Jump to content

தேசியப் பட்டியலுக்காக காத்திருக்கும் சம்பந்தன், மாவை


Recommended Posts

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா ஆகிய இருவரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டால் தாம் இருவரும் தோல்வி அடைந்து விடுவோம் என்ற அச்சத்தின் காரணமாக இருவரும் கூட்டமைப்பிற்கு கிடைக்கும் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற பிரதிநிதித்துவமூடாக நாடாளுமன்ற உறுப்பினராக வர இருப்பது கூட்டமைப்புக்குள்ளும் பங்காளி கட்சிகளுக்குள்ளும் பலத்த சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டமைப்பின் தலைவர் அண்மையில் ஒரு அறை கூவலை விடுத்திருந்தார். அந்த அறைகூவலில் இளைஞர்களுக்கும், படித்தவர்களுக்கும் நாடாளுமன்ற தேர்தலில் முன்னுரிமை வழங்க இருப்பதாக தெரிவித்திருந்தார்.

சம்பந்தன் கடந்த 43 வருடங்களாக நாடாளுமன்ற அரசியலில் இருந்து 87 வயதைக் கடந்துள்ள நிலையில், இதுவரை காலமும் சம்பந்தனினதும், அவரது கட்சியினரதும் அரசியல் இராஜதந்திரம் படு தோல்வி அடைந்துள்ளது.

தேர்தல் காலத்தில் மட்டும் இளைஞர்களும், படித்தவர்களும் அரசியலிற்கு வரவேண்டும் என்று போலித்தனமான அறைகூவலை விடுத்து வருகின்றார்.

சம்பந்தன் கடந்த நான்கு நாடாளுமன்ற தேர்தலில் தேசியப் பட்டியல் மூலம் புத்திஜீவிகள், துறைசார்ந்த நிபுணர்களில் ஒருவரைக் கூட நியமிக்கவில்லை. அதுமட்டுமல்லாமல், தாம் அரசியலில் இருந்து ஒதுங்கப் போவதாக பொய்யான செய்திகளை கசிய விட்டுக்கொண்டு மறுபக்கத்தில் தேசியப் பட்டியல் மூலம் தள்ளாத வயதிலும் நாடாளுமன்றம் செல்ல ஆசைப்படுகின்றார்.

கொழும்பில் இதுவரை காலமும் தமிழ் மக்களினுடைய பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்ட மனோ கணேசனை அரசியல் அரங்கில் இருந்து ஒதுக்குவதென தமிழரசுக் கட்சியினர் கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கின்றார்கள்.

குறிப்பாக சுமந்திரன் அந்தப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்.

அதற்கான முக்கிய காரணம் கூட்டமைப்பிற்கு இவ் முறை நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு தேசியப் பட்டியல் ஆசனம் கிடைக்கப் போவதில்லை. சம்பந்தனைத் தவிர மாவை சேனாதிராசா தேசியப்பட்டியல் மூலம் வரமுடியாது அதற்காகவே கொழும்பில் கூட்டமைப்பு போட்டியிடுவதற்கு தயாராகி வருகின்றது.

இரண்டாவது காரணம் புதிய அரசியல் யாப்பு சீர் திருத்தத்தில் சுமந்திரன், சம்பந்தனுடைய இரட்டை வேடங்களை (பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுத்தல், ஒற்றையாட்சியை ஏற்றுக் கொள்ளல்) போன்ற விடயங்களில் மனோ கணேசன் ஆளுங்கட்சி அமைச்சராக இருந்து கொண்டு அதை ஊடகங்களுக்கு பகிரங்கமாக கருத்து தெரிவித்தமையே சுமந்திரன், மனோ கணேசன் ஆகிய இருவருக்கும் இடையிலான விரிசலுக்கு காரணம்.

இந்நிலையில் படித்தவர்கள், கொள்கைப் பற்றுடையவர்கள், ஜனநாயகப் போராட்டதில் துணிச்சலுடன் ஈடுபடக் கூடியவர்கள், இளைஞர்கள், துறைசார்ந்த நிபுணர்களுக்கும் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை வழங்க சம்பந்தன், மாவை, சுமந்திரன் தயாரா?

https://www.tamilwin.com/politics/01/235932?ref=home-feed

Link to comment
Share on other sites

பொதுத்தேர்தலில் மாவை.சேனாதிராஜா களமிறங்குவது உறுதி!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா களமிறங்கமாட்டார் என்ற செய்தியானது பொய்யானது என்று வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவரும் தமிழரசுக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமான சி வி கே சிவஞானம் தெரிவித்தார்

எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தேர்தலில் போட்டியிட மாட்டார் என்ற போலிப் பிரசாரம் சிலரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது அந்த செய்தியில் எந்தவிதமான உண்மையும் இல்லை.

அனுபவம்மிக்க நீண்ட அரசியல்வாதியான மாவை சேனாதிராஜா இம்முறை பொதுத் தேர்தலில் களமிறங்குவது உறுதி எனவும் அவர் தெரிவித்தார்.

https://www.ibctamil.com/srilanka/80/134967

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதைத் தான் நானும் விரும்புகிறேன். ஆனாலும் ஊழல் இல்லாமல் மக்களுக்கு சேவையாற்ற யார் இருக்கிறார்கள்? காட்டுங்க கை கோர்க்கிறேன் என்கிறார். இதுக்கு யாரிடமும் பதில் இல்லை. அடுத்தடுத்த தேர்தல்களில் தேவைகளை உணர்ந்து செயல்படலாம். இதுவரை நாம்தமிழர் வாக்குவங்கி கூடிக் கொண்டு தானே போகுது? எப்படி 3 வீதம் என்று கணித்தீர்கள்?
    • அவருக்கு பெரியமனசு. எப்படி அடித்தாலும் தாங்குவார்.
    • முதலில் நான் தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கும்,..எந்த தலைவருக்கும். எதிரானவன். இல்லை என்பதை  பணிவு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்  .....இங்கு எழுதுவது கருத்துகள் மட்டுமே  [அதாவது நடைமுறையில் சாத்தியம் எது என்று நான் கருதுவது ]. தமிழ்நாட்டில் எந்தவொரு தலைவரும் தனித்து நின்று வெல்ல முடியாது  ..இது சீமானுக்கும். பொருந்தும்    எந்த கட்சியும். வெல்ல வேணும் என்றால் கூட்டணி அவசியமாகும் ...செல்வாக்கு உள்ள கட்சிகளின் கூட்டணி அமைத்தால். மட்டுமே வெல்லலாம்.  சீமான் தலைமையில் எந்த கட்சியும். கூட்டணி அமைக்கப்போவதில்லை  ....சரியா? அல்லது பிழையா??   சீமான் வேறு கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்க முடியும்,.....ஆனால் அடுத்த அடுத்த தேர்தலில் அவரது   ஆதரவு   குறைத்து விடும்   3% கூட வரலாம்”      
    • நிச்சயம் பாதிப்பு இருக்கும். அதனால்த் தான் பெரும்தொகை பணத்தைச் செலவு செய்து இத்தனை பேரை களமிறக்கியுள்ளனர்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.