Jump to content

தமிழினத்தின் மீதான முகநூலின் அடக்குமுறை – நாம் என்ன செய்யப்போகின்றோம்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினத்தின் மீதான முகநூலின் அடக்குமுறை – நாம் என்ன செய்யப்போகின்றோம்?

_23249_1578824146_65AE97BA-8BC1-4D03-9A0

(வேல்ஸ்சில் இருந்து அருஷ்)

முகநூல் என்ற சமூகவலைத்தளம் இன்று மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்று என்ற நிலைக்கு மாறியுள்ளது. மக்களிற்கு இடையிலான தொடர்பாடல் என்ற நோக்கத்துடன் ஆரம்பமாகிய இந்த வியாபாரப் பொருள் அதன் முதலாளிகளுக்கு அதிக பொருளாதார இலபத்தை கொடுத்துவரும் அதேசமயம், பல நாடுகளின் அரசியல் விவகாரங்களிலும் தனது ஆதிக்கத்தைச் செலுத்திவருகின்றது.

சில நாடுகளில் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்கும் அளவுக்கு செல்வாக்கு செலுத்தும் இந்த ஊடகம், தற்போது சில இனங்களின் இன விழுமியங்கள், இறைமை மற்றும் குறிப்பிட்ட இன மக்களின் அடிப்படைச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் போன்றவற்றிலும் அதிக தலையீடுகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்த சமூக வலைத்தளம், தற்போது குறிப்பிட்ட இன மக்களின் விருப்பு வெறுப்புகளை தீர்மானிக்கும் சக்தியாக மாறி வருகின்றதும், தம்மை அறியாமலேயே மக்கள் இந்த வலைக்குள் வீழ்ந்து, அவர்களின் இன அடக்குமுறைக்குள் சிக்கி, தமக்கு தெரியாமலேயே அவர்களின் கொள்கையை பின்பற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதும் மிகவும் வேதனையானது.

அதாவது கடந்த மாதம் 26 ஆம் நாள் உலகம் எங்கும் பரந்துவாழும் தமிழ் மக்கள் தமது இனத்தின் விடுதலைக்காக போராடிய விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பிறந்த தினத்தினை கொண்டாடியிருந்தனர்.இந்த நிகழ்வின் ஒரு அங்கமாக தமது முகநூலில் தலைவரின்; படங்களை பதிவிட்டிருந்தனர். ஆனால் அதனை தன்னிச்சையாக நீக்கிய முகநூல் சமூகவலைத்தளம், பலரின் கணக்கையும் சில மாதங்களுக்கு முடக்கியுள்ளது.

அதாவது யாரை நீங்கள் தலைவராக ஏற்றுக்கொள்ள வேண்டும், எந்த கொள்கையை நீங்கள் பதிவிட வேண்டும், எந்த கொள்கையை நீங்கள் பின்பற்ற வேண்டும், எந்த கருத்தை நீங்கள் எழுத வேண்டும், எந்த கருத்தை நீங்கள் பகிர வேண்டும் என்பதை எதிர்காலத்தில் முகநூல் என்ற வியாபார சமூகவலைத்தளமே தீர்மானிக்கும். அதாவது எதிர்வரும் காலங்களில் உங்கள் கொள்கைகளையும் கருத்துக்களையும் அவர்கள் தீர்மானிப்பார்கள்.

அவர்களின் கொள்கைகளுக்கு இணங்கி அவர்களின் சித்தாந்தங்களை ஏற்று, உங்களின் இன அடையாளங்களைத் தொலைத்து, உங்களின் இனபற்றை துறந்தால் நீங்கள் இந்த வியாபார சமூகவலைத்தளத்தில் தொடர்ந்து இருக்கலாம். இதுவும் ஒரு வகையான இன அடக்குமுறையே அதனை நாம் புரிந்துகொள்ள முடியாத வகையில் அவர்கள் வகுத்துள்ள சட்டங்கள் எம்மை கட்டிப்போட்டுள்ளது.

