்க சத்தமிட்டு கதைப்பார்கள். சண்டை பிடிப்பதில்லையே. இவர்களோ குடித்துவிட்டு நிறைவெறியில் நிதானமின்றி நடப்பவர்கள் போலல்லவா நடந்துகொள்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, குமாரசாமி said:

எங்கடை சனத்துக்கு  கையிலை பிரம்போடை ஒரு வாத்தியார் கட்டாயம்  எப்பவும் வேணும்.
மீன்சந்தையை விட கேவலமாய் கிடக்கு.
 

அபிவிருத்தியடைந்த நாடுகளில் வாழும் எமது ஆட்களே திருந்தவில்லையாம் இங்கு நாட்டில் உள்ளவர்கள் திருந்துவார்களென எப்படி எதிர்பார்க்கலாம் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

😂 யாழ்கள நியானினை அனுப்பி மட்டுறுத்தினாலும் ஆகாது போல இருக்கே.

ஒரு மாநகர சபை கூட்டத்தில் சாதிப்பேச்சும்,  ம*-* என்பதும். 

2009 ற்கு பின்னான எம் சமூகத்துக்கு தனிநாடு ஒரு சாபக்கேடாகவே அமையும்.

யாழ்கள நியானியெல்லாம் சரிப்பட்டு வராது பாருங்கோ...:cool:
யாழ்கள நிழலிதான் உவையளுக்கு சரிப்பட்டு வருவார்...🤔
நிழலி மட்டுறுத்தினால்  மாநகரசபை  மெம்பர்மார் அந்தப்பக்கம் தலைவைச்சும் படுக்க மாட்டினம் கண்டியளோ🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, Kapithan said:

சந்தையில் உரக்க சத்தமிட்டு கதைப்பார்கள். சண்டை பிடிப்பதில்லையே. இவர்களோ குடித்துவிட்டு நிறைவெறியில் நிதானமின்றி நடப்பவர்கள் போலல்லவா நடந்துகொள்கிறார்கள்.

அவருக்கு நிறைவெறி போல தான் கிடக்கு...

49 minutes ago, Kapithan said:

அபிவிருத்தியடைந்த நாடுகளில் வாழும் எமது ஆட்களே திருந்தவில்லையாம் இங்கு நாட்டில் உள்ளவர்கள் திருந்துவார்களென எப்படி எதிர்பார்க்கலாம் ?

அபிவிருத்தி அடைந்த நாடுகளில் வாழும் எம்மவர் எந்த வித்ததில் திருந்தவில்லை என நினைக்கின்றீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
59 minutes ago, Kapithan said:

அபிவிருத்தியடைந்த நாடுகளில் வாழும் எமது ஆட்களே திருந்தவில்லையாம் இங்கு நாட்டில் உள்ளவர்கள் திருந்துவார்களென எப்படி எதிர்பார்க்கலாம் ?


 

அபிவிருத்தியடைந்த நாடுகளில் வாழும் மக்கள், யாழ் நகர  சபை உறுப்பினர்களின் ரவுடித்தனம், அவர்களின் உரிமை சார்ந்தது என்று வாதிடுகிறார்கள்.

ரவுடிப் பிக்கு, கிறிஸ்தவ பாதிரியாருக்கு கன்னத்தில் அறைந்ததை,  ரவுடிப் பிக்குவின் உரிமை சார்ந்தது என்று மேற்கில் வாழும் நம்மவர்கள் சொல்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

அவருக்கு நிறைவெறி போல தான் கிடக்கு...

அபிவிருத்தி அடைந்த நாடுகளில் வாழும் எம்மவர் எந்த வித்ததில் திருந்தவில்லை என நினைக்கின்றீர்கள்?

எந்த விடயங்களில் நாகரீகமடைந்திருக்கிறார்கள் என நீங்கள் கருதுகிறீர்கள் ?

