Jump to content

ரஜினியை சந்தித்த விக்னேஸ்வரன் : ஈழத்தமிழர் பிரச்சினை குறித்து விளக்கினார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரஜினியை சந்தித்த விக்னேஸ்வரன் : ஈழத்தமிழர் பிரச்சினை குறித்து விளக்கினார்

ரஜினியை சந்தித்த விக்னேஸ்வரன் : ஈழத்தமிழர் பிரச்சினை குறித்து விளக்கினார்

தமிழகத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நடிகர் ரஜனிகாந்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் விருப்பத்தின் பேரில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

சென்னையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது இலங்கை தமிழர்களில் பிரச்சினைகள் தொடர்பாக விக்னேஸ்வரன் நடிகர் ரஜினிக்கு விளக்கியுள்ளர்.

இதேவேளை வடக்கிற்கான விஜயமொன்றை மேற்கொள்ளுமாறும் விக்னேஸ்வரனால் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. -(3)
 

http://www.samakalam.com/செய்திகள்/ரஜினியை-சந்தித்த-விக்னேஸ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, கிருபன் said:

தமிழகத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நடிகர் ரஜனிகாந்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் விருப்பத்தின் பேரில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

ஆக ரஜனிகாந்துக்கும் அரசியல் செய்ய ஈழத்தமிழர் தேவைப்படுகின்றனர்.
விக்கியருக்கு தேவையில்லாத வேலை.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"மூஞ்சுறு தான் போக வழியைக் காணேல்லையாம் விளக்குமாத்தையும் சேர்த்து காவிச்ச்சுதாம்"....ரஜனியை பார்க்க விருப்பம் என்றால் போய் பார்த்திட்டு வாறது தானே 🤨
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1. ஈழத்தமிழர் விவகாரத்தில் விமர்சனப் பார்வை உடையவர் ரஜனி

2. பாஜகவில் கணிசமான ஆளுமை உள்ளவர் ரஜனி

3. தமிழ்நாட்டு மக்களை சொல்ல முடியாது - ரஜனியை அடுத்த முதல்வர் ஆக்கி அழகு பார்த்தாலும் பார்பார்கள்.

4. கூப்பிட்டால் முகத்தை முறிக்காமல் போய் சந்தித்து, அவரின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படுத்த முடியாவிட்டாலும், முனைவதில் தப்பில்லையே.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

1. ஈழத்தமிழர் விவகாரத்தில் விமர்சனப் பார்வை உடையவர் ரஜனி

2. பாஜகவில் கணிசமான ஆளுமை உள்ளவர் ரஜனி

3. தமிழ்நாட்டு மக்களை சொல்ல முடியாது - ரஜனியை அடுத்த முதல்வர் ஆக்கி அழகு பார்த்தாலும் பார்பார்கள்.

4. கூப்பிட்டால் முகத்தை முறிக்காமல் போய் சந்தித்து, அவரின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படுத்த முடியாவிட்டாலும், முனைவதில் தப்பில்லையே.

 

என்னைப் பொறுத்த வரை இனி மேல் எங்கட மக்களுக்கான தீர்வு என்பது சிங்களவர் கையில் தான் உள்ளது ...அவர்கள் மனங்களை தான் மாத்த முயல வேண்டும்...வேறு யாராய் இருந்தாலும் தலையிட முடியாது அமெரிக்காவாக இருந்தாலும் சரி ,இந்தியாவாக இருந்தாலு சரி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

என்னைப் பொறுத்த வரை இனி மேல் எங்கட மக்களுக்கான தீர்வு என்பது சிங்களவர் கையில் தான் உள்ளது ...அவர்கள் மனங்களை தான் மாத்த முயல வேண்டும்...வேறு யாராய் இருந்தாலும் தலையிட முடியாது அமெரிக்காவாக இருந்தாலும் சரி ,இந்தியாவாக இருந்தாலு சரி 

வாஸ்தவமான பேச்சுத்தான்,
ஆனால் எல்லா விதத்திலும் முயற்சிப்பதில் தவறில்லையே.

 

அவர்களை வழிக்கு கொண்டுவர, இந்திய அழுத்தமும் கட்டாயம் தேவை.

இந்திய அளுத்தத்தை கொண்டுவர ரஜனி பயன்படக்கூடும். 

