Jump to content

'குழந்தையின் உதையை உணர்ந்தேன்!’- இறந்த பெண்ணின் கர்ப்பப்பையை பெற்று குழந்தை பிரசவித்த பெண்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனிஃபர் கோப்ரெட்ச்க்கு தனது 17 வயதில்தான் 'தன்னால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது' என்ற செய்தி தெரிய வந்துள்ளது

அமெரிக்காவைச் சேர்ந்த 33 வயது பெண்ணான ஜெனிஃபர் கோப்ரெட்ச் சமீபத்தில் அழகான ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார். இறந்த பெண் ஒருவரிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட கர்ப்பப்பை மூலம் ஜெனிஃபருக்கு இந்தக் குழந்தை பிறந்துள்ளது.

இதன் மூலம் "அமெரிக்காவில், இறந்த கொடையாளரிடமிருந்து பெற்ற கர்ப்பப்பைமாற்று அறுவைசிகிச்சைக்குப் பிறகு, பிறந்த இரண்டாவது குழந்தை" என்ற சிறப்பையும் இந்தக் குழந்தை பெற்றுள்ளது.

 
ஜெனிஃபர்-ட்ரு தம்பதியினர்
 
ஜெனிஃபர்-ட்ரு தம்பதியினர்

அமெரிக்காவில் கர்ப்பப்பைமாற்று அறுவைசிகிச்சையில் பிறந்த முதல் குழந்தை 2017-ம் ஆண்டில் உலகுக்கு வந்தது. அடுத்த ஆண்டு, பிரேசிலிய பெண் ஒருவர் இறந்த கொடையாளரிடமிருந்து பெறப்பட்ட கர்ப்பப்பை வழியாக ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தார். இவ்வரிசையில் ஜெனிஃபரும் கர்ப்பப்பைமாற்று அறுவைசிகிச்சையின் மூலம் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.

 

ஜெனிஃபர் கோப்ரெட்ச் `மேயர்-ரோகிடான்ஸ்கி-கோஸ்டர்-ஹவுசர்' (MRKH) என்ற குறைபாட்டுடன் பிறந்துள்ளார். இது பெண்களின் இனப்பெருக்கத்தைப் பாதிக்கும் முக்கியக் குறைபாடு. இந்தக் குறைபாடுடையவர்களுக்கு பிறப்புறுப்பு மற்றும் கர்ப்பப்பை வளர்ச்சியடையாமலிருக்கும். இதனால் அவர்களால் தங்களது கர்ப்பப்பையில் குழந்தை பெற்றுக்கொள்ள இயலாது.

குழந்தை பெஞ்சமின்
 
குழந்தை பெஞ்சமின்

ஜெனிஃபர் கோப்ரெட்ச்க்கு தனது 17 வயதில்தான் 'தன்னால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது' என்ற செய்தி தெரிய வந்துள்ளது.

ஜெனிஃபர், ட்ரூ என்பவரைத் திருமணம் செய்துகொண்ட பிறகு, இந்தத் தம்பதியினர் செயற்கை முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள மருத்துவரிடம் சென்றுள்ளனர். அப்போதுதான் இவர்களுக்குக் கர்ப்பப்பை மாற்று அறுவைசிகிச்சை பற்றித் தெரியவந்துள்ளது. அதன்படி 2019-ம் ஆண்டில், ஜெனிஃபர் 10 மணிநேர அறுவைசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். இறந்த கொடையாளரிடமிருந்து பெறப்பட்ட கர்ப்பப்பை அவருக்குப் பொருத்தப்பட்டது.

இந்தச் சிகிச்சை நடந்த சில வாரங்களில் ஜெனிஃபர் கருவுற்றார். அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இது பற்றி அவர் கூறும்போது, "நான் உண்மையான பிரகாசத்தை உணர்ந்தேன்; கருவுற்றிருந்தபோது குழந்தையின் உதையை உணர்ந்தேன். அவை என் வாழ்வில் மறக்க முடியாத தருணங்கள்" என்று குறிப்பிட்டார்.

குழந்தை
 
குழந்தை

ஜெனிஃபர்-ட்ரு தம்பதியினர் தங்கள் குழந்தைக்கு `பெஞ்சமின்' என்று பெயரிட்டு வளர்த்து வருகின்றனர். இந்தக் குழந்தை பிறந்த பிறகு, ஜெனிஃபருக்கு பொருத்தப்பட்ட கர்ப்பப்பை பலவீனமாக இருந்ததால் மருத்துவர்களால் நீக்கப்பட்டுவிட்டது.

https://www.vikatan.com/lifestyle/relationship/33-years-old-us-woman-to-get-a-uterus-from-a-deceased-donor-and-have-a-successful-pregnancy

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.