Jump to content

தமிழ்த் தேசிய அரசியல் : தியாகமா? வியாபாரமா?


Recommended Posts

Chinema-3.jpg

ஜே.வி.பி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணியினர் மீது ஈழத் தமிழ் மக்களுக்கு பெருத்த விமர்சனங்கள் உண்டு. ஆனாலும், சிங்கள மக்களுக்கான ஒரு கட்சியாக அவர்கள் பல்வேறு தியாகங்களை செய்கின்றனர். தேர்தலில் தம்மை மக்கள் கடுமையாக நிராகரித்தபோதும், தமது தியாகங்களை அவர்கள் ஒருபோதும் குறைத்துக்கொள்வதில்லை. ஆனால் இனத்திற்கான விடுதலைக்காக போராடுகிறோம் என்று சொல்லும் தமிழ்த் தேசியவாதிகள் உண்மையில் எதை தியாகம் செய்கின்றனர்?

 

ஜே.வி.பி கட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளில் உள்ளவர்கள், அரசிடம் இருந்து சலுகையாகப் பெறும் தமது வாகன உரிமத்தை விற்று, அந்நிதியை மக்களுக்காக செலவிடுமாறு கட்சியிடம் கொடுக்கின்றனர். அக்கட்சி மீதான பல்வேறு விமர்சனங்களுக்கும் அப்பால், இந்த விடயம் ஒரு முன்னுதாரணமான விடயமாகும். வடக்கு கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் மாத்திரம் பதினாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படும் வாகன உரிமம் ஒன்றின் பெறுமதி இரண்டு (2) கோடி எனப்படுகின்றது. அத்துடன் மாகாண சபை உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படும் வாகன உரிமத்தின் பெறுமதி சுமார் அறுபது (60) இலட்சங்கள். அப்படி பார்த்தால் கிட்டத்தட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகன உரிமத்தின் பெறுமதி முப்பத்திரண்டு (32) கோடி மற்றும் வட கிழக்கு மாகாண சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 41 மாகாண சபை உறுப்பினர்களின் வாகன உரிமங்களின் மொத்த மதிப்பு அண்ணளவாக இருபத்தைந்து (25) கோடிகள்.

2010 இல் நாடாளுமன்றத்திற்கு தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 14. அந்த நேர ஒரு வாகன அனுமதிப்பத்திரத்தின் பெறுமதியான ஒரு (1) கோடிப் படி, அதன் மொத்தத் தொகை பதினான்கு (14) கோடிகள். அப்படிப் பார்த்தால் 2010 இலிருந்து வாகன அனுமதிப்பத்திர சலுகைகளிலிருந்து மட்டும் எழுபத்து ஒரு (71) கோடிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வசமாகியுள்ளது. இவர்கள் தமக்கு வழங்கப்படும் இந்த வாகன உரிமங்களை உடனடியாக விற்பனை செய்து அப்பணத்தை என்ன செய்கின்றனர்? ஒவ்வொரு முறை தேர்தலிலும் வெல்லுகின்ற போதும், மீண்டும் மீண்டும் வாகன உரிமங்களை பெறும் இவர்கள் இந்த பணத்திற்காகவா அரசியலில் ஈடுபடுகின்றனர்?