தமிழ்நாட்டில் பாஜகவின் ஆன்மீக அரசியல் கொஞ்சமேனும் வேறூன்ற இலங்கை விடயத்தில் அக்கறை வேண்டும் என்ற நிலையை பிஜேபிக்கு ஏற்படுத்த ரஜனி உதவக்கூடும்.

இது ஒரு வகை உணவுச் சங்கிலி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி 

அப்படியெனில் ஒட்டுமொத்த தமிழர்கள் சார்பிலும் ஒருக்கால் மகிந்த தரப்பைச் நீங்கள் சந்திக்கலாம்தானே, தமிழ்மக்கள் நலனுக்காக நீங்களொருசில விட்டுக்கொடுப்பை நீங்கள் முதலில் செய்யலாம்தானே.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் நன்பர்களை உருவாக்க மாட்டோம் என்டு ஆடும் பிடிக்கிற குட்டைகள் ஆச்சே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அநேகமாக இந்த திரி பற்றி எரியும் என்டு நினைக்குறன் ..👍

78340375_2786210318111352_89337608845519

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

இனி மேல் எங்கட மக்களுக்கான தீர்வு என்பது சிங்களவர் கையில் தான் உள்ளது ...அவர்கள் மனங்களை தான் மாத்த முயல வேண்டும்...வேறு யாராய் இருந்தாலும் தலையிட முடியாது அமெரிக்காவாக இருந்தாலும் சரி ,இந்தியாவாக இருந்தாலு சரி 

இதுதான் நிகழ்கால & எதிர்கால யதார்த்தம்.

ஆனால் சிங்களவர்கள் மனங்களை மாத்த முயலவேண்டும் என்று சொன்னீர்கள் பாருங்கள், அவர்கள் மனம் மாறுவார்கள் என்றா நினைக்கிறீர்கள்?

இலங்கை எனும் குட்டி தீவில் அவர்களுக்கெதிராக ஒருகாலம்..

குட்டி தொகை கொண்ட தமிழர் இனம் சம பலம் கொண்ட ராணுவத்தை வைத்திருந்தபோதே  ஆயுதத்தை முதலில் கீழே வைய்யுங்கள் தீர்வு தருகிறோம் என்று சொன்னவர்கள் அவர்கள்...

 

இப்போ எந்த பலமும் எம்மிடம் இல்லாதபோது மனம் மாறுவார்கள் அல்லது அவர்கள் மனங்களை மாற்ற முடியும்  என்பது தங்களின் அதீத கற்பனை.

அதெல்லாம், உங்கள் பேரன் பேர்த்திகள், அவர்களுடைய பேரன் பேர்த்திகள் காலத்திலும் சாத்தியமில்லை.

சுவரில்லா சித்திரங்கள் படத்தில் கல்லாபெட்டி சிங்காரம் ஒரு வசனம் பேசுவார்..

‘கண்ணடிச்சா வராத பொம்பள கையை பிடிச்சு இழுத்தா வரவா போறா’?

ஈழ தமிழரின் நிலை என்பது இனிமே சுவரில்லாத சித்திரங்கள்தான்.

 

Link to comment
Share on other sites

6 hours ago, ரதி said:

என்னைப் பொறுத்த வரை இனி மேல் எங்கட மக்களுக்கான தீர்வு என்பது சிங்களவர் கையில் தான் உள்ளது ...அவர்கள் மனங்களை தான் மாத்த முயல வேண்டும்...

நாம்பன் மாட்டில் பால் கறந்து பொங்கல் கொண்டாடப் போகிறோம். நம்பிக்கை தருகிறார் நங்கை. 😋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

என்னைப் பொறுத்த வரை இனி மேல் எங்கட மக்களுக்கான தீர்வு என்பது சிங்களவர் கையில் தான் உள்ளது ...அவர்கள் மனங்களை தான் மாத்த முயல வேண்டும்...வேறு யாராய் இருந்தாலும் தலையிட முடியாது அமெரிக்காவாக இருந்தாலும் சரி ,இந்தியாவாக இருந்தாலு சரி 

ரதியின் இந்தப்பதிலை ஏற்றுக்கொள்ள யாரும் தயார் இல்லை ஆனால் இதுதான் உன்மை தமிழர்கள் நண்டுகள் இழுத்துகொண்டே இருப்பார்கள் மேல் ஏறும் நண்டை சிங்களவர்கள் சட்டிகள் அந்த சட்டிக்குள் நாம்  சட்டியை விட்டு வெளியில் இறங்கும் முடியாது ஓடவும்முடியாது .

