Jump to content

நம்பிக்கையை நாசமாக்கும் அரசாங்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நம்பிக்கையை நாசமாக்கும் அரசாங்கம்

கே. சஞ்சயன்   / 2020 ஜனவரி 10 , மு.ப. 10:14


முன்னாள் அமைச்சர்கள் சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன ஆகியோரின் கைது நடவடிக்கைகளை அடுத்து, முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்ட முறை, கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கிறது.  

அதைத் திசை திருப்பி விடுவதற்காகவே, ரஞ்சன் ராமநாயக்கவின் அலைபேசி உரையாடல் பதிவுகள், சமூக ஊடகங்களில் கசியவிடப்பட்டு இருக்கின்றன.  

image_566067a106.jpg

சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்ட போது, சபாநாயகருக்குத் தெரியப்படுத்தப்பட இல்லை; நீதிமன்ற உத்தரவும் பெறப்படவில்லை. விதிமுறைகளுக்கு முரணாக, அவர் கைது செய்யப்பட்ட போது, “அது சரியான நடவடிக்கை தான்; பொலிஸார் மீது எந்தத் தவறும் இல்லை” என்று அரசாங்கத் தரப்பு அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாதிட்டார்கள்.  

எனினும், சம்பிக்க ரணவக்கவின் கைது, புதிய அரசாங்கத்தின் மீது பெரும்பான்மைச் சிங்கள பௌத்த மக்கள், கொண்டிருந்த நம்பிக்கையைத் தளரச் செய்து விட்டது.  

அதற்குப் பின்னர், ராஜித சேனாரத்னவைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. சம்பிக்க ரணவக்க விடயத்தில், கையாண்டது போலல்லாமல், சபாநாயகருக்குத் தெரியப்படுத்தி, நீதிமன்ற உத்தரவைப் பெற்று, அவர் கைது செய்யப்பட்டார்.  

ஆனால், ராஜித சேனாரத்ன மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், திட்டமிட்டது போல, அவரைச் சிறைக்குக் கொண்டு போய், கம்பி எண்ண வைக்க முடியவில்லை.

image_7a863a06e1.jpg 

முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்‌ஷவின் பெயரைக் கெடுக்கும் சூழ்ச்சியை, ராஜித சேனாரத்ன  மேற்கொண்டார் என்று, சில அமைச்சர்கள் நியாயப்படுத்தி இருந்தனர்.   

அடுத்ததாக, முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குறிவைக்கப்பட்டார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுடனான தொலைபேசி உரையாடல்ப் பதிவைத் தேடிப்போன பொலிஸார், அனுமதிப்பத்திரம் காலாவதியான கைத்துப்பாக்கியை வைத்திருந்தார் என்று குற்றம்சாட்டி, அவரைக் கைது செய்தனர்.  

ஒருநாள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர், அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.  

மூன்று முன்னாள் அமைச்சர்களும் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்படும் அளவுக்குப் பாரிய கொலைகளையோ, கொள்ளைகளையோ செய்திருக்கவில்லை.  

அரசாங்கத்தின் பழியுணர்வு தான், இவர்களை நோக்கிப் பொலிஸாரைத் திருப்பி விட்டதற்குக் காரணம் என்ற குற்றச்சாட்டுகள், வலுவாக எழுந்திருக்கின்றன.  

சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்ட போதும், ராஜித சேனாரத்ன கைது செய்யப்பட்ட போதும், அதைப் பல அமைச்சர்கள் நியாயப்படுத்திய போதும், ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்ட போது, அதை நியாயப்படுத்தியவர்கள் மிகமிகக் குறைவு.  

ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டதும், இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர, பொலிஸாரின் நடவடிக்கைகளில், தனக்கு உடன்பாடு இல்லை என்று தெரிவித்திருந்தார்.  

image_d22ad4b032.jpg

ஜனாதிபதியும் பிரதமரும், சரியான வழியில் சென்றாலும், பொலிஸார் அவ்வாறு செயற்படவில்லை என்று அவர், ருவிட்டரில் தனது அதிருப்தியைப் பதிவு செய்தார்.  

