Jump to content

தமிழ் பிராமணியத்தின்  மனசாட்சிக்கு - சுப.சோமசுந்தரம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

                                                            தமிழ் பிராமணியத்தின்  மனசாட்சிக்கு

-       சுப. சோமசுந்தரம்

 

            இந்தத் தலைப்பில் என்னிடம் உள்ள கருத்துக்கள் பல காலமாகவே என்னுள் உறைபவையாயினும், இவற்றை எழுத்தில் பதிவு செய்யுமுன் சிறிது யோசித்தேன்; சற்றே தயங்கினேன். அதற்குக் காரணங்கள் சிலவுண்டு. எனக்கு வாய்த்த சிறந்த பிராமண நண்பர்கள், பிராமணர்கள் பேசுவதற்கும் பழகுவதற்கும் பொதுவாக இனிமையானவர்கள் என்னும் என் கருத்து, அவர்களோடு உணர்வுப்பூர்வமாக நான் ஒன்றிய நினைவுகள் – இவ்வாறு அடுக்கலாம். இவற்றையெல்லாம் மீறி எங்கோ பதிவு செய்தே ஆக வேண்டும் என்ற உந்துதல். முடிவெடுத்த பின் எழுதித்தானே ஆக வேண்டும் !

 

            பெரும்பான்மைத் தமிழ்ச் சமூகத்திடமிருந்து அநேகமாக அனைத்து விடயங்களிலும் அவர்கள் வேறுபட்டு நிற்பது, இம்மண்ணில் அவர்களது வேர்கள் இல்லை என்பதற்குச் சான்று. ஏன், நம்மில் பெரும்பாலானோர் கூட கலப்பின வந்தேறிகளாக இருக்கலாம். இங்குள்ள காணியர், தோடர் முதலிய பழங்குடியினரின் டி.என்.ஏ வுடன் நமது டி.என்.ஏ ஒத்துப் போகும் வாய்ப்பு மிகக் குறைவு. ஆனால் தமிழ்ப் பிராமணர்கள் இந்நிலத்திற்கு வந்தேறிகள் என்பதற்கு டி.என்.ஏ சோதனையெல்லாம் தேவையில்லை.

 

            முதலில் அவர்களில் பெரும்பான்மையோரின் தோல் நிறத்தில் இம்மண்ணிற்கான கூறு இல்லை. இரு தரப்புகளிலும் – பிராமணர் மற்றும் பிராமணர் அல்லாதார் – வண்ணம் மாறிய காட்சிகள் உண்டே ! நான் ஏற்கனவே சொன்ன ‘கலப்பினச்’ செய்தியையும், இராமானுஜர் என்ற பிராமணப் பெரியார் இங்குள்ள சிலரையும் பிராமணராக்கிப் புரட்சி செய்த செய்தியையும் இன்ன பிறவற்றையும் அலசி ஆராய்ந்து தலைப்பிலிருந்து பெரிய அளவில் விலக விரும்பவில்லை.

 

            அவர்களுக்கென்று தனித்துவமான பழக்க வழக்கங்கள், மரபுகள் பற்றிப் பேசுவதானால், இம்மண்ணில் (அவர்களால் ஏற்படுத்தப்பட்ட?) சாதிகளுக்குள் வேற்றுமைகள் உண்டே, அதுபோல்தான் இதுவும் என்று தட்டிக் கழித்து விடலாம். ஏனையோர் சிறுதெய்வ வழிபாடுகளிலும் ஈடுபட, பிராமணர்கள் தாம் கொண்டு வந்த பெருந்தெய்வ வழிபாடுகளில் மட்டும் வழங்கி வருவது, குறித்துக் கொள்ள வேண்டிய ஒன்று. சமீப காலங்களில் புதிதாக அவர்களில் சிலர் சிறுதெய்வ வழிபாட்டிற்குள் வருவது, அந்தப் பழமையான சந்தையையும் பிடிக்க ஏதோ திட்டமிட்ட சதிதானோ என்று எண்ணத் தோன்றுகிறது. சுடலையை சிவனின் வடிவாக்கியதும், அந்தந்த வட்டாரங்களில் வழங்கிய பெண் தெய்வங்களை ‘யட்சி’ என இவர்கள் பெயரிட்டுப் பின்னர் தமிழன் அதனை ‘இசக்கி’ ஆக்கியதும் முன்பே அவர்கள் ஆரம்பித்த நடைமுறைகள்.

