Jump to content

‘கஜபா’க்களின் காலம்!


Recommended Posts

 

gaja_ba-557x330.jpg

‘கஜபா’க்களின் காலம்!

இந்­தியா புதி­தாக பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தானி (கூட்­டுப்­ப­டை­களின் தள­பதி) என்ற பத­வியை கடந்த ஜன­வரி 1ஆம் திகதி உரு­வாக்­கி­யி­ருக்­கி­றது.

இந்­திய இரா­ணுவத் தள­ப­தி­யாக இருந்த ஜெனரல் பிபின் ராவத், முத­லா­வது பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தா­னி­யாக நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கிறார்.

இந்­தியா சுதந்­திரம் பெற்ற பின்னர் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடு­க­ளுடன் பாரிய போர்­களை நடத்­தி­யி­ருந்த போதிலும், கிட்­டத்­தட்ட 72 ஆண்­டு­க­ளுக்குப் பின்­னரே, பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தானி என்ற பத­வியை உரு­வாக்­கி­யி­ருக்­கி­றது.

சர்­வ­தேச அளவில், பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தா­னிகள் மட்­டத்தில் நடந்து வந்த சந்­திப்­புகள், கூட்­டங்­களில், பெரும்­பாலும் இந்­தியா தனது தேசிய பாது­காப்பு ஆலோ­ச­க­ரையே அனுப்பி வந்­தது.இப்­போது தேசிய பாது­காப்பு ஆலோ­சகர் பத­வி­யா­னது, ஒரு அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்­ச­ருக்கு நிக­ரான அதி­கா­ரங்­களைக் கொண்­ட­தாக மாறி­யுள்­ளது.

பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தா­னிகள் மட்­டத்­தி­லான கூட்­டங்­களில், தேசிய பாது­காப்பு ஆலோ­சகர் பங்­கேற்­பதில் சில protocol சிக்­கல்கள் உள்­ளன.

முப்­ப­டை­க­ளையும் ஒருங்­கி­ணைப்­ப­தற்கு இந்தப் பதவி அவ­சி­ய­மா­னது என்று, 1999 கார்கில் போருக்குப் பின்னர் யோசனை முன்­வைக்­கப்­பட்­டி­ருந்த போதும், இப்­போது தான் இந்­தியா பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தானி என்ற பத­வியை உரு­வாக்­கி­யி­ருக்­கி­றது.

அதே­வேளை, கடந்த 31ஆம் திகதி­யுடன் இலங்­கையின் பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தா­னி­யாக இருந்த அட்­மிரல் ரவீந்­திர விஜே­கு­ண­ரத்ன ஓய்­வு­பெற்­றதை அடுத்து, இரா­ணுவத் தள­ப­தி­யாக உள்ள லெப்.ஜெனரல் சவேந்­திர சில்வா பதில் பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தா­னி­யாக, ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவினால் நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கிறார்.

லெப்.ஜெனரல் சவேந்­திர சில்வா இரா­ணுவத் தள­ப­தி­யாக நிய­மிக்கப்பட்ட போதே, சர்­வ­தேச அளவில் கடும் எதிர்ப்பு கிளம்­பி­யி­ருந்­தது. குறிப்­பாக, அமெ­ரிக்கா இந்த நியமனத்தைக் கடு­மை­யாக எதிர்த்­தது. கொழும்பில் உள்ள அமெ­ரிக்க தூத­ர­கமும், வொஷிங்­டனில் உள்ள அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­க­ளத்தின் உயர் அதி­கா­ரி­களும் அப்­போது வெளி­யிட்ட கருத்­துக்கள், இலங்கை அர­சாங்­கத்­தினால் அதி­ருப்­தி­யுடன் நோக்­கப்­பட்­டன.

நம்­ப­க­மான போர்க்­குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்­டுள்ள லெப்.ஜெனரல் சவேந்­திர சில்வா இரா­ணுவத் தள­ப­தி­யாக நிய­மிக்­கப்­பட்­டி­ருப்­பதால், இலங்­கை­யு­ட­னான பாது­காப்பு உற­வு­களை குறைத்துக் கொள்ள வேண்­டிய நிலை ஏற்­படும் என்றும் அமெ­ரிக்கா எச்­சரிக்கை செய்­தி­ருந்­தது.

அந்த எச்­ச­ரிக்­கை­களை அப்­போ­தைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறிசேன கண்­டு­கொள்­ள­வில்லை.
லெப்.ஜெனரல் சவேந்­திர சில்­வாவை பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தா­னி­யாக நிய­மிக்­கவும், முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன திட்­ட­மிட்­டி­ருந்தார் என்றும் முன்னர் தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருந்­தன.

