Jump to content

சென்னை புத்தக கண்காட்சியில் தாமரை செல்வியின் - உயிர் வாசம்.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை புத்தக கண்காட்சியில் தாமரைச்செல்வியின் ‘உயிர்வாசம்’ நாவல்.

82016106_10219667049374108_7797425787728

தாமரைச்செல்வியின் “உயிர்வாசம்” நாவல் இரண்டாம் பதிப்பு சென்னை புத்தக கண்காட்சியில் சிந்தன் புக்ஸ் காட்சியறையில் கிடைக்கின்றது.

கடந்த கார்த்திகை 23ம் திகதி கிளிநொச்சி பரந்தனில் முதலாவதாக “உயிர்வாசம்” வெளிவந்தது. சமகாலத்தில் இரண்டாவது பதிப்பு சென்னையில் புதிய அட்டை வடிவமைப்பில் வெளிவந்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை திரைப்பட இயக்குனர் லெனின் பாரதி மற்றும் ஆடுகளம் திரைப்பட உதவி இயக்குனர் ஹஸீன் ஆகியோர் பிரதிகளை இன்று பெற்றுக்கொண்டுள்ளனர். இதேவேளை எதிர்வரும் 16ம் திகதி சென்னையில் கண்காட்சி வளாகத்தில் அறிமுக நிகழ்வு நடைபெற உள்ளது..

ஈழத்தின் கிளிநொச்சியை சேர்ந்த புகழ்பூத்த எழுத்தாளர் தாமரைச்செல்வி, பச்சைவயல் கனவு, மற்றும் வன்னியாச்சி சிறுகதை தொகுப்பின் ஊடாக பரவலாக அறியப்பட்டவர். ஈழத்தின் பெண் எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்கவராக கருதப்படும் இவர், 1973 முதல் சிறுகதைகளையும் புதினங்களையும் எழுதிவருகின்றார். இவருக்கு இலங்கையின் தேசிய சாகித்திய விருது கிடைத்துள்ளது.

சுமைகள், தாகம், வீதியெல்லாம் தோரணங்கள், பச்சை வயல் கனவு முதலிய நாவல்களையும் மழைக்கால இரவு, அழுவதற்கு நேரமில்லை, வன்னியாச்சி முதலிய சிறுகதை தொகுப்புக்களையும் எழுதியுள்ள தாமரைச்செல்வியின் உயிர்வாசம் நாவலானது, ஈழத்திலிருந்து அவுஸ்ரேலியாவுக்கு அகதிகளாக செல்லும் மனிதர்களின் வாழ்வுப் பின்னணியை வைத்து எழுதப்பட்டது.

http://www.vanakkamlondon.com/thamaraichelvi-11-01-2020/

Link to comment
Share on other sites

  • 9 months later...
  • கருத்துக்கள உறவுகள்

கடலின் அக்கரை போனோரே.. முருகபூபதி

Screenshot-2020-10-16-11-49-07-457-org-m

மூத்த எழுத்தாளர் முருகபூபதி நீண்ட நாட்களாக இலக்கியத் துறையில் ஒரு எழுத்தாளராகவும் இலக்கிய விமர்சகராகவும் ஓர் ஊடகவியலாளராகவும் பன்முக ஆற்றலுடன் இயங்கிக் கொண்டிருப்பவர். இவர் தனது படைப்புகளுக்காக பல விருதுகளும் பரிசில்களும் கௌரவங்களும் பெற்றிருப்பவர். இன்று வரை தனது இலக்கிய பாதையில் தொடர்ந்து பயணித்துக்கொண்டிருக்கும் இவர் தற்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு காலத்தில் எமது இலங்கையில், இந்திய வம்சாவளி மக்களை ‘கள்ளத்தோணி’என்று ஏளனம் செய்தவர்கள் இருந்தார்கள். நண்பர் மாத்தளை கார்த்திகேசுவின் ஒரு நாடகத்தில் ஒரு காட்சியில் இப்படி ஒரு வசனம் வந்ததாக, மேமன் கவியின் ‘யுகராகங்கள்’ வெளியீட்டு விழாவுக்காக யாழ்ப்பாணத்துக்கு யாழ்தேவியில் பயணித்தபோது எம்முடன் கிளிநொச்சி வரையில் வந்த நண்பர் ‘கோமாளிகள்’ ராமதாஸ் தெரிவித்தார்.