 

            மொழி வேற்றுமை பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். பொதுவாக ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒரு வழக்கு உண்டு. ஒரு வட்டாரத்திற்குள்ளும் சமூகம் சார்ந்து சிறிய வேற்றுமைகள் இருக்கலாம். உதாரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஒரு சில சமூகங்களில் மட்டும் பாட்டியை ‘ஆச்சி’ என்று அழைக்கும் வழக்கம் உண்டு. நாட்டுக்கோட்டை செட்டியார்களில் பெண் பிள்ளைகளைக் கூட மரியாதையுடன் ‘ஆச்சி’ என்று அழைப்பார்கள். ஆனால் பிராமண சமூகத்தில் மட்டும் வட்டார எல்லைக்கு அப்பாற்பட்டு தமிழகம் முழுவதும் ஒரே வகையான தமிழ் வழங்குவதைக் காணலாம். அது ‘தேவபாடை’யை அதிகம் தூக்கித் திரியும் மொழி. மறைமலையடிகள், தேவநேயப் பாவாணர் போன்ற சான்றோர்தம் முயற்சியால் வடமொழி ஆதிக்கத்திலிருந்து ஓரளவு மீட்டெடுக்கப்பட்ட தமிழை இன்னும் சிறைப்படுத்தியிருக்கும் மொழி பிராமணர்தம் மொழி. அதற்கு அக்காலத்தில் ‘மணிப்பிரவாள நடை’ என்று சிறப்பான பெயர் வேறு. ஷ, ஹ, ஸ இன்றி பிள்ளைகளுக்குப் பெயர் வைப்பதே பாவம் என்று அனைத்துத் தரப்பினரும் எண்ண ஆரம்பித்த பின், மொழிச் சிதைவுக்கு பிராமணர்களை மட்டும் குறை சொல்வானேன்? ஆயினும் தமிழகத்திலும் தமிழகத்திற்கு அப்பாலும் அவர்கள் வேறுபாடின்றி ஒரே மொழி (தமிழ்தான்) பேசுவது, அவர்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன் ஒட்டு மொத்தமாகவும், பின்னர் பல கால கட்டங்களில் வெவ்வேறு குழுக்களாகவும் வடக்கிருந்து வந்து பரவிய ஒரே இனக்குழு என்பதை மேலும் வரையறுக்கிறது.

 

            ஒரு நிலத்தில் வந்தேறியானது குற்றமோ குறைவோ இல்லை. மனித இனம் ஆப்பிரிக்காவில் தோன்றியது உண்மையானால், மற்ற அனைத்துப் பகுதிகளிலும் வாழ்பவர்கள் வந்தேறிகள்தாம். வரலாறு அறியாக் காலத்தில் வந்து அந்த நிலத்திற்குத் தொன்மையையும் தொன்மத்தையும் தந்தவன் அந்நிலத்திற்கு உரியவனாகிறான். அவ்வாறே இந்நிலத்திற்கு உரியவன், தான் கட்டமைத்த தலைசிறந்த நாகரிகத்தை, தான் வாழ்ந்து பார்த்த ஒரு பெருவாழ்வினைப் பொற்காலமாக்கி ஒரு காலகட்டத்தில் சங்க காலமாக என் கண்ணில் காட்டினான். அதற்கு முன்னரும் அப்பெருவாழ்வினை அவன் வாழ்ந்திருக்க வேண்டும். அவன் ஓலையில் எழுதி வைத்த வரைதானே என்னால் பார்க்க முடியும் !