மற்றோர் அமைச்சரான ஷெஹான் சேனசிங்க, பொலிஸாரின் நடவடிக்கைகளுக்குப் பின்னால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு, அவப்பெயரை ஏற்படுத்துகின்ற ஏதோவொரு சூழ்ச்சி இருக்கிறது என்று பொருமியிருக்கிறார்.  

“பொலிஸ் நிர்வாகத்தில், அரசாங்கம் தலையிடவில்லை. சுயாதீனமாகச் செயற்பட அனுமதித்திருக்கிறது” என்று கூறியிருக்கும் அவர், “இந்தக் கைதுகள், அரசியல் பழிவாங்கல்கள் அல்ல” என்றும் தெரிவித்திருக்கிறார்.  

“இதற்குப் பின்னால், யாரோ ஒருவர் இருக்கிறார்” என்று கூறி, தங்களை மீறி நடக்கின்ற விடயங்களாக, இவற்றைக் காண்பிக்க முனைந்திருக்கிறார் செஹான் செனசிங்க.  

பொது ஜன பெரமுனவில் உள்ள, மிகத் தீவிரமான ராஜபக்‌ஷ விசுவாசிகளில் செஹான் சேனசிங்கவும் காஞ்சன விஜேசேகரவும் முக்கியமானவர்கள்.  

அவர்களுக்கு, இப்போதைய நடவடிக்கைகள் வெறுப்பை ஏற்படுத்தியிருக்கிறது போலக் காண்பித்துக் கொள்ள முனைந்தாலும், தங்களின் அரசாங்கம் மீது, பழி வரப் போகிறது என்ற அச்சமே, அவர்களிடம் மேலோங்கி இருக்கிறது. அதனால்தான், பழியைப் பொலிஸ் மீது போட முனைந்திருக்கிறார்கள்.  

“முன்னைய அரசாங்கம், பொலிஸ் சேவையை, அரசியல் மயப்படுத்தி விட்டது. பொலிஸார் யாருடைய கட்டளைப்படி நடக்கிறார்கள் என்று தெரியவில்லை” என்றும் செஹான் சேனசிங்க கூறியிருப்பது, வேடிக்கையின் உச்சம். ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், அரசாங்கத்தின் தேவைகளை நிறைவேற்றுகின்ற அலகாகவே, பொலிஸ் திணைக்களம் செயற்படுகிறது. அரசாங்கத்தின் உத்தரவை, மீறி நடக்க முடியாது. அதுவும் ஆட்சியில் இருப்பது, மைத்திரிபால சிறிசேன அல்ல; கோட்டாபய ராஜபக்‌ஷ என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.  

தன்னால் மட்டுமே, நாட்டில் உறுதியான ஆட்சியைத் தர முடியும் என்றும் பாதுகாப்பான நாட்டை உருவாக்க முடியும் என்றும் மேடைகளில் இறுமாப்புடன் கூறி, ஆட்சியைப் பிடித்தவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ஆவார்.  

அவரது ஆட்சியில் அங்கம் வகிக்கும் ஓர் அமைச்சர், பொலிஸாரின் நடவடிக்கைகளுக்குப் பின்னால், யார் இருக்கிறார்கள் என்று தெரியாமல் உள்ளது என்று கூறினால், அந்த அசிங்கம், யாருக்குச் சென்று சேரும்?  

தன்னால் மட்டுமே, நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்று, கோட்டாபய ராஜபக்‌ஷ வாக்குறுதி கொடுத்திருக்கும் நிலையில், பொலிஸார் தம் விருப்பப்படி செயற்படுகிறார்கள் என்றால், அது யாருடைய இயலாமையாகக் கொள்ளப்படும்?  

ஒருவேளை, 19 ஆவது திருத்தச்சட்டத்தால், அதிகாரமற்ற நிலையில் ஜனாதிபதி இருக்கிறார்; பொலிஸாரைக் கூட, அவரால் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கிறது; கட்டு மீறி அவர்களே செயற்படுகிறார்கள் என்ற மாயையை, சிங்கள - பௌத்த மக்கள் மத்தியில் உருவாக்குவதற்கு, அரசாங்கம் முனைகிறதோ என்ற சந்தேகமும் உள்ளது.  