இங்கிருந்து போனவர்களிடையே எவ்வித  மாற்றமும் ஏற்படவில்லை என்பது எனது துணிபு. இங்கிருந்து கொண்டுசென்ற முடை நாற்ரமடிக்கும் குப்பைகளை இன்னமும் காவித்திரிகிறார்கள் என்கிறேன்.

10 minutes ago, மாங்குயில் said:


 

அபிவிருத்தியடைந்த நாடுகளில் வாழும் மக்கள், யாழ் நகர  சபை உறுப்பினர்களின் ரவுடித்தனம், அவர்களின் உரிமை சார்ந்தது என்று வாதிடுகிறார்கள்.

ரவுடிப் பிக்கு, கிறிஸ்தவ பாதிரியாருக்கு கன்னத்தில் அறைந்ததை,  ரவுடிப் பிக்குவின் உரிமை சார்ந்தது என்று மேற்கில் வாழும் நம்மவர்கள் சொல்கிறார்கள்.

உரிமைக்கும் நாகரீகம் அடைதல் இரண்டிற்கும் இடையே பாரிய இடைவெளி உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, Kapithan said:

 

உரிமைக்கும் நாகரீகம் அடைதல் இரண்டிற்கும் இடையே பாரிய இடைவெளி உள்ளது.


 

உண்மைதான்.

உரிமை வேறு, நாகரிகம் வேறு.

நாகரிகம் வளர்ச்சியடையும்போது,  மனிதனது உரிமைகள் அதிகரிக்கும்.

மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து, ரவுடித்தனம் மனிதனிடம் இருக்கிறது.

ரவுடித்தனம், சரியா, பிழையா என்பது வேறு விடயம்.

ஆனால், நம்மவர்களுக்கு ரவுடித்தனம் செய்வதற்கும் உரிமை இருக்கிறது என்பது யாழ் கள பதிவாளர்கள் எதிர்பார்ப்பு.

Link to comment
Share on other sites

இவ்வாறான நிகழ்வுகளில் வாக்குவாதங்கள் சாதராணமானது ஆனால்  இந்த வாக்குவாதம் ஏன் என்று புரியவில்லை.

முகநூல் பற்றி ஏதோ பேசுகின்றார்கள்,  ராவணனின தோற்றம் என்கிறர் ஒருவர். கஞ:சா வக்கீல் காவாலி வக்கீல் என்கின்றார்கள். குலம் என்றால் சாதி என்கின்றார்கள். வெளியவா படிப்பிக்கிறன் என்கிறார்கள். எந்த பிரச்சனை குறித்து இந்த வாக்குவாதம் நடக்கின்றது ?

கிழக்கு பிரதேசசபை வடக்கை விட முன்னேறியுள்ளது. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

அபிவிருத்தியடைந்த நாடுகளில் வாழும் எமது ஆட்களே திருந்தவில்லையாம் இங்கு நாட்டில் உள்ளவர்கள் திருந்துவார்களென எப்படி எதிர்பார்க்கலாம் ?

👍

1 hour ago, Kapithan said:

 இங்கிருந்து போனவர்களிடையே எவ்வித  மாற்றமும் ஏற்படவில்லை என்பது எனது துணிபு. இங்கிருந்து கொண்டுசென்ற முடை நாற்ரமடிக்கும் குப்பைகளை இன்னமும் காவித்திரிகிறார்கள் என்கிறேன்.

👍

Link to comment
Share on other sites

யாழ்.மாநகர சபையின் மாதாந்த அமர்வில் சாதி, தொடர்பாகவும், சமூக கட்டமைப்புகள் தொடர்பாகவும், அநாகரிகமான வார்த்தைகளால் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களும், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்களும் முரண்பட்டுக் கொண்டனர்.

யாழ்.மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் காலை சபை மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினரான ப.தர்சானந்த் தனது முகநூலில் சபை உறுப்பினர்கள் தொடர்பாக விமர்சித்து எழுதியமை குறித்து குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு சபையில் அது விவாதமாக மாறியது.