எனவே தான ஏறத்தாள 2.23 பில்லியன் மக்களை தனது அங்கத்தவர்களாகக் கொண்ட முகநூலின் பாதச்சுவடுகளே சீனாவில் இல்லை. ஆம் மேற்குலகம் சார்ந்த இந்த வியாபார வலைத்தளத்தின் அரசியல் மற்றும் பொருளாதார உள்நோக்கங்களைப் புரிந்து கொண்டுள்ள சீனா அதனை முற்றாகத் தடை செய்துள்ளது. 2009 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தடை தற்போதும் உள்ளது.

சீனாவின் மேற்கு மாகாணத்தில் இடம்பெறும் கலவரங்களைத் தூண்டிவிடுவதில் முகநூல் அதிக நாட்டம் காண்பித்தததால் முகநூலுக்கான தடை சீனாவில் கொண்டுவரப்பட்டது. சீனாவின் ”Great Firewall’ என்ற சமூகவலைத்தளக் கட்டுப்பாட்டு செயற்பாடுகள் அமெரிக்காவின் நிறுவனங்களுக்கு மிகப்பெரும் சவலாக மாறியுள்ளது. ஆனால் சீனா தனது சொந்த சமூகவலைத்தளங்களை அங்கு கொண்டுள்ளது.

எனினும் சீனா என்ற பெரும் சந்தைவாய்ப்பை கைவிட விரும்பாத முகநூல் நிறுவனம் வேறு பெயர்களில் தன்னை பதிவுசெய்து அங்கு ஊடுருவ பல தடவைகள் முயன்றுள்ளது. இவ்வாறு பதிவு செய்யப்பட்ட பல பெயர்களை மோப்பம் பிடித்துவரும் சீனா அவற்றை தடைசெய்து வருகின்றபோதும், கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் மேற்கொண்ட இவ்வாறான முயற்சிகளால் முகநூலின் வருமானம் 5 பில்லியன் டொலர்களை எட்டியிருந்தது பலரையும் ஆச்சரியமடைய வைத்துள்ளது.எனவே தான் முகநூலின் நிறுவுனராக மார்க் செகெர்பேர்க்; சீனாவுக்கான பயணங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு பேச்சுக்களை நடத்திவருகின்றார்.

முகநூலுக்கான தடை சீனாவில் மட்டும் கொண்டுவரப்படவில்லை, தாய்வானிலும் உண்டு. மேலும் பங்களாதேசம், ஈரான் மற்றும் வடகொரியா போன்ற நாடுகளிலும் அதன் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, ரஸ்யாவினதும், அங்கு வாழும் மக்களினதும் தனிப்பட்ட தரவுகளை முகநூல் மற்றும் ருவிட்டர் சமூகவலைத்தளங்கள் சேமித்து வைத்திருப்பதற்கு தமது அனுமதிகளைப் பெறவில்லை என்ற குற்றச்சாட்டுக்களை ரஸ்யா இந்த வருடத்தின் ஆரம்பத்தில் முன்வைத்திருந்தது.

ஆனால் தற்போது ரஸ்யாவில் தயாரிக்கப்படும் கணணி மென்பொருட்களை உள்வாங்கி செயற்பட மறுக்கும் தொழில்நுட்ப சாதனங்களை முற்றாக தடைசெய்வதற்கு ரஸ்யா திட்டமிட்டுள்ளது. இந்த தடைச்சட்டமானது 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைமுறைக்குவரவுள்ளது.

ரஸ்யாவின் தொழில்நுட்பத்தை ஊக்குவிக்கும் முயற்சி இது என ரஸ்யா தெரிவித்தாலும், மேற்குலகத்தின் உளவுபார்க்கும் முயற்சியை முறியடிக்கும் நடவடிக்கையாகவே அவதானிகள் இதனைப் பார்க்கின்றனர்.

தற்போது தமிழ் இனத்தின் எழுச்சிகளை மறைமுகமாக முடக்க முற்பட்டுநிற்கும் முகநூல் சமூகவலைத்தளம் 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் சிறீலங்காவில் இடம்பெற்ற தேர்தல்களிலும் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தல் ஒரு சைபர் தேர்தல் என கொழும்பைத் தளமாகக் கொண்ட தொழில்நுட்ப தகவல் திணைக்களம் தெரிவித்திருந்தது.