ரதி தமிழர்கள் பிரச்சினையை சிங்களவர்களுக்கு எடுத்துரைக்க இதுவரைக்கும் ஆள் இல்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஜனியும் விக்கியும் ஆன்மிகவாதிகள் காரியவாதிகள். அவர்களின் ஆன்மிக சந்திப்பு,கலந்துரையாடலை இலங்கை தமிழர்களில் பிரச்சினைகளோடு கற்பனை செய்து எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள இனம் மனம் மாறவேண்டும் என்பதை எப்படி நாங்கள் எதிர்பார்க்கிறோமோ அதேபோல் தமிழினமும் மனம் மாறவேண்டும். தமிழ் தலைமைகளின் மனங்கள் மாறவேண்டும்.

இனப்பிரச்சினையை முன்வைத்து உழைப்பு தேடும் இன்றைய தலைமைகளுக்கு பதிலாக அதை சேவை எனக்கருதி உழைக்கும் உத்தமர்கள் தோன்றவேண்டும். சுக்கு நூறாக சிதறியிருக்கும் எமது அரசியல் பலம் மீண்டும் ஒன்றாக வேண்டும்.

முதற்கட்டமாக குறைபாட்டை எமது தரப்பில் இருந்து சரி செய்துகொள்ள முயற்சிப்பதே சிறந்தது. நல்ல அரசியல் அடித்தளத்தை கட்டியிருக்கிறோமா என்பதை நிச்சயப்படுத்திக்கொண்டு ஒருமித்த நோக்குடன் பயணித்தால் மட்டுமே தீர்வு சாத்தியப்படும்.

Link to comment
Share on other sites

10 hours ago, சுவைப்பிரியன் said:

நாங்கள் நன்பர்களை உருவாக்க மாட்டோம் என்டு ஆடும் பிடிக்கிற குட்டைகள் ஆச்சே.

இதற்கும் புதிய கட்சி ஆரம்பித்ததிலிருந்து அரைவேக்காட்டு அரசியல் செய்யும் மோட்டு அரசியவாதி விக்னேஸ்வரனுக்கும் எட்டா பொருத்தம்.  
உதாரணம் கீழே:

மேலுள்ள கூற்றில் இஸ்ரேலை வரிந்துகட்டியதன்  மூலம் விக்னேஸ்வரன் நண்பர்களை உருவாக்கிறாரா அல்லது பகைவர்களை உருவாக்கிறாரா?

எனவே விக்னேஸ்வரனின் அண்மைக் கால செயற்பாடுகளை பார்க்கும் போது, அவர் ஒரு அரைவேக்காட்டு அரசியல்வாதியாக, மோட்டு அரசியல்வாதியாக, பித்தலாட்ட அறிக்கைகளை விடும் நயவஞ்சக அரசியல்வாதியாக பரிணமித்து வருவது தெளிவு.

இல்லை என்றால், இவற்றை  விக்னேஸ்வரன் தெளிவாகத்தான் செய்கிறார் என்றால், விக்னேஸ்வரன் ஒரு கைக்கூலி அரசியல்வாதியாக, எலும்புத்துண்டுக்கு பின்னால் அலையும் கேவலமான அரசியல்வாதியாக மாறிவிட்டார் என்பது தெளிவு.

எனவே, விக்னேஸ்வரன் மாற்றுத் தலைலைமை வழங்குவார் என நம்புபவர்கள், அவர் சம்மந்தன்-சுமந்திரன் கும்பலின் அல்லது டக்ளஸ் கும்பலின் அல்லது கஜேந்திரகுமார் கும்பலின் அல்லது ஆனந்தசங்கரி வகை அரைவேக்காட்டு/கைக்கூலி அரசியல்வாதிகளை சிறந்தவர் என கூறும் நிலை தற்போது இல்லை என்பதை விளங்கிக்கொள்ளவேண்டும்.