ஈழமக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கடுமையான சொற்பிரயோகங்களை பயன்படுத்தினார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் தர்சானந்த் ‘குலத்தளவே ஆகுமாம் குணம்’ என கூறிய போது சபையில் கடும் வார்த்தை பிரயோகங்கள் நடைபெற்று குழப்பங்கள் ஏற்பட்டன.

‘நான் எனது முகநூலில் பதிவிட்டமை தொடர்பாக சபையில் கேள்வி கேட்க முடியாது. அந்த பதிவில் நான் யாருடைய பெயரையோ சாதியையோ குறிப்பிடவில்லை’ என கூறி தர்சானந்த் தர்க்கத்தில் ஈடுபட்டிருந்தார்.

இதன்போது ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி மு. ரெமிடியஸ் தர்சானந்தின் பிறப்பு அத்தாட்சி பத்திரத்தை பாருங்கள் அவர் பிறந்தது 1988, 89 களாக தான் இருக்க வேண்டும்.

அக்கால பகுதியில் இந்திய இராணுவத்தின் குர்காஸ் படைகள் யாழ்ப்பாணத்தில் இருந்த கால பகுதி. நான் இராவண தோற்றமுடையவன். அவரிடம் திராவிட தோற்றமுண்டா? குர்காஸ் தோற்றமுடையவர்.’ என கூறினார். அதனால் சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.

அதனை அடுத்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள், ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் என பல உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளியேறினார்கள்.

இந்நிலையில் கடும் கோபமுற்ற தர்சானந்த் வெளியே வாயா உனக்கு படிப்பிக்கிறேன். என ஒருமையில் ஈ.பி.டி.பி. உறுப்பினர் ரெமிடியஸினை விளித்து, இதான் நான் சொன்ன ‘குலத்தளவாம் குணம்’, ‘இவரொரு முட்டாள்.

இதான் அவரின் குணம். இவர் ஒரு கஞ்சா வக்கீல்’ என கடுமையாக சட்டத்தரணி ரெமிடியஸினை நோக்கி தர்சானந்த் வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்ட போது, ரெமிடியஸ், தர்சானந்த்தை நோக்கி தண்ணீர் போத்தலை வீச முற்பட்டார்.

இதனை அடுத்து ‘சபையின் மாண்பை நீங்கள் குறைத்து கொள்கின்றீர்கள். தயவு செய்து எல்லோரும் உட்காருங்கள்.’ என கூறி முதல்வர் ஆர்னோல்ட் ஒலிவாங்கியை நிறுத்தி வைத்தார்.

இதன் பின்னரும் உறுப்பினர்கள் வார்த்தை பிரயோகத்தில் ஈடுபட்டனர். ‘அமைதியாக இருக்காவிடின் எனது உத்தியோகஸ்தர்களை அழைத்து உங்களை சபையில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுப்பேன்’ என தர்க்கத்தில் ஈடுபட்ட உறுப்பினர்களை முதல்வர் எச்சரித்தார். அதன் பின்னர் சிறிது நேரத்தில் சபை அமைதியானது.

https://www.ibctamil.com/srilanka/80/134848

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு  இழப்புகளின் பின்பும்....
இவர்கள் திருந்தவில்லை என்றால்... என்ன செய்வது?
அதில் ஒருவர் சட்டத்தரணியாம். வெட்கம் கெட்டவர்கள். 

