Jump to content

யாழ் மாநகர சபையில் அநாகரீகமான வாய்த் தர்க்கம்


Recommended Posts

 யாழ்மாநகர சபையின் இன்றைய அமர்வில் கெளரவ உறுப்பினர்கள் தெருச்சண்டை பிடிக்கும் ரவுடிகள் போல் நடந்து கொண்ட காட்சி.  

மதுபானச்சாலைகளில்  கூட அமைதியாக   உரையாட வேண்டும் என்ற பண்பு ஊக்குவிக்கப்படும் உலகில் ஈழத்தமிழரின் பண்பாட்டு தலைநகர் என்று போற்றப்படும  யாழ்பாண மாநகர சபை உறுப்பினர்களின் இச்செய்கை ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களையும் வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது. 


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

1 hour ago, tulpen said:

 யாழ்மாநகர சபையின் இன்றைய அமர்வில் கெளரவ உறுப்பினர்கள் தெருச்சண்டை பிடிக்கும் ரவுடிகள் போல் நடந்து கொண்ட காட்சி.  

மதுபானச்சாலைகளில்  கூட அமைதியாக   உரையாட வேண்டும் என்ற பண்பு ஊக்குவிக்கப்படும் உலகில் ஈழத்தமிழரின் பண்பாட்டு தலைநகர் என்று போற்றப்படும  யாழ்பாண மாநகர சபை உறுப்பினர்களின் இச்செய்கை ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களையும் வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது. 


 

ஈழத் தமிழர்களிடம் பண்பாடு இருப்பதாக நீங்களாக கற்பனை செய்துகொண்டால் அதற்கு நாங்கள் பொறுப்பேற்க இயலாதுதானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

😂 யாழ்கள நியானினை அனுப்பி மட்டுறுத்தினாலும் ஆகாது போல இருக்கே.

ஒரு மாநகர சபை கூட்டத்தில் சாதிப்பேச்சும்,  ம*-* என்பதும். 

2009 ற்கு பின்னான எம் சமூகத்துக்கு தனிநாடு ஒரு சாபக்கேடாகவே அமையும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, goshan_che said:

😂 யாழ்கள நியானினை அனுப்பி மட்டுறுத்தினாலும் ஆகாது போல இருக்கே.

ஒரு மாநகர சபை கூட்டத்தில் சாதிப்பேச்சும்,  ம*-* என்பதும். 

2009 ற்கு பின்னான எம் சமூகத்துக்கு தனிநாடு ஒரு சாபக்கேடாகவே அமையும்.

நீங்கள் அடைய  விரும்பும் ஒரு விடையத்திற்கு / பொருளுக்கு  எப்போது தகுதியடைகிறீர்களோ அப்போது அது உங்களை வந்தடையும்  என்பதுதான் உளவியலின் அடிப்படை.

எங்களின் அழிவிற்கான அடிப்படை உளவியல் - நாம் விடுதலை  அடைவதற்கு தகுதி இல்லாதவர்கள் என்பதே.

இதுவே உண்மையும் ஆகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

 யாழ்மாநகர சபையின் இன்றைய அமர்வில் கெளரவ உறுப்பினர்கள் தெருச்சண்டை பிடிக்கும் ரவுடிகள் போல் நடந்து கொண்ட காட்சி.  

மதுபானச்சாலைகளில்  கூட அமைதியாக   உரையாட வேண்டும் என்ற பண்பு ஊக்குவிக்கப்படும் உலகில் ஈழத்தமிழரின் பண்பாட்டு தலைநகர் என்று போற்றப்படும  யாழ்பாண மாநகர சபை உறுப்பினர்களின் இச்செய்கை ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களையும் வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது. 


 

கொஞ்ச நாட்களுக்கு முன் பாராளுமன்றில் நடந்ததை விட இது பரவாயில்லை.

பெரிய சபைக்கு பெரிய சண்டை.

சிறிய சபைக்கு சிறிய சண்டை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை சனத்துக்கு  கையிலை பிரம்போடை ஒரு வாத்தியார் கட்டாயம்  எப்பவும் வேணும்.
மீன்சந்தையை விட கேவலமாய் கிடக்கு.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, குமாரசாமி said:

எங்கடை சனத்துக்கு  கையிலை பிரம்போடை ஒரு வாத்தியார் கட்டாயம்  எப்பவும் வேணும்.
மீன்சந்தையை விட கேவலமாய் கிடக்கு.
 

