Jump to content

‘பாலியல் துன்புறுத்தல்’: ஆப்பிள் உருவாக்கிய வைபரேஷன்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

‘பாலியல் துன்புறுத்தல்’: ஆப்பிள் உருவாக்கிய வைபரேஷன்!

9.jpg

ஆப்பிள் வழங்கிவரும் இலவச ஸ்டோரேஜ் சேவையான ஐக்ளவுட்(icloud)இல் ஆப்பிள் டிவைஸ்களைப் பயன்படுத்தும் யூசர்களால் சேமிக்கப்படும் படங்களை, ஸ்கேன் செய்கிறோம் என அந்த நிறுவனத்தின் பிரைவசி குழு நிர்வாகி வெளியிட்ட தகவல் ஆப்பிள் பயனாளர்களிடையே பலவிதமான ரியாக்‌ஷனை உருவாக்கியிருக்கிறது.

லாஸ் வெகாஸில் நடைபெற்ற CES 2020 டெக் திருவிழாவில் பயனாளர்களின் பிரைவசி குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு பேசினார் ஆப்பிள் பிரைவசி குழு நிர்வாகியான ஜேன் ஹோர்வத். ஆப்பிளின் பிரைவசி நடவடிக்கைகள் குறித்து அவர் பேசியபோது, “நாங்கள் சில தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ‘குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள்’ தடுப்பில் ஈடுபட்டுவருகிறோம். உதாரணத்துக்கு, ஆப்பிளின் ஐக்ளவுட் சேவையில் பதிவேற்றப்படும் படங்கள் அனைத்தையும் ஸ்கேன் செய்து, அவற்றில் எந்த குழந்தைகளும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படவில்லை என்பதை உறுதி செய்கிறோம்” என்று கூறினார். இது பல விதமான விவாதங்களை ஆப்பிள் பயனாளர்களிடையே ஏற்படுத்தியிருக்கிறது.

 

2019ஆம் ஆண்டில் ஆப்பிள் தனது பிரைவசி பாலிசியை அப்டேட் செய்தது. அதன்படி, சமூகத்தை பாதிக்கும் பல குற்ற நடவடிக்கைகளுக்கு ஆப்பிள் பொறுப்பாக விரும்பவில்லை என்பதைத் தெரிவித்து, எங்களின் சேவையைப் பயன்படுத்த வேண்டுமென்றால் சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட வேண்டும் என்பதையும் குறிப்பிட்டிருந்தது. அதில் ஒன்றுதான் ‘ஐக்ளவுட்’ ஸ்டோரேஜில் அப்லோடு செய்யப்படும் படங்களை மெஷின் லெர்னிங் (Machine Learning) மூலம் ஸ்கேன் செய்வது.

ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்களும் மெஷின் லெர்னிங் உதவியுடன் படங்களை ஸ்கேன் செய்கின்றன. ஆனால், அவற்றைப் போல வெளிப்படையாக ஆப்பிள் இதுவரை அறிவித்ததில்லை அல்லது இதுவொரு முக்கியமான பிரச்சினையாக பலரும் கவனிக்கவில்லை.

 

‘சில தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறோம்’ என்றுதான் ஆப்பிள் கூறியிருக்கிறதே தவிர, எந்த மாதிரியான தொழில்நுட்பம் என சொல்ல மறுத்துவிட்டது. மற்ற நிறுவனங்கள் ‘PhotoDNA’ என்ற தொழில்நுட்பத்தின் மூலம் இந்த மாதிரியான படங்களை ஸ்கேன் செய்து கண்டுபிடிக்கின்றன.

அது என்ன PhotoDNA?