எந்தக் கட்சியை சேர்ந்த  உறுப்பினர்கள் என்று, யாருக்காவது தெரியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்சி கொள்கைகளை மீறி மாநகர சபையில் செயற்பட்ட தர்சானந் மீது ஒழுக்காற்று நடவடிக்கை - கட்சி தலைவர் அறிவிப்பு

கட்சியின் அடிப்படைக் கொள்கைகளை மீறிச் செயற்பட்ட யாழ் மாநகர சபை உறுப்பினர் ப.தர்சானந் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் அமைப்பு தெரிவித்துள்ளது.

mc_thar.PNG

இவ்விடயம் தொடர்பாக கூட்டமைப்பின் பாரர்ளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளதாவது,

கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் ஒற்றான புளொட் அமைப்பினை பிரதிநிதித்துவப்படுத்தி யாழ் மாநகர சபை உறுப்பினராக இருக்கின்ற தர்சானந் சபை அமர்வின் போது எமது கட்சியின் கோட்பாடுகள் கொள்ளைகளை மீறிச் செயற்பட்டிருக்கின்றார்.

ஆகையினால் இவருடைய அறிக்கைகள், பேச்சுக்கள் மற்றும் செயற்பாடுகள் சம்மந்தமாக விளக்கம் கோரப்பட்டுள்ளது. மேலும் இவை அச் செயற்பாடுகள் தொடர்பாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கட்சிக் கொள்ளைகள் கோட்பாடுகளை மீறுகின்ற வகையிலான இத்தகைய செயற்பாடுகளையும் சொல்லாடல்களையும் ஒரு போதும் நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது.  அதனை வன்மையாகக் கண்டிப்பதுடன் உடனடியாக இவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

சபையில் யாரேனும் எப்படியான ஆத்திரமூட்டும் சொல்லாடல்களைப் பாவித்திருந்தாலும் அதற்கு எதிராக எங்கள் கட்சிக் கொள்கைகளை மீறுகின்ற வகையில் செயற்படுவது அநாகரீகமானது என்பதுடன் எங்களுடைய அடிப்படைக் கொள்கைகளில் இருந்து முரண்பட்ட விடயமாகவே பார்க்கிறோம்.

ஆகவே இவை தொடர்பில் விளக்கம் கோரப்பட்டிருப்பதுடன் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கையையும் எடுக்க இருக்கின்றோம். மேலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆகவே எந்தச் சந்தர்ப்பத்திலும் கட்சிக் கோட்பாடுகளை மீறுகின்ற கட்சிக் கொள்கைகளுக்கு முரணான சொல்லாடல்களைப் பாவிப்பது ஏற்றுக் கொள்ள முடியாது. எங்கள் கட்சியில் இருக்கின்ற எவருமே அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட முடியாது. ஆகையினால் தான  ;இவர் மீது கட்சி நடவடிக்கை எடுக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என்றார்.

https://www.virakesari.lk/article/73004

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, மாங்குயில் said:


 

அபிவிருத்தியடைந்த நாடுகளில் வாழும் மக்கள், யாழ் நகர  சபை உறுப்பினர்களின் ரவுடித்தனம், அவர்களின் உரிமை சார்ந்தது என்று வாதிடுகிறார்கள்.

ரவுடிப் பிக்கு, கிறிஸ்தவ பாதிரியாருக்கு கன்னத்தில் அறைந்ததை,  ரவுடிப் பிக்குவின் உரிமை சார்ந்தது என்று மேற்கில் வாழும் நம்மவர்கள் சொல்கிறார்கள்.

large.D40E7F12-6141-4521-AB5A-60DFAC1CE1BB.jpeg.0c218d3cb6a782267a4edcf5caf0c1c2.jpeg

யாழில் ஒரு திரி விடயத்தை இன்னொரு திரிக்கு காவக்கூடாதாம். பார்த்து சூதானமா நடங்க குருஜி😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎1‎/‎10‎/‎2020 at 4:20 AM, தமிழ் சிறி said:

இவ்வளவு  இழப்புகளின் பின்பும்....
இவர்கள் திருந்தவில்லை என்றால்... என்ன செய்வது?
அதில் ஒருவர் சட்டத்தரணியாம். வெட்கம் கெட்டவர்கள். 