சந்தையில் உரக்க சத்தமிட்டு கதைப்பார்கள். சண்டை பிடிப்பதில்லையே. இவர்களோ குடித்துவிட்டு நிறைவெறியில் நிதானமின்றி நடப்பவர்கள் போலல்லவா நடந்துகொள்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, குமாரசாமி said:

எங்கடை சனத்துக்கு  கையிலை பிரம்போடை ஒரு வாத்தியார் கட்டாயம்  எப்பவும் வேணும்.
மீன்சந்தையை விட கேவலமாய் கிடக்கு.
 

அபிவிருத்தியடைந்த நாடுகளில் வாழும் எமது ஆட்களே திருந்தவில்லையாம் இங்கு நாட்டில் உள்ளவர்கள் திருந்துவார்களென எப்படி எதிர்பார்க்கலாம் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

😂 யாழ்கள நியானினை அனுப்பி மட்டுறுத்தினாலும் ஆகாது போல இருக்கே.

ஒரு மாநகர சபை கூட்டத்தில் சாதிப்பேச்சும்,  ம*-* என்பதும். 

2009 ற்கு பின்னான எம் சமூகத்துக்கு தனிநாடு ஒரு சாபக்கேடாகவே அமையும்.

யாழ்கள நியானியெல்லாம் சரிப்பட்டு வராது பாருங்கோ...:cool:
யாழ்கள நிழலிதான் உவையளுக்கு சரிப்பட்டு வருவார்...🤔
நிழலி மட்டுறுத்தினால்  மாநகரசபை  மெம்பர்மார் அந்தப்பக்கம் தலைவைச்சும் படுக்க மாட்டினம் கண்டியளோ🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, Kapithan said:

சந்தையில் உரக்க சத்தமிட்டு கதைப்பார்கள். சண்டை பிடிப்பதில்லையே. இவர்களோ குடித்துவிட்டு நிறைவெறியில் நிதானமின்றி நடப்பவர்கள் போலல்லவா நடந்துகொள்கிறார்கள்.

அவருக்கு நிறைவெறி போல தான் கிடக்கு...

49 minutes ago, Kapithan said:

அபிவிருத்தியடைந்த நாடுகளில் வாழும் எமது ஆட்களே திருந்தவில்லையாம் இங்கு நாட்டில் உள்ளவர்கள் திருந்துவார்களென எப்படி எதிர்பார்க்கலாம் ?

அபிவிருத்தி அடைந்த நாடுகளில் வாழும் எம்மவர் எந்த வித்ததில் திருந்தவில்லை என நினைக்கின்றீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
59 minutes ago, Kapithan said:

அபிவிருத்தியடைந்த நாடுகளில் வாழும் எமது ஆட்களே திருந்தவில்லையாம் இங்கு நாட்டில் உள்ளவர்கள் திருந்துவார்களென எப்படி எதிர்பார்க்கலாம் ?


 

அபிவிருத்தியடைந்த நாடுகளில் வாழும் மக்கள், யாழ் நகர  சபை உறுப்பினர்களின் ரவுடித்தனம், அவர்களின் உரிமை சார்ந்தது என்று வாதிடுகிறார்கள்.

ரவுடிப் பிக்கு, கிறிஸ்தவ பாதிரியாருக்கு கன்னத்தில் அறைந்ததை,  ரவுடிப் பிக்குவின் உரிமை சார்ந்தது என்று மேற்கில் வாழும் நம்மவர்கள் சொல்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

அவருக்கு நிறைவெறி போல தான் கிடக்கு...

அபிவிருத்தி அடைந்த நாடுகளில் வாழும் எம்மவர் எந்த வித்ததில் திருந்தவில்லை என நினைக்கின்றீர்கள்?

எந்த விடயங்களில் நாகரீகமடைந்திருக்கிறார்கள் என நீங்கள் கருதுகிறீர்கள் ?

இங்கிருந்து போனவர்களிடையே எவ்வித  மாற்றமும் ஏற்படவில்லை என்பது எனது துணிபு. இங்கிருந்து கொண்டுசென்ற முடை நாற்ரமடிக்கும் குப்பைகளை இன்னமும் காவித்திரிகிறார்கள் என்கிறேன்.

