Jump to content

பதவியை இராஜினாமா செய்வதாக வாசுதேவ அறிவிப்பு?


Recommended Posts

பதவியை இராஜினாமா செய்வதாக வாசுதேவ அறிவிப்பு?

 

     by : Yuganthini

vasu-11.jpg

மக்களுக்கு தண்ணீர் வழங்குவதற்கு தேவையான செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் போதுமான நிதியை வழங்காவிடின் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

எம்பிலிப்பிட்டிய பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வில் வாசுதேவ நாணயக்கார மேலும் கூறியுள்ளதாவது, “ தண்ணீர் இல்லாமல் சிரமப்படும் மக்களுக்கு உரிய  தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கின்றது.

மேலும் தண்ணீர் பிரச்சினைக்கு கடந்த அரசாங்கம் முன்னெடுத்த செயற்பாட்டினை காட்டிலும் சிறந்த செயற்றிட்டமொன்றை தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

அத்துடன் மக்களை மையமாகக் கொண்டே வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் அது மக்களுக்கு நன்மைகளைத் தரும் வகையில் அமையும் என்றும் கோட்டபாய கூறியுள்ளார்.

அந்தவகையில் நான் இந்த அரசாங்கத்திடம் கோருவது, தண்ணீர் மற்றும் கல்விக்கு கணிசமான நிதியை ஒதுக்குங்கள் என்றுத்தான்.

அதாவது வரவு- செலவுத் திட்டத்தில்  தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்கான  நிதியை ஒதுக்காவிடின் இந்த அமைச்சில் நான் இருப்பது  பயனற்ற ஒன்றேயாகும்.

 ஏழை மக்களுக்கு உதவ முடியாத இந்த அமைச்சில் இருப்பதை விட விலகுவதே சிறந்தது” என குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/பதவியை-இராஜினாமா-செய்வதா/

Link to comment
Share on other sites

38 minutes ago, nunavilan said:

 ஏழை மக்களுக்கு உதவ முடியாத இந்த அமைச்சில் இருப்பதை விட விலகுவதே சிறந்தது” என குறிப்பிட்டுள்ளார்.

விரைவில விலகித் தொலையலாமே!

வாசுதேவ பதுளையில் இருந்து மட்டக்களப்புக்கும், மட்டக்களப்பிலிருந்து பதுளைக்கும் தண்ணீர் வழங்கும் தனது திட்டத்துக்கு அனுமதி கிடைவில்லை என்று புலம்புவது போல தெரியுதே. 🤣

Link to comment
Share on other sites

இதை எல்லாம் நம்புவதட்கு நாங்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல। இவர் இதைப்போல ஆயிரம் கதைகள் சொல்லி இருப்பர்। கோத்த போட்டியிடடால் அதட்கு எதிராக இருப்பேனென்றும் ஆதரவளிக்க மாடடேன் என்றும் பெரிய கூப்பாடு போடடார்। கடைசியில் என்ன நடந்தது என்று எல்லோருக்கும் தெரியும்। குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு।

Link to comment
Share on other sites

3 hours ago, Vankalayan said:

இதை எல்லாம் நம்புவதட்கு நாங்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல। இவர் இதைப்போல ஆயிரம் கதைகள் சொல்லி இருப்பர்। கோத்த போட்டியிடடால் அதட்கு எதிராக இருப்பேனென்றும் ஆதரவளிக்க மாடடேன் என்றும் பெரிய கூப்பாடு போடடார்। கடைசியில் என்ன நடந்தது என்று எல்லோருக்கும் தெரியும்। குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு।

தண்ணீர்தானே கேட்டார்... தண்ணீர்கேட்டால் குடிகாரனா? என்னப்பா இந்த உலகம்...😩 

Link to comment
Share on other sites

42 minutes ago, Paanch said:

தண்ணீர்தானே கேட்டார்... தண்ணீர்கேட்டால் குடிகாரனா? என்னப்பா இந்த உலகம்...😩 

இவர்  தண்ணீர் கேட்ட்துடன் நிப்பாட்டி இருந்தால் பிரச்சினை இல்லை।  இல்லாவிடடால் பதவி விலகுவேன் எண்டு கூப்பாடு போடடாரே அங்குதான் பிரச்சினை। தண்ணி கிடைக்கப்போவதுமில்லை இவர் பதவி விலகப்போவதுமில்லை। இதுதான் குடிகாரன் பேச்சு।

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.