Jump to content

யாழ் மாநகர சபையில் அநாகரீகமான வாய்த் தர்க்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

சாதி பேரை சொல்லி திட்டிய தர்சானந் கூட்டமைப்பு புங்குடிதீவு வெள்ளாளராம்😠...சாதியின் பெயரால் திட்டு வாங்கியவர் றெடிமிஸ் ...இவர் டக்ளசின் கட்சியாம் 


இப்ப சொல்லுங்கோ நீங்கள் யாற்றை பக்கம் 

சாதியைப்பற்றி எவர் கதைக்கின்றார்களோ அவர்களுக்கு அரபுநாடுகளில் கொடுக்கும் தண்டனையை விட அதிகமாக கொடுப்பவர்கள் பக்கம் நான் நிற்பேன்..
என்ன விசுகர் நான் சொன்னது சரிதானே? :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனை இனத்துவேசி என்கிறது பிறகு தங்களுக்குள்ளே கேவலமாக சாதியை இழுத்து அடிபாடு. கோயில் ரதத்தை இயந்திரம் கொண்டு இழுத்த சமூகம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மெதுவாக எரிய ஆரம்பித்திருக்கும் சாதித்தீ 

யாழ் மாநகர சபை இப்ப நரக சபையாகி கிடக்கு போல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, colomban said:

சிங்களவனை இனத்துவேசி என்கிறது பிறகு தங்களுக்குள்ளே கேவலமாக சாதியை இழுத்து அடிபாடு. கோயில் ரதத்தை இயந்திரம் கொண்டு இழுத்த சமூகம்

இப்படியொரு சமூகம் இருந்தால் என்ன அழிந்தால் என்ன ?

Link to comment
Share on other sites

12 hours ago, குமாரசாமி said:

சாதியைப்பற்றி எவர் கதைக்கின்றார்களோ அவர்களுக்கு அரபுநாடுகளில் கொடுக்கும் தண்டனையை விட அதிகமாக கொடுப்பவர்கள் பக்கம் நான் நிற்பேன்..
என்ன விசுகர் நான் சொன்னது சரிதானே? :cool:

அரபுநாடுகளின் பண்பாட்டை எங்களுக்குள் கொண்டு வரவேண்டாம். பண்டைக்காலம் முதல் சைவ சமய ஆகமங்களின் படி, மனுதர்ம முறைப்படி சாதி அமைப்பு  எமது பண்பாட்டின் முக்கிய அங்கமாக இருக்கிறது. அதை நாம் விட்டுக்கொடுத்தால், எமது பண்பாட்டில் மேலும் பலவற்றையும் அவரவர் கேட்கிறார்களே என்று விட்டுக்கொடுக்க வேண்டிவரும். ஆறுமுக நாவலர் எமது பண்பாட்டில் சாதியின் முக்கியத்துவத்தையும் வகிபாகத்தையும் தெளிவாக உறுதிப்படுத்தி இருக்கிறார். 

Link to comment
Share on other sites

யாழ்ப்பாணத்தில் செயற்படும் சாதி முறை!

 

இலங்கையின் வட பகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாணக் குடாநாடு ஒப்பீட்டளவில் மிகவும் சிறியது. எனினும் மக்கள் செறிந்து வாழும் ஒரு பகுதியாக இது உள்ளது. இங்கே வாழ்பவர்களுள் 90 விழுக்காட்டுக்கு மேற்பட்டவர்கள் தமிழர்கள். இவர்களில் பெரும்பான்மையானோர் சைவ சமயத்தைக் கடைப்பிடிப்பவர்கள். இவர்களுக்குத் தென்னிந்தியத் தமிழர்களுடன் விரிவான பண்பாட்டுத் தொடர்புகள் பல நூற்றாண்டுகளாகவே இருந்து வருகின்றன. அத்துடன் இலங்கையிலும் அந்நாட்டின் வடக்கு கிழக்கு மாகாணம் முழுவதிலும் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஆனாலும் யாழ்ப்பாணத்துச் சாதியமைப்பு, தமிழ் நாட்டிலும், இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் உள்ள சாதியமைப்புக்களிலிருந்து வேறுபட்டுத் தனித்துவமான பண்புகளைக் கொண்டு விளங்குகிறது.

 

மேலோட்டமாகப் பார்க்கும்போது யாழ்ப்பாணத்தின் சாதியமைப்பின் உருவாக்கத்திலும், அதனைக் கட்டிக் காப்பதிலும் இந்து சமயக் கோட்பாடுகளின் தாக்கம் முன்னணியில் இருந்தபோதும், அதன் முக்கிய வெளிப்பாடுகளில் ஒன்றான பிராமண மேலாதிக்க நிலை யாழ்ப்பாணத்தில் முற்றாகவே இல்லாமல் இருப்பது கவனிக்கத் தக்கது. மதரீதியான பணிகளை செய்வதனால் பிராமணர்கள் உயர்வாகக் கருதப்பட்டாலும் சாதிய அமைப்பில் அவர்கள் நிலவுடமை சாதிகளில் தங்கி வாழ்பவர்களாகவே இருப்பதால் சாதியப்படி நிலையில் அவர்களுக்கு உயர்வுநிலை இல்லை. அதிகாரப் படிநிலையில் வெள்ளாளர் (வேளாளர்) சமூகத்தினரே உயர் நிலையில் உள்ளார்கள். யாழ்ப்பாண வரலாறு கூறும் யாழ்ப்பாண வைபவமாலை என்னும் நூலின் படி, யாழ்ப்பாண இராச்சியத்தின் ஆரம்ப காலத்தில் இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்டு அடிமை குடிமைகளுடன் குடியேற்றப்பட்ட பிரபுக்களுள் மிகப் பெரும்பாலானோர் வெள்ளாளர்களே என்பதைக் காண முடியும். இது வெள்ளாளர்களின் உயர் நிலைக்குக் காரணம் அவர்களுடைய ஆரம்பகால அரசியல் பலமே என்பதைக் காட்டுகின்றது.

யாழ்ப்பாண வைபவமாலை பல்வேறு பட்ட சாதியினரின் யாழ்ப்பாணக் குடியேற்றம் பற்றிக் கூறுகின்றது. பிராமணர், வெள்ளாளர், நளவர், மள்ளர், சான்றார், கோவியர், சிவியார் ஆகிய சாதிகள் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. ஒல்லாந்தர் ஆட்சியின்போது 1697 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட அறிக்கையொன்று யாழ்ப்பாணக் குடிகளிடையே 40 சாதிப்பிரிவுகள் இருப்பதாகக் குறிப்பிட்டிருப்பது பற்றி க. வேலுப்பிள்ளை குறிப்பிட்டுள்ளார். ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை எழுதிய யாழ்ப்பாணச் சரித்திரம் என்னும் நூலில், ஒல்லாந்தர் ஆட்சியின் இறுதிப்பகுதியில் 1790 ஆண்டில் தலைவரி வசூலிப்பதற்காக எடுத்த சாதிவாரியான கணக்கெடுப்புப் பட்டியலொன்று தரப்பட்டுள்ளது இதில் 58 சாதிப் பிரிவுகளும் அச் சாதிகளைச் சேர்ந்த 16 முதல் 70 வயதுக்குட்பட்ட ஆண்களின் தொகையும் கொடுக்கப்பட்டுள்ளன.

Caste system in Jaffna1இப் பட்டியலிலுள்ள சில உண்மையில் சாதிகள் அல்ல. எடுத்துக்காட்டாக, பரதேசிகள் (பிறதேசத்தவர்), பறங்கி அடிமைகள் என்பவற்றைக் குறிப்பிடலாம். வேறு சில, தொழில் வேறுபாட்டால் உருவான சாதிகளின் உட் பிரிவுகளாக இருக்கின்றன.

இதிலுள்ள பெரும்பாலான சாதிகள் தமிழ் நாட்டுச் சாதிகளை ஒத்தவை. நளவர், கோவியர் ஆகிய இரு சாதிப்பிரிவுகள் மட்டும் யாழ்ப்பாணத்தில் மட்டுமே காணப்படுபவை.

முக்கியமான சாதிகள் அனைத்தும் தொழில் அடிப்படையில் அமைந்தவை. சில சாதியினர் தொன்று தொட்டு ஒரே தொழிலையே செய்துவர, வேறு சில சாதிகள் கால ஓட்டத்தில் தொழில்களை மாற்றிக்கொண்டு வந்ததையும் அறிய முடிகின்றது. ஆரம்ப காலத்தில் சான்றார் என்னும் சாதியினரே பனைமரம் ஏறும் தொழிலை மேற்கொண்டிருந்தனர். பின்னர் நளவர் எனும் சாதியாரும், சிலவிடங்களில் விவசாயத் தொழில் செய்த பள்ளரும் இத்தொழிலில் ஈடுபடவே, சான்றார் செக்கு ஆட்டி எண்ணெய் எடுக்கும் தொழிலை மேற்கொண்டதாகக் கூறப்படுகின்றது.

யாழ்ப்பாணத்துச் சாதிகளில் முக்கியமானவற்றின் தொழில்கள் பின்வருமாறு:

யாழ்ப்பாணத்தில் சாதி வேறுபாடுகள் பரம்பரையாக ஈடுபட்டு வரும் தொழில்களை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப் பட்டுள்ளன.

விவசாயத் தொழில் யாழ்ப்பாணத்தில் மிகவும் அதிகார சக்தி கொண்ட வெள்ளாளரின் தொழிலாகக் கருதப்பட்டது.