அவ்வாறான ஓர் எண்ணத்தை, நாட்டு மக்களின் மனத்தில் பதியச் செய்வதன் மூலம், அரசமைப்பைத் திருத்தும் தமது திட்டத்துக்கு, அங்கிகாரம் பெறுவதற்கு அரசாங்கம் முற்படவும் கூடும்.  

அதேவேளை, பொலிஸ் திணைக்களம் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லாமல், தம் விருப்பப்படி செயற்படுகிறது என்றால், அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்திருக்க வேண்டியது, ஜனாதிபதியின் பொறுப்பேயாகும்.  

ஜனாதிபதியால் பாதுகாப்பு அமைச்சு உள்ளிட்ட, எந்தவோர் அமைச்சுப் பதவியையும் வைத்திருக்க முடியாது.  

ஆனாலும், பொலிஸ் திணைக்களத்தை உள்ளடக்கிய, பாதுகாப்பு அமைச்சுக்கு பொறுப்பான அமைச்சர் ஒருவரை நியமிக்காமல் இருப்பது, யாருடைய தவறு?  

ஏனையவர்களின் மீது, நம்பிக்கை வைக்காவிடினும், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிடமோ, அமைச்சர் சமல் ராஜபக்‌ஷவிடமோ பாதுகாப்பு அமைச்சை முழுமையாக ஒப்படைத்திருக்கலாம். இதைச் செய்யாமல் இருப்பது தான் அரசியல் சூழ்ச்சி.  

பொலிஸ் திணைக்களத்தை, 2013இல் செய்தது போன்று, சட்டம் ஒழுங்கு அமைச்சிடம் ஒப்படைத்திருக்கலாம்.  

அதைவிட, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக சமல் ராஜபக்‌ஷவே இருக்கிறார். ஆக, பொலிஸ் திணைக்களம், தாம் விரும்பியபடியே செயற்படுகிறது; அரசாங்கத்தின் தலையீடுகள் இல்லை என்ற வாதமோ, குற்றச்சாட்டோ அர்த்தமற்றது.  இது, பழியை வேறோருவரின் மீது போடுவதற்கான முயற்சி. அடுத்தடுத்து, முன்னாள் அமைச்சர்களைக் கைது செய்ததால், இந்த அரசாங்கம், பழியுணர்ச்சி கொண்ட ஓர் அரசாங்கம் என்ற கருத்து, மேலோங்கி விட்டது.  

பாரிய குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் உள்ளவர்கள் எல்லாம், சுதந்திரமாக வெளியில் உலாவுகின்ற நிலையில், சிறிய விவகாரங்களை வைத்து, முன்னாள் அமைச்சர்கள் வேட்டையாடப்பட்டது, அரசாங்கத்துக்குக் கடுமையான எதிர்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  

இவ்வாறான நிலையில் தான், பொலிஸ் தரப்பின் சூழ்ச்சியாக இருக்குமோ என்ற சந்தேகத்தைக் கிளப்பி விட்டுத் தப்பிக்க முனைகிறது, தற்போதைய அரசாங்கம்.  

அதையும் மீறி, இதற்குப் பின்னால் அரசியல் சூழ்ச்சிகள் இருப்பது தெரிந்தால், நடவடிக்கை எடுக்கக் கூடிய நிலையில், தற்போதைய அரசாங்கம் இருக்கிறது.  

அவ்வாறு நடவடிக்கை எடுக்காமல், வேடிக்கை பார்த்துக் கொண்டும், பொலிஸ் நடவடிக்கைகளை நியாயப்படுத்திக் கொண்டும், மக்களைப் பொய்யான திசைக்குத் திருப்ப முடியாது.  

கோட்டாபய ராஜபக்‌ஷவின் மீது, சிங்கள பௌத்த மக்கள், பெரும் நம்பிக்கையை வைத்திருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பைத் தற்போதைய அரசாங்கம், நாசமாக்கும் வகையில் தான் செயற்படுகிறது.  

நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு, ஜனாதிபதிக்கு அதிகாரம் கிடைக்கும் நாள் எப்போது என்று, அமைச்சர்கள் நாள்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.  இவ்வாறானதொரு நிலையில், அரசியல் பழிவாங்கல்களால் அரசாங்கம் ஏறிய வேகத்திலேயே, கீழே சரியத் தொடங்கி இருக்கிறது.  

இது ஐ.தே.க தரப்புக்கு நம்பிக்கையூட்டுகிறது. அதனால் தான், அவர்கள் எப்படியும் சஜித் பிரேமதாஸ, பிரதமர் ஆகி விடுவார் என்ற நம்பிக்கையை வெளியிடத் தொடங்கியிருக்கிறார்கள்.    
 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/நம்பிக்கையை-நாசமாக்கும்-அரசாங்கம்/91-243818

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
    • நூறாவ‌து சுத‌ந்திர‌ தின‌த்தின் போது இந்தியா என்ற‌ நாடு இருக்காது என்று ப‌ல‌ர் சொல்லி கேள்வி ப‌ட்டு இருக்கிறேன்.............மோடியே போதும் இந்தியாவை உடைக்க‌............இந்தியாவில் வ‌சிக்கும் முஸ்லிம்க‌ளும் இந்திய‌ர்க‌ள் ஆனால் மோடி முற்றிலும் முஸ்லிம்க‌ளுக்கு எதிராக‌ இருக்கிறார் ......................நீங்க‌ள் சொன்ன‌து போல் சோவியத் யூனியன் ம‌ற்றும் முன்னால் யூகேசுலோவியா உடைந்த‌து போல் இந்தியாவும் உடையும்.......................இன்னும் 10வ‌ருட‌ம் மோடி என்ற‌ கேடி ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்து ஆட்சியை பிடித்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் ஆயுத‌ம் தூக்கி ச‌ண்டை பிடிப்பின‌ம் பிற‌க்கு ஜ‌ம்மு க‌ஸ்மீர் போல் எல்லா மானில‌மும் வ‌ந்து விடும்.......................
    • ஆரம்பத்தில் புலிகளை சாடியே தொடர் சென்றது, ஆனால் அதில் வந்த காலபதிவுகள்  பெரும்பாலும் உண்மையாகவே இருந்ததினால் புலம்பெயர் நாடுகளில் அதற்கான வாசகர்கள் படிப்படியாக அதிகமாயினர். தொடரின் ஆரம்பத்தில் எந்த கிட்டுவை சாடி வெளிவந்ததோ பின்னாளில் அதே கிட்டுவை ஆஹா ஓஹோ எனு புகழ்ந்து அற்புதன் எழுத தொடங்கினார் படிப்படியாக புலிகள் சார்பு செய்திகளை வெளியிட  தொடங்கினார் அற்புதன், ஒருகட்டத்தில் புலிகளின் உத்தியோகபூர்வ பத்திரிகை ரேஞ்சுக்கு புலி சார்புநிலைக்கு  வந்தது தினமுரசு. தினமுரசு இதழின் கடல்கடந்த விற்பனை எகிற தொடங்கியது,  காலப்போக்கில்  ஐரோப்பிய அமெரிக்க தமிழர்கள் தினமுரசு பத்திரிகையின் வரவுக்காக தவம் கிடக்க தொடங்கினர், புலம்பெயர் தேசத்தில் இலங்கையிலிருந்து வரும் ஒரு நாளிதழுக்காக  மக்கள் அலை மோதியது முதலும் கடைசியும் தினமுரசுக்கு மட்டுமேயாகதான் இருக்க முடியும். கொஞ்சம் லேற்றா போனால் விற்று முடிந்துவிடும் நிலைக்கு இருந்தது. ஜெயசிக்குறு ஆரம்ப காலகட்டத்தில் அசரடிக்கும் துல்லியமான கணிப்புக்களை வெளியிட்டார் அற்புதன், அந்த காலகட்டத்திலேயே கொல்லப்பட்டார். அற்புதனின் புலி சார்பு நிலை தொடருக்கு புலம்பெயர் தேசத்தில் தினமுரசுக்கு எதிர்பாராமல் கொட்டிய