Jump to content

`உடல்தான் சிறையிலிருந்து வெளியே வர வேண்டும்!'- பாலியல் வழக்கில் தஞ்சை நீதிமன்றம் தீர்ப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கும்பகோணத்தில் வடமாநில இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நான்கு இளைஞர்களுக்கு வாழ்நாள் சிறைத் தண்டனையும், மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ஆட்டோ டிரைவருக்கு 7 ஆண்டுச் சிறைத் தண்டனையும் விதித்து தஞ்சாவூர் மகளிர் நீதிமன்றம் இன்று பரபரப்பான தீர்ப்பு வழங்கிள்ளது.

டெல்லியைச் சேர்ந்தவர் 27 வயது நிரம்பிய இளம்பெண். இவருக்குக் கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தனியார் வங்கியில் வேலை கிடைத்தது. இதன் பயிற்சிக்காக டெல்லியிலிருந்து சென்னை வந்தவர் பின்னர் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னையிலிருந்து கும்பகோணத்திற்கு 2018-ம் ஆண்டு டிச 1-ம் தேதி வந்தார். ரயில் இரவு 11 மணியளவில் தாமதமாக கும்பகோணம் வந்தடைந்துள்ளது. ரயிலை விட்டு இறங்கிய அந்தப் பெண், இன்னும் சற்று நேரத்தில் அறைக்கு வந்து விடுவதாக தனது தோழிக்கு போன் செய்து கூறிவிட்டு ஆட்டோ ஏற்றியுள்ளார்.

 
குற்றவாளிகள்
 
குற்றவாளிகள்

ஆனால், ஆட்டோ டிரைவர் இளம்பெண் கூறிய இடத்திற்குச் செல்லாமல் அந்தப் பெண்ணை பைபாஸ் சாலை பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அந்தப் பெண் ஆட்டோ டிரைவரிடம் நீண்ட நேரம் செல்கிறீர்கள் எனக் கேட்டுவிட்டு, சந்தேகமடைந்து ஆங்கிலத்தில் பேசி விட்டு ஹெல்ப் ஹெல்ப் எனக் கத்தியிருக்கிறார். இதனால் பயந்துபோன ஆட்டோ டிரைவர் அந்தப் பெண்ணை அங்கேயே இறக்கிவிட்டுவிட்டுச் சென்று விட்டார்.

இரவு நேரம் ஆள் நடமாட்டம் வேறு இல்லாததால் என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்தபடி அந்தப் பெண் தன்னுடைய டிராலி பேக்கை இழுத்துக்கொண்டு செட்டிமண்டபம் பைபாஸ் சாலை வழியாக நடந்தார். அப்போது அவ்வழியாக வந்த இளைஞர் ஒருவரிடம் லிப்ட் கேட்க அந்த இளைஞரும் அந்தப் பெண்ணை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்றார். இளைஞரின் நண்பர் ஒருவரும் பின்னாலேயே வந்தார்.

பின்னர் அந்தப் பெண்ணை நாச்சியார்கோயில் பைபாஸ் சாலை அருகே இருட்டான பகுதிக்கு இளம் பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் அவர்கள், மேலும் தன்னுடைய நண்பர்கள் இரண்டு பேரை வரவழைத்தனர். அவர்களும் அந்தப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

   

அவர் என்னை விட்டு விடுங்கள் எனக் கூச்சலிட்டபடி சத்தம் போட அதற்கு அந்த இளைஞர்கள் அடித்துக் கொலை செய்து விடுவோம் என மிரட்டியிருக்கின்றனர். அதன் பிறகு அந்தப் பெண் மயக்க நிலைக்குச் சென்று விட்டார். பின்னர், அந்த இளைஞர்கள் மெயின் ரோட்டிற்கு வந்து ஆட்டோ பிடித்து அந்தப் பெண்ணை ஏற்றியதுடன் அவரை இறக்கிவிடுவதற்காக ஒரு இளைஞரும் ஏறிக் கொண்டு சென்று அந்தப் பெண் செல்ல வேண்டிய இடத்தில் இறக்கிவிட்டுள்ளார்.