10 minutes ago, மாங்குயில் said:


 

அபிவிருத்தியடைந்த நாடுகளில் வாழும் மக்கள், யாழ் நகர  சபை உறுப்பினர்களின் ரவுடித்தனம், அவர்களின் உரிமை சார்ந்தது என்று வாதிடுகிறார்கள்.

ரவுடிப் பிக்கு, கிறிஸ்தவ பாதிரியாருக்கு கன்னத்தில் அறைந்ததை,  ரவுடிப் பிக்குவின் உரிமை சார்ந்தது என்று மேற்கில் வாழும் நம்மவர்கள் சொல்கிறார்கள்.

உரிமைக்கும் நாகரீகம் அடைதல் இரண்டிற்கும் இடையே பாரிய இடைவெளி உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, Kapithan said:

 

உரிமைக்கும் நாகரீகம் அடைதல் இரண்டிற்கும் இடையே பாரிய இடைவெளி உள்ளது.


 

உண்மைதான்.

உரிமை வேறு, நாகரிகம் வேறு.

நாகரிகம் வளர்ச்சியடையும்போது,  மனிதனது உரிமைகள் அதிகரிக்கும்.

மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து, ரவுடித்தனம் மனிதனிடம் இருக்கிறது.

ரவுடித்தனம், சரியா, பிழையா என்பது வேறு விடயம்.

ஆனால், நம்மவர்களுக்கு ரவுடித்தனம் செய்வதற்கும் உரிமை இருக்கிறது என்பது யாழ் கள பதிவாளர்கள் எதிர்பார்ப்பு.

Link to comment
Share on other sites

இவ்வாறான நிகழ்வுகளில் வாக்குவாதங்கள் சாதராணமானது ஆனால்  இந்த வாக்குவாதம் ஏன் என்று புரியவில்லை.

முகநூல் பற்றி ஏதோ பேசுகின்றார்கள்,  ராவணனின தோற்றம் என்கிறர் ஒருவர். கஞ:சா வக்கீல் காவாலி வக்கீல் என்கின்றார்கள். குலம் என்றால் சாதி என்கின்றார்கள். வெளியவா படிப்பிக்கிறன் என்கிறார்கள். எந்த பிரச்சனை குறித்து இந்த வாக்குவாதம் நடக்கின்றது ?

கிழக்கு பிரதேசசபை வடக்கை விட முன்னேறியுள்ளது. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

அபிவிருத்தியடைந்த நாடுகளில் வாழும் எமது ஆட்களே திருந்தவில்லையாம் இங்கு நாட்டில் உள்ளவர்கள் திருந்துவார்களென எப்படி எதிர்பார்க்கலாம் ?

👍

1 hour ago, Kapithan said:

 இங்கிருந்து போனவர்களிடையே எவ்வித  மாற்றமும் ஏற்படவில்லை என்பது எனது துணிபு. இங்கிருந்து கொண்டுசென்ற முடை நாற்ரமடிக்கும் குப்பைகளை இன்னமும் காவித்திரிகிறார்கள் என்கிறேன்.

👍

Link to comment
Share on other sites

யாழ்.மாநகர சபையின் மாதாந்த அமர்வில் சாதி, தொடர்பாகவும், சமூக கட்டமைப்புகள் தொடர்பாகவும், அநாகரிகமான வார்த்தைகளால் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களும், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்களும் முரண்பட்டுக் கொண்டனர்.

யாழ்.மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் காலை சபை மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினரான ப.தர்சானந்த் தனது முகநூலில் சபை உறுப்பினர்கள் தொடர்பாக விமர்சித்து எழுதியமை குறித்து குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு சபையில் அது விவாதமாக மாறியது.

ஈழமக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கடுமையான சொற்பிரயோகங்களை பயன்படுத்தினார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் தர்சானந்த் ‘குலத்தளவே ஆகுமாம் குணம்’ என கூறிய போது சபையில் கடும் வார்த்தை பிரயோகங்கள் நடைபெற்று குழப்பங்கள் ஏற்பட்டன.

‘நான் எனது முகநூலில் பதிவிட்டமை தொடர்பாக சபையில் கேள்வி கேட்க முடியாது. அந்த பதிவில் நான் யாருடைய பெயரையோ சாதியையோ குறிப்பிடவில்லை’ என கூறி தர்சானந்த் தர்க்கத்தில் ஈடுபட்டிருந்தார்.