 

            தமிழ் மண்ணில் பெருமளவில் வந்து சேர்ந்த வேற்று மொழியினர் என்ற வரிசையில் சுமார் ஈராயிரம் ஆண்டுகளாக வடக்கிருந்து வந்த பிராமணர்களும், விஜயநகரப் பேரரசின் ஆட்சிக் காலத்திலும் திருமலை நாயக்கர் காலத்திலும் வந்த தெலுங்கர்கள் மற்றும் சௌராட்டிரர்களும் பட்டியலிடப் படலாம். சமீப காலங்களில் வாணிக நிமித்தமாக வந்த மார்வாடிகள், இராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் ஒரு காலும் இங்கொரு காலுமாக வாழ்வதால் அவர்களைத் தற்போது நமது விவாதத்தில் புறந்தள்ளி விடலாம். கோவை, சௌகார்பேட்டை போன்ற இடங்களில் வேட்பாளரின் வெற்றியைத் தீர்மானிக்கும் பலமே அவர்களிடம் உண்டு என்பது தனிக்கதை. தெலுங்கர்கள் தமிழ் கூறும் நல்லுலகில் கரைந்து போனார்கள். யாரும் தம் அடையாளங்களை இழந்து தன்னில் கரைந்து போக வேண்டும் என விடயம் அறிந்த தமிழன் விரும்புவதில்லை. தன் அடையாளத்தை அழிக்க நினைப்பவர்கள் மீதுதானே அவன் கோபம் எல்லாம் ! இருப்பினும் நடப்பதைச் சொல்லித்தானே ஆக வேண்டும் ? ஏதோ உடைந்த தெலுங்கைத் தம் வீடுகளில் பேசி, தமிழ்ச் சமூகத்தில் வெவ்வேறு சாதிக் குழுக்களானார்கள். அவ்வாறே சௌராட்டிரர்களும். குறிப்பாக தமிழில் தம் மொழியைக் கலந்துவிட்டுப் பாதகம் செய்யவில்லை இவர்கள். இவர்கள் மொழிக் கலப்புப் பாதகம் செய்யவில்லை என்று வேற்றுப் பொருள் வைப்பாக நாம் சொல்ல வருவது தெளிவு. இப்பாதகம் பெருமளவில் செய்தவர்கள் பிராமணர்களே. நாம் அவர்கள் மீது வைக்கும் முதற் குற்றச்சாட்டும் இதுவே. இதற்கு முன், ஏனைய இனக்குழுக்களைப் போல் எவ்வாறு வேறுபட்டு நின்றார்கள் என்பதையே சுட்டிக் காட்டினோம். அது அவர்கள் பிழையன்று. பெருமளவில் ‘தேவபாஷை’க் கலப்பும் ‘நீச பாஷை’ச் சிதைப்பும் அவர்களது முதற் பிழை. ஒரு காலகட்டத்தில் அவர்களே பெரும்பாலும் படித்தார்கள் ஆதலின், வடமொழிக் கலப்பே சமூகத்தில் உயர்வென்னும் பிம்பத்தை ஏற்படுத்த ஏதுவாயிற்று – தற்காலத்தில் ஆங்கிலக் கலப்பு சான்றாண்மையாய் அடையாளங் காட்டப்பெறுவதைப் போல. கூட்டம் போட்டுத் தீர்மானம் கொண்டு வந்தா இதனைச் செய்தார்கள் என்று கேட்கலாம். குழு மனப்பான்மை (Mass mentality) என்பது மறுக்க முடியாத எதார்த்தம். நாம் வளர்ந்து வரும் சூழலே நம்மைச் செதுக்கும். அப்படியில்லாமலா ஷேக்ஸ்பியர் போன்ற அறிஞர் பெருமக்களே யூதர்களை ஒட்டுமொத்தமாக விமர்சித்தார்கள்? எந்த சாதிக் குழுவையும் விமர்சிக்காத பெரியார், அம்பேத்கர் போன்ற பகுத்தறிவாளர்கள் பிராமணர்களை மட்டும் காரணமில்லாமலா விமர்சித்தார்கள்? எங்கும் விதிவிலக்குகள் உண்டு. விதிவிலக்கு என்றாலே விதி யாது என்பது தெளிவு.