உலகிலுள்ள எல்லா உயிர்களுக்கும் தனித்தனியான DNA குறியீடுகள் இருப்பதுபோல, இணைய உலகம் மற்றும் பொது உலகத்தில் கண்டெடுக்கப்படும் குழந்தைகளுக்கெதிரான பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்ட படங்களைத் தொகுத்து, ஒவ்வொரு படத்துக்கும் தனித்தனி DNAக்களை உருவாக்குவது PhotoDNA நிறுவனத்தின் பணி. குழந்தைகளுக்கெதிரான பாலியல் துன்புறுத்தலாகப் பதிவு செய்யப்பட்ட படங்களுக்கென தனி அடையாள எண்ணை உருவாக்கி, அதை தனது சர்வரில் சேமித்து வைத்துக்கொள்கிறது PhotoDNA. இந்த நிறுவனத்தின் சேவையைப் பயன்படுத்தும் கூகுள், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற ஊடகங்களில் ஒவ்வொரு படம் பதிவேற்றப்படும்போதும், அவற்றை ஸ்கேன் செய்து ஒரு DNA குறியீட்டை உருவாக்கி, அதை PhotoDNA சர்வரில் இருக்கும் DNA குறியீடுகளுடன் இயந்திர அறிவு ஒப்பிட்டுப் பார்க்கும். ஒருவேளை இரண்டு குறியீடுகளும் ஒரே மாதிரி இருந்தால், அந்தப் படத்தை ஐக்ளவுடில் சேமித்து வைத்தவர் குற்றம் செய்தவராகக் கருதப்படுவார். அவர் மீது நடவடிக்கை எடுக்க PhotoDNA அறிவுறுத்தும்.

நல்லா இருக்கே, இதுல என்ன பிரச்சினை?

‘நல்லவன் கண்ணுக்குத் தான் கடவுள் தெரிவார்’ என்று சொல்வதைப் போல, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடாதவர்கள் ஆப்பிள் மற்றும் இதர நிறுவனங்களின் இந்த முயற்சியை ஆதரிக்கலாமே என்ற ஒரு கருத்தும் முன்வைக்கப்படுகிறது. இதுபோன்ற மெஷின் லெர்னிங் சேவையின் மூலம், உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் ஒரு குழந்தை காப்பாற்றப்படும் எனும்போது இதனை மகிழ்ச்சியாக அனுமதிக்கலாம். அந்த வகையில் ஸ்மார்ட்போனில் இருக்கும் படங்களைக்கூட எடுத்து ஸ்கேன் செய்துகொள்ளச் சொல்லலாம். ஆனால், இப்படி ஸ்கேன் செய்து உருவாக்கும் குறியீடுள்ள படங்களில், குழந்தைகளுக்கெதிரான பாலியல் துன்புறுத்தல்களுக்கான வாய்ப்பு இல்லாத பட்சத்தில், அந்தக் குறியீட்டினை என்ன செய்வார்கள் என்று சொல்லாமலேயே ஸ்கேன் மட்டும் செய்வோம் என்று கூறுவதுதான் பலரிடமும் அசாதாரண உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒருவேளை அப்படி இருக்குமோ?

உதாரணத்துக்கு, தனது காதலியுடன் எடுத்த அந்தரங்கமான படத்தை ஐக்ளவுடில் ஓர் இளைஞர் சேமித்து வைக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இப்போது PhotoDNA இதை ஸ்கேன் செய்து சேமித்து வைத்துக்கொள்ளும். இந்த PhotoDNA குறியீட்டை யாராவது ஒரு ஹேக்கர் திருடி, அந்தக் குறியீடுகளைப் பயன்படுத்தி அதே படத்தை மீண்டும் மீள் உருவாக்கம் செய்து இணையத்தில் பதிவு செய்துவிட்டால் என்ன செய்வது?

பெரிய தொழிலதிபர் ஒருவர், தனது வங்கிக் கணக்குத் தகவல்களை போட்டோ எடுத்து ஐக்ளவுடில் சேமித்து வைத்திருந்ததை, ஹேக்கர் ஒருவரோ அல்லது PhotoDNA நிறுவனத்தில் பணியாற்றும் யாரோ ஒருவரோ திருட்டுத்தனமாக எடுத்து மீள் உருவாக்கம் செய்து பணத்தைத் திருடிவிட்டால் என்ன செய்வது?

 

மேற்கண்ட சூழல்களைப் போல, பல ரகசியமான தகவல்களைப் பாதுகாப்பதற்காகவே ஐக்ளவுட், கூகுள் டிரைவ் போன்ற சேவைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றை ஸ்கேன் செய்து, யாராவது அதைத் திருடிவிட்டால் கஷ்டத்தில் நிற்கப்போவது பயனாளர்கள் தானே என்கிற கேள்வி நியாயமானது.

PhotoDNA கூறும் நியாயம்

பல பில்லியன்கள் செலவில் நிறுவனங்களை நடத்துபவர்களுக்கு மேற்கண்ட பிரச்சினைகளின் ஆழம் என்னவென்று தெரியும். எனவே, இதை அனைவருக்கும் சரிசமமாக மாற்றும் முயற்சியில்தான் மீள் உருவாக்கம் செய்ய முடியாத PhotoDNA அடையாள எண்களை உருவாக்க முடிவெடுத்தனர் PhotoDNA நிறுவனத்தினர்.

