Jump to content

ஈரான் அமரிக்க மோதலும் ரூசியாவும். - வ.ஐ.ச.ஜெயபாலன் . - வ.ஐ.ச.ஜெயபாலன் 


Recommended Posts

ஈரான் அமரிக்க மோதலும் ரூசியாவும். - வ.ஐ.ச.ஜெயபாலன் . - வ.ஐ.ச.ஜெயபாலன் 

*

அமரிக்கா ஈரானை நிபந்தனை அற்ற பேச்சுவார்த்தைக்கு அழைத்த சேதி பலருக்கும் வியப்பாக அமைந்துவிட்டது. அதனை ஈரான் நிராகரித்து விட்டது.

அமரிக்க ஈரான் மோதலில் பழம் எடுத்தது முக்கியமாக ரூசியாதான். ஈரானுக்கு வெற்றியின் கொட்டைகளும் பழத்துண்டுகளும் கிடைத்திருக்கிறது.  

IRAQ_-_Saddam_corda.jpg.

அமரிக்கா ஈரான் யுத்தத்தில் உண்மையில் ரஸ்ஸியாதான் வெற்றி பெற்று வருகிறது.  அமரிக்கா சதாம் குசேயினை விழுத்தாமல் இருந்தைருந்தால் ஈரான் ஈராக் சீரியா லெபனான் யேமன் மற்றும் வழைகுடா நாடுகளில் சியா  ஐக்கிய வலைப்பின்னல் உருவாகி இருக்க முடியாது. பரந்து பட்ட சியா முஸ்லிம்களின் ஐக்கிய த்தை தடுத்துவந்த  சதாம் குசேனை அழித்ததின் மூலம் அமரிக்கா தனக்குத் தானே சூனியம் வைத்துவிட்டது. சதாம் குசெயினின் கழுத்தி மாட்டுப்பட்ட தூக்குக் கயிற்றுள் அமரிக்க மத்திய கிழக்கு ராஜதந்திரமும் மாட்டிக் கொண்டதி. அங்கிருந்துதான் அமரிக்காவின் வீழ்ச்சி ஆரம்பிக்கிறது.                                                                                                                                                                                                                          ஈரானின்சியா  மத  வலைபபின்னலின்  உதவியின்றி சீரியா லெபனான் யேமன் உட்பட லிபியா வரையிலான  மத்திய கிழக்கிலும் ரூசியா பலமாக வேரூன்றி இருக்க முடியாது.

மேலும் முக்கியமாக   துல்லியமாக தாக்கி அழிக்கும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை சீரியா ஊடாகவும் ஈரான் ஊடாகவும் பரீட்சித்து அமரிக்காவை மறை முகமாக எச்சரிக்கும் வாய்ப்பும் ரூசியாவுக்கு கிட்டி இருக்கிறது.

இன்று மத்தியகிழக்கில் அமரிக்காவைவிட ஈரானைவிட முக்கியமான விளையாட்டு வீரனாக சீனாவின் அனுசரணையுடன்   தன்னை நிலை நிறுத்தி வருவது  ரூசியாதான்.    

.

 

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, poet said:

ஈரான் அமரிக்க மோதலும் ரூசியாவும். - வ.ஐ.ச.ஜெயபாலன் . - வ.ஐ.ச.ஜெயபாலன் 

*

 

அமரிக்கா ஈரான் யுத்தத்தில் உண்மையில் ரஸ்ஸியாதான் வெற்றி பெற்று வருகிறது.  அமரிக்கா சதாம் குசேயினை விழுத்தாமல் இருந்தைருந்தால் ஈரான் ஈராக் சீரியா லெபனான் யேமன் மற்றும் வழைகுடா நாடுகளில் சியா  ஐக்கிய வலைப்பின்னல் உருவாகி இருக்க முடியாது. பரந்து பட்ட சியா முஸ்லிம்களின் ஐக்கிய த்தை தடுத்துவந்த  சதாம் குசேனை அழித்ததின் மூலம் அமரிக்கா தனக்குத் தானே சூனியம் வைத்துவிட்டது. சதாம் குசெயினின் கழுத்தி மாட்டுப்பட்ட தூக்குக் கயிற்றுள் அமரிக்க மத்திய கிழக்கு ராஜதந்திரமும் மாட்டிக் கொண்டதி. அங்கிருந்துதான் அமரிக்காவின் வீழ்ச்சி ஆரம்பிக்கிறது.                                                                                                                                                                                                                          ஈரானின்சியா  மத  வலைபபின்னலின்  உதவியின்றி சீரியா லெபனான் யேமன் உட்பட லிபியா வரையிலான  மத்திய கிழக்கிலும் ரூசியா பலமாக வேரூன்றி இருக்க முடியாது.

மேலும் முக்கியமாக   துல்லியமாக தாக்கி அழிக்கும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை சீரியா ஊடாகவும் ஈரான் ஊடாகவும் பரீட்சித்து அமரிக்காவை மறை முகமாக எச்சரிக்கும் வாய்ப்பும் ரூசியாவுக்கு கிட்டி இருக்கிறது.