தொடர்ந்தும் தான் மாற்றுத் தலைமையை வழங்க முடியுமென்று விக்னேஸ்வரன் நம்புவாரானால், அவர் மேல் நம்பிக்கை வைத்துள்ளவர்கள் நம்புவார்களானால், முதலில் விக்னேஸ்வரன் தனது தான்தோன்றித் தனமான / அரைவேக்காட்டு / கைக்கூலி அரசியல் முயற்சிகளை நிறுத்தி ஒரு சிறந்த குழுவின் வழிநடத்தலுடன் பொறுப்புடன் நடக்க தன்னை மாற்றிக்கொள்வதுடன், அந்த உறுதிமொழியை பகிரங்கமாக அறிவிக்க வேண்டிய கடப்பாடு உள்ளது..

Link to comment
Share on other sites

விக்கி ஐயாவின் வங்குரோத்து அரசியலை இது காட்டுகிறது. இலங்கை தமிழர்பற்றி அக்கறையே இல்லாத அல்லது ஒரு ஐந்து சதமெனும் செலவு செய்யாத  ஒரு நடிகன்தான் இந்த மராட்டியன். அது சரி இவனிடம் என்ன இருக்குதென்று இவர் போய் ரஜனி வீடு தேடி சென்று  சந்திக்கிறார். அவன் இன்னும் ஒரு கட்சியே ஆரம்பிக்கவில்லை. எல்லாம் மாட்டு தலைமைக்கு வந்த ஆசைதான்.   

1 hour ago, போல் said:

இதற்கும் புதிய கட்சி ஆரம்பித்ததிலிருந்து அரைவேக்காட்டு அரசியல் செய்யும் மோட்டு அரசியவாதி விக்னேஸ்வரனுக்கும் எட்டா பொருத்தம்.  
உதாரணம் கீழே:

மேலுள்ள கூற்றில் இஸ்ரேலை வரிந்துகட்டியதன்  மூலம் விக்னேஸ்வரன் நண்பர்களை உருவாக்கிறாரா அல்லது பகைவர்களை உருவாக்கிறாரா?

எனவே விக்னேஸ்வரனின் அண்மைக் கால செயற்பாடுகளை பார்க்கும் போது, அவர் ஒரு அரைவேக்காட்டு அரசியல்வாதியாக, மோட்டு அரசியல்வாதியாக, பித்தலாட்ட அறிக்கைகளை விடும் நயவஞ்சக அரசியல்வாதியாக பரிணமித்து வருவது தெளிவு.

இல்லை என்றால், இவற்றை  விக்னேஸ்வரன் தெளிவாகத்தான் செய்கிறார் என்றால், விக்னேஸ்வரன் ஒரு கைக்கூலி அரசியல்வாதியாக, எலும்புத்துண்டுக்கு பின்னால் அலையும் கேவலமான அரசியல்வாதியாக மாறிவிட்டார் என்பது தெளிவு.

எனவே, விக்னேஸ்வரன் மாற்றுத் தலைலைமை வழங்குவார் என நம்புபவர்கள், அவர் சம்மந்தன்-சுமந்திரன் கும்பலின் அல்லது டக்ளஸ் கும்பலின் அல்லது கஜேந்திரகுமார் கும்பலின் அல்லது ஆனந்தசங்கரி வகை அரைவேக்காட்டு/கைக்கூலி அரசியல்வாதிகளை சிறந்தவர் என கூறும் நிலை தற்போது இல்லை என்பதை விளங்கிக்கொள்ளவேண்டும்.

தொடர்ந்தும் தான் மாற்றுத் தலைமையை வழங்க முடியுமென்று விக்னேஸ்வரன் நம்புவாரானால், அவர் மேல் நம்பிக்கை வைத்துள்ளவர்கள் நம்புவார்களானால், முதலில் விக்னேஸ்வரன் தனது தான்தோன்றித் தனமான / அரைவேக்காட்டு / கைக்கூலி அரசியல் முயற்சிகளை நிறுத்தி ஒரு சிறந்த குழுவின் வழிநடத்தலுடன் பொறுப்புடன் நடக்க தன்னை மாற்றிக்கொள்வதுடன், அந்த உறுதிமொழியை பகிரங்கமாக அறிவிக்க வேண்டிய கடப்பாடு உள்ளது..

சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி. சும்மா இருந்த அரசை இவர்தான் இன்னும் தூண்டி விடுகிறார் மேலும் மேலும் குடியேற்றங்களை செய்யும்படி. அவன் பாட்டுக்கு இருந்த இஸ்ரவேலயும் இதுக்குள் இழுத்துவிட்டிருக்கிறார் இந்த அரசியல் அஞ்சானி. தமிழனின் தலை எழுத்து இப்படியான மாட்டு தலைமைகளை வைத்துக்கொண்டு அரசியல் செய்ய வேண்டி இருக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலேயே ஈழத்தமிழ் மக்களின் அபிலாசைகள் மென்மேலும் சிதைக்கப்படுகிறது. ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம் இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம் என்பதுபோல எப்பக்கத்திலும் எதனையும் உறுதியாக முன்னெடுக்கமுடியாத அவலம் எம்மக்களைச்சூழ்ந்திருக்கிறது. மூழ்கிறவன் கிடைக்கும் சின்னத் துரும்பையும் பற்றுவான் என்பதற்கிணங்க விக்னேஸ்வரன் இதனை மேற்கொண்டிருக்கலாம். ஏனெனில் ஈழத்தமிழர் பிரச்சனைக்கு எவராலும் தீர்வெழுத முடியாது என்பதே நிதர்சனம். அவ்வகையில் விக்னேஸ்வரன் பிரபலங்கள் ஊடாக ஏதாவது முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கிறதா என்று அறிய முயற்சித்திருக்கக்கூடும். ரதி சொல்வதுபோல சிங்களம் நினைத்தாலன்றி தமிழருக்கான எதனையும் எவராலும் பெற்றுத்தரமுடியாது. புலம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டு அவன் பிழை இவன் பிழை என்று உரைப்பதைத்தவிர எம்மால் எதனை உறுதியாக உருவாக்க முடிந்தது? நம்பிக்கையீனங்களூடாக பயணிக்கும் நாம் வெற்றியை தொடுவது கடினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, goshan_che said:

எல்லா விதத்திலும் முயற்சிப்பதில் தவறில்லையே.

19 hours ago, goshan_che said:

இது ஒரு வகை உணவுச் சங்கிலி.

16 hours ago, சுவைப்பிரியன் said:

நாங்கள் நன்பர்களை உருவாக்க மாட்டோம் என்டு ஆடும் பிடிக்கிற குட்டைகள் ஆச்சே.

 

இதே சிந்தனையைத்தான் ஒரு சாரார் சீமான் மீதும் வைத்திருக்கின்றார்கள்.

சீமான் தனிக்கட்சி!!

அகில உலக தலைவர் ரஜனி கட்சி? அந்த ஆண்டவனுக்கே தெரியாதாம்.😎

 

3 hours ago, வல்வை சகாறா said:

மூழ்கிறவன் கிடைக்கும் சின்னத் துரும்பையும் பற்றுவான் என்பதற்கிணங்க விக்னேஸ்வரன் இதனை மேற்கொண்டிருக்கலாம்.

இதைத்தான் சீமானை ஆதரிக்கின்றவர்களும் சிந்திக்கலாம் இல்லையா? 
 

Link to comment
Share on other sites

3 hours ago, குமாரசாமி said:

இதே சிந்தனையைத்தான் ஒரு சாரார் சீமான் மீதும் வைத்திருக்கின்றார்கள்.

சீமான் தனிக்கட்சி!!

அகில உலக தலைவர் ரஜனி கட்சி? அந்த ஆண்டவனுக்கே தெரியாதாம்.😎

இதைத்தான் சீமானை ஆதரிக்கின்றவர்களும் சிந்திக்கலாம் இல்லையா? 
 

இன்று இருக்கும் சாக்கடை அரசியல்வாதிகள் மத்தியில் சீமானை பலமடங்கு சிறந்த அரசியல்வாதியாக கருதலாம்.

Link to comment
Share on other sites

இலங்கை வருமாறு நடிகர் ரஜினிக்கு விக்னேஷ்வரன் அழைப்பு

இலங்கை வருமாறு நடிகர் ரஜினிக்கு இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.
 
சென்னையில் உலகத் தமிழா் வம்சாவளி ஒன்று கூடல் நிகழ்ச்சி  நேற்று  நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு உலகத் தமிழ் வா்த்தகச் சங்கம், உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
 
இதில் சிறப்பு அழைப்பாளராக இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன்  கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவா்களுக்கு சாதனை தமிழா்கள், சாதனை தமிழச்சிகள் என்ற பெயரிலான விருதுகளை வழங்கினார்.
 