நளவர் மற்றும் பள்ளர் எனப்படும் சாதியினர் முறையே கள் இறக்கும் தொழில் செய்பவர்களையும்,தோட்டங்களில் கூலி வேலை செய்பவர்களையும் குறிக்கிறது.

மரணவீடுகளில் பறையடிப்பவர்கள் பறையர் என அழைக்கப்பட்டு அடிமைகளைப்போல் நடத்தப் பட்டார்கள்.

துணி துவைப்பவர்கள் வண்ணார் எனவும் சிகை திருத்தல் வேலை செய்பவர்கள் அம்பட்டர் எனவும் அழைக்கப்பட்டார்கள்.

வண்ணார், அம்பட்டர் சாதிகளிடையே அவர்களின் வாடிக்கையாளர்களின் சாதி அடையாளங்களை கொண்டு சாதி உட்பிரிவுகள் உண்டு.

உதாரணத்துக்கு சில சிகை அலங்கரிப்பாளர்களுக்கு வெள்ளாள சாதியிலிருந்து மட்டுமே வாடிக்கையாளர்கள் இருப்பார்கள், அதேநேரம் மற்றவர்கள் சிறப்புரிமை குறைந்த சாதியினருக்கு தமது சேவையினை பரிமாறுவார்கள்.

பல்வேறுபட்ட சாதிக்குழுக்களைக் கொண்ட சிறுபான்மைத் தமிழ் சமூகத்தினர் ஒவ்வொரு குழுவினருக்கும் இடையில் திருமண உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதில்லை, அவர்கள் தங்கள் தனித்தன்மையை பாதுகாத்து வந்தார்கள்.

சிறுபான்மைத் தமிழரிடையே படித்து கௌரவமான தொழில் செய்பவர்கள் தங்கள் சாதி அடையாளத்தை மறைத்து சிறப்புரிமை குறைந்த சிறுபான்மை தமிழ் சமூக அங்கத்தினரிடையே தங்களை உயர்ந்தவர்கள் போல காட்டிக் கொண்டார்கள்.

சிறுபான்மைத் தமிழர்கள், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்துக் கோவில்களில் உள்நுழைவதற்கோ,வழிபாடு செய்வதற்கோ வெள்ளாள சாதியினரால் அனுமதிக்கப் படவில்லை. சிறுபான்மைத் தமிழர் மகாசபை இதற்கு எதிர்ப்புகளையும் ஆலயப் பிரவேச ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்தது.

1956ல் சாதி ஒடுக்குமறையைத் தடை செய்வதற்காக சமூகக் குறைபாட்டுச் சட்டம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. எப்படியாயினும் அது முதன்முறையாக நடைமுறைப் படுத்தப்பட்டபோது அதில் நிறைய ஓட்டைகள் இருந்தன.

தாழ்த்தப்பட்ட தமிழ் சமூகத்தினரைப் பிரதிநிதித்துவப் படுத்தும் ஒருவர் 1950ன் பிற்பகுதியில் கோப்பாய் கிராமச்சபைக்கு தெரிவு செய்யப்பட்டார்.

ஆனால் அவர் கிராமச்சபைக் கூட்டத்தில் பங்கு பற்றியபோது அவர் அமர்வதற்கு ஒரு நாற்காலிகூட வழங்கப் படவில்லை பதிலாக ஒரு பழைய உரலின் மேல் அமரும்படி மற்றைய அங்கத்தவர்களால் அவர் கோரப்பட்டார்.

சிறுபான்மை தமிழ் சமூகத்தவர்கள் உயர்சாதியினரோடு சேர்ந்து உணவு உண்ணுவதற்கு அனுமதி கிடையாது.

தேனீர் கடைகளில் அவர்கள் உள்ளே போக முடியாது.

தேனீர் துருப்பிடித்த தகரப் பேணிகளிலும் சோடா போத்தல்களிலுமே வழங்கப் பட்டது.

கடைகளில் அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டபோது நிலத்தில் விரிக்கப்பட்ட வெற்றுச் சாக்குகளில் அமரும்படி அவர்கள் கேட்கப்பட்டார்கள்.

இந்தப் பழக்கம் 1960 வரை சுபாஷ் கபே போன்ற இடங்களில் கூட நீடித்தது.

1930 மற்றும் 1940 களில் தாழ்த்தப்பட்ட தமிழ் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் சேலைகளுக்கு மேல் சட்டை அணிவதற்கு அனுமதி இருக்கவில்லை.

தங்கள் மார்பகங்களை மறைப்பதற்காக அவர்கள் ஒரு சிறு துணித் துண்டையே போர்த்த வேண்டியிருந்தது.

குடாநாட்டில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் சிறுபான்மை தமிழ் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் தலையை துப்பட்டாவால் போர்த்துவது தடுக்கப் பட்டிருந்தது.

உயர்சாதி மக்கள் சிறுபான்மை தமிழ் சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள், தமிழ் ஆண்களின் தேசிய உடையான வேட்டியை அணிவதற்குக் கூட தடை போட்டிருந்தார்கள்.

அநேகமான பாடசாலைகளில் உயர்சாதி ஆசிரியர்கள் தாழ்த்தப்பட்ட சாதியைச்சேர்ந்த மாணவர்களிடம் பாகுபாடு காட்டினார்கள்.

இந்த மாணவர்களக்கு மேசையோ அல்லது கதிரையோ வழங்கப்படவில்லை.

அவர்கள் நிலத்திலேயெ அமரவேண்டியிருந்தது. அவர்களுக்கு ஆசனங்கள் வழங்கப்பட்டாலும்கூட அவர்கள் கடைசி வரிசை ஆசனங்களையே பயன்படுத்த வேண்டியிருந்தது.

சிகை அலங்கரிப்பு நிலையங்களும் சாதிப் பாகுபாடுகள் அற்றவையாகவே உள்ளன.ஆனால் யாழ்ப்பாணத்திலுள்ள அநேக ஆலயங்கள் தொடர்ந்தும் தாழ்த்தப்பட்ட தமிழர்களுக்காக மூடப்பட்டனவாகவே உள்ளன.

தாழ்த்தப்பட்ட சாதியின் இளந் தலைமறையினர் இப்போது சாதிப் பாகுபாடு இல்லை என்றே எண்ணுகிறார்கள்.

அதேபோல உயர்சாதி மக்களும் சாதிப் பாகுபாடு ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாகவே எண்ணுகிறார்கள்.

ஆனால் சாதிப் பாகுபாடு பல வழிகளிலும் அடிப்படையாக இருந்து கொண்டே வருகிறது.

1995ல் யுத்தத்தின்போது யாழ்ப்பாண மக்கள் சாவகச்சேரிக்கு இடம்பெயாந்த போது உயர்சாதி கிணற்று உரிமையாளர்கள் பாவிக்கப்படாத காணிகளில் இருந்த கிணறுகளுக்குள் குப்பைகளையும் கழிவுகளையும் வீசி இடம்பெயர்ந்தவர்களில் உள்ள தாழ்த்தப்பட்ட சாதியினர் உபயோகிக்காதிருக்கும்படி செய்தனர்.

சமூக உறவுகளின் இறுதிக் காரணியாக சாதி தொடர்ந்தும் இருந்து வருகிறது.

எப்படியாயினும் யாழ்ப்பாணத்தில் சில சாதிக் கலப்புத் திருமணங்கள் நடந்தேறியுள்ளன.

யாழ்ப்பாண மாநகரசபைப் பகுதிக்குள் பெரும்பாலான வீதியமைப்பு வேலைகளையும் துப்பரவுப் பணிகளையும் செய்பவாகள் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள்.

இந்தத் தொழிலாளர்களுக்குப் பெரும்பாலும் குறைவான சம்பளமே வழங்கப் படுகிறது,அவர்கள் ஈடுபட்டுள்ள பணி மிகவும் ஆபத்தானதாக இருந்த போதிலும் கூட.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவர்கள் வேலை செய்யும் பொழுது அவர்களின் பாதுகாப்பையும் உடல் நலத்தையும் உத்தரவாதப்படுத்துவதற்கு உகந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை.

இந்தத் தொழிலாளர்களில் அநேகர் தங்கள் உரிமைகளையும் உயர் வேதனத்தையும் கோருவதற்கான தொழிற்சங்க அமைப்புகளை தங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்ளவில்லை.

ஒடுக்கப்பட்ட சாதியிலிருந்து குத்தகைக்கு விவசாயம் செய்பவர்களும் கஷ்டங்களை எதிhகொள்கிறார்கள்.

நாட்டை விட்டு நிரந்தரமாக வெளியேறியுள்ள உயர்சாதி தமிழர்கள் தங்கள் நிலங்களை சிறுபான்மைத் தமிழர்களுக்கு விற்பனை செய்வதை விரும்பவில்லை.

மொத்தத்தில் ஒடுக்கப்பட்ட சாதியினர் பல வழிகளினாலும் வறுமை நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளார்கள்.

காரைநகர் பகுதியில் தாழ்த்தப்பட்ட சாதியினர் பயன்படுத்தி வந்த ஒரு பொதுக் கிணற்றுக்குள் அவர்களின் பயன்பாட்டுக்குத் தடங்கல் ஏற்படுத்தும் நோக்கில் உயர்சாதி ஆட்களினால் மனிதக் கழிவுகள் வீசி அசுத்தப் படுத்தப்பட்டது.அந்தப் பகுதியில் இயங்கி வந்த சில ஈபிஆர்எல்எப் அங்கத்தவர்கள் அந்தக் கழிவுகளை வீசியவர்களை இனங்கண்டு அவர்களைக் கொண்டே அந்தக் கிணற்றை சுத்திகரிக்க வைத்தார்கள்.

