Jump to content

துணை முதல்வருக்கு வழங்கப்பட்ட இசட் பிரிவு பாதுகாப்பு நீக்கம் – மத்திய அரசு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

panner-chelvam-720x450.jpg

துணை முதல்வருக்கு வழங்கப்பட்ட இசட் பிரிவு பாதுகாப்பு நீக்கம் – மத்திய அரசு!

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு வழங்கப்பட்ட இசட் பிரிவு பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது.

பாதுகாப்பு முக்கியத்துவம் கருதி  முக்கிய தலைவர்களுக்கு இசட் பிளஸ், இசட், எக்ஸ், வை ஆகிய பிரிவுகளின் கீழ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

குடியரசுத் தலைவர், துணை குடியரசுத்  தலை வர், பிரதமர், நீதிபதிகள், மத்திய அமைச்சர்களுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

தவிர பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள தனி நபர்களுக்கும் அவர்கள் தகுதிக்கு ஏற்ப பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

தேசிய பாதுகாப்பு படை  கமாண்டோக்கள், டெல்லி பொலிஸார் அல்லது இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்புப் படையினர், மத்திய ரிசர்வ் பொலிஸ் படை வீரர்கள் பாதுகாப்புப்  பணிக்காக நியமிக்கப்படுவர்.

இதற்கிடையே, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைக்குப் பின்னர் முதல்வரான ஓ.பன்னீர்செல்வத்துக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு அளிக்கப்பட்டு வரும் இசட் பிரிவு பாதுகாப்பு நாளையில் இருந்து விலக்கிக்  கொள்ளப்படுவதாக தமிழக அரசுக்கு சி.ஆர்.பி.எப். கடிதம் எழுதியுள்ளது.

மத்திய அரசின் பாதுகாப்புப் பட்டியலில் இருந்து துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் பெயர் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிற அமைச்சர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு ஓ.பன்னீர் செல்வத்துக்கு தொடரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் வி.ஐ.பி.க்களுக்கான பாதுகாப்பு தொடர்பாக மத்திய – மாநில அரசுகளின் முடிவுகளின்படி, நாடு முழுவதும் பல்வேறு தலைவர்களுக்கான பாதுகாப்பு படிநிலைகளை குறைப்பது, அதிகரிப்பது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்படுகின்றன.

தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளிட்டவையை கருத்தில்  கொண்டு பாதுகாப்பு படி நிலைகள், குறைப்பது அல்லது கூட்டுவது தொடர்பாக உள்துறை அமைச்சகம் இத்தகைய முடிவுகளை எடுத்து வருகிறது.

http://athavannews.com/துணை-முதல்வருக்கு-வழங்கப/

###########    ###########   ###########  ##########

stalin-2.jpg

துணை முதலமைச்சரை தொடர்ந்து ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட ”இசட் பிரிவு” பாதுகாப்பு நீக்கம்!

துணை முதலமைச்சரை தொடர்ந்து தி,மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த “இசட் பிரிவு” எனப்படும் மத்திய ரிசர்வ் பொலிஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள பல்வேறு முக்கிய தலைவர்களுக்கு அச்சுறுத்தலின் அடிப்படையில் மத்திய  உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு வழங்குகிறது.

இந்தநிலையில்,   கடந்த 6-ம் திகதி  தமிழக காவல் துறை அதிகாரிகளுடன்,  மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் நடத்திய ஆலோசனையில்,  துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்ற அடிப்படையில் அவருக்கான பாதுகாப்பு திரும்ப பெறப்படுகிறது.

அவருக்கு மாநில பொலிஸ்  சார்பில் துப்பாக்கி ஏந்திய “லு” பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதேபோன்று,  தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட ‘இசட் பிரிவு’ பாதுகாப்பும் திரும்பப் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/துணை-முதலமைச்சரை-தொடர்ந்/

Link to comment
Share on other sites

துணை முதல்வர் பன்னீர்ச்செல்வத்துக்கோ எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கோ  சட் பிரிவு பாதுகாப்புத் தேவையில்லை. இவர்களுக்கு புலிகளிடம் இருந்து உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்ற காரணத்தைக்  காட்டியே இவர்களுக்கு இந்த சட் பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. இவர்களுக்கு மட்டுமல்ல சோனியா காந்தி, இராகுல் காந்தி போன்ற அரசியல் தலைவர்களுக்கும் இந்தப் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

ஜெயலலிதாக்கு  சட் பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. அதுமட்டுமல்ல வெளியில் போகும் போது குண்டு துளைக்காத கவசமும் அணிந்திருந்தார்.

அண்மைக் காலமாக இப்படியான சட் பிரிவு பாதுகாப்பை வைத்திருத்தல் ஒரு கௌரவமாகவே கருதப்பட்டது.

