Jump to content

தலைமையை என்னிடம் தாருங்கள் தீர்வு நிச்சயம் – சங்கரி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அரசியல் தலைமையை தன்னிடம் வழங்குமாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் தமிழர் விடுதலை கூட்டணியின் அலுவலகத்தில் இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். மேலும்,

மக்கள் தலைமையை மாற்ற சொல்லி கேட்கிறார்கள். இருந்த தலைமையை என்னிடம் தாருங்கள் என்னால் பிரச்சினைகளை தீர்க்க முடியும். சமஸ்டி இனி சரிவராது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.

இந்திய முறையிலான தீர்வை முன்வைத்து தமிழர் விடுதலை கூட்டணி போட்டியிட உள்ளது, இந்திய முறையிலான தீர்வை தற்போது உள்ள நாட்டின் இரு பிரதான தலைவைர்களும் அறிந்தவர்கள். அவர்கள் அதனை ஏற்றவர்கள்.

இந்த நிலையில் குறித்த முறையை முன்னிலைப்படுத்தி நாம் போட்டியிட உள்ளோம். கிழக்கில் உள்ள பலருடன் பேசியுள்ளோம். அவர்களும் இணைந்த செயற்படுவதற்கு உள்ளனர். அதேபோன்று வடக்கிலும் அவ்வாறான கூட்டு ஒன்று உருவாக்கப்படும்.

நான் பகிரங்கமான அழைப்பினை விடுக்கின்றேன். தமிழர் விடுதலை கூட்டணியில் இருந்து பிரிந்து சென்ற அத்தனை பேரும் மீட்டும் இணையுங்கள். எனக்கு வயது 87 ஆகியுள்ளது. இந்த நிலையில் பாரம்பரிய கட்சியினை பாதுகாப்பதற்கான சூழல் தற்போது எழுந்துள்ளது.

வெவ்வேறு காரணங்களை கூறி தமிழர் விடுதலை கூட்டணியிலிருந்த பிரிந்து சென்று தமிழரசு கட்சியில் இணைந்தவர்கள் இன்று விட்ட தவறுகளை உணர்கின்றீர்கள் என நம்புகின்றேன்.

தற்போது ஏற்பட்டுள்ள சூழலை கருத்தில்கொண்டு மீண்டும் இந்த கட்சியை பலம் மிக்க கட்சியாக செயற்படுத்த மீள இணையுமாறு அழைக்கின்றேன் – என்றார்.

https://newuthayan.com/தலைமையை-என்னிடம்-தாருங்க/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்க மாட்டா.

Link to comment
Share on other sites

Quote

எனக்கு வயது 87 ஆகியுள்ளது

சிவனே என்று இருப்பதை விட்டு என்ன கூட்டு வேண்டிக்கிடக்கு.😂

Link to comment
Share on other sites

இப்பத்தாண்டா தமிழனுக்கு விடிவு   பிறந்திருக்கு. இம்முறை உங்களுக்குத்தான் எங்கள் ஒட்டு ஐயா. இனி தமிழனுக்கு ஈழம் கிடைத்த மாதிரித்தான்.

Link to comment
Share on other sites

ஆனந்தசங்கரி ஒரு வாலறுந்த நரி.   தமிழ் அரசியல் தலைமையை தன்னிடம் வழங்குமாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்திருப்பது இந்த ஆண்டின் முக்கிய பகிடியாகும். திருவாளர் ஆனந்தசங்கரி அரசியலில் செல்லாக்காசாகி 16 ஆண்டுகள் கழிந்து விட்டன.  அவரது முதல் எதிரி அவரது வாய்!

மேலும் மக்கள் தலைமையை மாற்றச சொல்லி கேட்கிறார்கள். இருந்த தலைமையை என்னிடம் தாருங்கள் என்னால் பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்கிறார். சமஸ்டி இனிச் சரிவராது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம் என்பவர் அதே மூச்சில்  இந்திய முறையிலான தீர்வை தான் பெற்றுத் தருவேன் என்கிறார்.
இந்திய அரசியலமைப்பு முறை சமஷ்டி அரசியலமைப்பின் அம்சங்களைப் பேரளவு கொண்டதுதான் என்கிற உண்மை கூட சங்கரியாருக்குத்  தெரியாமல் இருக்கிறது. 