எந்தக் கட்சியை சேர்ந்த  உறுப்பினர்கள் என்று, யாருக்காவது தெரியுமா?

சாதி பேரை சொல்லி திட்டிய தர்சானந் கூட்டமைப்பு புங்குடிதீவு வெள்ளாளராம்😠...சாதியின் பெயரால் திட்டு வாங்கியவர் றெடிமிஸ் ...இவர் டக்ளசின் கட்சியாம் 


இப்ப சொல்லுங்கோ நீங்கள் யாற்றை பக்கம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

“ஔவையாரின் மூதுரையையே நான் முகநூலில் பதிவிட்டேன்”

January 11, 2020

Tharshananth.png?resize=800%2C386

ஔவையாரின் மூதுரையையே நான் முகநூலில் பதிவிட்டேன். அதனை யாரேனும் தவறாக பொருள்கோடல் செய்து மனம் வருத்தியிருந்தால் அவர்களிடம் மன்னிப்புக்கோருகிறேன் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் ப. தர்சானாந்த் தெரிவித்தார்.

யாழ்.மாநகரசபையின் மாதாந்த அமர்வு கடந்த 09ஆம் திகதி நடைபெற்ற போது , சாதி தொடர்பில் சபையில் பேசி முரண்பட்டுக்கொண்டார்கள் எனும் குற்றசாட்டு தொடர்பில் விளக்கமளிக்குமுகமாக யாழ்.ஊடக அமையத்தில் இன்று சனிக்கிழமை காலை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

எனது முகநூலில் எனது தனிப்பட்ட கருத்தையே பகிர்ந்தேன். அதுவும் ஔவையாரின் மூதுரையையே பகிர்ந்தேன். அதில் சாதி , இனம் , மதம் என எதனையும் குறிப்பிட்டவில்லை. நான் பகிர்ந்த ஔவையாரின் மூதுரையை யாரேனும் தவறாக பொருள் கோடல் செய்து மனம் வருந்தி இருந்தாலோ அல்லது அதனால் மனவுளைச்சலுக்கு ஆளாகி இருந்தாலோ அவர்களிடம் மன்னிப்பு கோருகின்றேன்.

சபை அமர்வுகளில் தனிப்பட்ட விடயங்களோ அல்லது முகநூலில் எழும் விமர்சனங்கள் , முகநூல் பதிவுகள் தொடர்பில் பேச வேண்டாம் என யாழ்.மாநகர சபை முதல்வர் கடந்த அமர்வுகளிலையே பல தடவைகள் அறிவுறுத்தி இருந்தார். அதனையும் மீறி அன்றைய தினம் ஈழமக்கள் ஜனநாயக கட்சியினர் முகநூல் பதிவு தொடர்பில் பிரஸ்தாபித்தனர். அதே பின்னர் கருத்து முரண்பாடாக மாறியது.

கருத்து முரண்பாட்டை அடுத்து ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர் என் மீது தண்ணீர் போத்தலால் தாக்க முற்பட்டார். அது சபை மாண்மை அவமதிக்கும் செயலாகும். குறித்த உறுப்பினர் கடந்த ஆட்சி காலத்தின் போதும் , தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினராக இருந்த அ. பரம்சோதி மீதும் இவ்வாறு அநாகரிகமாக தண்ணீர் போத்தலை வீசி உள்ளார்.

சபையில் குறித்த உறுப்பினர் சபை மாண்பை கெடுக்கும் முகமாக நடந்து கொண்டமை தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் முதல்வரிடம் கோரியுள்ளேன். அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கிறேன்.

இதேவேளை அன்றைய தினம் நடைபெற்ற சம்பவம் தொடர்பில் மாநகர சபையால் என் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விளக்கமும் கோரப்படவில்லை.

ஆனாலும் எனது கட்சியான புளெட்டின் தலைமை ஊடாக சம்பவம் தொடர்பில் விளக்கம் கோரப்பட்டு உள்ளது. அது தொடர்பில் எழுத்து மூலமான விளக்கத்தை எனது கட்சி தலைமையிடம் மிக விரைவில் கையளிப்பேன். என தெரிவித்தார்.