 

            இதுவரை பிராமணர்களைப் படர்க்கையில் எழுதிய நான் அவர்களை முன்னிலையில் விளித்தால் இன்னும் உணர்வுப்பூர்வமாய் இருக்கும் என எண்ணுகிறேன். நான் முன்பே கூறியது போல் என் நட்பு வட்டத்திலும் அவர்கள் உண்டே!

 

            அதிகார மையத்திலோ அல்லது அம்மையத்திற்கு அருகிலேயோ எப்போதும் அமர்ந்திருக்க வேண்டும் என்ற உந்துதல் சரியானதுதானா, தோழர் ? அது ஏனையோரிடமும் உண்டே என்று கேட்கிறீர்களா? இருக்கலாம். ஆனால் உங்களிடம் நீக்கமற நிறைந்திருப்பதை உங்களால் மறுக்க முடியுமா? ‘பிராமணர்களுக்கு அதிகாரமே உணவு’ என்று சான்றாண்மை மிக்க ஒருவரின் எழுத்தை வாசித்திருக்கிறேன். அந்த உந்துதலும் முனைப்பும் தவறானதா? தவறானதுதான். நான் சொல்லவில்லை. நம் காலத்து அறிஞன், (ஆகவே) சமூகச் சிந்தனையாளன் சார்லி சாப்ளினிடம் கேளுங்களேன் : “தீமை செய்ய நினைத்தால் மட்டுமே அதிகாரம் வேண்டும். நன்மை செய்ய அன்பு ஒன்றே போதும்” (You need power only when you want to do something harmful, otherwise love is just enough to get everything done). உங்கள் அதிகாரப் பசியால் தீமை என்ன நிகழ்ந்தது என்ற வினாவிற்கு என் வினாவெதிர் வினாவையே விடையாக அளிக்கத் தோன்றுகிறது, “தீமையைத் தவிர வேறென்ன நிகழ்ந்தது?” அம்பேத்கர் சுட்டியதைப் போல, ‘நீங்கள் கற்றவர்கள்; சான்றாண்மை மிக்கோர் இல்லை’ என்பதைத் தொன்று தொட்டு நிரூபித்து வருகிறீர்கள். சேர, சோழ, பாண்டியர்களை மூளைச் சலவை செய்து பிரம்ம தேயங்கள், சதுர்வேதி மங்கலங்கள், அகரங்கள் முதல் பிராமண போஜனம் வரை அனைத்துச் சலுகைகளையும் பெற்றுக் கொண்டது மற்றவர்களுக்குப் பிரச்சனையில்லை. அம்மன்னர்கள் காலத்தில் மனுதர்மத்தைக் கோலோச்ச வைத்தீர்களே? பிராமணருக்கும், பாதி பிராமணரான வேளாளருக்கும் ஒரு நீதி, ஏனைய ‘கீழ்ச் சாதியினரு’க்கு வேறு நீதி என்ற முறைமை கல்வெட்டுக்களில் காணக் கிடைக்கின்றன. ‘மனுநெறி தழைக்க’, ‘மனுவாறு செழிக்க’ என்ற தொடர்கள் அக்கல்வெட்டுகளில் பரவலாகக் காணலாம். ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் “தென்னிந்தியக் கல்வெட்டுகள்”, தொகுதி 6,22,26ல் காண்க. ஆட்சியதிகாரத்தில் நீங்கள் கொண்ட செல்வாக்கைக் கூற, தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி 5, கல்வெட்டு 1409 போதும். குந்தவை நாச்சியாரின் ‘நந்தா விளக்கு’ இறைப்பணிக்காக எண்பத்து மூன்றரையே மூன்றுமான அரைக்காணி நிலத்தை சிறு நில உடைமையாளர்களிடம் இராசராச சோழன் ஆணைப்படி வலுக்கட்டாயமாக விலைக்கு வாங்கிய தரகு வேலையை பிராமண சபையினர் (ராஜ சேகர சதுர்வேதி மங்கல சபையார்) பார்த்தமை தெளிவு. நாம் பழங்காலக் கதைகளை மேம்போக்காகச் சொல்லவில்லை என்பதற்குச் சான்றாகவே கல்வெட்டுக் குறிப்புகள். உங்களைப் பெரிதும் ஆதரித்தவன் அல்லது உங்களிடம் பெரிதும் ஏமாந்தவன் இராசராச சோழன் என்பதாலோ என்னவோ, சமீப காலத்தில் அப்’பொன்னியின் செல்வ’னைப் பெரிதும் கொண்டாட ஆரம்பித்திருக்கிறீர்கள். அவன்தான் தமிழன் என்று ஆர்ப்பரித்து அவன் பிறந்த நாளைக் கொண்டாடும் அளவுக்கு வளர்ந்திருக்கிறீர்கள். மன்னர் காலத்தில் உங்கள் அதிகாரப் போக்கினை விரிவாகக் காண, சிறந்த ஆய்வாளரான பேரா.ஆ.சிவசுப்பிரமணியன் அவர்கள் எழுதிய ‘பிராமண போஜனமும் சட்டிச் சோறும்’ (என்.சி.பி.எச் வெளியீடு) எனும் நூலில் கல்வெட்டு ஆதாரங்களுடன் காணலாம். பழங்கதையைக் கிளறியது, கருவின் குற்றம் பற்றிக் கூறத்தான்.