ஆனந்தசங்கரி தவிகூ  தலைவராக வந்தது ஒரு விபத்து.  திரு  மு. சிவசிதம்பரம் யூன் 2002 இல் மறைந்த போது அந்த இடத்துக்கு ஆனந்தசங்கரி தெரிவு செய்யப்பட்டார்.  தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர் அவர் கட்சியின் கொள்கைக்கு முரணாகச் செயற்படுகிறார்இ 2001ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கைக்கு எதிராகச் செயற்படுகிறார்இ  தமிழர்களின் அபிலாசைகளுக்கு முரணாகச்  செயற்படுகிறார் எனக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இதனையிட்டு கட்சிக்குள் காரசாரமான விவாதம் நடைபெற்றது. 

தமிழ் மக்களுக்காகப் போராடிக்கொண்டிருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளைக் கண்டித்தும் விமர்சனம் செய்தும் தொடர்ச்சியாக அறிக்கை விட்டும் வருகிறார் என்றும் ஆனந்தசங்கரி மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. வெளிநாட்டு இராசதந்திரிகளைச் சந்தித்து விடுதலைப்புலிகளுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து வருகிறார் என்றும் விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் கிடையாது என்ற கருத்தை வலியுறுத்தி வருகிறார் போன்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இருந்தும் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளையும் அதன் தலைவர் பிரபாகரனையும் கடுமையாக விமர்ச்சித்து வந்தார். வி.புலிகளை தமிழர்களது ஏகப் பிரதிநிதியாக அங்கீகரிக்க மறுத்து விட்டார். 

இதன் காரணமாக  ஆனந்தசங்கரிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒள்று  கொழும்பில் நொவெம்பர் 30- 2001  ஆம் திகதி நடந்த த.வி.கூ இன்   செயல்குழுக்  கூட்டத்தில்  கொண்டு வரப்பட்டது. நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு  ஆதரவாக  25 பேரும்  எதிர்த்து 11 பேரும் வாக்களித்தனர். ஆதரவாக வாக்களித்தவர்கள் மீது ஆனந்தசங்கரியின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர்.

ஆனால்  தவிகூ இன்  செயல் குழுவில்  பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றிய சனநாயக முடிவைத்  தன்னை ஒரு சனநாயகவாதி - சனநாயக விழுமியங்களைப் பேணிக் காக்கும் கட்சியின் தலைவர்  என்று பிதற்றிக்  கொள்ளும் ஆனந்தசங்கரி ஏற்க மறுத்து விட்டார். 

மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மதிக்காது ஆனந்தசங்கரி நீதிமன்றம் சென்றார்.  சனநாயகத்தை மதிப்பவர் - நேர்மையானவர் - நாணயமானவர்  என்றால்  அவர் தனது பதவியை உதறித்தள்ளிவிட்டு வெளியேறியிருப்பார். ஆனால் ஆனந்தசங்கரி அப்படிச் செய்யவில்லை. அவரது பதவி ஆசை அப்படிச் செய்ய விடவில்லை!
ஒரு புதிய தலைவரை தெரிவு செய்ய  தவிகூ இன் பொதுச் செயலாளர் சம்பந்தன்  அம்பாரை திருக்கோயிலில் ஒரு கூட்டத்தைக் கூட்டினார். அதற்கு எதிராக ஆனந்தசங்கரி  நீதிமன்றம்  சென்று தடையுத்தரவு வாங்கினார்.

இதனை அடுத்து ஆனந்தசங்கரியோடு மல்லுக்கு நிற்க விரும்பாத த.வி.கூட்டணியினர் பழைய தமிழ் அரசுக் கட்சியை மீளமைத்தனர். அதன் பின்னர் அன்று தொடங்கி இன்றுவரை  ஆனந்தசங்கரி அரசியல் பாலைவனத்தில்   விடப்பட்டுள்ளார். போட்டியிட்ட எல்லாத் தேர்தல்களிலும் த.வி.கூ  மண்ணைக் கவ்வியுள்ளது. 2013  வட மாகாண சபை தேர்தலில் போட்டியிட்ட ஆனந்தசங்கரி கட்டுக்காசை இழந்தார். 

இன்று த.வி.கூ ஆனந்தசங்கரியின்  வீட்டுச் சொத்துக்களில் ஒன்றா மாறிவிட்டது. அவர்தான் தலைவர் பொதுச் செயலாளர் பொருளாளர் எல்லாமே அவர்தான். 

இப்போது தமிழ் அரசியல் தலைமையை தன்னிடம் வழங்குமாறு  ஆனந்தசங்கரி புலம்புகிறார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nakkeeran said:

ஆனந்தசங்கரி ஒரு வாலறுந்த நரி.  

 

Bildergebnis für வாலறுந்த நரி

நரிக்கு... வாலை  விட, வாய்தான்... முக்கியம். :grin:  😝

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.