இந்நிலையில், தமிழக பயணத்தின் ஒரு பகுதியாக சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்தை வடக்கு மாகாண முன்னாள் முதல்வா் விக்னேஷ்வரன் சந்தித்தார்.
 
இந்த சந்திப்பின்போது இலங்கையில் தற்போது தமிழர்களின் அரசியல் நிலை குறித்து ரஜினிகாந்திடம் பேசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ரஜினிகாந்த் இலங்கைக்கு விரைவில் வர வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Vankalayan said:

சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி. சும்மா இருந்த அரசை இவர்தான் இன்னும் தூண்டி விடுகிறார் மேலும் மேலும் குடியேற்றங்களை செய்யும்படி. அவன் பாட்டுக்கு இருந்த இஸ்ரவேலயும் இதுக்குள் இழுத்துவிட்டிருக்கிறார் இந்த அரசியல் அஞ்சானி. தமிழனின் தலை எழுத்து இப்படியான மாட்டு தலைமைகளை வைத்துக்கொண்டு அரசியல் செய்ய வேண்டி இருக்குது.

உண்மை தான் முஸ்லீம்களின் வாக்குகளை பெற்று கொள்ளலாம் என்ற முயற்ச்சியாக இருக்குமோ:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அநேகமாக இந்த திரி பற்றி எரியும் என்டு நினைக்குறன் ..👍

:)

ரஜனி தமிழக மக்கள் மக்கள் நலன்கள் சிறக்க பணியாற்றுபவர் விக்கி ஈழத்து தமிழர்கள் நலன்கள் சிறக்க பணியாற்றுபவர். இருவரும் சந்தித்துள்ளார்கள்.😂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ரதியின் இந்தப்பதிலை ஏற்றுக்கொள்ள யாரும் தயார் இல்லை ஆனால் இதுதான் உன்மை தமிழர்கள் நண்டுகள் இழுத்துகொண்டே இருப்பார்கள் மேல் ஏறும் நண்டை சிங்களவர்கள் சட்டிகள் அந்த சட்டிக்குள் நாம்  சட்டியை விட்டு வெளியில் இறங்கும் முடியாது ஓடவும்முடியாது .

ரதி தமிழர்கள் பிரச்சினையை சிங்களவர்களுக்கு எடுத்துரைக்க இதுவரைக்கும் ஆள் இல்லை 

 

மிகத்தவறான

வரலாற்றை அறியாத  பதிலும்  எதிர்பார்ப்பும்

சிங்களவரால்   தூக்கிச்செல்லப்பட்ட தமிழர்களாலும்  முடியுல

சம பங்கு நிலையிலிருந்து சம பங்கு கேட்டவர்களாலும்  முடியல

சம பலத்துடன் நின்று தீர்வுகேட்டவர்களுக்கும்  கிடைக்கல

தவறு கேட்பவர்களிடமில்லை

இதை உணராதவரை தீர்வென்ன எதுவுமில்லை

சிங்களவருடன்  ஒட்டினால்  தான் வாழ்வு என்பது தனி  மனிதருக்கு கூட நிலைக்காது

இனத்துக்கு??????

இது எனக்கு 1983 இல் சிங்களவரால் உணர்த்தப்பட்டது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

மிகத்தவறான

வரலாற்றை அறியாத  பதிலும்  எதிர்பார்ப்பும்

சிங்களவரால்   தூக்கிச்செல்லப்பட்ட தமிழர்களாலும்  முடியுல

சம பங்கு நிலையிலிருந்து சம பங்கு கேட்டவர்களாலும்  முடியல

சம பலத்துடன் நின்று தீர்வுகேட்டவர்களுக்கும்  கிடைக்கல

தவறு கேட்பவர்களிடமில்லை

இதை உணராதவரை தீர்வென்ன எதுவுமில்லை

சிங்களவருடன்  ஒட்டினால்  தான் வாழ்வு என்பது தனி  மனிதருக்கு கூட நிலைக்காது

இனத்துக்கு??????

இது எனக்கு 1983 இல் சிங்களவரால் உணர்த்தப்பட்டது

கிடைக்காத ஒன்றை ஆட்சியாளர்களால் கொடுக்க முடியாத ஒன்றையும் தான் நாம் கேட்டுக்கொண்டிருக்கிறோம் காரணம் ஆரம்ப காலத்தில் விட்ட பிழை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.