அந்த நாடகத்தை நான் பார்த்திருக்கவில்லை. காரணம் நான் வசித்த ஊர் நீர்கொழும்பு. கொழும்பில்தான் அந்த நாடகம் மேடையேறியது.

மாத்தளை கார்த்திகேசுவின் வசனம் இதுதான்: “என்னை கள்ளத்தோணி…கள்ளத்தோணி எண்டு சொல்றாங்க…நான் கடலையே பார்த்ததில்லீங்க”

உண்மைதான்! மலையத்தில் அக்காலப்பகுதியில் வாழ்ந்த மக்கள் கடலைப்பார்க்கவேண்டுமானால், தென்னிலங்கை பக்கம்தான் வரவேண்டும். ஆனால், அவர்களின் மூதாதையர்கள் பல்லாண்டுகளுக்கு முன்பே பிரிட்டிஷாரால் இலங்கைக்கு இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக அழைத்துவரப்பட்டவர்கள்..

காலம் சுழன்றது.

இலங்கையிலிருந்து ஏராளமானவர்கள் மலேசியாவந்து படகுகளில் அவுஸ்திரேலியா நோக்கி சட்டவிரோதமாக வந்து குவிந்தார்கள்.

93362716_10157140685998372_4051583112927

அவ்வாறு இலங்கையில் உக்கிரமடைந்த போரையடுத்து அவுஸ்திரேலியாவுக்குள் உயிர்வாழ வந்த மக்களின் கதைதான் எழுத்தாளர் தாமரைச்செல்வி எழுதிய உயிர்வாசம். இந்நாவல் பற்றியும் எழுதியிருக்கின்றேன்.

கங்காரு தேசத்திற்கு படகுகளில் வந்த மக்களை கள்ளத்தோணி என்று சொல்லாமல் Boat People என்று நாகரீகமாக இங்குள்ள வெள்ளை இனத்தவர்களும் இந்நாட்டின் ஊடகங்களில் செய்தி வாசிப்பவர்களும் அழைக்கின்றனர்.

எனது அப்பாவும் ஒரு காலத்தில் அதாவது 1940 களில் தமிழ்நாடு பாளையங்கோட்டையிலிருந்து சில நண்பர்களுடன் ‘கள்ளத்தோணி’ ஏறித்தான் புத்தளம் கற்பிட்டியில் கரையொதுங்கியவர்.

அதன்பிறகு அப்பா தனது தாயகத்துக்கு திரும்பாமலேயே 1983 இல் மறைந்தார். அவர் இலங்கையில் ஒரு சிங்களப்பெண்ணை மணந்துவிட்டதாக ஊரில் பேசிக்கொண்டார்களாம்.

“பாரதியார் செய்த புண்ணியம்தான் “என்று அப்பா சொன்னார். அந்த மகாகவிதானே தமிழக மக்களுக்கு இலங்கையை சிங்களத்தீவு என்று சொல்லிவிட்டுப்போய்விட்டார்.

அப்பாவின் மறைவுக்குப்பின்னர் 1984 இல் முதல் தடவையாக தமிழகம் சென்று அப்பாவின் உறவினர்களையெல்லாம் தேடிக்கண்டுபிடித்தபொழுது ஒருவர், “ உங்கம்மா தமிழ் பேசுவாங்களா?”- என்று கேட்டாரே பாருங்க.

இத்தனைக்கும் அந்த உறவினர் எனது அப்பாவின் அண்ணன் மகனின் பிள்ளை. பட்டதாரி மாணவர். அப்போது சென்னையில் படித்துக்கொண்டிருந்தார்.