வட மாகாணத்திலுள்ள சனத்தொகை கொண்டிருப்பது சுமார் 40 விகிதமான தாழ்த்தப்பட்ட தமிழர்களை.

தாழ்த்தப்பட்ட தமிழ் சமூகத்தைச் சேர்ந்த அநேக இளைஞர்கள் போராட்ட இயக்கங்களில் இணைந்து கொண்டதற்கு காரணம் அவர்கள் வீடுகளில் நிலவிய வறுமையே.மேலும் அவர்கள் எண்ணியது தாங்கள் தனியாக இயங்கக்கூடாது அப்படிச் செய்தால் அது தமிழர்களின் விடுதலைப் போராட்டத்துக்கு குழி பறித்தது போலாகிவிடும் என்று.

இந்தக் குழுக்கள் உயர்சாதியினருக்கு நிகரான ஒரு சந்தர்ப்பத்தை தங்களுக்கு வழங்குவதையும் அவர்கள் கண்டார்கள்.

சிலவேளைகளில் ஒடுக்கப்பட்ட சாதியினரை விடுவிப்பதில் இந்தக் குழுக்கள் மிகவும் தீவிரமாக இல்லை என்பதை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள் போலும். தாழ்த்தப்பட்ட தமிழர்கள், தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு பாரிய பங்களிப்பைச் செய்திருந்த போதிலும் உயர்சாதி தமிழர்கள் மற்றும் உயர்சாதி தமிழர் தலைவர்களும் தமிழ் சமூகத்தினுள்ளேயிருக்கம் சாதி ஒடுக்குமுறையினை களைந்தெறியத் தவறி விட்டார்கள்.

http://worldtamilforum.com/eelam/caste-system-in-jaffna/

Link to comment
Share on other sites

1 minute ago, nunavilan said:

யாழ்ப்பாணத்தில் செயற்படும் சாதி முறை!

தற்காலத்துக்கு பொருத்தமற்ற முறை!

தமிழர் மத்தியில் அழிய வேண்டியதில், அழிக்கப்பட வேண்டியதில்  நாட்டைவிட்டு தப்பியோடும் கேவலமான கலாச்சாரத்துடன் இந்த கேவலமான சாதிய கலாச்சாரத்திற்கும் முதலிடம் கொடுக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாதிகள் என்பது ..

யாழ்பாணத்தின் அடையாளம்...

இதை உடைதெறிய வேண்டும்...

எனது இனத்தை நாங்களே கூறு போட்டுவிட்டு  எப்படி சிங்களவனிடம் உரிமை கேட்க முடியும்?

அங்கேதான் எமக்கென்றொரு தலைவர் இருந்தார் ..

அவர் எமது இனம் அனைவருக்குமாகவே போராடினார்...மறைந்தும் போனார்.

பல  தரப்பட்ட சமூகங்களின் நீதிக்காய்  போராடிய  ஒருவர் என்பதினாலேயே...

பிரபாகரனை  ஈழ தமிழர்கள் வெறி தனமாய் நேசித்தார்கள்...

அவருக்கு எதிராக எவர் கருத்து சொன்னாலும் கோப பட்டார்கள்...

நுணாவிலான்  இங்கு இணைத்த... பள்ளர்,நளவர் , வெள்ளாளர், பறையர், கரையார்..வண்ணான்..அம்பட்டன்...

என்ற செய்தியெல்லாம்...

தலைவர் இருந்திருந்தால்.. அப்படி பேசுவதற்கே தமிழன் பயபடுவான்..

அதனால்தான் அவர் எங்கள் தலைவர்..

தமிழன் என்றால் கேவலம் கெட்ட இனம் ,

 இவர்களை கடிவாளம் போட்டு  இழுத்து பிடித்து நாகரிகத்தை கற்று கொடுத்ததே...

எங்கள் தலைவன் பிரபாகரன்.!

Link to comment
Share on other sites

சாதி என்பது தொழிலைக் குறிப்பதாக இருக்கவேண்டும், தொழில் செய்பவரைக் குறிப்பதாக இருக்கக்கூடாது. உயர்வு தாழ்வு கொண்ட வேறு வேறு தொழில்களைச் செய்யும் உறுப்புகளைக் கொண்ட நாங்கள், அவற்றை ஒன்றாக்கி மனிதன் என்கிறோம். அதுபோலவே எத்தொழில் புரியினும் அனைவரும் மனிதர்களாக மதிக்கப்பட வேண்டும். பிறப்பினால் வருவதல்ல சாதி.

‘பிறப்பினால் தகைமை அமைவதில்லை’ எனும் இதே கருத்தினைத்தான் திருவள்ளுவர், 

‘பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்’ 
என்றார்.

‘பிறப்பினால் எவ்வுயிரும் ஒத்தவையே. செய்யும் தொழிலாலும் சிறப்பு ஒவ்வாது/ஏற்புடையதாகாது. ஆகவே, எத்தொழில் செய்யினும் யாவரும் ஒத்தவரே’ என்பது பொருள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கற்பகதரு said:

அரபுநாடுகளின் பண்பாட்டை எங்களுக்குள் கொண்டு வரவேண்டாம். பண்டைக்காலம் முதல் சைவ சமய ஆகமங்களின் படி, மனுதர்ம முறைப்படி சாதி அமைப்பு  எமது பண்பாட்டின் முக்கிய அங்கமாக இருக்கிறது. அதை நாம் விட்டுக்கொடுத்தால், எமது பண்பாட்டில் மேலும் பலவற்றையும் அவரவர் கேட்கிறார்களே என்று விட்டுக்கொடுக்க வேண்டிவரும். ஆறுமுக நாவலர் எமது பண்பாட்டில் சாதியின் முக்கியத்துவத்தையும் வகிபாகத்தையும் தெளிவாக உறுதிப்படுத்தி இருக்கிறார். 

ஒம் என்ன.....எல்லாரையும் வைக்கிற இடத்திலை வைக்க வேணும் என்ன? 🤣🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, valavan said:

சாதிகள் என்பது ..

யாழ்பாணத்தின் அடையாளம்...

இதை உடைதெறிய வேண்டும்...

எனது இனத்தை நாங்களே கூறு போட்டுவிட்டு  எப்படி சிங்களவனிடம் உரிமை கேட்க முடியும்?

அங்கேதான் எமக்கென்றொரு தலைவர் இருந்தார் ..

அவர் எமது இனம் அனைவருக்குமாகவே போராடினார்...மறைந்தும் போனார்.

பல  தரப்பட்ட சமூகங்களின் நீதிக்காய்  போராடிய  ஒருவர் என்பதினாலேயே...

பிரபாகரனை  ஈழ தமிழர்கள் வெறி தனமாய் நேசித்தார்கள்...

அவருக்கு எதிராக எவர் கருத்து சொன்னாலும் கோப பட்டார்கள்...

நுணாவிலான்  இங்கு இணைத்த... பள்ளர்,நளவர் , வெள்ளாளர், பறையர், கரையார்..வண்ணான்..அம்பட்டன்...

என்ற செய்தியெல்லாம்...

தலைவர் இருந்திருந்தால்.. அப்படி பேசுவதற்கே தமிழன் பயபடுவான்..

அதனால்தான் அவர் எங்கள் தலைவர்..

தமிழன் என்றால் கேவலம் கெட்ட இனம் ,

 இவர்களை கடிவாளம் போட்டு  இழுத்து பிடித்து நாகரிகத்தை கற்று கொடுத்ததே...

எங்கள் தலைவன் பிரபாகரன்.!

அவர் மேல் பல மாற்றுக்கருத்துகள் இருந்தாலும் மேலே சொல்லப்பட்டது 100% உண்மை.

45 minutes ago, Paanch said:

சாதி என்பது தொழிலைக் குறிப்பதாக இருக்கவேண்டும், தொழில் செய்பவரைக் குறிப்பதாக இருக்கக்கூடாது. உயர்வு தாழ்வு கொண்ட வேறு வேறு தொழில்களைச் செய்யும் உறுப்புகளைக் கொண்ட நாங்கள், அவற்றை ஒன்றாக்கி மனிதன் என்கிறோம். அதுபோலவே எத்தொழில் புரியினும் அனைவரும் மனிதர்களாக மதிக்கப்பட வேண்டும். பிறப்பினால் வருவதல்ல சாதி.

‘பிறப்பினால் தகைமை அமைவதில்லை’ எனும் இதே கருத்தினைத்தான் திருவள்ளுவர், 

‘பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்’ 
என்றார்.

‘பிறப்பினால் எவ்வுயிரும் ஒத்தவையே. செய்யும் தொழிலாலும் சிறப்பு ஒவ்வாது/ஏற்புடையதாகாது. ஆகவே, எத்தொழில் செய்யினும் யாவரும் ஒத்தவரே’ என்பது பொருள்.

அப்படி ஒரு பகுப்பு ஏன் தேவை?

ஆங்கிலேயர்களிடமும் முன்னர் பொற் கொல்லர் பரம்பரையினர் கோல்ட்ஸ்மித், கொல்லர் பிளக் ஸ்மித் இவ்வாறு குடும்பங்களை தொழில் கொண்டு அழைக்கும் பழக்கம் இருந்தது.