 

http://globaltamilnews.net/2020/136092/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

சாதி பேரை சொல்லி திட்டிய தர்சானந் கூட்டமைப்பு புங்குடிதீவு வெள்ளாளராம்😠...சாதியின் பெயரால் திட்டு வாங்கியவர் றெடிமிஸ் ...இவர் டக்ளசின் கட்சியாம் 


இப்ப சொல்லுங்கோ நீங்கள் யாற்றை பக்கம் 

எங்களுக்கு ஒரு முள்ளிவாய்க்கால் அல்ல ஒன்பது முள்ளிவாய்க்கால் தேவை. அப்போதாவது நாங்கள் திருந்துவோமா தெரியாது.

Link to comment
Share on other sites

கொள்ளையர் கும்பல்களும் தங்கள் சட்டவிரோத செயல்களை மறைக்க சாதியத்தை இழுப்பதை வழமையாகக் கொண்டுள்ளன.

அதைப் போலவே அரைவேக்காட்டு முற்போக்குவாதிகளும் அரைவேக்காட்டு ஊடகவியலாளர்களும் சாதியத்தை ஊதிப் பெருப்பித்து குளிர்காய்வது ஒன்றும் புதுமையில்லை.

இந்தக் கூத்துகளில் உண்மையான பிரச்சினை மறைக்கப்பட்டுவிடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது பதிவு யாரையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் - தர்சானந்தன் 

நான் தனி நபர் ஒருவரையோ அல்லது ஒரு இனத்தையோ மதத்தையோ சாதியையோ குறிப்பிட்டு எந்த ஒரு வார்த்தையையும் பதிவிடவில்லை ஒளவையாரின் மூதுரையில் உள்ள ஓர் பாடலையே நான் பதிவு செய்தேன். அந்தப் பதிவு யாரையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் தர்சானந்தன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

என்மீது அண்மைக்காலமாக சில தவறான கருத்துக்கள் தவறான விளக்கங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.சபையில் உள்ள ஒரு உறுப்பினர் திட்டமிட்ட வகையில் பொய்யான வதந்திகளை பரப்பி வருகின்றார்.தண்ணீர் போத்தலினால் தாக்குவது போன்ற செயலில் சபை மரபுகளை மீறி செயற்பட்டு வருகின்றார்.அவர் கடந்த சபை ஆட்சியிலும் இவ்வாறே செயற்படடார். என்பது மக்களுக்கு தெரியும்.எனவே யாழ்ப்பாண மாநகர சபை அமர்வில் என்ன நடைபெற்றது என்பது தொடர்பில் விளக்கமளித்த நினைக்கின்றேன்

எனது முகநூலில் எந்த ஒரு மதத்தையோ இனத்தையோ சாதியையோ தொடர்புபடுத்தி எவ்விதமான பதிவுகளையும் நான் போடவில்லை எனினும் மாநகர சபையில் உள்ள ஒரு உறுப்பினர் அதனை தங்களுக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைத்து என் மீது திட்டமிட்ட வகையில் பொய் கூறி வருகின்றார்.

நான் எனது முகநூலில்  ஔவையாரின் மூதுரையில் குறிப்பிடப்பட்ட சில விடயங்களை மட்டுமே பதிவிட்டு இருந்தேன் ஆனால் யாழ்ப்பாண மாநகர சபையின் கடந்த 2 ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட உறுப்பினர் மட்டும் சபையை குழப்பும் வகையில் செயற்பட்டுக் கொண்டு இருந்தார்.கடந்த சில அமர்வுகளில் அந்த குறிப்பிட்ட சபை உறுப்பினர் சபை மரபுகளை மீறி தன்னிச்சையாக செயல்பட்டு வந்தார்.அவரின் இவ்வாறான செயற்பாடுகள் ஒவ்வொன்றுக்கும் விளக்கம் கொடுத்துக் கொண்டிருப்பதை விட அவரின் இந்த முட்டாள்த்தனமான செயற்பாடுகளுக்கு ஔவையாரின் மூதுரையில் உள்ள ஓர் பாடலை உதாரணம் காட்டி பொதுவான பதிவை முகநூலில் போட்டிருந்தேன்.