இதன்போது ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி மு. ரெமிடியஸ் தர்சானந்தின் பிறப்பு அத்தாட்சி பத்திரத்தை பாருங்கள் அவர் பிறந்தது 1988, 89 களாக தான் இருக்க வேண்டும்.

அக்கால பகுதியில் இந்திய இராணுவத்தின் குர்காஸ் படைகள் யாழ்ப்பாணத்தில் இருந்த கால பகுதி. நான் இராவண தோற்றமுடையவன். அவரிடம் திராவிட தோற்றமுண்டா? குர்காஸ் தோற்றமுடையவர்.’ என கூறினார். அதனால் சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.

அதனை அடுத்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள், ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் என பல உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளியேறினார்கள்.

இந்நிலையில் கடும் கோபமுற்ற தர்சானந்த் வெளியே வாயா உனக்கு படிப்பிக்கிறேன். என ஒருமையில் ஈ.பி.டி.பி. உறுப்பினர் ரெமிடியஸினை விளித்து, இதான் நான் சொன்ன ‘குலத்தளவாம் குணம்’, ‘இவரொரு முட்டாள்.

இதான் அவரின் குணம். இவர் ஒரு கஞ்சா வக்கீல்’ என கடுமையாக சட்டத்தரணி ரெமிடியஸினை நோக்கி தர்சானந்த் வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்ட போது, ரெமிடியஸ், தர்சானந்த்தை நோக்கி தண்ணீர் போத்தலை வீச முற்பட்டார்.

இதனை அடுத்து ‘சபையின் மாண்பை நீங்கள் குறைத்து கொள்கின்றீர்கள். தயவு செய்து எல்லோரும் உட்காருங்கள்.’ என கூறி முதல்வர் ஆர்னோல்ட் ஒலிவாங்கியை நிறுத்தி வைத்தார்.

இதன் பின்னரும் உறுப்பினர்கள் வார்த்தை பிரயோகத்தில் ஈடுபட்டனர். ‘அமைதியாக இருக்காவிடின் எனது உத்தியோகஸ்தர்களை அழைத்து உங்களை சபையில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுப்பேன்’ என தர்க்கத்தில் ஈடுபட்ட உறுப்பினர்களை முதல்வர் எச்சரித்தார். அதன் பின்னர் சிறிது நேரத்தில் சபை அமைதியானது.

https://www.ibctamil.com/srilanka/80/134848

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு  இழப்புகளின் பின்பும்....
இவர்கள் திருந்தவில்லை என்றால்... என்ன செய்வது?
அதில் ஒருவர் சட்டத்தரணியாம். வெட்கம் கெட்டவர்கள். 

எந்தக் கட்சியை சேர்ந்த  உறுப்பினர்கள் என்று, யாருக்காவது தெரியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்சி கொள்கைகளை மீறி மாநகர சபையில் செயற்பட்ட தர்சானந் மீது ஒழுக்காற்று நடவடிக்கை - கட்சி தலைவர் அறிவிப்பு

கட்சியின் அடிப்படைக் கொள்கைகளை மீறிச் செயற்பட்ட யாழ் மாநகர சபை உறுப்பினர் ப.தர்சானந் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் அமைப்பு தெரிவித்துள்ளது.

mc_thar.PNG

இவ்விடயம் தொடர்பாக கூட்டமைப்பின் பாரர்ளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளதாவது,

கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் ஒற்றான புளொட் அமைப்பினை பிரதிநிதித்துவப்படுத்தி யாழ் மாநகர சபை உறுப்பினராக இருக்கின்ற தர்சானந் சபை அமர்வின் போது எமது கட்சியின் கோட்பாடுகள் கொள்ளைகளை மீறிச் செயற்பட்டிருக்கின்றார்.

ஆகையினால் இவருடைய அறிக்கைகள், பேச்சுக்கள் மற்றும் செயற்பாடுகள் சம்மந்தமாக விளக்கம் கோரப்பட்டுள்ளது. மேலும் இவை அச் செயற்பாடுகள் தொடர்பாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கட்சிக் கொள்ளைகள் கோட்பாடுகளை மீறுகின்ற வகையிலான இத்தகைய செயற்பாடுகளையும் சொல்லாடல்களையும் ஒரு போதும் நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது.  அதனை வன்மையாகக் கண்டிப்பதுடன் உடனடியாக இவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

சபையில் யாரேனும் எப்படியான ஆத்திரமூட்டும் சொல்லாடல்களைப் பாவித்திருந்தாலும் அதற்கு எதிராக எங்கள் கட்சிக் கொள்கைகளை மீறுகின்ற வகையில் செயற்படுவது அநாகரீகமானது என்பதுடன் எங்களுடைய அடிப்படைக் கொள்கைகளில் இருந்து முரண்பட்ட விடயமாகவே பார்க்கிறோம்.