 

            அக்காலத்தில் நீங்கள் அரசுகளையும் மக்களையும் கடைப்பிடிக்க வைத்த மனுநீதி, வர்ணாசிரமம், சனாதனம் அனைத்தையும் ஒரு இயக்கமாக எதிர்த்துப் போராட எத்தனை நூற்றாண்டுகள் காத்திருப்பு ! பெரியாரும் அம்பேத்கரும் இன்ன பிறரும் பிறந்து வர வேண்டியதாயிற்று. அக்காலத்திலேயே உங்களுக்கு எதிர்ப்பு இல்லாமல் இல்லை. சைவமும் பௌத்தமும், சமணமும் உங்கள் வேதாகமத்திற்கு எதிராகத் தோன்றியவையே.

திருமூலரின்

         ‘பேர்கொண்ட பார்ப்பான் பிரான் தன்னை அர்ச்சித்தால்

          போர் கொண்ட நாட்டுக்குப் பொல்லா வியாதியாம்

          பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமும் ஆம்என்றே

          சீர் கொண்ட நந்தி தெரிந்து உரைத்தானே’

என்ற பாடல் நீங்கள் கோயில் நிர்வாகத்தில் புகுந்ததை எதிர்த்து எழுந்த கலகக் குரலே. ‘பேராசைக்காரனடா பார்ப்பான்’ என்று உங்களில் தோன்றி வளர்ந்த பாரதி கண்கூடாகக் கண்டு சொன்னானே ! மக்களுக்காகவே வாழ்ந்த தந்தை பெரியாரையே, உங்களை வசை பாட வைத்தீர்களே ! இன்றளவும் நூலுடை சான்றோர் உங்களைத்தானே விமர்சிக்கின்றனர் ! மக்கள் குழுக்களில் ஒருவருக்கொருவர் வெறுப்பினை உமிழ்வது நடந்தேறினாலும், சான்றோர் பெருமக்களால் தூற்றப்பெறும் பேறு உலகளவில் யூதர்களுக்கு அடுத்து உங்களுக்கேதான் !

 

            உங்களில் சிலர் தமிழ்ச் சமூகத்திற்கு ஆற்றிய தொண்டினை ஈண்டு நினைவு கூர்தல் நன்றியறிந்த தமிழர்தம் கடமையே ! வள்ளுவத்தைப் போதித்த பரிமேலழகரையும், தமிழ்ச் செல்வங்களை வெளிக்கொணர்ந்த தமிழ்த் தாத்தா சாமிநாத ஐயரையும், தமிழாகவே வாழ்ந்த பரிதிமாற் கலைஞரையும் இன்ன சிலரையும் நினையாதவன் தமிழனா என்ன ! இதில் முதல் இருவர் தேவபாடையைத் தூக்கிப் பிடித்தமை தமிழர்க்கு நேர்ந்த சிறு அவலம் எனலாம். பாரதியை இதில் விட்டது, அவரை ‘உங்கள்’ எனும் பட்டியலில் தமிழன் வைப்பதில்லை, நீங்களே வைப்பதில்லை என்பதால்.