அமெரிக்காவையும் கியூபாவையும் அவுஸ்திரேலியாவையும் கண்டு பிடித்தவர்களும் படகுகளில் வந்தவர்கள்தான்.

z_jur-p-16-How.jpg

இந்தியாவிலிருந்து தனது தோழர்களுடன் இலங்கை வந்த விஜயனும் படகில்தான் பயணித்தான். கடலோடிகள் கண்டுபிடித்த நாடுகள்தான் அநேகம்.

சுமார் 233 ஆண்டுகளுக்கு முன்னர் கப்டன் குக் என்பவர் படகொன்றில்வந்து கண்டு பிடித்த கண்டம்தான் இந்த அவுஸ்திரேலியா. இங்கிலாந்திலிருந்து குற்றவாளிகளை படகில் ஏற்றிவந்து இறக்கும் தேசமாக இருந்த இந்த கங்காரு நாடு, பல்தேசிய கலாசார நாடாக மாறிவிட்டது.

கடந்தகாலங்களில் ஏராளமான படகுகள் அவுஸ்திரேலிய கடல் பிராந்தியத்துக்குள் அத்துமீறி பிரவேசித்து அரசுக்கு பெரிய தலையிடியாகிவிட்டது.

உலகை அச்சுறுத்தும் செய்திகளுக்கு முன்னர் இங்கிருக்கும் அனைத்து ஊடகங்களிலும் மிக முக்கிய செய்தியாகியதுதான் இந்த படகு மக்கள் விவகாரம்.

இந்தோனேஷியாவுக்கும் இது ஒரு பாரிய பிரச்சினையாகியிருந்தது.

அவுஸ்திரேலியா பாராளுமன்றத்தில் இந்த அகதிகள் விவகாரம் வாதப்பிரதிவாதமாகியது.

அத்துமீறி வரும் படகுகளை தடுத்து நிறுத்தும் அவுஸ்திரேலிய கடற்படை, அதில் வருபவர்களை முன்னர் கிறிஸ்மஸ் தீவுக்கு கொண்டுசென்று அங்குள்ள தடுப்பு முகாமில் வைத்திருந்து, பின்னர் வெளி மாநிலங்களுக்கு அனுப்பி, சில தற்காலிக விசாக்களை வழங்கி, புதுப்பிக்கச்செய்து கொண்டிருக்கிறது.

பலர் நாடு கடத்தப்பட்ட செய்தியும் அறிவோம்.

methode_times_prod_web_bin_eb4d332e-2f87

சில வருடங்களுக்கு முன்னரும் இப்படித்தான் ஒரு படகில் சுமார் 83 இலங்கைத் தமிழ் இளைஞர்கள் வந்துவிட்டார்கள். அவர்களும் கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டார்கள். நான் வசிக்கும் மெல்பனிலிருக்கும் சில மனித உரிமை அமைப்புகள், இங்குள்ள குடிவரவு திணைக்கள வாயிலில் ஒரு அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். அந்த இளைஞர்களுக்கு இந்த நாட்டிற்குள் வருவதற்கு அரசு அனுமதிக்கவேண்டும் என்பதுதான் அந்த ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை. அதில் நானும் பல சிங்கள தமிழ் அன்பர்களும் கலந்துகொண்டோம்.

தடுத்துவைக்கப்பட்ட அந்த இளைஞர்களுக்காக தமிழ்த்திரைப்பட சி.டி.க்களும் தமிழ் பத்திரிகை, இதழ்கள், புத்தகங்களும் ஒரு மொழிபெயர்ப்பாளர் ஊடாக கொடுத்து அனுப்பினேன்.

அரசுக்கு பலதரப்பிலும் விடுக்கப்பட்ட அழுத்தத்தினால் அந்த இளைஞர்களுக்கு இந்த நாட்டுக்குள் வருவதற்கும் இந்த நாட்டு வதிவிட உரிமை கிடைப்பதற்கும் அனுமதி கிடைத்தது.

அவர்களில் சிலரைச்சந்தித்துமிருக்கின்றேன். நான் அங்கம் வகிக்கும் ஒரு மனித உரிமைகள் அமைப்பு சர்வதேச அகதிகள் வாரம் ஒன்றில் அந்த இளைஞர்களுக்காக, ஒரு வரவேற்பு இராப்போசன விருந்தையும் இசை நிகழ்ச்சியையும் ஒழுங்கு செய்தது. ஆனால் விரல் விட்டு எண்ணக்கூடிய இளைஞர்கள்தான் வந்தார்கள்.