இன்று மத்தியகிழக்கில் அமரிக்காவைவிட ஈரானைவிட முக்கியமான விளையாட்டு வீரனாக சீனாவின் அனுசரணையுடன்   தன்னை நிலை நிறுத்தி வருவது  ரூசியாதான்.    

.

 

.

இலங்கை அரசின் தொடர் கண்காணிப்பில் இருக்கும் நீங்கள்  இப்படி சர்வ்தேச அரசியல் பற்றி பேசுவது உங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா இருக்காதா ஐயா?

 

Link to comment
Share on other sites

மிகவும் நன்றி valavan, அரசியல் இராசதந்திர ரீதியாக இலக்குத்தான் முக்கியம். பழம் தவிர காம்பு இலை எதையும் கண்டு கொள்ளக்கூடாது. வாய்திறக்கக்கூடாது. இந்தியா சர்வதேசம் தொடர்பாக வாய்திறக்கமுன்னம் இதனை யோசிப்பதுண்டு. இந்த ஆய்வில் அமரிக்கா ரஸ்சியா ஈரான் தொடர்பான என் விமர்சனம் கோட்பாட்டு ரீதியாக மூன்று தரப்புக்கு வெளியே நின்றுதான் கருத்துச் சொல்லியுள்ளேன். மூன்றுதரப்புக்கும் உலக சமாதானத்துக்கும்  உதவக்கூடிய கருத்துத்தான் நண்பா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவி அவர்களே,

அதெல்லாம் இருக்கட்டும் ஊங்களுக்குத்தெரிந்த தமிழக அரசியல்வாதிகளைக் கண்டால் தேசியத்தலைவர் மேதகு வெலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மீது தமிழக சட்டமன்றத்தில் ஆளும்தரப்பும் எதிர்த்தரப்பும் மாறி மாறிச் சேறு அள்ளி வீசியதை ஈழத்தமிழர்கள் ஒருசிலர் ரசிக்கவில்லை எனக்கூறவும். காரணம் தமிழக சட்டசபை என்பது தமிழ் நாட்டில் வாழும் ஏழுகோடிக்கு மேற்பட்ட மக்களைப் பிரதிநிதுத்துவப்படுத்தும் ஒரு அரச அலகாகும், தவிர அன்று அவர்கள் பேசியவார்த்தைகள் சட்டசபையின் குறிப்பேடுகளில் காலவதியாகாமல் அப்படியே இருக்கும். 

சிலவேளை உங்கள்போன்ற அரசியல்விமர்சகர்கள் கலைஞர்களுக்கு இது சாதாரணமாக இருக்கலாம் அல்லது நீங்கள் தேசியத்தலைவர்மீதான அவர்களது விமர்சனங்களுடன் ஒத்துப்போகலாம் அதை விடுத்து. 

பின்லாந்து தேசத்தின் தலைநகர் கெல்சிங்கியிலிருந்து தமிழ்நாட்டின் அரசியல்வாதிகளது தகிடுதத்தங்கள் அப்பட்டமாகக் கவனித்துவரும் ஏனைய ஈழத்தமிழர் போல் அல்லது தமிழ்தேசியம் நோக்கிப்போகிறேன் எனப் பொதுவெளியில் சில பல அமைப்புகளுடன் சேர்ந்து வெள்ளையும் சுள்ளையுமாக அலைபவர் போல் தட்டில் சோத்துக்குப் பதிலாக வேறோ  ஒன்றைப் போட்டுத்தின்பவர்போல் என்னால் இருந்துவிடமுடியாது. இப்படியான் தமிழக அரசியல்  ***************** ************* ஆதரவை நாம் சட்டமன்றச் சம்பவத்தினை எதிர்த்து அரசியல் செய்தால் இழந்துவிடுவோம் என் யாரும் எண்ணினால், எனது அபிப்பிராயத்தின்படி அதன் பிரதிபலனாக தமிழீழமே கிடைத்தாலும் என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது. வளைவுசுளிவுகள் எல்லோருக்கும் பொருந்தலாம் என்னளவில், தலைவர் விடையத்தில் இல்லை 

Link to comment
Share on other sites

இப்ப சென்னையிலும் இந்தியாவிலும் தலைவர் பிரபாகரன் பற்றிய சர்ச்சைகள் மிக மிக குறைந்துவிட்டது. நாங்கள் வாய் திறந்து மீண்டும் சர்ச்சைகளை வளர்த்து விடுவது தப்பான ரஜதந்திர மாகும்.  

 மற்றபடி யாரும் ஆதாரங்கள் அடிப்படையில் ஆரோக்கியமாக விமர்சிப்பது பற்றி அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. மற்றப்படி சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுப்பதுபோல செயல்படுவது மிக மிக தப்பாகும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.