நாளும் பொழுதும் மக்களுக்காகவும், மக்களின் இன உரிமைக்கும் விடுதலைக்குமாக என தொண்டை தண்ணீர் வற்ற பேசுகின்ற தமிழ்த் தேசியவாதிகள், இவற்றை வைத்து போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வாழ்வாதார திட்டங்களை உருவாக்கி மக்களுக்கு ஏன் கையளிக்க கூடாது? தமிழ்த் தேசிய அரசியலில் உள்ள, அல்லது வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவம் செய்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், எவராவது இந்த முன்னுதாரணமாக செயலை செய்யவில்லையே.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அடிப்படைச் சம்பளம் 54,285 ரூபாக்கள் அடங்கலாக மாதாந்தம் இரண்டு இலட்சத்து எழுபது ஆயிரம் (270,000) ரூபாய்கள் அரச கொடுப்பனவாக வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், ஐந்து உத்தியோகத்தர்களை நியமிக்க முடியும். மாகாண சபை உறுப்பினர் ஒருவர் இரண்டு உத்தியோகத்தர்களை நியமிக்க முடியும்? ஆனால் பெரும்பாலான உறுப்பினர்கள், தமது மனைவி, மகள்கள், மகன்களின் பெயர்களை நியமித்துவிட்டு அனைத்து ஊழியர்களின் கொடுப்பனவுகளையும் தாமே சுருட்டிக் கொள்கின்றனர். சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமது சாரதிகளுக்கு அரசால் ஒதுக்கப்படும் ஊதியத்தில் அரைவாசியையே கொடுக்கின்றனர்.

இவர்களில் எவராவது போரினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த இளைஞர் யுவதிகளுக்கு வேலை கொடுத்து அவர்களின் அடுப்பை எரியச் செய்கிறார்களா? அது மாத்திரமின்றி, சொந்தம், சாதி போன்ற வேறுபாடுகளைப் பார்த்தே தமது அலுவலகங்களின் ஆட்களை வேலைக்கு அமர்த்துகின்றனர். இப்போது இனம் விடுதலைக்காக தவிக்கையில், தமிழ் தேசிய அரசியல் என்பது செல்வம் கொழிக்கும் வியாபாரமாகிவிட்டது என்பதையே இத்தலையங்கம் அழுத்தமுற விமர்சிக்கின்றது.

எத்தகைய வாக்குறுதிகளையும் மக்களுக்கு அளிக்கலாம், அவற்றை நிறைவேற்றாமல் நழுவி அடுத்த தேர்தலிலும் மீண்டும் அதே வாக்குறுதிகளுடனும்கூட வந்து நிற்கலாம். எப்போதும் இன விடுதலை என்றும் உரிமை என்றும் போராளிகள் பற்றியும் தலைவர் பிரபாகரன் பற்றியும் பேசிக்கொண்டே, வியாபார அரசியல் செய்யலாம் என்பது, இனத்திற்கும் போராளிகளுக்கும் செய்யும் துரோகமே. எத்தனையோ தியாங்களின் மேல் ஈழத்தவர்களின் விடுதலைப் போராட்டம் கட்டி எழுப்பட்டது? இப்போது அப் போராட்டத்தின் மேல் தமிழ்த் தேசிய அரசியல் வியாபாரிகள் தமது வணிகத்தை கட்டி எழுப்புகின்றனர்.

அரசின் வாகன உரிமம் உள்ளிட்ட சலுகைகளை பெற்று தாமே அனுபவிக்கும் அரசியல்வாதிகள், அமைச்சுப் பதவிகளையும் பெறலாம் அல்லவா? அமைச்சுப் பதவிகளை பெற்று மக்களுக்கு சேவை ஆற்றினாலாவது அர்த்தமானது. அரசியல் தீர்வில்லாமல் அமைச்சு பதவிகளை ஏற்க மாட்டோம் என்று சொல்லிவிட்டு அத்தனை அரச சலுகைகளையும் பெறுவதும், ஐந்தாண்டு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துவிட்டு வாழ்நாள் ஓய்வூதியம் பெறுவதெல்லாம் எந்த அடிப்படையில் நியாயமானது? தாய் பகை, குட்டி உறவென்ற நிலையல்லவா இது. அல்லது அமைச்சு பதவிகளை ஏற்கும் ஆளுமை அற்றவர்களா தமிழ்த் தேசியவாதிகள்? எதிர்கட்சித் தலைவர் பதவியை ஏற்பதும் கட்சிகளின் பிரதி தவிசாளர் பதவியையும் ஏற்பவர்கள் ஏன் அமைச்சு பதவியை ஏற்ககூடாது? இப்படி செய்வதெல்லாம் மக்களை முட்டாளாக்கி, தொடர்ந்து அரசியல் செய்யும் வணிக உத்தியாகும்.