ஆகவே இவை தொடர்பில் விளக்கம் கோரப்பட்டிருப்பதுடன் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கையையும் எடுக்க இருக்கின்றோம். மேலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆகவே எந்தச் சந்தர்ப்பத்திலும் கட்சிக் கோட்பாடுகளை மீறுகின்ற கட்சிக் கொள்கைகளுக்கு முரணான சொல்லாடல்களைப் பாவிப்பது ஏற்றுக் கொள்ள முடியாது. எங்கள் கட்சியில் இருக்கின்ற எவருமே அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட முடியாது. ஆகையினால் தான  ;இவர் மீது கட்சி நடவடிக்கை எடுக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என்றார்.

https://www.virakesari.lk/article/73004

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, மாங்குயில் said:


 

அபிவிருத்தியடைந்த நாடுகளில் வாழும் மக்கள், யாழ் நகர  சபை உறுப்பினர்களின் ரவுடித்தனம், அவர்களின் உரிமை சார்ந்தது என்று வாதிடுகிறார்கள்.

ரவுடிப் பிக்கு, கிறிஸ்தவ பாதிரியாருக்கு கன்னத்தில் அறைந்ததை,  ரவுடிப் பிக்குவின் உரிமை சார்ந்தது என்று மேற்கில் வாழும் நம்மவர்கள் சொல்கிறார்கள்.

large.D40E7F12-6141-4521-AB5A-60DFAC1CE1BB.jpeg.0c218d3cb6a782267a4edcf5caf0c1c2.jpeg

யாழில் ஒரு திரி விடயத்தை இன்னொரு திரிக்கு காவக்கூடாதாம். பார்த்து சூதானமா நடங்க குருஜி😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎1‎/‎10‎/‎2020 at 4:20 AM, தமிழ் சிறி said:

இவ்வளவு  இழப்புகளின் பின்பும்....
இவர்கள் திருந்தவில்லை என்றால்... என்ன செய்வது?
அதில் ஒருவர் சட்டத்தரணியாம். வெட்கம் கெட்டவர்கள். 

எந்தக் கட்சியை சேர்ந்த  உறுப்பினர்கள் என்று, யாருக்காவது தெரியுமா?

சாதி பேரை சொல்லி திட்டிய தர்சானந் கூட்டமைப்பு புங்குடிதீவு வெள்ளாளராம்😠...சாதியின் பெயரால் திட்டு வாங்கியவர் றெடிமிஸ் ...இவர் டக்ளசின் கட்சியாம் 


இப்ப சொல்லுங்கோ நீங்கள் யாற்றை பக்கம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

“ஔவையாரின் மூதுரையையே நான் முகநூலில் பதிவிட்டேன்”

January 11, 2020

Tharshananth.png?resize=800%2C386

ஔவையாரின் மூதுரையையே நான் முகநூலில் பதிவிட்டேன். அதனை யாரேனும் தவறாக பொருள்கோடல் செய்து மனம் வருத்தியிருந்தால் அவர்களிடம் மன்னிப்புக்கோருகிறேன் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் ப. தர்சானாந்த் தெரிவித்தார்.

யாழ்.மாநகரசபையின் மாதாந்த அமர்வு கடந்த 09ஆம் திகதி நடைபெற்ற போது , சாதி தொடர்பில் சபையில் பேசி முரண்பட்டுக்கொண்டார்கள் எனும் குற்றசாட்டு தொடர்பில் விளக்கமளிக்குமுகமாக யாழ்.ஊடக அமையத்தில் இன்று சனிக்கிழமை காலை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

எனது முகநூலில் எனது தனிப்பட்ட கருத்தையே பகிர்ந்தேன். அதுவும் ஔவையாரின் மூதுரையையே பகிர்ந்தேன். அதில் சாதி , இனம் , மதம் என எதனையும் குறிப்பிட்டவில்லை. நான் பகிர்ந்த ஔவையாரின் மூதுரையை யாரேனும் தவறாக பொருள் கோடல் செய்து மனம் வருந்தி இருந்தாலோ அல்லது அதனால் மனவுளைச்சலுக்கு ஆளாகி இருந்தாலோ அவர்களிடம் மன்னிப்பு கோருகின்றேன்.