வராதவர்கள் சொன்ன காரணம் “ நாம் இப்போது அகதிகள் இல்லை”

எனக்கு, ‘ஆறு கடக்கும் வரைதான் அண்ணன், தம்பி கதை’ தான் ஞாபகத்துக்கு வந்தது.

குறிப்பிட்ட 83 தமிழ் இளைஞர்களுக்கும் இந்த நாடு அகதி அந்தஸ்து கொடுத்து இங்கு வாழ்வதற்கும் அனுமதித்தபின்னர், ஆட்களை படகுகளில் கடத்தும் வியாபாரிகள் அதிகரித்தனர். அதற்கு 2009 இல் வன்னியில் நடந்த உக்கிரமான மோதலும் முக்கிய காரணமாகியது.

screen-shot-2015-07-07-at-11-13-20-am.pn

வருபவர்கள் மலேஷியா வந்து அங்கிருந்து படகேறுவதாக சொல்லப்பட்டது.

சில வருடங்களுக்கு முன்னர் இந்தோனேஷியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 260 பேரில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் தம்மை அவுஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்குமாறு கோரும் காட்சிகளை இங்குள்ள தொலைக்காட்சிகளில் பார்த்தபோது நெகிழ்ந்துபோனேன்.

அதிலும் ஒரு குழந்தை தெளிவான ஆங்கிலத்தில் பேசி கண்கலங்க வைத்துவிட்டது.

அவுஸ்திரேலியாவின் அன்றைய பிரதமர் இந்த படகு மக்களால் தமது அரசுக்கு பெரிய தலையிடி வரும் என்று முன்பே தெரிந்துதான், அதனைத்தடுப்பதற்காக அதிகாரிகளை இலங்கை அரசுடன் பேசுவதற்காக அனுப்பிவைத்தார்.

இலங்கை அரசு கடல் கண்காணிப்புகளை மேற்கொண்டு ஆள் கடத்தலில் ஈடுபடும் புள்ளிகளை பிடிப்பதாகவும் (நீர்கொழும்பு காலி மட்டக்களப்பு பிரதேசங்களில்) செய்திகள் வந்தன. ஆனால், படகுகள் வந்துகொண்டுதானிருந்தன.

ஒருவருக்கு 15 ஆயிரம் டொலர்கள் இந்த படகுப்பயணத்துக்கு தேவைப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.

அக்காலப்பகுதியில் ஒரு நாள் இரவு எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

எனக்குத்தெரிந்த ஒரு பெண் யாழ்ப்பாணத்திலிருந்து பேசினார், நான் அவரை இறுதியாக குப்பிளானில்தான் சந்தித்திருக்கிறேன். அதுவும் 1983 ஆம் ஆண்டில்!

“அண்ணா நான் இன்னார் பேசுகிறேன். உங்கள் ஊருக்கு அருகிலா கிறிஸ்மஸ் தீவு இருக்கிறது?” என்று கேட்டார்.

“இல்லையே அது வேறு ஒரு தீவு. விமானத்தில் செல்லவே சுமார் ஐந்து அல்லது ஆறு மணிநேரம் எடுக்கும். “என்றேன்.

“எனது மகனும் அங்கே வந்துவிட்டான். உங்களால் பார்க்க முடியுமா?”

“இல்லையம்மா. நாம் அங்கே செல்ல முடியாது. படகுகளில் வருபவர்களை தடுத்து வைத்து விசாரிக்கும் ஒரு தீவுதான் அது. உங்கள் மகனின் பெயரைத்தாருங்கள். அப்படி ஒருவர் அங்குவந்து சேர்ந்திருக்கிறாரா..? என்று இங்கிருந்து செல்லும் மொழிபெயர்ப்பாளர்கள் ஊடாக கேட்டு விசாரிக்கின்றேன்.” என்று சொல்லி விட்டு “அது சரி எனது தொலைபேசி இலக்கத்தை எங்கிருந்து பெற்றீர்கள் ? “ எனக்கேட்டேன்.