உண்மையில் இவர்களுக்குப்  பாகாப்பு அச்சுறுத்தல் இருந்தால் அது உள்நாட்டு வெளிநாட்டு முஸ்லிம் தீவிரவாதிகளிடம் இருந்தே வரும் சாத்தியம் இருக்கிறது.

பொது மக்களுடைய வரிப்பணம் வீணாகச் செலவழிக்கக் கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

24 படை வீரர்கள்

இனி எந்த விஐபிக்கும் கருப்பு பூனை படை இல்லை.. மொத்தமாக என்எஸ்ஜி விடுவிப்பு.. மத்திய அரசு அதிரடி

கருப்பு பூனை படை என்று அழைக்கப்படும் என்எஸ்ஜி கமாண்டோக்களை விஐபிக்களை பாதுகாக்கும் பணியில் இருந்து முழுமையாக நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்திரா காந்தி 1984ம் ஆண்டு பாதுகாவலரால் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு 20 ஆண்டுகளுக்கு மேலாக பயங்கரவாத எதிர்ப்பு படையாக கருப்பு பூனை கமாண்டோக்கள் விஐபிகளுக்கு பாதுகாப்பு கடமையை செய்து வந்தனர்.

சுமார் 26 ஆண்டுகளுக்கு பிறகு அந்த பணியில் இருந்து தங்களது இயல்பான பணியான பயங்கரவாத தடுப்பு பணியில் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து என்எஸ்ஜி கமாண்டோக்கள் பணியாற்ற போகிறார்களாம்.

தேசிய பாதுகாப்பு படை 'அதிநவீன தாக்குதல் ஆயுதங்களை ஏந்திய கமாண்டோக்களை நாட்டில் இசட் + 'பிரிவின் கீழ் உள்ள 13' உயர்-ஆபத்து 'வி.ஐ.பி-க்களுக்கு பாதுகாப்பு வழங்குகிறது, அவை ஒவ்வொன்றிற்கும் சுமார் 24 பணியாளர்களைக் கொண்டது. இந்த பணியினை இனி துணை ராணுவப்படை மேற்கொள்ளும் என தெரிகிறது.

பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு பாதுகாப்பு வழங்குவது உள்ளிட்ட என்.எஸ்.ஜி.யின் பாதுகாப்பு கடமைகள் விரைவில் துணை ராணுவப் படைகளுக்கு மாற்றப்படும் என்று பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல் முன்னாள் முதல்வர்கள் மாயாவதி, முலாயம் சிங், சந்திரபாபு நாயுடு, பிரகாஷ் சிங் பாதல் மற்றும் பரூக் அப்துல்லா, அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால், பாஜக தலைவரும் முன்னாள் துணைப் பிரதமருமான எல் கே அத்வானி ஆகியோரையும் இனி தேசிய பாதுகாப்பு படைக்கு பதில் துணை ராணுவமே பாதுகாக்கும்.

பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் கடத்தல் எதிர்ப்பு நடவடிக்கைகளின் குறிப்பிட்ட பணிகளைக் கையாளுவது தேசிய பாதுகாப்பு படையின் (என்.எஸ்.ஜி) அதன் உண்மையான பணி என்றும் அதில் தான் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அதிக ஆபத்துள்ள வி.ஐ.பி-களைப் பாதுகாக்கும் பணி என்பது கூடுதல் சுமையாக மத்திய உள்துறை அமைச்சகம் "கருதுகிறது" என்றும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

பாதுகாப்பு அதிகாரி

"என்.எஸ்.ஜி அதன் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் கடத்தல் எதிர்ப்பு கடமைகளுக்கு திரும்பிச் செல்ல வேண்டும். இதுதான் சமீபத்திய நடவடிக்கைக்கு காரணம்" என்று பாதுகாப்பு துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

என்.எஸ்.ஜி.யில் இருந்து வி.ஐ.பி பாதுகாப்பு கடமைகளை நீக்குவதால் சுமார் 450 கமாண்டோக்கள் விடுவிக்கப்படுவார்கள், அவர்கள் நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள ஐந்து மையங்களில் பரவியிருக்கும் பாதுகாப்பு படையில் செயல்படுவார்கள் என்றும், டெல்லிக்கு அருகிலுள்ள குருகிராமில் தலைமையாக கொண்டு நாட்டை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுவார்கள் என்றும் அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன.

