Jump to content

நீண்ட ஆயுளையும், உடல்நலத்தையும் பெற நீங்கள் செய்ய வேண்டியவை


Recommended Posts

நீண்ட ஆயுளையும், உடல்நலத்தையும் பெற நீங்கள் செய்ய வேண்டியவை

 

வாழ்க்கைமுறை ஆரோக்கியமானதாக இருந்தால் புற்றுநோய், இதயக் கோளாறுகள் மற்றும் நீரிழிவு நோய் இல்லாமல், ஆயுள் பெண்களுக்கு 10 ஆண்டுகளும், ஆண்களுக்கு ஏழு ஆண்டுகளும் அதிகரிக்கும் என்று உடல்நலம் குறித்த ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.

உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும், மது குடிப்பதை மிதமான அளவுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும், உடல் எடை ஆரோக்கியமான நிலையில் இருக்க வேண்டும், உணவு வகைகள் ஆரோக்கியமானவையாக இருக்க வேண்டும், புகைபிடிக்கக் கூடாது என்று பல ஆலோசனைகள் இதில் கூறப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 111,000 பேரை 20 ஆண்டுகளுக்கும் மேலாக கண்காணித்து வந்தனர்.

இந்த ஆய்வில் ”பொது மக்களுக்கு ஆக்கபூர்வமான தகவல் கிடைத்துள்ளது” என்று பாஸ்டனில் உள்ள பொது சுகாதாரத்துக்கான ஹார்வர்டு கல்லூரியைச் சேர்ந்த, இந்த ஆய்வை தலைமை ஏற்று நடத்திய டாக்டர் பிராங் ஹியு கூறியுள்ளார்.

இந்த ஆய்வில் பங்கேற்றவர்களிடம், அவர்களின் 50வது வயதில் பின்வரும் ஐந்து விஷயங்களில் நான்கு விஷயங்களை பின்பற்றுகிறீர்களா என்று கேட்கப்பட்டது.

•ஒருபோதும் புகை பிடித்ததில்லை

•ஆரோக்கியமான, சமச்சீரான உணவு வகைகள்

•தினமும் 30 நிமிடங்கள் மிதமான அல்லது தீவிரமான உடல் இயக்க செயல்பாடுகள்

•பி.எம்.ஐ. அளவு (உயரத்துக்கு ஏற்ற எடைக்கான அளவீடு) 18.5 க்கும் 24.9 க்கும் இடையில் உள்ளது

•பெண்கள் சிறிய கிளாஸில் ஒயின், ஆண்கள் சுமார் அரை லிட்டர் பீர் தவிர வேறு குடிப்பழக்கம் இல்லாதிருத்தல்.

ஆரோக்கியமான உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகள் முக்கியமானவை.

34 ஆண்டுகள் வரை வாழும் பெண்களில் புற்றுநோய், மாரடைப்பு மற்றும் பக்கவாதம், நீரிழிவு போன்ற நோய்கள் இல்லாத பெண்களை கணக்கெடுத்தால், மற்றவர்களைக் காட்டிலும், மேற்படி வாழ்ந்தால் மற்றவர்களைவிட 10 ஆண்டுகள் வரை கூடுதலாக வாழ்கிறார்கள்.

மேலும் 31 ஆண்டுகள் வரை வாழும் ஆண்களில், இந்தப் பிரிவினர் கூடுதலாக ஏழு ஆண்டுகள் வாழ்கிறார்கள்.

சராசரியாக ஆண்களைவிட பெண்கள் நீண்டகாலம் வாழ்கிறார்கள் என்ற உண்மையுடன் தொடர்புடையதாக அது இருக்கலாம்.

இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் மிக ஆரோக்கியமாக உள்ள ஆண்களும், பெண்களும் ஒருபோதும் புகைபிடிக்காதவர்களாக உள்ளனர்.

தினமும் 15க்கும் மேற்பட்ட சிகரெட் பிடிப்பவர்கள், உடல்பருமனாக உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் (பி.எம்.ஐ. அளவு 30க்கும் மேல் உள்ளவர்கள்) நோயற்ற வாழ்வு வாழ்வதற்கான வாய்ப்பு குறைவுதான் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஆனால் இரு பாலாருக்கும் பொதுவான சில விஷயங்கள் உள்ளன. ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடித்தால் புற்றுநோய், இருதய கோளாறுகள், நீரிழிவு போன்றவற்றுக்கான ஆபத்து குறைவதுடன் மட்டுமின்றி, மற்ற நோய்கள் இருப்பதாகக் கண்டறியும்போது இந்த ஆண்கள் மற்றும் பெண்களின் ஆயுள் மேம்படுவதாக உள்ளது.

புற்றுநோய், இதய நோய்கள், நீரிழிவு நோய் ஆகியவைதான் முதிய வயதில் பெரும்பாலும் வரக் கூடிய நோய்களாக உள்ளன. அவைதான் மக்களின் வாழ்க்கை முறையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவையாக உள்ளன.

உதாரணமாக அதிக உடல் எடை அல்லது உடல்பருமனாக இருப்பது, மார்பகப் புற்றுநோய், குடல் புற்றுநோய், சிறுநீரகம், கல்லீரல் மற்றும் உணவுக் குழாய் புற்றுநோய் உள்ளிட்ட 13 வெவ்வேறு வகையான புற்றுநோய்களுடன் தொடர்புடையதாகக் கண்டறியப் பட்டுள்ளது.

சில புற்றுநோய்கள் உடல்பருமன் போன்ற வாழ்க்கை முறை காரணிகளுடன் நெருக்கமான தொடர்பு கொண்டவையாக உள்ளன.

புற்றுநோயாளிகள் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டால் 10ல் நான்கு பேர் அதைத் தவிர்க்க முடியும் என்று பிரிட்டனில் புற்றுநோய் ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. பதப்படுத்திய மாமிசத்தைக் குறைத்தல், நார்ச்சத்துள்ள உணவை அதிகம் சாப்பிடுதல், சூரிய வெப்பத்தில் இருந்து இருந்து தோலை பாதுகாத்துக் கொள்தல் போன்றவற்றை செய்யலாம் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது.

இது பரந்த அளவிலான, கண்காணிப்பு அடிப்படையிலான ஆய்வு. எனவே, நோயற்ற வாழ்வை நீட்டிப்பதில் இந்த வாழ்க்கை முறைகள்தான் நேரடி காரணிகளாக உள்ளன என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது.

மற்ற காரணிகளைப் பற்றி அறியவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. குடும்பத்தின் மருத்துவ வரலாறு, மரபுவழி பின்னணி, வயது போன்றவையும் இந்த முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தலாம என்று கருதப்படுகிறது.

ஆய்வில் பங்கேற்றவர்கள் தெவித்தபடி அவர்களின் உணவுப் பழக்கம், உடற்பயிற்சி பழக்கம், அவர்களின் உயரம் மற்றும் எடை ஆகியவற்றை குழுவினர் எடுத்துக் கொண்டனர். அனைத்து சமயங்களிலும் அவை சரியானவையாக இருக்கும் என சொல்ல முடியாது.

73,000-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் 38,000 – க்கும் மேற்பட்ட ஆண்கள் ஆகியோரைக் கொண்ட இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானவர்கள் சுகாதார துறையில் பணியாற்றும் வெள்ளையர் இனத்தவர்கள்.

http://kisukisu.lk/?p=34764

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.