“உங்கட இலக்கத்தையா எடுக்க முடியாது? “ – எனச்சாதாரணமாகச்சொல்லிவிட்டு தொலைபேசியை வைத்துவிட்டார்.

அவர் குறிப்பிட்ட பெயரில் ஒரு இளைஞர் அங்கே இருப்பதாக பின்னர் தொடர்புகள் மூலம் அறிந்தேன்.

இவ்வளவு பணம் கொடுத்து ஏன் மக்கள் படகுகளில் உயிரைப்பணயம் வைத்து புறப்படுகிறார்கள்..? என்ற கலக்கமும் அப்போது வந்தது.

எங்கள் ஊர் நீர்கொழும்பில் கடற்கரையோரமாக புனித செபஸ்தியார் தேவாலயத்திற்கு முன்பாக தெருவோரத்தில் ஒரு பெரிய விளம்பரப்பலகையை பார்த்தேன். அதில் பெருந்தொகைப்பணத்தைக்கொடுத்து உயிரை பணயம் வைத்து கடல் கடந்து செல்லவேண்டாம் என்று அச்சுறுத்தலும் எச்சரிக்கையும் விடுத்து தமிழ் – சிங்கள மொழிகளில் எழுதப்பட்டிருந்தன.

அங்கே ஒவ்வொரு தடவை செல்லும்போதும் சில பெற்றோர்கள் என்னைத் தேடி வந்து அவுஸ்திரேலியாவிற்கு படகுகளில் வந்த தங்கள் பிள்ளைகள் பற்றி விசாரிப்பார்கள்.

“அவர்களுக்கு இங்கே வதிவிட அனுமதி கிடைக்குமா ..? “என்று, நான் ஏதோ குடிவரவு திணைக்களத்தில் வேலைசெய்கின்றேன் என்ற எண்ணத்தில் அவர்கள் கேட்கும்போது மிகுந்த கவலையாக இருக்கும்.

“உங்கள் பிள்ளைகளை நல்ல நண்பர்களுடன் பழகச்சொல்லுங்கள். படிக்கச்சொல்லுங்கள். முடிந்தவரையில் உழைத்து, அனுமதி கிடைக்காதுபோனால் வரச்சொல்லுங்கள். அவர்களை வைத்திருப்பதா..? திருப்பி அனுப்புவதா..? என்பதை அரசுதான் தீர்மானிக்கும். “என்று தேறுதல் சொல்வேன்.

எனது இயலாமையை வேறு எப்படித்தான் சொல்வது..!?

கொலம்பஸ், வாஸ்கொட காமா, கப்டன் குக் ஆகியோரும் இப்படித்தான் ஒரு காலத்தில் உயிரைப்பணயம் வைத்து கடல் கடந்து வந்து நாடுகளை கண்டு பிடித்தார்கள்.

நாம் வசிக்கும் விக்ரோரியா மாநிலத்தில் இரண்டு நூற்றாண்டிற்கு முன்னர் தங்கம் அகழ்ந்த ஒரு பிரதேசம் இருக்கிறது. பலரட் என்ற பெயரில் இருக்கும் அந்த ஊரிலிருந்த தங்கச்சுரங்கம் (சவரின் ஹில்) அமைந்த இடத்தை உல்லாசப்பிரயாணத்துக்குரியதாக்கிவிட்டார்கள். 1887 ஆம் ஆண்டு காலத்தில் அந்த இடம் எப்படி இருந்ததோ அப்படியே வைத்து பராமரிக்கிறார்கள். நடை உடை பாவனை குதிரை வண்டி என்பன அங்கு செல்பவர்களை 18 ஆம் நூற்றாண்டுக்கு அழைத்துச்செல்கிறது.

அங்கு ஒரு நாள் சென்றபோது அங்கிருந்தவர்கள், “எந்தப்படகில் வந்தீர்கள்?” என்று வேடிக்கையாக கேட்டார்கள்.