Read more at: https://tamil.oneindia.com/news/delhi/government-decides-to-withdraw-nsg-from-vip-security-tasks-373957.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் எப்போதும் என்னை தேர்தல் விற்பனர் என்றோ - என் கணிப்புகள் திறம் என்றோ சொன்னதில்லை.  நான் என்ன லயலா கொலிஜா அல்லது இந்தியா டுடேயா? சர்வே எடுக்க. அல்லது சாத்திரக்காரனா🤣 நான் கணிக்கிறேன் என நீங்கள் எழுதுவதே சுத்த பைத்தியக்காரத்தனம். எல்லாரையும் போல் நான் என் கருத்தை எதிர்வுகூறலாக எழுதுகிறேன். அது என் கருத்து மட்டுமே. Pure speculation. அது சரி வரும், பிழைக்கும் - I don’t give a monkey’s.
    • சீமான் பேசுவ‌தை உள‌வுத்துறை தொட்டு ப‌ல‌ர் கேட்ப‌து உண்டு சீமான் தேர்த‌ல் ஆணைய‌த்தை ப‌ற்றி அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று வ‌ழ‌க்கு தொடுக்க‌ வேண்டிய‌து தானே நீங்க‌ள் சொல்லுவ‌து ம‌ட்டும் உண்மை என்று எத‌ன் அடிப்ப‌டையில் ந‌ம்புவ‌து இத‌ற்க்கு உங்க‌ளால் ப‌தில் அளிக்க‌ முடியுமா.....................நேர்மையான‌வ‌ர்க‌ள் என்றால் நேர்மையின் ப‌டி தான் ந‌ட‌ப்பின‌ம் 2009க்கு முத‌ல் ஒரு முக‌ம் 2009க்கு பின் இன்னொரு முக‌ம் இதில் சீனானை ப‌ற்றி விம‌ர்சிப்ப‌து வெக்க‌க் கேடு.................... சீமான் ஊட‌க‌த்துக்கு கொடுத்த‌ பேட்டி அப்ப‌டியே இருக்கு அதை ப‌ல‌ ல‌ச்ச‌ம் பேர் பார்த்து இருக்கின‌ம் தேர்த‌ல் ஆணைய‌த்துக்கு சீமான் பேசின‌து தெரியாம‌ போகுமா அல்ல‌து உள‌வுத்துறை இப்ப‌டியான‌ விடைய‌த்தில் தூங்கி கொண்டு இருக்குமா ஜ‌ன‌நாய‌க‌ நாட்டின் தேர்த‌ல் ஆணைய‌த்தை சீமான் தேவை இல்லாம‌ அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று சீமானை கைது செய்து இருக்க‌லாமே அல்ல‌து சீமான் பிர‌ச்சார‌ம் செய்ய‌க் கூடாது என்று த‌டை விதித்து இருக்க‌லாமே தேர்த‌ல் ஆனைய‌ம்........................பொல்லை கொடுத்து அடி வேண்ட‌ வேண்டாம்😁........................
    • இதுவரை பல தரம் கேட்டும் நீங்கள் பதில் சொல்லாத கேள்வி-  இவ்வளவு மோசமான தேர்தல் முறையில், எப்படியும் தோற்கடிப்பார்கள் என தெரிந்து, அதுவும் தனியே ஏன் 2016 இல் இருந்து போட்டியிட்டு மண்ணை கவ்வுகிறார்? பேசாமல் தேர்தலுக்கு அப்பால் இயக்கம் நடத்தலாமே? வாங்கோ என்னை வசைபாட எனவே வாழும் அகலிகை….சாரி யாழுக்கு வரும் கல்யாண். நான் கஜேஸ் கட்டுகாசு இழப்பார் என கூறவில்லை. நான் வெல்லமாட்டார்கள் என கூறிய அத்தனை தேர்தல்களிலும் அவர்கள் வெல்லவில்லை. கடந்த முறை சொன்னது போலவே யாழில் ஒரு சீட்டை எடுத்தார் பொன்னர். அம்பாறை மக்களை ஏமாற்றி அடுத்த சீட்டை 100 வாக்கு வித்தியாசத்தில் எடுத்தார் குதிரை கஜே.   நேற்று வைரவர் பூசை பலமோ?
    • மற்றவர்களிடம் கேள்வி கேட்கும் போதே நீங்களும் ஏதோ ஒரு ஐடியாவை வைத்துள்ளீர்கள் என நம்புகிறேன்.எடுத்து(துணிவாக) விடுங்கள் பார்க்கலாம். ஆப்பா  இல்லை காப்பா என பின்னர் பார்க்கலாம்.
    • உங்களுக்கு மேலே இருப்பது என் பதில். இப்போ யார் கோமாளி🤣 இதுவும் சீமான் ப்ரோ விட்டா இன்னொரு அவிட்டா. இல்லை என்றால் இப்படி தேர்தல் ஆணையம் சொன்ன ஆதாரம் எங்கே? அண்ணன் சொல்வதை எல்லாம் மொக்கு தம்பிகள் நம்பலாம். எல்லாரும் நம்ப தேவையில்லை. நீங்கள் ஏலவே என்னை 200 உபி என பல இடங்களில் எழுதிவிட்டீர்களே. எனக்கு ஒரு நற்பெயர் மீதும் ஆர்வம் இல்லை. அப்படி புற இருக்கோ இல்லையோ இ டோண்ட் கேர். இருந்தாலும் - சீமான் முகத்திரையை கிழிக்காமல் அந்த பெயரை தக்கவைப்பதிலும் பார்க்க கெட்ட பெயரே மேல்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.