ஆனால் பல நூற்றாண்டுக்கு முன்பே அது அருகி எந்த பெயர் கொண்டவரும் எந்த தொழிலும் செய்யலாம் என்றாகி விட்டது.

பறையர் மட்டுமே யாழில் மலம் அள்ளும் தொழில் செய்கிறார்கள்.

சோறில்லாமல் செத்தாலும் இதை வெள்ளாளர் செய்யாயினம். ஆனால் வெளிநாட்டில் போய் அதே வேலையை செய்து அனுப்பும் காசில் வாழ்ந்தபடி சாதியம் பேச ரெடி.

சாதிக்கும் தொழிலுக்குமான தொடர்பை அறுக்காமல் - சாதியை ஒரு போதும் அழிக்க முடியாது.

Link to comment
Share on other sites

49 minutes ago, குமாரசாமி said:

ஒம் என்ன.....எல்லாரையும் வைக்கிற இடத்திலை வைக்க வேணும் என்ன? 🤣🤣🤣

 

5 hours ago, கற்பகதரு said:

அரபுநாடுகளின் பண்பாட்டை எங்களுக்குள் கொண்டு வரவேண்டாம். பண்டைக்காலம் முதல் சைவ சமய ஆகமங்களின் படி, மனுதர்ம முறைப்படி சாதி அமைப்பு  எமது பண்பாட்டின் முக்கிய அங்கமாக இருக்கிறது. அதை நாம் விட்டுக்கொடுத்தால், எமது பண்பாட்டில் மேலும் பலவற்றையும் அவரவர் கேட்கிறார்களே என்று விட்டுக்கொடுக்க வேண்டிவரும். ஆறுமுக நாவலர் எமது பண்பாட்டில் சாதியின் முக்கியத்துவத்தையும் வகிபாகத்தையும் தெளிவாக உறுதிப்படுத்தி இருக்கிறார். 

 

49 minutes ago, குமாரசாமி said:

ஒம் என்ன.....எல்லாரையும் வைக்கிற இடத்திலை வைக்க வேணும் என்ன? 🤣🤣🤣

என்னென்டாலும், எங்கட சமயம், கலாச்சராத்தை விடக்கூடாது தானே? அவரவர் இருக்கும் இடத்தில் இருந்தால் கலாச்சாரத்தையும் பேணக்கூடியதாக இருக்குமெல்லோ? ஏற்றதாழ்வுகள் எங்க தான் இல்லை? தாய் விபச்சாரி என்றதுக்காக பெற்ற தாயை நீ என் தாய் இல்லை என்று ஆக்கி விட முடியாது தானே? அப்படி தான் எங்கள் கலாச்சாரமும். 

 

Link to comment
Share on other sites

22 minutes ago, goshan_che said:

பறையர் மட்டுமே யாழில் மலம் அள்ளும் தொழில் செய்கிறார்கள்.

எத்தனயோ வேலை இருக்க ஏன் இந்த வேலையை இவையள் செய்யினம்? தெரிஞ்ச வேலை, அப்பர் மகனுக்கு பழக்கி விட்ட வேலை, தொழில் நுணுக்கம் புரிந்த வேலை - ஆகவே செய்யினம். மற்றவை என்னெண்டு செய்யறது? யார் எந்த பள்ளிக்கூடத்திலே இந்த வேலைக்கு படிப்பிச்சு விடுகினம்?

24 minutes ago, goshan_che said:

சோறில்லாமல் செத்தாலும் இதை வெள்ளாளர் செய்யாயினம். 

எந்த பள்ளிக்கூடத்திலே இந்த வேலைக்கு படிப்பிச்சு விடுகினம்? தெரியாத வேலையை எப்படி செய்யறது? எவரும் எந்த வேலையும் செய்யலாம் எண்டால்,  எல்லாரும் டாக்குத்தர் வேலை வேணும் எண்டு நிப்பினம்.

 

24 minutes ago, goshan_che said:

ஆனால் வெளிநாட்டில் போய் அதே வேலையை செய்து அனுப்பும் காசில் வாழ்ந்தபடி சாதியம் பேச ரெடி.

வெளிநாட்டில் படிப்பிச்சு விடுறான் - செய்யக்கூடியதா இருக்கு. சாதியம் எங்கட கலாச்சாரம் - அதை பேசாமல் வேற எதை பேசுறது?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கற்பகதரு said:

எத்தனயோ வேலை இருக்க ஏன் இந்த வேலையை இவையள் செய்யினம்? தெரிஞ்ச வேலை, அப்பர் மகனுக்கு பழக்கி விட்ட வேலை, தொழில் நுணுக்கம் புரிந்த வேலை - ஆகவே செய்யினம். மற்றவை என்னெண்டு செய்யறது? யார் எந்த பள்ளிக்கூடத்திலே இந்த வேலைக்கு படிப்பிச்சு விடுகினம்?

தேப்பன் டாக்குத்தர் எண்டால் மோனோ மோளோ டாக்குத்தராய் வந்தால் மரியாதை
எஞ்சினியர் எண்டாலும் அதே மாதிரித்தான்...
எக்கவுண்டன் எண்டாலும் அதே மாதிரித்தான்....
நடிகன் எண்டாலும் அதே மாதிரித்தான்....

ஆனால் மற்றத்தொழில்காரர் பரம்பரை பரம்பரையாய் செய்ய மாட்டினமாம்.
ஆக மிஞ்சினால் நாங்கள் தூரம் போன........முதலில் இவர்களும் திருந்த வேண்டும்.
சாரம் கட்டினாலே மரியாதை இல்லையெண்ட சமுதாயத்திலை வேறை என்னத்தை எதிர்பார்க்க ஏலும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, goshan_che said:

அவர் மேல் பல மாற்றுக்கருத்துகள் இருந்தாலும் மேலே சொல்லப்பட்டது 100% உண்மை.

அப்படி ஒரு பகுப்பு ஏன் தேவை?

ஆங்கிலேயர்களிடமும் முன்னர் பொற் கொல்லர் பரம்பரையினர் கோல்ட்ஸ்மித், கொல்லர் பிளக் ஸ்மித் இவ்வாறு குடும்பங்களை தொழில் கொண்டு அழைக்கும் பழக்கம் இருந்தது.

ஆனால் பல நூற்றாண்டுக்கு முன்பே அது அருகி எந்த பெயர் கொண்டவரும் எந்த தொழிலும் செய்யலாம் என்றாகி விட்டது.

பறையர் மட்டுமே யாழில் மலம் அள்ளும் தொழில் செய்கிறார்கள்.

சோறில்லாமல் செத்தாலும் இதை வெள்ளாளர் செய்யாயினம். ஆனால் வெளிநாட்டில் போய் அதே வேலையை செய்து அனுப்பும் காசில் வாழ்ந்தபடி சாதியம் பேச ரெடி.

சாதிக்கும் தொழிலுக்குமான தொடர்பை அறுக்காமல் - சாதியை ஒரு போதும் அழிக்க முடியாது.

வெளிநாடுகளில் தொழிற்பிரிவுகளின் அடிப்படையில் எமதாட்கள் வேலை செய்வதில்லை. அதிக வருமானம் தரும் தொழில் எதுவானாலும் எமதாட்கள் செய்வதற்கு தயங்கியதில்லையே. 

கருவாடு விற்ற காசு மணக்கவாபோகிறது என்கின்ற நிலை வெளிநாடுகளில். 

என்னைப் பொறுத்தவரை ஒருவரது இறுதிப் பண்டார வெடிதான் சாதிப் பெருமை.

Link to comment
Share on other sites

10 minutes ago, கற்பகதரு said:

என்னென்டாலும், எங்கட சமயம், கலாச்சராத்தை விடக்கூடாது தானே? அவரவர் இருக்கும் இடத்தில் இருந்தால் கலாச்சாரத்தையும் பேணக்கூடியதாக இருக்குமெல்லோ? ஏற்றதாழ்வுகள் எங்க தான் இல்லை? தாய் விபச்சாரி என்றதுக்காக பெற்ற தாயை நீ என் தாய் இல்லை என்று ஆக்கி விட முடியாது தானே? அப்படி தான் எங்கள் கலாச்சாரமும். 

பெற்ற தாயைக் கலாச்சாரத்துடன் ஒப்பிடுவது தவறானது. கலாலாச்சாரமானது, காலத்துக்குக் காலம் மாறக்கூடியது, மாற்றக்கூடியது. தவறான சாதிக் கலாச்சாரத்தையும் மாற்றலாம், மாற்றமுடியும். சாதியில் உயர்வு, தாழ்வு கொண்டிராத ஒரு பெரும் மக்கள் படை, முப்பது வருடங்களாக ஒரு தலைவன்கீழ் பணிசெய்தது எங்கள் காலத்தில்தான். மனிதர்களை நல்ல மனிதக் கலாச்சாரத்தோடு வாழவைக்க முயற்சிசெய்வோம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Kapithan said:

வெளிநாடுகளில் தொழிற்பிரிவுகளின் அடிப்படையில் எமதாட்கள் வேலை செய்வதில்லை. அதிக வருமானம் தரும் தொழில் எதுவானாலும் எமதாட்கள் செய்வதற்கு தயங்கியதில்லையே. 

கருவாடு விற்ற காசு மணக்கவாபோகிறது என்கின்ற நிலை வெளிநாடுகளில். 