இந்த விடயத்தில் மக்கள் இனியேனும் விழித்துக்கொள்ள வேண்டும். மேற்குறித்த கேள்விகளை மக்கள் தங்கள் பிரதிநிதிகளிடம் முன் வைக்க வேண்டும். அத்துடன், இனி தேர்தலில் போட்டியிடுகின்ற அனைவரும் அரசால் தமக்கு அளிக்கப்படும் வாகன உரிமமம் உள்ளிட்ட அனைத்துச் சலுகைகளையும் மக்களுக்கே வழங்குவோம் என வாக்குறுதி அளிக்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி என அனைத்து தரப்பினரும் மக்கள் மத்தியில் பகிரங்கமாக இதனை அறிவிக்க வேண்டும்.

தமிழ்த் தேசிய அரசியல் என்பது வியாபாரமாக இருக்க முடியாது. அது தியாகத்தின்மீதே கட்டி எழுப்பப்படவேண்டும். இந்த விடயத்தில் மக்களின் எழுச்சிதான் வியாபாரிகளிடமிருந்து தமிழ்த் தேசிய அரசியலை மீட்டெடுத்து உண்மையான மக்கள் பிரதிநதிகளிடம் கையளிக்க துணைபுரியும்.

தமிழ்க்குரல் ஆசிரியர் பீடம்.

11.01.2020

http://thamilkural.net/?p=21584

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடைசி நிமிடத்தில் வந்தாலும் இந்தியத் தேர்தல் ஆணையம் போல் சாக்குப் போக்குச் சொல்லாமல் போட்டியில் என்னையும் இணைத்துக் கொண்ட கிருபன்ஜிக்கு நன்றி
    • அவர் இந்த வயதிலும் சும்மா இருக்க மாட்டார்  அங்கே இங்கே என்று ஒடித் திரிவார். வெள்ளம்  தன்ரை வேலையை காட்டி விட்டது போலும்” 🤣😀🤣 குறிப்பு,....சும்மா பகிடிக்கு   அவர் இங்கே   வருவதில்லை தானே??   அடடா   இவ்வளவு இருக்க  .....ஒரு சிறந்த தலைவராக வரும் வாய்ப்புகள்  அறவேயில்லை  ......🤣🤣🤣
    • தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளை வைத்தே கேள்விகள் கேட்டுள்ளேன். ( புதுச்சேரி மக்களவைத் தொகுதி சேர்க்கப்படவில்லை)  முதல் 35 கேள்விகளுக்கு தலா 2 புள்ளிகள் கேள்வி இலக்கம் 1 - 23 பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனையாம் இடம் பிடிப்பார்கள்?  1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன்  5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 15) தயாநிதிமாறன் திமுக) 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 18)ரி ஆர் பாலு ( திமுக) 19)எல் முருகன் (பிஜேபி) 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக  விஜயகாந்தின் மகன்) 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்?    1) 5% க்கு குறைய   2) 5% - 6%   3) 6% - 7%   4) 7% - 8%   5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்?  35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 43) 23 தொகுதிகளில்  பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) போட்டி விதிகள்  1)மே20 ம் திகதிக்கு முன்பு பதில் அளிக்கவேண்டும். 2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.   3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள்  4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார்  
    • அந்த மனிசனுக்கு என்ன குறை?.....அங்க ஜாலியாய் கலக்கிறார் 😂
    • தடுப்பூசிகளுக்கு எதிராக முழங்கி விட்டு தனது மகனுக்கு மட்டும் மாசாமாசம்  போடுற எல்லாத் தடுப்பூசிகளையும் போட்டுவிட்டு தம்பிகளின் அன்புக்கட்டளையை மீற முடியவில்லை என்று பம்பினாரே. அதையும் சேர் த்துக்கொள்ளுங்கள். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.