சபை அமர்வுகளில் தனிப்பட்ட விடயங்களோ அல்லது முகநூலில் எழும் விமர்சனங்கள் , முகநூல் பதிவுகள் தொடர்பில் பேச வேண்டாம் என யாழ்.மாநகர சபை முதல்வர் கடந்த அமர்வுகளிலையே பல தடவைகள் அறிவுறுத்தி இருந்தார். அதனையும் மீறி அன்றைய தினம் ஈழமக்கள் ஜனநாயக கட்சியினர் முகநூல் பதிவு தொடர்பில் பிரஸ்தாபித்தனர். அதே பின்னர் கருத்து முரண்பாடாக மாறியது.

கருத்து முரண்பாட்டை அடுத்து ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர் என் மீது தண்ணீர் போத்தலால் தாக்க முற்பட்டார். அது சபை மாண்மை அவமதிக்கும் செயலாகும். குறித்த உறுப்பினர் கடந்த ஆட்சி காலத்தின் போதும் , தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினராக இருந்த அ. பரம்சோதி மீதும் இவ்வாறு அநாகரிகமாக தண்ணீர் போத்தலை வீசி உள்ளார்.

சபையில் குறித்த உறுப்பினர் சபை மாண்பை கெடுக்கும் முகமாக நடந்து கொண்டமை தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் முதல்வரிடம் கோரியுள்ளேன். அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கிறேன்.

இதேவேளை அன்றைய தினம் நடைபெற்ற சம்பவம் தொடர்பில் மாநகர சபையால் என் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விளக்கமும் கோரப்படவில்லை.

ஆனாலும் எனது கட்சியான புளெட்டின் தலைமை ஊடாக சம்பவம் தொடர்பில் விளக்கம் கோரப்பட்டு உள்ளது. அது தொடர்பில் எழுத்து மூலமான விளக்கத்தை எனது கட்சி தலைமையிடம் மிக விரைவில் கையளிப்பேன். என தெரிவித்தார்.

 

http://globaltamilnews.net/2020/136092/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

சாதி பேரை சொல்லி திட்டிய தர்சானந் கூட்டமைப்பு புங்குடிதீவு வெள்ளாளராம்😠...சாதியின் பெயரால் திட்டு வாங்கியவர் றெடிமிஸ் ...இவர் டக்ளசின் கட்சியாம் 


இப்ப சொல்லுங்கோ நீங்கள் யாற்றை பக்கம் 

எங்களுக்கு ஒரு முள்ளிவாய்க்கால் அல்ல ஒன்பது முள்ளிவாய்க்கால் தேவை. அப்போதாவது நாங்கள் திருந்துவோமா தெரியாது.

Link to comment
Share on other sites

கொள்ளையர் கும்பல்களும் தங்கள் சட்டவிரோத செயல்களை மறைக்க சாதியத்தை இழுப்பதை வழமையாகக் கொண்டுள்ளன.

அதைப் போலவே அரைவேக்காட்டு முற்போக்குவாதிகளும் அரைவேக்காட்டு ஊடகவியலாளர்களும் சாதியத்தை ஊதிப் பெருப்பித்து குளிர்காய்வது ஒன்றும் புதுமையில்லை.

இந்தக் கூத்துகளில் உண்மையான பிரச்சினை மறைக்கப்பட்டுவிடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது பதிவு யாரையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் - தர்சானந்தன் 

நான் தனி நபர் ஒருவரையோ அல்லது ஒரு இனத்தையோ மதத்தையோ சாதியையோ குறிப்பிட்டு எந்த ஒரு வார்த்தையையும் பதிவிடவில்லை ஒளவையாரின் மூதுரையில் உள்ள ஓர் பாடலையே நான் பதிவு செய்தேன். அந்தப் பதிவு யாரையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் தர்சானந்தன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