என்னைப் பொறுத்தவரை ஒருவரது இறுதிப் பண்டார வெடிதான் சாதிப் பெருமை.

உண்மைதான்,

ஆனாலும் வெளிநாட்டில் சாதிக்கும்-தொழிலுக்குமான தொடர்பு இல்லை என்பதால் பல தொழில்களை ( மக்டொனால்டில் நின்றால் ஷிப்ட் வரும் போது  சுத்தம் செய்யத்தான் வேண்டும், நான் வெள்ளாளன் என்னால் முடியாது என சொல்ல முடியாது😂) செய்ய எம்மவர் முன்வந்தாலும் இதிலும் சில நுணுக்கங்கள் உண்டு.

சாதாரணமாக் எல்லா சாதியினரும் கடையில் வேலை செய்வார்கள். கொஞ்சம் நிலைத்ததும் சொந்தமாக கடை வைப்பார்கள் ஆனால் - சில்லறை உடன்-மீன்   விற்பனையில் எத்தனை வெள்ளாளர்கள் ஈடுபடுகிறார்கள்? எனக்கு தெரிய இல்லை.

தமிழ் கடைகளில் கூட, மீன் விக்கும் கவுண்டர் தனியே, தனி ஒரு சிப்பந்தியிடம் இருப்பதேன்? ஆனால் பக்கெட்டில் அடைத்த மீனை எல்லாரும் விற்பார்கள்.

லண்டனில் செயின்ஸ்பெரிஸ், டெஸ்கோ, அஸ்டா இப்படி பல சூப்பர் மார்கெட்டுகளில் எல்லா பகுதிகளிலும் தமிழர்கள் நீக்கமற நிறைந்திருந்தாலும் fish counter ல் ஒருவரை இன்னும் நான் காணவில்லை.

இதை நானே கற்பனை செய்கிறேனே அல்லது இதில் ஏதும் உண்மை இருக்கிறதா தெரியவில்லை.

நான் லண்டன் வந்த புதிதில் - உடன் இந்து-சமுத்திர மீன் வாங்க 30 நிமிடம் காரில் போய் வாங்குவோம். அது ஒரு கரீபியனின் கடை. அவனே பிலிங்கேட்ஸ் மார்கெட் எனும் கிழக்கு லண்டனில் இருக்கும் பெரும் மீன் சந்தையில் போய் வாங்கி விற்பது. 

படிப்பு ஒரு புறம் ஓட - ஒரு சின்ன ஓடை கடையை எடுத்து, தமிழர் நிறைந்த பகுதியில் இதே வேலையை நாம் செய்தால் நல்ல லாபம் பார்க்கலாமே என என் மனதில் ஓடியது.

இதை என்னை சூழ இருந்தவர்களிடம் தெரிவித்த போது இது நல்ல ஐடியா என அத்தனை பேரும் சொன்ன போதும் - அத்தனைபேரும் “மீன் கடையே வைக்கப்போறாய்” என தடுக்கவே செய்தார்கள்.

(எனக்கே உரித்தான ஊக்கமின்மையால் இதை நான் செய்யவில்லை என்பது வேறு 😂).

ஆனால் பலசரக்கு கடை, சிக்கன் கடை போடும் ஐடியாக்களுக்கு அநேகரின் பதில் “படிப்பை முடித்து விட்டு செய்” என்பதாகவே இருந்தது.

பிகு: அதென்ன பண்டாரவெடி?

 

 

54 minutes ago, Paanch said:

பெற்ற தாயைக் கலாச்சாரத்துடன் ஒப்பிடுவது தவறானது. கலாலாச்சாரமானது, காலத்துக்குக் காலம் மாறக்கூடியது, மாற்றக்கூடியது. தவறான சாதிக் கலாச்சாரத்தையும் மாற்றலாம், மாற்றமுடியும். சாதியில் உயர்வு, தாழ்வு கொண்டிராத ஒரு பெரும் மக்கள் படை, முப்பது வருடங்களாக ஒரு தலைவன்கீழ் பணிசெய்தது எங்கள் காலத்தில்தான். மனிதர்களை நல்ல மனிதக் கலாச்சாரத்தோடு வாழவைக்க முயற்சிசெய்வோம்.  

கற்பகதருவை நீங்கள் இன்னமும் விளங்கி கொள்ளவில்லை😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, valavan said:

சாதிகள் என்பது ..

யாழ்பாணத்தின் அடையாளம்...

இதை உடைதெறிய வேண்டும்...

எனது இனத்தை நாங்களே கூறு போட்டுவிட்டு  எப்படி சிங்களவனிடம் உரிமை கேட்க முடியும்?

அங்கேதான் எமக்கென்றொரு தலைவர் இருந்தார் ..

அவர் எமது இனம் அனைவருக்குமாகவே போராடினார்...மறைந்தும் போனார்.

பல  தரப்பட்ட சமூகங்களின் நீதிக்காய்  போராடிய  ஒருவர் என்பதினாலேயே...

பிரபாகரனை  ஈழ தமிழர்கள் வெறி தனமாய் நேசித்தார்கள்...

அவருக்கு எதிராக எவர் கருத்து சொன்னாலும் கோப பட்டார்கள்...

நுணாவிலான்  இங்கு இணைத்த... பள்ளர்,நளவர் , வெள்ளாளர், பறையர், கரையார்..வண்ணான்..அம்பட்டன்...

என்ற செய்தியெல்லாம்...

தலைவர் இருந்திருந்தால்.. அப்படி பேசுவதற்கே தமிழன் பயபடுவான்..

அதனால்தான் அவர் எங்கள் தலைவர்..

தமிழன் என்றால் கேவலம் கெட்ட இனம் ,

 இவர்களை கடிவாளம் போட்டு  இழுத்து பிடித்து நாகரிகத்தை கற்று கொடுத்ததே...

எங்கள் தலைவன் பிரபாகரன்.!

நீங்கள் தேசியம் கதைத்துக் கொண்டு , தேர்தல் நேரம் பிரபாகரனை வைத்து வோட் கேட்டு கொண்டு சாதியை அவமதிப்பதன் மூலம், பிரபாகரனையும் சேர்த்து அவமதித்து உள்ளீர்கள் என்று றெடிமியஸ் சொல்லி இருக்கிறார் . 

கஞ்சா,வாள் வீட்டுக் குழுக்களுக்காய் தான் றெடிமியஸ் கோட்டில் ஆஜராகின்றவர்...இவரது சாதியை இழுத்து கதைத்தால் இவர் நல்லவாயிட்டார்.

தமிழனை அழிக்க இனி மேல் யாரும் தேவையில்லை ... இந்த சாதியாலே இனி மேல் அழிவான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

நீங்கள் தேசியம் கதைத்துக் கொண்டு , தேர்தல் நேரம் பிரபாகரனை வைத்து வோட் கேட்டு கொண்டு சாதியை அவமதிப்பதன் மூலம், பிரபாகரனையும் சேர்த்து அவமதித்து உள்ளீர்கள் என்று றெடிமியஸ் சொல்லி இருக்கிறார் . 

கஞ்சா,வாள் வீட்டுக் குழுக்களுக்காய் தான் றெடிமியஸ் கோட்டில் ஆஜராகின்றவர்...இவரது சாதியை இழுத்து கதைத்தால் இவர் நல்லவாயிட்டார்.

தமிழனை அழிக்க இனி மேல் யாரும் தேவையில்லை ... இந்த சாதியாலே இனி மேல் அழிவான் 

Remidius ஒரு குற்றவியல் (Criminal) வழக்குரைஞர். அவரின் தொழிலை எப்படி குறை சொல்ல முடியும். மிகப்பெரும்பாலான தமிழ் வழக்குரைஞர்கள் தேர்ந்தெடுப்பது Civil Law.

உண்மையில் அனேகருக்கு Civil , Criminal Law Practicing இரண்டுக்கும் இடையேயுள்ள  வேறுபாடு தெரியாது. 

றெமீடியஸ் கூறியதில் என்ன பிழை உள்ளது ?

சாதியை பேசுவதினூடாக பிறருக்காக உயிர் கொடுத்தோர், உயிர் கொடுக்கத் துணிந்தோர், மற்றும் அவர்தம் உறவுகளை நாம் கொச்சைப் படுத்துகிறோம் என்பது உண்மையே. 

எங்களை அழிப்பது சாதி, சமயம், பிரதேசவாதம் ஆகிய மூன்றும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

உண்மைதான்.


சாதாரணமாக் எல்லா சாதியினரும் கடையில் வேலை செய்வார்கள். கொஞ்சம் நிலைத்ததும் சொந்தமாக கடை வைப்பார்கள் ஆனால் - சில்லறை உடன்-மீன்   விற்பனையில் எத்தனை வெள்ளாளர்கள் ஈடுபடுகிறார்கள்? எனக்கு தெரிய இல்லை.இதை நானே கற்பனை செய்கிறேனே அல்லது இதில் ஏதும் உண்மை இருக்கிறதா தெரியவில்லை.

பிகு: அதென்ன பண்டாரவெடி?