18 ஆம் நூற்றாண்டில் இந்த கடல்சூழ்ந்த கண்டத்துக்கு அந்நிய நாடுகளிலிருந்து மக்கள் படகுகளில்தான் வந்தார்கள். 21 ஆம் நூற்றாண்டிலும் வந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் காரணங்கள்தான் வேறு.

இலங்கைத்தமிழர் விவகாரம் இந்திய அரசியலில் பேசுபொருளாகியதுபோன்று, அவுஸ்திரேலியாவிலும் இந்த படகு மக்களின் விவகாரம் பேசுபொருளானது.

ஆயுதக்கடத்தல், போதை வஸ்து கடத்தல், கள்ளக்கடத்தல் என்றெல்லாம் கடந்த காலங்களில் அறிந்தோம். பின்னாளில் மனிதக்கடத்தல் பற்றி ஊடகங்கள் பதிவுசெய்தன.

தற்போது கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸை யார் யார் நாடுகளுக்குள் கடத்தினார்கள்..? என்பதையும் அதனால் பலியானவர்களின் எண்ணிக்கையையும் – தொற்றாளர் விபரத்தையும் ஊடகங்கள் புள்ளிவிபரத்துடன் வெளியிட்டு வருகின்றன.

இவ்வேளையில் இந்த நாட்டுக்குள் வந்து அகதிக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, விமானத்தில் ஏறுவதும் இறங்குவதுமாக அல்லல்படும் இளம் குடும்பம் பற்றிய செய்தி வெளியாகியிருக்கிறது.

நடேசன் – பிரியா தம்பதியினரும் அவர்களுக்கு இங்கு பிறந்த குழந்தைகள் கோபிகா – தருணிகா ஆகியோருக்கு வழங்கப்பட்ட நாடுகடத்தல் உத்தரவுக்கு சமஷ்டி நீதிமன்றம் முட்டுக்கட்டை போட்டிருக்கும் செய்தி வெளியாகியுள்ளது.

“ஏறச்சொன்னால் எருதுக்கு கோபம் இறங்கசொன்னால் முடவனுக்கு கோபம்“ என்ற முதுமொழிதான் நினைவுக்கு வருகிறது.

கடலின் அக்கரை செல்பவர்களின் கனவுகள் கண்ணீரில் கலந்தவை. உப்புக்காற்றை சுவாசித்தவாறு வந்து ஜலசமாதியானவர்கள் பற்றிய கண்ணீர்க்கதைகளும் உண்டு.

மக்களுக்காகத்தான் அரசுகள். அரசுகள்தான் மக்களுக்கு சுபிட்சமான வாழ்வை வழங்கவேண்டும். வழங்காத பட்சத்தில் கடலின் அக்கரை நோக்கிய பயணங்கள் உயிரைப்பணயம் வைத்தும் படகுகளில் தொடரத்தான் செய்யும்.

93874087_10157140683933372_1012000913205

அவுஸ்திரேலியாவில் குவின்ஸ்லாந்து மாநிலத்தில் வதியும் ஈழத்தின் முன்னணி எழுத்தாளர் தாமரைச்செல்வி எழுதியிருக்கும் 550 பக்கங்கள் கொண்ட உயிர்வாசம் நாவலை இந்த படகு மனிதர்களின் கதைகளின் பின்னணியில்தான் பார்க்கவேண்டும்.

– முருகபூபதி | அவுஸ்திரேலியா

letchumananm@gmail.com

https://vanakkamlondon.com/stories/2020/10/88001/

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

உயிர்வாசம் நாவலிற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க விருது கிடைத்திருக்கிறது என அறிந்துகொண்டேன்.. 

வாழ்த்துக்கள்!!

“தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க விருது.
*கே.பாலசந்தர் நினைவு விருது* : நாவல் 
உயிர்வாசம் - தாமரைச் செல்வி 
சிந்தன் புக்ஸ்

https://www.facebook.com/100001015088637/posts/3685076138202853/

என்னிடம் முகப்புத்தகம் இல்லாதமையால் Whatappல் வந்த தகவலையே பதியமுடிகிறது..

https://m.facebook.com/100001015088637/posts/3685076138202853/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.