ஆனால், அவர் தனது பத­வியின் இறு­திக்­கட்­டத்தில் அத்­த­கைய நிய­ம­னங்கள் எதையும் செய்­ய­வில்லை.
இந்த நிலையில், அட்­மிரல் ரவீந்­திர விஜே­கு­ண­ரத்ன ஓய்­வு­பெற்­றதை அடுத்து, லெப்.ஜெனரல் சவேந்­திர சில்­வாவை, பதில் பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தா­னி­யாக நிய­மித்­தி­ருக்­கிறார் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக்ஷ.

ஜனா­தி­ப­தியின் அதிக நம்­பிக்­கையைப் பெற்ற இரா­ணுவ அதி­கா­ரி­களில் மிக முக்­கி­ய­மா­னவர் லெப்.ஜெனரல் சவேந்­திர சில்வா. அவர், பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தானி பத­விக்கு பதில் கட­மைக்­காக நிய­மிக்­கப்­பட்­டி­ருப்­பது ஆச்­ச­ரி­ய­மல்ல. இந்த நிய­ம­னத்தின் மூலம், வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்ற ஒரு செய்தி இருக்­கி­றது.

இரா­ணுவத் தள­ப­தி­யாக லெப்.ஜெனரல் சவேந்­திர சில்வா நிய­மிக்­கப்­பட்­ட­தற்கு எதிர்ப்புத் தெரி­வித்த நாடுகள், மனித உரி­மைகள் அமைப்­பு­க­ளுக்கு இந்த நிய­ம­னத்தின் ஊடாக சவால் விடுத்­தி­ருக்­கிறார் ஜனா­தி­பதி.

அதுவும், அடுத்த மாதம் ஜெனீ­வாவில் தொடங்­க­வுள்ள ஐ.நா மனித உரி­மைகள் பேரவைக் கூட்­டத்தில், இலங்கை விவ­கா­ரமும், குறிப்­பாக, லெப்.ஜெனரல் சவேந்­திர சில்வா நிய­மன விவ­கா­ரமும், விவா­திக்­கப்­படக் கூடிய ஒரு சூழலில் தான், இந்த நிய­மனம் இடம்­பெற்­றி­ருக்­கி­றது.

இரா­ணுவத் தள­பதி பத­வியில் இருந்து லெப்.ஜெனரல் சவேந்­திர சில்வா விடு­விக்­கப்­ப­டா­ம­லேயே, பதில் பிர­தா­னி­யாக நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கிறார். இதி­லி­ருந்து, அவரை இப்­போ­தைக்கு இரா­ணுவத் தள­பதி பத­வியில் இருந்து விடு­விக்கும் நோக்கம் ஜனா­தி­ப­திக்கு இல்லை என்­பது தெளி­வா­கவே தெரி­கி­றது. அதே­வேளை, இப்­போ­தைக்கு பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தானி பத­விக்கு வேறொ­ரு­வ­ரையும் நிய­மிக்கும் திட்­டமும் இல்லை என்பதும் உறு­தியாகி­யுள்­ளது.

ஏனென்றால், லெப்.ஜெனரல் சவேந்­திர சில்­வாவை விட சேவை மூப்­புள்ள அதி­கா­ரி­யான, கடற்­படைத் தள­பதி வைஸ் அட்­மிரல் பியால் டி சில்வா இருந்த போதும், அவர் இந்தப் பதவிக்கு நிய­மிக்­கப்­ப­ட­வில்லை.அதே­வேளை, 21/4 தாக்­கு­தல்­களை அடுத்து, பாது­காப்பு கட்­ட­மைப்பு மறு­சீ­ர­மைப்புத் தொடர்­பான பரிந்­து­ரைகள் பல முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன. அதில் முக்­கி­ய­மா­னது, தேசிய பாது­காப்பு ஆலோ­சகர் பத­வியை உரு­வாக்­கு­வ­தாகும்.

இந்­தியா, அமெ­ரிக்கா போன்ற நாடுகளில் தேசிய பாது­காப்பு ஆலோ­சகர் பதவி வலு­வா­னது. அந்தப் பதவியை உரு­வாக்­கு­வதன் மூலம், படை­க­ளுக்­கி­டை­யி­லான ஒருங்­கி­ணைப்பு, புல­னாய்வு பரி­மாற்­றங்­க­ளுக்கு வச­தி­யாக இருக்கும் என்று கூறப்­பட்­டது. ஆனால், முன்­னைய அர­சாங்கம் அந்தப் பத­வியை உரு­வாக்­கு­வ­தற்­கி­டையில், அதன் ஆயுள் முடிந்து விட்டது.