 

எனக்குத்  தெரிந்த அளவில்  வட அமெரிக்காவில் நேரெதிராக உள்ளது உண்மை நிலவரம். அங்கே பணத்திற்குத்தான் முதலிடம்.  எந்தத் தொழிலில் அதிக  வருமானம் வருகிறதோ அதற்குத்தான் முன்னுரி. பணம் வந்தபின்னர் சாதி முதலிடமாக மாறும் 😀

 

பண்டாரவெடி = குறி தவறும் / தவறிய வெடி. அதாகப்பட்டது, குறி பார்த்து சுடத் தெரியாத துப்பாக்கியாளன் அல்லது வேட்டைக்காறன். ஆனால் அவனிடம் துப்பாக்கி (அதிகாரம்) இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎1‎/‎12‎/‎2020 at 1:28 PM, Kapithan said:

Remidius ஒரு குற்றவியல் (Criminal) வழக்குரைஞர். அவரின் தொழிலை எப்படி குறை சொல்ல முடியும். மிகப்பெரும்பாலான தமிழ் வழக்குரைஞர்கள் தேர்ந்தெடுப்பது Civil Law.

உண்மையில் அனேகருக்கு Civil , Criminal Law Practicing இரண்டுக்கும் இடையேயுள்ள  வேறுபாடு தெரியாது. 

றெமீடியஸ் கூறியதில் என்ன பிழை உள்ளது ?

சாதியை பேசுவதினூடாக பிறருக்காக உயிர் கொடுத்தோர், உயிர் கொடுக்கத் துணிந்தோர், மற்றும் அவர்தம் உறவுகளை நாம் கொச்சைப் படுத்துகிறோம் என்பது உண்மையே. 

எங்களை அழிப்பது சாதி, சமயம், பிரதேசவாதம் ஆகிய மூன்றும்.

ரெடிமியஸ் குற்றவியல் வக்கீல் தான் இல்லை என்று சொல்லவில்லை...ஆனால் அவர் போன்றவர்கள் வாள்  வெட்டு குழுக்கள் கஞ்சா கடத்துகின்றவர்கள் போன்றவர்களுக்காக உடனே ஆஜராவதால்தான் குற்றவாளிகள் யாழில் பல்கிப் பெருகி உள்ளார்கள் 
நான் மற்றவருக்கு வக்காலத்து வாங்கவில்லை அவர் சாதியை இழுத்து கதைத்தது முழுப் பிழையும் ,அவரது இயலாமையும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

ரெடிமியஸ் குற்றவியல் வக்கீல் தான் இல்லை என்று சொல்லவில்லை...ஆனால் அவர் போன்றவர்கள் வாள்  வெட்டு குழுக்கள் கஞ்சா கடத்துகின்றவர்கள் போன்றவர்களுக்காக உடனே ஆஜராவதால்தான் குற்றவாளிகள் யாழில் பல்கிப் பெருகி உள்ளார்கள் 
நான் மற்றவருக்கு வக்காலத்து வாங்கவில்லை அவர் சாதியை இழுத்து கதைத்தது முழுப் பிழையும் ,அவரது இயலாமையும் 

நீங்கள் அக்கறைப்படுவதில் உண்மை உள்ளது. ஆனால் கிரிமினல் வழக்குரைஞர் கிரிமினல்களைதானே பிரதிநிதித்துவப் படுத்தமுடியும் வழக்காடு மன்றங்களில். 