ஆட்டோவிலிருந்து இறங்கும் போது அந்த இளம் பெண் ஆட்டோவின் பதிவு எண்ணைக் குறித்து வைத்துக்கொண்டார். பின்னர் தன் தோழிகளிடம் நடந்த சம்பவத்தைக் கூறி கதறியிருக்கிறார். இந்தத் தகவல் வங்கி நிர்வாகத்திற்கும் சென்றது. இதையடுத்து டெல்லியில் உள்ள பெற்றோர்களிடமும் கூறி அவர்களை வரவழைத்தார். பின்னர் இது தொடர்பாகக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பின்னர் வெளிச்சத்துக்குவந்த இந்தச் சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

வங்கி நிர்வாகம் தரப்பிலும் போலீஸாரிடம் விரைவில் விசாரணை செய்யுமாறும் குற்றவாளிகள் யாரும் தப்பிக்கக்கூடாது எனவும் அழுத்தம் தரப்பட்டது. விசாரணையில் தினேஷ், வசந்த்குமார், புருஷோத்தமன், அன்பரசு மற்றும் இதற்குக் காரணமான ஆட்டோ டிரைவர் குருமூர்த்தி ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். இதில் அந்த நான்கு இளைஞர்களும் இளம் பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது.

   

விசாரணையின்போது அந்தப் பெண் எனக்கு நடந்ததுபோல் இனி எந்தப் பெண்ணுக்கும் நடக்கக் கூடாது. அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய தண்டனை ஒரு எடுத்துக்காட்டாக இருப்பதுடன் இனி யாரும் இது போன்ற சம்பவங்களைச் செய்வதற்கு அச்சப்பட வேண்டும் எங்கு வந்து வேண்டுமானாலும் சாட்சி சொல்கிறேன் என ஆதங்கத்துடன் போலீஸாரிடம் தெரிவித்திருந்தார்.

 

இந்த வழக்கின் விசாரணை தஞ்சாவூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் போலீஸார் 700 பக்க குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர். மேலும் அரசு தரப்பு சாட்சியாக 33 பேரிடம் விசாரிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி எழிலரசி, ``அரசு தரப்பு சாட்சியங்கள் அனைத்தும் சந்தேகமின்றி நிரூபணம் செய்யப்பட்டுள்ளதால் 5 பேரும் குற்றவாளி'' எனத் தீர்ப்பளித்தார்.

   

இதைத் தொடர்ந்து குற்றவாளிகளான தினேஷ், வசந்தகுமார், புருஷோத்தமன், அன்பரசு ஆகிய நான்கு பேருக்கும் சாகும் வரை சிறைத் தண்டனை விதித்தார். அத்துடன் அவர்களின் உடல்தான் சிறையிலிருந்து வெளியே வர வேண்டும் எனவும் குறிப்பிட்டார். மேலும் இதில் தொடர்புடைய ஆட்டோ டிரைவருக்கு 7 ஆண்டுக் கடுங்காவல் சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதைக் குற்றவாளிகள் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டது. இந்தத் தீர்ப்பு தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ttps://www.vikatan.com/news/crime/tanjore-courts-awards-life-sentence-to-4-in-sexual-harassment-case

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பிழம்பு said:

கும்பகோணத்தில் வடமாநில இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நான்கு இளைஞர்களுக்கு வாழ்நாள் சிறைத் தண்டனையும், மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ஆட்டோ டிரைவருக்கு 7 ஆண்டுச் சிறைத் தண்டனையும் விதித்து தஞ்சாவூர் மகளிர் நீதிமன்றம் இன்று பரபரப்பான தீர்ப்பு வழங்கிள்ளது.

தமிழ் பெண்களுக்கு.... பொள்ளாச்சியில் நடந்த வன் கொடுமைகளுக்கும்,
விரைவில் தீர்ப்பை கொடுங்கள். 

Link to comment
Share on other sites

On 1/14/2020 at 5:17 AM, தமிழ் சிறி said:

தமிழ் பெண்களுக்கு.... பொள்ளாச்சியில் நடந்த வன் கொடுமைகளுக்கும்,
விரைவில் தீர்ப்பை கொடுங்கள். 