முன்­னைய அர­சாங்­கத்தின் பாது­காப்புத் திட்­டங்­களை பின்­பற்­று­வ­தற்கு தற்­போ­தைய ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ தயா­ராக இல்லை.
அவர், பாது­காப்பு என்ற விட­யத்தில் தன்னை விட மிஞ்­சிய அறி­வுள்­ள­வர்கள் யாரும் இல்லை என்ற போக்கில் செயற்படுபவர்.

அதனை தேர்தல் பிர­சா­ரங்­களின் போது கூட வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தார்.முன்­னைய அர­சாங்­கத்­தினால் பரிந்து­ரைக்­கப்­பட்ட தேசிய பாது­காப்பு ஆலோ­சகர் பதவி உரு­வாக்­கத்தை ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ ஏற்றுக் கொள்ளும் சாத்தியங்கள் இல்லை.

ஏனென்றால் அந்த நிய­ம­னத்தை செய்தால், அது முன்­னைய அர­சாங்­கத்தின் அடை­யா­ள­மாகத் தெரி­யுமே தவிர, கோத்­தா­பய ராஜபக் ஷவின் தனித்­துவ அடை­யாளம் அதில் இருக்காது. எனவே, ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ, தேசிய பாது­காப்பு ஆலோ­சகர் பத­வியை உரு­வாக்­கு­வ­தற்குப் பதி­லாக, பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தானி பத­வியை வலுப்­படுத்­து­வதில் கவனம் செலுத்­த­வுள்ளார் என்று கூறப்­ப­டு­கி­றது.

விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான போரின் தொடக்­கத்தில், 1985 நவம்பர் 2ஆம் திகதி, கூட்டு நடவடிக்கை கட்­டளைத் தள­பதி என்ற பதவி முதன் முத­லாக உரு­வாக்­கப்­பட்­டது. அப்­போது, ஜெனரல் திஸ்ஸ வீர­துங்க நிய­மிக்­கப்­பட்டார். பின்னர் அந்தப் பத­வியை, ஜெனரல் சிறில் ரண­துங்க, ஜெனரல் ஹமில்டன் வண­சிங்க, எயர் மார்ஷல் வோல்டர் பெர்­னாண்டோ உள்ளிட்டோர் வகித்திருந்தனர்.

1999ஆம் ஆண்டு இந்தப் பதவி, பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தானி என பெயர் மாற்றம் செய்­யப்­பட்­டது. பெயர் மாற்­றத்­துக்குப் பின்னர், இந்தப் பத­விக்கு நிய­மிக்­கப்­பட்ட முதல் அதிகாரி ஜெனரல் றொஹான் தளுவத்த. அவ­ருக்குப் பின்னர் முன்னாள் இரா­ணுவத் தள­ப­திகள், கடற்­படைத் தள­ப­திகள், விமா­னப்­படைத் தள­ப­திகள் பலர் இந்தப் பத­வியை வகித்து வந்­துள்­ளனர். போர் வெற்­றிக்குப் பின்னர், 2009ஆம் ஆண்டு 35ஆவது இலக்க, பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தானி சட்டம் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்டு, இந்தப் பத­விக்கு சட்ட அங்­கீ­காரம் அளிக்­கப்­பட்­டது.

இப்­போ­தைய அர­சாங்கம், இந்தச் சட்­டத்தில் திருத்தம் செய்­வ­தற்குத் திட்­ட­மிட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது. பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தா­னிக்கு கூடுதல் அதி­கா­ரங்­களை அளிக்கும் வகையில், சட்­டத்தில் திருத்­தங்­களைச் செய்­வது ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவின் நோக்கம்.

அதன் பின்னர், மேஜர் ஜெனரல் சுமேத பெரே­ராவை பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தா­னி­யாக நிய­மிக்க அவர் திட்­ட­மிட்­டுள்ளார் என்றும் தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன.

மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா, கடந்த அர­சாங்­கத்தின் காலத்தில் இரா­ணுவத் தள­ப­தி­யாக நிய­மிக்­கப்­ப­டு­வ­தற்குத் தகு­தி­வாய்ந்த அதி­கா­ரி­களில் ஒரு­வ­ராக கரு­தப்­பட்­டவர். இரா­ணுவத் தலைமை அதி­கா­ரி­யாக இருந்த அவர், 2018இல் 55 வயதை எட்­டிய நிலையில், ஓய்வு பெற்றார்.அவரை மீண்டும் சேவைக்கு கொண்டு வந்து பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தா­னி­யாக நிய­மிப்­பது ஜனா­தி­ப­தியின் திட்­ட­மாக கரு­தப்­ப­டு­கி­றது.