PhotoDNA நிறுவன தகவல்களின்படி “ஸ்கேன் செய்யப்படும் படங்களின் சூழல் மற்றும் அம்சங்களை ஸ்கேன் செய்து அதற்கான அடையாள எண் உருவாக்கப்பட்டதும், அந்தப் படங்களை உடனடியாக அவர்களது சர்வரிலிருந்து அழித்துவிடுவதாகக் கொள்கை முடிவு எடுத்திருக்கிறோம்” என்று கூறுகின்றனர். “உலகில் உள்ள அனைவரையும் கண்காணித்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் எங்களுக்குள் எந்தக் குற்றவாளியும் நுழைந்துவிடக் கூடாது” என இதற்கான நியாயம் வரையறுக்கப்பட்டுள்ளது.

 

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் நடைபெற்றதாக உறுதி செய்யப்பட்ட படத்தை ஒருமுறை ஸ்கேன் செய்து, அதன் DNA எண்ணை சர்வரில் சேமித்ததும் உடனடியாக அந்தப் படத்தை அழித்துவிடுகின்றனர். கூகுள் டிரைவ் போன்றவற்றில் அப்லோடு செய்யப்படும் படங்கள் ஒவ்வொன்றுக்கும் தனி DNA எண்ணை உருவாக்கி உடனடியாக அதை சர்வரில் உள்ள DNA எண்களுடன் ஒப்பிடுகிறது மெஷின் லெர்னிங். எந்தப் படமும் ஒத்துப்போகாத நேரத்தில் அந்தப் படம் மற்றும் அதன் தகவல்களை உடனடியாக அழித்துவிடுவதாகக் குறிப்பிட்டிருக்கின்றனர்.

யாரைத்தான் நம்புவதோ..!

நம்பிக்கையை அடிப்படையாகக்கொண்டு செயல்படும் இந்த விஷயத்தில், படங்களின் தகவல்களை அழித்துவிடுவோம் என்று நிறுவனங்கள் குறிப்பிடுவதில்தான் சிக்கல். வீட்டிலுள்ள மனைவி, மக்களைவிட அதிக நேரம் செலவிடும் ஃபேஸ்புக் தகவல்களைத் திருடிக் கொடுத்து ஆதாயம் தேடிக்கொண்ட வழக்கு இப்போது வரையிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திடீரென ஹேக்கர்கள் தோன்றி, அனைத்து தகவல்களையும் திருடிவிடுகின்றனர். அதிலிருந்து மீண்டு வருவதற்குள்ளாகவே சில நிறுவனங்கள் அழிந்துபோகின்றன. இப்படிப்பட்ட சூழலில் ‘நாங்க இருக்கோம்’ என இந்த நிறுவனங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ள மக்கள் தயாராக இல்லை. அதேசமயம், மெஷின் லெர்னிங் இப்போதுதான் பருவ வயதை அடைந்திருக்கிறது. 2000 முதல் 2020 வரை செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் மெஷின் லெர்னிங் நடைமுறைக்கு சிறுமிகளின் குரல்களையே பதிவு செய்து வந்திருந்த உலகம் இப்போதுதான் ஒரு பருவப் பெண்ணின் குரலமைப்பைக் கொடுத்திருக்கிறது. இவற்றை உருவாக்கும் நிறுவனங்களுக்கே இல்லாத நம்பிக்கை மக்களுக்கு எப்படி வரும் என்பதுதான் முக்கியமான கேள்வி. மற்றபடி, என் போட்டோக்களை ஸ்கேன் செய்யக் கூடாது என்று யாரும் சொல்ல மாட்டார்கள். மக்களின் பயத்தைக் காரணம் காட்டி சம்பாதிப்பதை நிறுத்திவிட்டு, அவர்களிடமிருக்கும் பயத்தைப் போக்கினால்தான் நாம் எதிர்பார்க்கும் குற்றமற்ற சமுதாயத்தைக் கட்டமைக்க முடியும். இப்படியொரு வசதி இருப்பதையே ஆப்பிள் நிறுவனம் இப்போதுதான் கூறியிருக்கிறது. மேலே குறிப்பிட்ட தெளிவுகளையெல்லாம் எப்போது சொல்வார்கள்?

- சிவா
 

https://minnambalam.com/public/2020/01/12/9/apple-scan-photos-in-icloud-to-prevent-child-abuse

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.