என்மீது அண்மைக்காலமாக சில தவறான கருத்துக்கள் தவறான விளக்கங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.சபையில் உள்ள ஒரு உறுப்பினர் திட்டமிட்ட வகையில் பொய்யான வதந்திகளை பரப்பி வருகின்றார்.தண்ணீர் போத்தலினால் தாக்குவது போன்ற செயலில் சபை மரபுகளை மீறி செயற்பட்டு வருகின்றார்.அவர் கடந்த சபை ஆட்சியிலும் இவ்வாறே செயற்படடார். என்பது மக்களுக்கு தெரியும்.எனவே யாழ்ப்பாண மாநகர சபை அமர்வில் என்ன நடைபெற்றது என்பது தொடர்பில் விளக்கமளித்த நினைக்கின்றேன்

எனது முகநூலில் எந்த ஒரு மதத்தையோ இனத்தையோ சாதியையோ தொடர்புபடுத்தி எவ்விதமான பதிவுகளையும் நான் போடவில்லை எனினும் மாநகர சபையில் உள்ள ஒரு உறுப்பினர் அதனை தங்களுக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைத்து என் மீது திட்டமிட்ட வகையில் பொய் கூறி வருகின்றார்.

நான் எனது முகநூலில்  ஔவையாரின் மூதுரையில் குறிப்பிடப்பட்ட சில விடயங்களை மட்டுமே பதிவிட்டு இருந்தேன் ஆனால் யாழ்ப்பாண மாநகர சபையின் கடந்த 2 ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட உறுப்பினர் மட்டும் சபையை குழப்பும் வகையில் செயற்பட்டுக் கொண்டு இருந்தார்.கடந்த சில அமர்வுகளில் அந்த குறிப்பிட்ட சபை உறுப்பினர் சபை மரபுகளை மீறி தன்னிச்சையாக செயல்பட்டு வந்தார்.அவரின் இவ்வாறான செயற்பாடுகள் ஒவ்வொன்றுக்கும் விளக்கம் கொடுத்துக் கொண்டிருப்பதை விட அவரின் இந்த முட்டாள்த்தனமான செயற்பாடுகளுக்கு ஔவையாரின் மூதுரையில் உள்ள ஓர் பாடலை உதாரணம் காட்டி பொதுவான பதிவை முகநூலில் போட்டிருந்தேன்.

அதனை தனக்கு ஏற்ற போல் மாற்றி நான் சபையில் குறிப்பிடாத விடயத்தையோ அல்லது முகநூலில் குறிப்பிடாத விடயத்தை நான் கூறியதாக பொய்யான வதந்திகளை பரப்பி வருகின்றார்.மக்களிடம் தங்களின் செல்வாக்கு எடுபடாத நிலையில் மதம்,சாதி போன்றவற்றை பிரச்சனையாக கிளப்பி மக்கள் மத்தியில் வங்குரோத்து அரசியல் செய்வதனூடாக தங்களின் அரசியல் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற உள்நோக்கத்துடன் அந்த உறுப்பினர் செயற்பட்டு வருகின்றார்

நான் எனது முகநூலில் தனி நபர் ஒருவரையோ அல்லது ஒரு இனத்தையோ மதத்தையோ சாதியையோ குறிப்பிட்டு எந்த ஒரு பதிவையும் நான் பதிவிடவில்லை எனவே ஔவையாரின் உள்ள ஓர் பாடலையே நான் பதிவு செய்தேன் அந்தப் பதிவு யாரையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் மேலும் நான்  மாநகர சபை உறுப்பினர் ஒருவர் கூறுவது போல நான் அவ்வாறான ஒரு ஜாதி பிரச்சினையோ அல்லது இனப்பிரச்சினையும் ஏற்படுத்தவில்லை

யாழ்ப்பாணம் மாநகர சபையில் நடைபெற்ற வாக்குவாதம் வார்த்தை பிரயோகம் தொடர்பில் எனது கட்சியின் தலைமைப்பீடம் என்னிடம் விளக்கம் கோரியுள்ளது நான் அதற்கான விளக்கத்தை கட்சிக்கு நேர்மையாக உண்மையாக வழங்குவேன் கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு நான் முழுமையாக கட்டுப்படுவேன் எனது தரப்பு நியாயத்தையும் நான் எடுத்துக் கூறுவேன் என்பதை இந்த சந்தர்ப்பத்திலே கூறிக் கொள்கின்றேன்.என்றார்.

https://www.virakesari.lk/article/73043

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.