ஆனால், இது­வ­ரையில் கூட்டுப் படை­களின் தள­ப­தி­யாக அல்­லது பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தா­னி­யாக இருந்­த­வர்கள் அனை­வ­ருமே, முன்னாள் இரா­ணுவத் தள­ப­தி­க­ளா­கவோ, கடற்­படை அல்­லது விமா­னப்­படைத் தள­ப­தி­க­ளா­கவோ தான் இருந்­தி­ருக்­கின்­றனர். ஏனென்றால், இந்தப் பத­வி­யா­னது, முப்­ப­டை­க­ளி­னதும் தள­ப­தி­க­ளுக்கும் மேலா­னது.
எனவே தான், ஜெனரல், அட்­மிரல், எயர் சீவ் மார்ஷல் போன்ற பத­வி­க­ளை­யு­டைய அதி­கா­ரிகள் தான் இந்தப் பத­வி­க­ளுக்கு நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள்.

ஆனால், சுமேத பெரேரா, மேஜர் ஜென­ர­லா­கவே ஓய்வு பெற்­றவர். எனவே அவரை மீண்டும் பணிக்கு அழைத்து, பதவி உயர்வு கொடுத்து தான், இந்தப் பத­விக்கு நிய­மிக்க வேண்­டி­யி­ருக்கும்.

பாது­காப்புச் செய­ல­ராக உள்ள, கமல் குண­ரத்ன மேஜர் ஜெனரல் தரத்தில் தானே இருக்­கிறார். பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தா­னி­யாக ஏன் மேஜர் ஜெனரல் இருக்கக் கூடாது என்று வாதிட முடி­யாது.அது, ஒரு அர­சாங்க சிவில் பதவி. ஆனால் பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தானி என்­பது ஒரு படைத்­துறைப் பதவி நிலை. அங்கு, பதவி வரிசை ஒழுங்கு ஒன்று பேணப்­படும். இதனைக் கவ­னத்தில் கொள்ள வேண்டும்.

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ எதற்­காக ஓய்­வு­பெற்றுச் சென்ற, மேஜர் ஜெனரல் சுமேத பெரே­ராவை இந்தப் பத­விக்கு நிய­மிக்க முற்­ப­டு­கிறார் ?

மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா, எயர் மொபைல் டிவிசன் உரு­வாக்­கப்­பட்ட காலத்தில் இருந்து பணி­யாற்­றிய ஒருவர். 53 ஆவது டிவி­சனின் 3 ஆவது பிரிகேட் தள­ப­தி­யா­கவும் இருந்­தவர். புலி­க­ளுக்கு எதி­ரான போர் நட­வ­டிக்­கை­களில் மிகத் தீவி­ர­மாகப் பங்­கெ­டுத்­தவர்.

இவை எல்­லா­வற்­றுக்கும் மேலாக, கஜபா றெஜி­மென்ட்டின் குறிப்­பிட்டுச் சொல்லக் கூடிய முக்­கி­ய­மான அதி­கா­ரி­களில் ஒரு­வ­ராவார். 1983ஆம் ஆண்டு இந்தப் படைப்பிரிவு உருவாக்கப்பட்ட போது முதலில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்களில் இவரும், ஒருவர்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவுடன், கஜபா றெஜிமென்டில் இணைந்து போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்.

போரை நடத்திய காலங்களை விட, போருக்குப் பிந்திய காலங்களில், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ ‘கஜபா’க்களுக்கு முன்னுரிமை கொடுத்து வந்திருக்கிறார்.அவரது வலது, இடது கரங்களாக இருப்பவர்கள் அனைவருமே ‘கஜபா’க்கள் தான்.

தற்போது, ஜனாதிபதியாக இருக்கும் கோத்தாபய ராஜபக் ஷ, பாதுகாப்பு செயலராக இருக்கும் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, தேசிய புலனாய்வுப் பணியகத்தின் தலைவராக உள்ள மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ், இராணுவத் தளபதியாக இருக்கும் லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா, என அரசாங்கத்தின் மிக முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் கஜபா றெஜிமெட்டை சேர்ந்தவர்கள் தான்.

அந்த வரிசையில் பாதுகாப்பு அதிகாரிகளின் பதில் பிரதானியாகவும், கஜபா படைப்பிரிவின் லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டிருக்கிறார்.

நிரந்தரமாக இந்தப் பதவிக்கு இன்னொரு ‘கஜபா’வான மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா நியமிக்கப்பட்டால் ஆச்சரியமில்லை. ஏனென்றால் இது ‘கஜபா’க்களின் காலம்.

– சுபத்ரா

http://eelamurasu.com.au/?p=24442

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.