வெளிநாட்டு காசுதான் பிரதானமான காரணம். அதனால் டக்ளசினால் எச்சரிக்கப்பட்டதாகவும், கட்சிவேறு பத்திரிகை தொழில்வேறு என்று அற்புதன் டக்ளசுடன் முரண் பட்டதாகவும் அதனாலேயே டக்ளஸ் குழுவினால் சுட்டுகொல்லப்பட்டதாகவும் கதை உலாவியதுண்டு. அதை உறுதிப்படுத்தும் விதமாக ஜெயசிக்குறு சமரில் புலிகளின் வீரம்பற்றி வந்த தொடர் , அற்புதன் கொல்லப்பட்ட பின்னர் வந்த இதழ்களில் ’’ பூனையொன்றை ஒரு அறையில் மூடிவிட்டு ஒரு ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டு மிரட்டினால், அது ஜன்னல் வழியாக ஓடிவிடும்,  படையினரின் பின்வாங்கலுக்கு அதுதான் காரணம்’’ மற்றும்படி புலிகள் வீரம் என்றெல்லாம் கிடையாது என்ற அர்த்ததில் செய்தி வந்தது, அத்துடன் புலி சார்பாக செய்தி வெளியிடுவதும் நின்று போனது கூடவே தினமுரசு வியாபாரமும் படுத்துக்கொண்டது, அதன்போதே புரிந்துவிட்டது அற்புதன் என்ன காரணத்துக்காகவும் யாராலும் கொல்லப்பட்டிருப்பார் என்பது, உலவிய வதந்தியும் ஓரளவு உண்மையாக போனதாகவும் பேசிக்கொண்டார்கள். ஆனால் புலிகள் அற்புதன் புலிசார்பு நிலையில் தொடர் எழுதினாலும் அதை கண்டுகொள்ளவேயில்லை,  அதனால்தான் அவர் கொல்லப்பட்டபோது புலிகளின் குரல் செய்தியில் ‘’பாராளுமன்றத்தில்  அவசரகாலநிலை சட்டத்துக்கு ஆதரவாக கையுயர்த்திவிட்டு வெளியே வந்து போராட்டத்திற்கு ஆதரவாக எழுதும் அற்புதன் கொல்லப்பட்டார் ‘’ எனு செய்தி பகிர்ந்தார்கள்.  
    • உற‌வே நானும் ப‌ல‌ வ‌ர‌லாறுக‌ளை தேடி தேடி ப‌டிச்ச‌ நான் ஆனால் நான் ஒரு போதும் இல‌வ‌ச‌ அறிவுறை சொல்வ‌து கிடையாது................அதுக்காக‌ உங்க‌ளை த‌ப்பா சொல்லுகிறேன் என்று நினைக்க‌ வேண்டாம் பொதுவாய் சொல்லுறேன்................. 500வ‌ருட‌த்துக்கு முத‌ல் உல‌க‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று பாட‌சாலையில் ப‌டித்த‌ கால‌த்தில்  டெனிஸ் வாத்தியார் எங்க‌ளுக்கு சொல்லி த‌ந்த‌வ‌ர்................. நானோ புல‌வ‌ர் அண்ணாவோ இந்தியா மீது இருக்கும் கோவ‌த்தில் எழுத‌ வில்லை கேடு கெட்ட‌ ஆட்சியால‌ர்க‌ளால் இந்தியா என்ற‌ நாடு நாச‌மாய் போச்சு அத‌க்கு முத‌ல் கார‌ண‌ம் இந்திய‌ அள‌வில் ஊழ‌ல்...............ஊழ‌ல் இருக்கும் நாடு சிறு முன்னேற்ற‌த்தை கூட‌ காணாது................. ஒரு சில‌ சிற‌ப்பு முகாமில் வ‌சிக்கும் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு க‌ழிவ‌ரை இல்லை அதுக‌ள் காட்டுக்கு போக‌ வேண்டிய‌ நிலை.............இது தான் திராவிட‌ம் ஈழ‌ ம‌க்க‌ளை  க‌வ‌ணிக்கும் ல‌ச்ச‌ன‌ம்.................
    • கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பற்றி சில வரிகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்து, மறந்துவிட்டேன். நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.........👍
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.