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலிலும் “முஸ்லீம் கடையர்களால் அழிக்கப்பட்ட புத்தர் சிலை” என்ற செய்தி உடைந்த புத்தர் சிலையின் படத்துடன் சிங்கள மொழியில் தயாரிக்கப்பட்டு முகநூலில் பகிரப்பட்டதால் பெருமளாக கடும்போக்கு சிங்களவர்களின் வாக்குக்கள் கோத்தபாயா ராஜபக்சாவின் பக்கம் திரும்பியிருந்தது.
2014 ஆம் ஆண்டு 25 இலட்சம் முகநூல் கணக்குகளையும், 50,000 ருவிட்டர் கணக்குகளையும் கொண்டிருந்த சிறீலங்கா தற்போது 60 இலட்சம் முகநூல் கணக்குகளை கொண்டிருக்குமளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த தொகையானது சிறீலங்காவில் உள்ள மொத்த சனத்தொகையின் ஏறத்தாள 28 விகிதமாகும்.

சிறீலங்கா உள்ளிட்ட பல நாடுகளின் அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்தும் காரணிகளில் ஒன்றாக மாற்றம் பெற்றுள்ள இந்த சமூகவலைத்தளம் தற்போது தமிழினத்தின் மீது தன் பார்வையை திருப்பியுள்ளது. முகநுலின் இந்த நடவக்கையானது சிறிலங்கா அரசு மீது தமிழ் மக்கள் ஒரு அழுத்தத்தை ஏற்படுத்துவதை தடுக்கும் நடவடிக்கையாகும், அதாவது மேற்குலகமோ அல்லது இந்தியாவோ சிறீலங்காஅரசு மீது ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தலாமே தவிர தமிழ் அல்ல என்பதை உணர்த்துவதாக அரசியல் ஆய்வாளர் இதயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அதாவது பேரம்பேசும் சக்தியை தமிழ் மக்கள் அடைவதை இந்த சக்திகள் விரும்பவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதாவது கடந்த ஜனவரி மாதம் தனது ஆசிய-பசுபிக் பிராந்திய கட்டமைப்பில் மாற்றம் ஒன்றை கொண்டுவந்த முகநூல் நிறுவனம் ஆறுபேர் அடங்கிய இந்தியக் குழு ஒன்றையும் அமைத்திருந்தது. இந்த ஆறு நபர்களில் சிலர் இந்தியாவின் முன்னாள் அரசியல்வாதிகள் என்பதுடன், தமிழ் இனத்திற்கு எதிராக சிறீலங்கா அரசுடன் இணைந்து செயற்பட்டவர்கள் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

எனவே முகநூலின் தற்போதைய நடவடிக்கை என்பது எம் இனத்தின் மீது திணிக்கப்படும் புதிய ஒரு அடக்குமுறையாகவே நாம் அணுகவேண்டும். அதனை எவ்வாறு முறியடிப்பது என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும். அதற்கு சிறந்த மாற்றுவழியாக எமக்கான தேசிய ஊடகம் ஒன்று வலுவாக கட்டியமைக்கப்பட வேண்டும். அதன் மூலம் நாம் ஒரு ஊடகச்சமரை ஆரம்பித்து, உலகம் எங்கும் சிதறிக்கிடக்கும் தமிழினத்தை ஒருங்கிணைத்து போராடவேண்டும்.

அது மட்டுமல்லாது இந்த அடக்குமுறைக்கு எதிராக எமது எதிர்ப்பை நாம் தெரிவிக்கவேண்டும். உதாரணமாக உலகில் தமிழர் வாழும் நாடுகளில் உள்ள முகநூலின் காரியாலங்களுக்கு முன்பு அல்லது அந்த நாடுகளின் நகரங்களில் ஒன்றுதிரண்டு நாம்; ஜனநாயக வழியிலான எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும், உலகம் எங்கும் உள்ள தமிழ் அமைப்புக்கள் எல்லாம் தமது கண்டனங்களைத் தெரிவித்து மின்னஞ்சல்களை முகநூலுக்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறான போராட்டங்கள் தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டும்.இல்லையெனில் இந்த வியாபார உலகில் தமது சுயநல நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டு வலம்வரும் சமூகவலைத்தளங்களின் கொள்கைகளுக்குள் கட்டுண்டவர்களாக நாம் எமது இனத்தின் அடையாளங்களைத் தொலைத்து பரிதவிக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவோம்.

 

 

http://www.battinaatham.net/description.php?art=23249

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.