சாதியை கதைப்பது பிழை அல்ல. அது கடுமையான கண்டனத்திற்குரியதுடன் மனித நாகரிகத்திற்கெதிரானது, மனிதத் தன்மையற்றது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாடாளுமன்றத் தேர்தல் 2024: மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் – ஏப்ரல் 14 முதல்… Apr 13, 2024 18:46PM IST ஷேர் செய்ய :    சூடு பிடிக்கிறது அரசியல் களம்! எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள், எந்த கூட்டணி பெரும்பான்மையான தொகுதிகளைக் கைப்பற்றப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருக்கிறது. மக்களின் மனதை வென்ற வேட்பாளர் யார் என்பதைக் கணித்துச் சொல்வதற்கு தமிழ்நாடு முழுவதும் பயணித்து கருத்துக்கணிப்பை மேற்கொண்டது மின்னம்பலம். தமிழ்நாட்டில் ஒவ்வொரு மக்களவைத் தொகுதியும் 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியிருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாடு முழுதும் 39 மக்களவைத் தொகுதிகளில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் மின்னம்பலம் சார்பாக மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. புதுச்சேரி மக்களவைத் தொகுதியிலும் மின்னம்பலம் குழுவினர் கருத்துகணிப்பு நடத்தினர். இதைத் தவிர இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியிலும் சர்வே மேற்கொள்ளப்பட்டது. ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 100 பேர் என்று 6 தொகுதிகளைக் கொண்ட ஒரு மக்களவைத் தொகுதிக்கு 600 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்- பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. மொத்தமாக தமிழ்நாடு முழுதும் 23,400 பேரிடம் நடத்தப்பட்ட மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் ஒவ்வொரு தொகுதியாக ஏப்ரல் 14 முதல் தொடர்ந்து வெளியிடப்பட உள்ளது. மொத்தமாக தமிழ்நாட்டில் எந்தெந்த கூட்டணி எத்தனை சதவீத வாக்குகளைப் பெற உள்ளது என்பதையும் மின்னம்பலம் வெளியிட உள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/2024-lok-sabha-election-competition-between-admk-dmk-bjp-ntk-minnambalam-mega-survey/ மின்னம்பலம் மெகா சர்வே: வடசென்னை- வாகை சூடுவது யார்?   தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் களம் சூடு பிடித்து அனல் பறந்துகொண்டிருக்கிறது.  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார்கைப்பற்றப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.  இந்நிலையில் நம் மின்னம்பலம் 40 தொகுதிகளிலும் மக்களைச் சந்தித்து மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இதில் வட சென்னை மக்களின்  மனதை வென்றவர் யார்? வடசென்னை தொகுதியில் திமுக சார்பில் கலாநிதி வீராசாமி மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில் ராயபுரம் மனோ போட்டியிடுகிறார். பாஜக சார்பில் வழக்கறிஞர் பால் கனகராஜ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் அமுதினி போட்டியிடுகிறார். களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக வடசென்னை மக்களவைத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருவொற்றியூர்,  டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்,  பெரம்பூர், கொளத்தூர்,  திருவிக நகர்(தனி) மற்றும்ராயபுரம் தொகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…  திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி 45% வாக்குகளைப் பெற்று  இரண்டாவது முறையாக வடசென்னைதொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ 29% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிக்கிறார்.  பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் 19% வாக்குகளைப் பெறுகிறார்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அமுதினி 6% வாக்குகளைப் பெற்றுள்ளார்.   1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… வடசென்னை தொகுதியில் இந்த முறையும் கலாநிதி வீராசாமி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/political-news/dmk-candidate-kalanidhi-veerasamy-is-leading-in-north-chennai-constituency-for-the-second-time-by-getting-45-votes-minnambalam-mega-survey-north-chennai/   மின்னம்பலம் மெகா சர்வே: திருவள்ளூர்… வெற்றிக் கோப்பை யாருக்கு? Apr 14, 2024 09:00AM  தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..?  என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில்,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இதில் திருவள்ளூர் தொகுதியில் வெற்றி யாருக்கு? திருவள்ளூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக முன்னாள் ஐ.ஏ.எஸ்சசிகாந்த் செந்தில் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் கு.நல்லதம்பி போட்டியிடுகிறார்.  பாஜக சார்பில் பொன்.பாலகணபதி போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.ஜெகதீஷ் சந்தர் போட்டியிடுகிறார். கள நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருவள்ளூர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத்தொகுதிகளான கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), திருவள்ளூர், பூவிருந்தவல்லி (தனி), ஆவடி மற்றும்மாதவரம் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்... காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 49% வாக்குகளைப் பெற்று திருவள்ளூர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் கு.நல்லதம்பி 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் பொன்.பாலகணபதி 19% வாக்குகளைப் பெறுவார் என்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.ஜெகதீஷ் சந்தர் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்தெரிவித்தன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, திருவள்ளூர் தொகுதியில் இந்த முறை காங்கிரஸின் சசிகாந்த் செந்தில் வெற்றிக் கோப்பையை கைப்பற்றுகிறார்.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-congress-candidate-sasikanth-senthil-won-in-thiruvallur-constituency-admk-bjp-are-in-next-places/   மின்னம்பலம் மெகா சர்வே: அரக்கோணம்… அரியணை ஏறுவது யார்? Apr 14, 2024 10:00AM IST ஷேர் செய்ய :    2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அரக்கோணம் தொகுதியின் அரியணை ஏறப் போவது யார்  என்ற கேள்விக்கு பதில் தேடி,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் திமுக சார்பில்  சிட்டிங் எம்.பி.யான ஜெகத்ரட்சகன் மீண்டும்களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் ஏ.எல்.விஜயன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக சார்பில் வழக்கறிஞர் கே.பாலு போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் அப்சியா நஸ்ரின்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் நிலையில், களம் யாருக்கு சாதகமாக இருக்கிறது?  மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாகஅறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக அரக்கோணம் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  அரக்கோணம் (தனி),  திருத்தணி, சோளிங்கர்,  காட்பாடி,  இராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் 48% வாக்குகளைப் பெற்று மீண்டும் அரக்கோணம் தொகுதி மக்களின் பிரதிநிதியாகிறார்.  அதிமுக வேட்பாளர் ஏ.எல்.விஜயன் 24% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் கே.பாலு 22% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அப்சியா நஸ்ரின் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, அரக்கோணம் தொகுதியின் எம்.பி. என்ற அரியணையில் மீண்டும் அமர ஆயத்தமாகிறார் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன்.    https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-arakkonam-constituency-dmk-jagatratchagan-wins-with-48-percentage-vote/   மின்னம்பலம் மெகா சர்வே: கள்ளக்குறிச்சி யாருடைய வெற்றிக் கொடி? Apr 14, 2024 11:00AM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம், மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் வட தமிழகத்தின் கிராமப்புறங்கள் நிறைந்த கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக சார்பில்மலையரசன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் குமரகுரு போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமகசார்பில் இரா.தேவதாஸ் உடையார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆ.ஜெகதீசன்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டியிருப்பதாகதகவல்கள் வருகிற நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக் கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயதுவரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண்என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான ரிஷிவந்தியம்,  சங்கராபுரம்,  கள்ளக்குறிச்சி (தனி), கெங்கவல்லி (தனி),  ஆத்தூர் (தனி) மற்றும் ஏற்காடு (தனி)  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் மலையரசன் 42% வாக்குகளைப் பெற்று கள்ளக்குறிச்சி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் குமரகுரு 37% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் இரா.தேவதாஸ் உடையார் 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆ.ஜெகதீசன் 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… மலைகள் நிறைந்த கள்ளக்குறிச்சியில் திமுகவின் மலையரசனே மலையேறுகிறார்.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-malayarasan-is-leading-in-kallakurichi-constituency-with-42-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: திருச்சி… திருப்புமுனை வெற்றி யாருக்கு? Apr 14, 2024 13:00PM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இதில் அரசியல் திருப்புமுனைகளுக்கு சொந்த பூமியான மலைக்கோட்டையாம் திருச்சி  தொகுதி முக்கியமானது. திருச்சி தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் துரை வைகோ களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில் கருப்பையா போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் செந்தில்நாதன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஜல்லிக்கட்டு ராஜேஷ்போட்டியிடுகிறார். மதிமுக, அதிமுக, அமமுக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுகிற நிலையில்…  களத்தின் இறுதிகட்ட நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாகஅறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருச்சி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருச்சிராப்பள்ளி (கிழக்கு),  திருச்சிராப்பள்ளி (மேற்கு), திருவரங்கம், திருவெறும்பூர்,  கந்தர்வக்கோட்டை (தனி) மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   மதிமுக வேட்பாளர் துரை வைகோ 44% வாக்குகளைப் பெற்று திருச்சி தொகுதியில் முந்துகிறார். அதிமுக வேட்பாளர் கருப்பையா 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் 17% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திருச்சி தொகுதியில் இந்த முறை துரை வைகோவின் தீப்பெட்டியே ஒளிர்கிறது.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-mdmk-candidate-won-at-trichy-and-admk-ammk-placed-next/
    • ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதரகம் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து ரஷ்ய இராணுவத்திற்கு ஆட்களை இணைத்துக் கொள்வது இன்றைய காலத்தில் வழக்கமான ஒரு விடயமாக காணப்படுவதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா லியனகே என குறிப்பிட்டுள்ளார். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா விசாவில் ரஷ்யாவுக்கு சென்று இராணுவ பணியில் இணைந்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய இராணுவம் சுற்றுலா விசாவில் இலங்கையர்களும் ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொள்வதாக தகவல் கிடைத்துள்ளதாக ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார். ஆனால் இது தொடர்பான சரியான தகவல்கள் தூதரகத்திடம் இல்லாததால், அந்நாட்டு இராணுவ சேவையில் இலங்கையர்கள் பணியாற்றினால் அது தொடர்பான தகவல்களை வழங்குமாறு ரஷ்ய பாதுகாப்பு பிரதானிகளிடம் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையர்கள் பலி ரஷ்ய படைகளுடன் இலங்கையர்கள் இணைந்து கொண்டால் அது தொடர்பில் தூதரகத்திற்கு அறிவிக்குமாறு அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக ரஷ்ய இராணுவத்தில் இருந்த இலங்கையர்கள் பலர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. எவ்வாறாயினும், தூதரகத்திடம் தகவல் இல்லாததால், உயிரிழக்கும் இலங்கையர்கள் அல்லது காயமடையும் இலங்கையர்கள் தொடர்பிலும் கண்டுபிடிக்க முடியவில்லை என ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார்.   https://akkinikkunchu.com/?p=273802
    • பிளவை நோக்கி தமிழரசுக் கட்சி? – பேராசிரியா் அமிா்தலிங்கம் April 16, 2024   ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கும் நிலையில், தமிழ்க் கட்சிகள் சிலவற்றால் முன்வைக்கப்பட்ட தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற கருத்து, வாதப் பிரதிவாதங்களுக்கு உள்ளாகியுள்ளது. மறுபுறம் தமிழரசுக் கட்சிக்குள் உருவாகியிருக்கும் முரண்பாடு அந்தக் கட்சி பிளவுபடுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தையும் ஒரணியில் இணைக்கும் முயற்சிகளையும் இது பலவீனப்படுத்தியுள்ளது. இந்தப் பின்னணியில் கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியா் கோபாலபிள்ளை அமிா்தலிங்கம் வழங்கிய நோ்காணல். கேள்வி – பொதுத் தோ்தல்தான் முதலில் நடத்தப்பட வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை பொது ஜன பெரமுன கொடுத்தது. ஆனால் இப்போது ஜனாதிபதித் தோ்தல்தான் முதலில் நடத்தப்படும் என்பது பெருமளவுக்கு உறுதியாகியிருக்கின்றது. இந்த முரண்பாடான போக்கிற்கு காரணம் என்ன? பதில் – பொது ஜன பெரமுனவைப் பொறுத்தவரையில் ஜனாதிபதித் தோ்தலுக்கு முன்னதாக பொதுத் தோ்தலை நடத்த வேண்டும் என்று முயற்சிக்கின்றாா்கள். பொதுத் தோ்தலின் மூலம் சில ஆசனங்களைக் கைப்பற்றி எதிா்கால ஜனாதிபதி தமக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கவிடாமல் தடுக்கலாம் என அவா்கள் சிந்திக்கின்றாா்கள். ஜனாதிபதித் தோ்தல் முதலில் நடைபெற்று அதில் யாா் ஜனாதிபதியாக வந்தாலும், அதன் பின்னா் வரக்கூடிய பாராளுமன்றத் தோ்தலில் பொதுஜன பெரமுன வெற்றிபெறுவது மிகவும் கடினமானது. மிகவும் குறைந்த ஆசனங்களையே அவா்களினால் பெறக்கூடியதாக இருக்கும். அதனைவிட, அவா்களுடைய கட்சியைச் சோ்ந்த சிலா் கூட, ஜனாதிபதியாக வருபவரின் கட்சியுடன் இணைந்துகொள்வதற்கும் வாய்ப்புள்ளது.   அவ்வாறான சந்தா்ப்பத்தில் பாராளுமன்றத்தில் அவா்களுடைய பலம் கடுமையாக வீழ்ச்சியடைந்து எதிா்காலத்தில் வரக்கூடிய அரசாங்கங்கள் தம்மீதான சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தலாம் என்று அஞ்சுகிறாா்கள். அதனால் அவா்கள் தங்களைப் பாதுகாப்பதற்கு – தமது எதிா்காலத்தைப் பாதுகாப்பதற்கு பொதுத் தோ்தல் முதலில் நடைபெற வேண்டும் என்று விரும்புகின்றாா்கள். அவ்வாறு நிகழ்ந்தால், பாராளுமன்றத்தில் எந்வொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம். புதிதாக வரப்போகும் ஜனாதிபதிக்கும் இதனால் மிகப் பெரிய சிக்கல் உருவாகும். பாராளுமன்றம் தொங்கு பாராளுமன்றமாக அமையலாம். பாராளுமன்றத்தை நான்கு வருடங்களுக்குக் கலைக்கவும் முடியாது. அது நாட்டில் பாரிய சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளையும் உருவாக்கும் என்பதையும் ஜனாதிபதி உணா்ந்திருக்கின்றாா். கேள்வி – ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கும் நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் மத்தியில் ஒரு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. யாயைாவது ஆதரிப்பதா, பகிஷ்கரிப்பதா என்ற கேள்விகளுக்கு மத்தியில் தமிழ்ப் பொது வேட்பாளா் ஒருவரை களமிறக்குவது என்பது குறித்தும் முக்கியமாகப் பேசப்படுகின்றது. பொதுவேட்பாளா் என்ற விடயத்தைப் பொறுத்தவரையில் உங்கள் பாா்வை என்ன? பதில் – 1931 ஆம் ஆண்டு டொனமூா் அரசியலமைப்பின் படி இலங்கையிலுள்ள அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டு தோ்தல் நடைபெற்ற போது அது தமிழ் மக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அது தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற ரீதியில் யாழ். மாவட்ட மக்கள் அந்தத் தோ்தலைப் புறக்கணித்தாா்கள். அன்று முதல் பல்வேறுபட்ட புறக்கணிப்புக்களை தமிழ் மக்கள் செய்திருக்கின்றாா்கள். இப்போது பொதுவேட்பாளா் ஒருவரை நிறுத்துவது என்பதும், நாம் சிங்கள வேட்பாளா்கள் எவருக்கும் வாக்களிக்க மாட்டடோம் என வாக்களிப்பைப் புறக்கணிப்பதற்கு சமமானதுதான். அவ்வாறு பொதுவேட்பாளராக தமிழா் ஒருவரை களமிறக்கும் போது, அவரால் வெற்றிபெற முடியாது என்பதைத் தெரிந்துதான் தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும். குமாா் பொன்னம்பலம் ஒரு தடவை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டவா். அவருக்கும் தமிழ்ப் பகுதிகளில் கூட அதிகளவு வாக்குகள் கிடைக்கவில்லை. இந்த விடயத்தைப் பொறுத்தவரையில் இரண்டு விடயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. தமிழ்க் கட்சிகள் அனைத்தும் இணைந்து இதற்கான தீா்மானத்தை எடுப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை. தமிழரசுக் கட்சி ஒருபுறம் இருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவா்கள் மற்றொரு அணியாக இருக்கின்றாா்கள். கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் மற்றொரு அணியில் இருக்கின்றாா். நீதியரசா் விக்னேஸ்வரனின் அணி மற்றொன்றாக இருக்கின்றது. இந்த நான்கு தரப்புக்களும் இணைந்து ஓரணியாக வரக்கூடிய வாய்ப்புக்கள் இல்லை. வேறுபட்ட முடிவுகளைத்தான் எடுக்கப்போகின்றாா்கள். இதனைவிட பொது வேட்பாளா் எந்தளவுக்குப் பொது வேட்பாளராக இருப்பாா் என்றொரு கேள்வி இருக்கின்றது. என்ன முடிவை எடுத்தாலும் தமிழ் மக்களுக்கு அதனால் ஏற்படக்கூடிய சாதக, பாதக அம்சங்களை அவா்கள் தெளிவாகக்கூற வேண்டும். பொது வேட்பாளரை நாங்கள் நிறுத்துகிறோம். நீங்கள் வாக்களியுங்கள். பெரும்பான்மை இன வேட்பாளா்களை நாங்கள் நிராகரிக்கின்றோம். அதனால் தமிழ் மக்களுக்கு சாதகமானவை என்ன பாதகமானவை என்ன என்பதையெல்லாம் இவா்கள் தெளிவாகச் சொல்ல வேண்டும். கேள்வி – தமிழ் அரசியல் கட்சிகள் தவிா்ந்த சிவில் அமைப்புக்கள் இந்த விடயத்தில் செல்வாக்கு செலுத்தக்கூடியவையாக இருக்குமா? பதில் – சிவில் அமைப்புக்கள் அவ்வாறு கூறலாம். ஆனால் எம்மிடம் அவ்வாறு பலம்பொருந்திய சிவில் அமைப்புக்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அதேவேளையில், அரசியல் கட்சிகள் ஒரு முடிவை எடுக்க சிவில் அமைப்புக்கள் இன்னொரு முடிவை எடுப்பது போன்றன தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் என்று நான் நினைக்கவில்லை. சிவில் அமைப்புக்கள் அரசியல் கட்சிகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து ஒரு இலக்கை நோக்கி நகா்த்துவதற்கு முயற்சிக்கலாம். ஆனால், இது எவ்வாறு நடைபெறப்போகின்றது என்பதற்கு காலம்தான் பதில் சொல்லப்போகின்றது. கேள்வி – தமிழரசுக் கட்சிக்குள் உருவாகிய முரண்பாடு இன்று ஒரு பிளவாகி நீதிமன்றத்தின் முன்பாகச் சென்றுள்ளது. இந்தப் பிளவு தமிழ் மக்களுடைய அரசியலில் எந்தளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்? பதில் – சம்பந்தன் அரசியலைவிட்டு விலகும் போது, தமிழரசுக் கட்சிக்குள் பாரிய பிளவு ஏற்படும் என்பது முன்னரே அனுமானிக்கப்பட்ட ஒன்றுதான். ஏனெனில் அவா் தனக்கு அடுத்ததாக ஒரு தலைவரை உருவாக்கத் தவறிவிட்டாா். தந்தை செல்வா, அமிா்தலிங்கத்திடம் தலைமையைக் கொடுக்கும் போது தமிழ்த் தலைமை பலமாக இருந்தது. அவ்வாறான ஒன்றை சம்பந்தன் செய்வதற்குத் தவறிவிட்டாா். பலரும் விரும்புகிறாா்களோ இல்லையோ, தமிழரசுக் கட்சி தமிழா்களுக்குத் தேவையான ஒரு முதன்மையான கட்சி. ஆனால், இன்று பலா் ஒதுங்கிவிட்டாா்கள். இலங்கை அரசியலில் செல்வந்தா்கள், கல்விமான்கள் வாக்களிப்புக்குச் செல்வதில்லை. அதேபோல அரசியலுக்கு வருவதற்குப் பலா் பின்னடிக்கின்றாா்கள். ஏனெனில் அரசியல் சிக்கலான ஒன்றாக இருக்கின்றது. அந்தவகையில் பலா் வெளியில் இருக்கின்றாா்கள். தமிழரசுக் கட்சியில் ஜனநாயகம் என்று கதைத்தாலும், அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாக்களிப்பின் மூலமாகத் தெரிவு செய்யப்படுவதில்லை. சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் போட்டி வந்த போது தோ்தல் நடைபெறவில்லை. அண்மையில் இந்திய காங்கிரஸ் கட்சியில் சசி தருா் தலைமைப் பதவிக்காக தோ்தலில் கேட்க விரும்பினாா். ஆனால், காா்க்கேயைத்தான் காந்தி குடும்பம் தலைமைப் பதவிக்குக் கொண்டுவந்தது. சசி தருா் இளமையானவா் தமக்கு சவாலாக அமையலாம் என அவா்கள் கருதினாா்கள். இருவருக்கும் இடையில் தோ்தல் நடைபெற்றிருந்தால் சில சமயம் சசி தருா் வெற்றி பெற்றிருக்கக்கூடும். அரசியல் கட்சிகள் ஜனநாயகம் குறித்து பேசிக்கொண்டாலும் இவ்வாறு தோ்தல் நடத்தப்படுவதில்லை. ஏனெனில் தோல்வியடைந்த பிரிவினா் எப்போதும் பிரச்சினையாக இருப்பாா்கள். அதனால்தான் ஏகமனதான தெரிவுக்கு அனைத்துக் கட்சிகளுமே முயற்சிக்கின்றன. அதனால், தமிழரசுக் கட்சியில் இடம்பெற்ற தோ்தல் ஜனாநாயகத் தன்மையானது என சிலா் கூறுவதற்கு முற்பட்டாலும், அந்தத் தலைமை தெரிவு செய்யப்பட்ட பின்னா் கட்சி பிளவுபடுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இதனைத் தவிா்ப்பதற்காகத்தான் ஏகமனதான தெரிவை நோக்கி கட்சிகள் செல்கின்றன. இப்போது பொது வேட்பாளா் விடயத்தை எடுத்துக்கொண்டாலும், இந்த இரண்டு அணியினரும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுக்கக்கூடும். ஒரு சிக்கலான நிலைமையில் தமிழினம் இருக்கின்றது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது.   https://www.ilakku.org/பிளவை-நோக்கி-தமிழரசுக்-க/
    • மூட நம்பிக்கையால் ஆசிரியையின் உயிர் பறிபோனது! adminApril 15, 2024   பில்லி சூனியம் குணமாக்கல் சிகிச்சைக்காக மத சபையில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆசிரியை ஒருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (14.04.24)  உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையை சேர்ந்த , அராலி முருகமூர்த்தி பாடசாலை ஆங்கில ஆசிரியையான 37 வயதுடைய  கோவிந்தசாமி கல்பனா   என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த ஆசிரியைக்கு கடந்த 05ஆம் திகதி முதல் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் யாரோ பில்லி சூனியம் வைத்து விட்டார்கள் என நம்பியுள்ளனர். அதனால் இளவாலை பகுதியில் உள்ள மத சபை ஒன்றுக்கு சென்ற போது , பில்லி சூனியம் வைக்கப்பட்டுள்ளது அவற்றை அகற்ற, குணமாக்கல் வழிபாடுகள், பரிகாரங்கள் செய்ய வேண்டும் என மத சபையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் வாந்தியும், வயிற்று வலியும் ஏற்பட்டதை அடுத்து, ஆபத்தான நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் மத சபையின் போதகரினால் அனுமதிக்கப்பட்டுள்ளார் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அதேவேளை சடலத்தை புதைக்குமாறு அறிவுறுத்தி உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.   https://globaltamilnews.net/2024/201801/
    • வடக்கு-கிழக்கில் தமிழ்த்தேசியம் பலவீனமாக உள்ளது. எதிர்ப்பு அரசியலால் சலித்துப்போனவர்கள் அதிகரித்துள்ளார்கள். பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்ப வெளிநாடுகளுக்கு ஓடமுயல்கின்றார்கள். இந்த நிலையில் மக்கள் இயல்பாகவே தமது தனிப்பட்ட வாழ்வின் முன்னேற்றத்திற்கு ஸ்திரமான ஆட்சியை யார் தருவார் என்று பார்ப்பார்களே தவிர, ஒரு திரளாக கொள்கைக்கு வாக்களிக்கமாட்டார்கள்.  ஆகவே, சிங்களத் தலைவர்கள்  “தமிழர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரிக்கவில்லை” என்று சொன்னால் அதை மறுதலிக்கமுடியாத நிலைதான் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளர் மூலம் உருவாகும். அது ஒரு வகையில் தமிழரின் தலைமை இனப்பிரச்சினைக்கு என்ன வகையான தீர்வை முன்னெடுக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கவும் உதவலாம்!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.