அதனை தனக்கு ஏற்ற போல் மாற்றி நான் சபையில் குறிப்பிடாத விடயத்தையோ அல்லது முகநூலில் குறிப்பிடாத விடயத்தை நான் கூறியதாக பொய்யான வதந்திகளை பரப்பி வருகின்றார்.மக்களிடம் தங்களின் செல்வாக்கு எடுபடாத நிலையில் மதம்,சாதி போன்றவற்றை பிரச்சனையாக கிளப்பி மக்கள் மத்தியில் வங்குரோத்து அரசியல் செய்வதனூடாக தங்களின் அரசியல் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற உள்நோக்கத்துடன் அந்த உறுப்பினர் செயற்பட்டு வருகின்றார்

நான் எனது முகநூலில் தனி நபர் ஒருவரையோ அல்லது ஒரு இனத்தையோ மதத்தையோ சாதியையோ குறிப்பிட்டு எந்த ஒரு பதிவையும் நான் பதிவிடவில்லை எனவே ஔவையாரின் உள்ள ஓர் பாடலையே நான் பதிவு செய்தேன் அந்தப் பதிவு யாரையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் மேலும் நான்  மாநகர சபை உறுப்பினர் ஒருவர் கூறுவது போல நான் அவ்வாறான ஒரு ஜாதி பிரச்சினையோ அல்லது இனப்பிரச்சினையும் ஏற்படுத்தவில்லை

யாழ்ப்பாணம் மாநகர சபையில் நடைபெற்ற வாக்குவாதம் வார்த்தை பிரயோகம் தொடர்பில் எனது கட்சியின் தலைமைப்பீடம் என்னிடம் விளக்கம் கோரியுள்ளது நான் அதற்கான விளக்கத்தை கட்சிக்கு நேர்மையாக உண்மையாக வழங்குவேன் கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு நான் முழுமையாக கட்டுப்படுவேன் எனது தரப்பு நியாயத்தையும் நான் எடுத்துக் கூறுவேன் என்பதை இந்த சந்தர்ப்பத்திலே கூறிக் கொள்கின்றேன்.என்றார்.

https://www.virakesari.lk/article/73043

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
    • `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்கச் சென்ற வயதான வாக்காளரின் பெயர், இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், வாக்களிக்க முடியாமல் அதிர்ச்சியடைந்து திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.   ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 52.46 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரின் பெயர், இறந்தபோன வாக்காளர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தததால் வாக்களிக்க முடியாமல் திரும்பினார். துளசிபாவா மடம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் தனது பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்றுள்ளார்.         வாக்குப்பதிவு மையம் உ.பாண்டி     வாக்குச்சாவடி உ.பாண்டி வரிசையில் காத்திருந்த காளியம்மாள் வாக்குப்பதிவு மையத்தினுள் சென்று தனது பூத் சிலிப்பைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த தேர்தல் பணியாளர், வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்தபோது, காளியம்மாளின் பெயர் இறந்தவர்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாளிடம் கூறிய தேர்தல் பணியாளர், அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். உயிரோடு இருந்து ஓட்டுப்போட ஆர்வத்தோடு வந்த தன்னை, இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பதை அறிந்த காளியம்மாள் அதிர்ச்சியடைந்ததுடன், வாக்களிக்க முடியாமல் போன வேதனையுடனும் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேறினார். `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! | name in the dead voters list ramanathapuram woman failed to cast her vote - Vikatan
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.