 தமிழ்சிறி இங்கு தமிழ் பெண்ணோ வேறு இனப் பெண்ணோ என்பது முக்கியமல்ல. ஒரு  பெண் அவள் எந்த இனத்தை சேர்ந்தவரானாலும் அவர்கள் மீது  இவ்வாறான அக்கிரமங்களை செய்வோர் தண்டிக்க்கப்படல் வேண்டும்.  ஆனால் இந்த இரு சம்பவங்களிலும் ஈடுபட்ட குற்றவாளிகள் தமிழர்களே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/16/2020 at 10:33 AM, tulpen said:

 தமிழ்சிறி இங்கு தமிழ் பெண்ணோ வேறு இனப் பெண்ணோ என்பது முக்கியமல்ல. ஒரு  பெண் அவள் எந்த இனத்தை சேர்ந்தவரானாலும் அவர்கள் மீது  இவ்வாறான அக்கிரமங்களை செய்வோர் தண்டிக்க்கப்படல் வேண்டும்.  ஆனால் இந்த இரு சம்பவங்களிலும் ஈடுபட்ட குற்றவாளிகள் தமிழர்களே. 

ஆம், உண்மை... ருல்பன்,
உங்கள் கருத்தை, மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கின்றேன்.  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொத்து என்றால்.... தகரத்தில் அடிக்கும் கொத்துதான் கெத்து. 😂 அந்தச் சத்தமே.... வாயில் இருந்து உணவுக் குழாய் வரை குதூகலிக்கும் சத்தம் அது. தாச்சியில்... அதுகும்  இலங்கையில்  கொத்து செய்வதை இப்போதான் கேள்விப்படுகின்றேன்.
    • 🤣 இந்த நுளம்பு கூட்டத்தை அவர்கள் பாணியில் சில ஒபாமாக்கள், விஜி களை ஏவி எதிர்கொள்ளுவதுதான் புத்திசாலித்தனம். அல்லது நீர்யோக நகரம், கொஸ்டரீக்கா போன்றனவற்றையும் கையில் எடுக்கலாம். சீரியசாக எடுத்தால் எமக்கு மண்டை காய்ந்து விடும். ————— உண்மையில் ஓரளவுக்கு சாத்தியமான எடுகோள், பலூசிஸ்தான் போலான் கணவாய் வழி மேற்கே இருந்து ஈயுரேசியர், பேர்சியன்ஸும், வடக்கே கைபர் கணவாய் வழி வந்த மத்திய ஆசியர், மங்கோலியர், பிராமணரும் (வேதங்களை நம்பியோர்)….. சிந்து சமவெளியில் இருந்த திராவிட/தொன் தமிழ் நாகரீகத்தை பிரதியீடு செய்ய, திராவிட/தொல் தமிழர் விந்திய மலைக்கு தெற்கே ஒதுங்கினர். இங்கே திராவிடம் எனப்படுவது தொல் தமிழையே.  இன்று தென்னிந்தியாவில் காணப்படும் மக்களின், மொழிகளின், பண்பாடுகளின் தோற்றுவாய். அலர்ஜி உபாதைகள் இருப்போர் திராவிட என்பதற்கு பதில் தொந்தமிழ் என்றோ அல்லது X நாகரீகம் எனவோ அழைத்துக்கொள்ளலாம். ஆனால் X பெர்சியாவில் இருந்து வந்தது என்பது - சந்தேகமே இல்லாமல் - product of Costa Rica தான்🤣.
    • உலகின் முதன் முதல் வந்த நகைச்சுவை...  எம்பெருமான் முருகன், ஔவையார் பாட்டியிடம், சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?  என்று கேட்டது தான். 😂 காலத்ததால் முந்தியதும்.... இன்றும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் நகைச்சுவை இதுதான் என்று அடித்து சொல்வேன். 😁 🤣
    • ஏன் செய்தார்களெனத் தெரியவில்லை. ஹோபோகன் நகரம்  அனேகமாக நியூயோர்க்கில் வேலை செய்வோர் ஹட்சன் நதிக்கு இக்கரையில் வாழும் செல்வந்தமான நகரம். இவர்கள் அங்கேயே வசிப்பவர்களாக இருந்தால் பலசரக்குக் கடையில் களவெடுக்கும் அளவுக்கு வறுமையில் இருக்கும் வாய்ப்பில்லை. அல்லது, காசு கட்டிப் படிக்க வந்து, பணத்தட்டுப் பாட்டில் செய்து விட்டார்களோ தெரியவில்லை. இப்படியான இளையோர் நியூ ஜேர்சியில் இருக்கிறார்கள் என அறிந்திருக்கிறேன். இந்த குறிப்பிட்ட ஷொப்றைற் கடையின் self checkout மூலம் பலர் திருடியிருக்கிறார்கள். இதனாலேயே வீடியோ மூலம் கண்காணிப்பை அதிகரித்து இவர்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். 
    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.