Jump to content

ஆபாச வார்த்தை பிரயோகத்திற்காக ஜொஸ் பட்லர் மீது அபராதம்


Recommended Posts

ஆபாச வார்த்தை பிரயோகத்திற்காக ஜொஸ் பட்லர் மீது அபராதம்

 
Jos-Buttler-1-1-696x465.jpg

சர்வதேச கிரிக்கெட் பேரவையினுடைய ஒழுக்க விதிமுறையை மீறிய குற்றச்சாட்டில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரரான ஜொஸ் பட்லருக்கு ஐ.சி.சி இனால் போட்டி ஊதியத்தில் 15 சதவீத குறைந்தபட்ச தொகையும், ஒரு தகுதி இழப்பீட்டு புள்ளியும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் டெஸ்ட் தொடர், ஒருநாள் சர்வதேச தொடர் மற்றும் டி20 சர்வதேச தொடர் ஆகிய மூவகையான கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்பதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இருதரப்பு சுற்றுப்பயணத்தின் முதல் தொடரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்சமயம் நடைபெற்று வருகிறது. 

 

முதல் போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், கேப்டவுணில் கடந்த செவ்வாய்க்கிழமை (07) நிறைவுக்குவந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி த்ரில் வெற்றி பெற்றிருந்தது. இப்போட்டியின் போது இங்கிலாந்து அணி இறுதியாக களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த வேளையில் அவ்வணியின் விக்கெட் காப்பாளரான ஜொஸ் பட்லர் ஆபாச வார்த்தைகள் மூலம் தென்னாபிரிக்க வீரர் வேர்னன் பிளாண்டரை திட்டியிருந்தார். 

ஜொஸ் பட்லர், வேர்னன் பிளாண்டரை ஆபாச வார்த்தைகள் மூலம் திட்டியமை அங்கு விக்கெட்டில் பொருத்தப்பட்டிருந்த மைக் மூலமாக உறுதிப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து ஐ.சி.சி இன் 2.3 ஆம் இலக்க ஒழுக்க விதிமுறை மீறலின் படி சர்வதேச போட்டியில் பயன்படுத்தக்கூடாத ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தியமைக்காக‘  போட்டி ஊதியத்தில் இருந்து 15 சதவீதம் அபராத தொகையாக சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் விதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு தகுதி இழப்பீட்டு புள்ளியும் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது. 

ஜொஸ் பட்லர் மீதான குறித்த குற்றச்சாட்டானது போட்டியின் கள நடுவர்களான குமார் தர்மசேன, போல் றைபெல், மூன்றாம் நடுவர் கிறிஸ் கெபனி மற்றும் மேலதிக நடுவரான அலாஹூடீன் பலீகர் ஆகியோரினால் சுட்டிக்காட்டப்பட்டு, போட்டியின் மத்தியஸ்தரான அண்டி பைக்ரொப்ட் மூலமாக ஐ.சி.சி இனால் இவ்வாறு அபராதமும், தகுதி இழப்பீட்டு புள்ளியும் தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளது.

ஜொஸ் பட்லர் குறித்த குற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளதன் காரணமாக எந்தவிதமான மேலதிக விசாரணைகளுக்கும் அவர் ஆஜராக வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்பதையும் ஐ.சி.சி தனது ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேல் குறிப்பிட்ட குற்றத்திற்காக வழங்கக்கூடிய அதிகபட்ச தண்டனை, போட்டி ஊதியத்திலிருந்து 50 சதவீதமும், இரண்டு தகுதி இழப்பீட்டு புள்ளிகளுமாகும்.

அத்துடன் 24 மாத கால இடைவெளிக்குள் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட தகுதி இழப்பீட்டு புள்ளிகளை ஒரு வீரர் பெறுவாராயின் அவர் போட்டித்தடைக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். சுற்றுலா இங்கிலாந்து தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் வியாழக்கிழமை (16) பேர்த் எலிசபத்தில் நடைபெறவுள்ளது. 

http://www.thepapare.com/jos-buttler-fined-for-breaching-icc-code-of-conduct-tamil/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.