 

            ஏதோவொரு விலங்கினமோ புள்ளினமோ பூவினமோ அழியும் செய்தியால் மனம் வலிக்கிறதே ! ஒரு குறிப்பிட்ட மொழியைப் பேசும் அல்லது ஒரு குறிப்பிட்ட இனத்தின் கடைசி மனிதன் இறந்தான் எனும் செய்தியைப் பத்திரிக்கையில் வாசித்த நாள் முழுவதும் நெஞ்சில் ஏதோவொரு ஓலம் ! நம் காலத்தின் இந்த அடையாளங்களைப் பேணிக் காக்க முடியாத ஒரு கையாலாகாத்தனம் நம்மைச் சுடுகிறதே ! ஆனால் (அறியாமையால் அல்லது ஏமாந்ததால்) உங்களை வாழ வைத்த தமிழினத்தின் அடையாள அழிப்பில் உங்களுக்குக் குற்றவுணர்வு  இல்லாமல் போனது எப்படி ? மொழிக் கலப்பு, சங்க காலம் முதலான அவனது தலைசிறந்த பண்பாடு நிராகரிப்பு போன்று காலங்காலமாய் நீங்கள் நிகழ்த்தி வரும் தாக்குதல்களும் அவன் ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டும் மீண்டும் எழுந்து நிற்பதும் ஒரு புறம் இருக்கட்டும். அவன் தன்னைக் காக்க, தன் மண்ணைக் காக்க நிகழ்த்தும் எந்தவொரு போராட்டத்திலும் நீங்கள் அவனுடன் நிற்பதில்லையே ! மொழிப் போர், மரபு காக்கும் சல்லிக்கட்டு, அழிவு தரும் அணுசக்திக்கு எதிரான போராட்டம், தன் நிலம் காக்க ஹைட்ரோ கார்பன் மற்றும் எட்டு வழிச் சாலைக்கு எதிரான போராட்டங்கள், ஸ்டெர்லைட் போராட்டம் என்று அனைத்திலும் வளர்ச்சித் திட்டங்கள் என்னும் பெயரில் அவனுக்கு எதிராகத்தானே நிற்கிறீர்கள் ? அவனது போராட்டங்கள் உங்கள் இனத்திற்கானவை அல்ல என்பதாலா? இலங்கைத் தமிழின அழிப்பில் கூட சிங்களவனுடன் கை குலுக்கும் உங்கள் துரோகத்துக்கு என்று தோழர் முற்றுப்புள்ளி வைப்பீர்கள்? உங்களில் சிலர் அங்கும், சிலர் இங்குமாக நின்றால் கூட எங்களால் புரிந்து கொள்ள முடியும். அதெப்படி ஒட்டு மொத்தமாக நீங்கள் தமிழனுக்கு எதிராக? தமிழன் உணர்ச்சி வயப்பட, நீங்கள் மட்டும் அறிவார்ந்த சமூகம் என்று முடிவெடுத்துக் கொண்டீர்களோ? அறிவார்ந்த மனிதன் பாதிக்கப்படும் மக்களுடன்தான் நிற்பான். பிரம்ம தேயங்களையும், கல்வெட்டுக்களில் அவன் பொறித்துக் கொடுத்த ‘சட்டிச் சோறு’ உரிமைகளையும் நினைத்தாவது குறைந்த பட்சம் தமிழனிடம் ‘செஞ்சோற்றுக் கடன்’ என்ற சொல்லின் பொருளைப் படித்திருக்கலாமே ! உலகத்துக்கே நாகரிகம் சொல்லித் தந்த சங்க காலத் தமிழன் உங்களுக்குத் தமிழ் சொல்லித் தர மாட்டானா, என்ன?

 

            தந்தை பெரியார் வெறுத்துப் போய்  கையறு நிலையில்தானே உங்களையும் பாம்பையும் வைத்துத் திட்டினார்? நீங்கள் திருந்தாத ஜென்மங்கள் என்ற முடிவுக்கு வந்த பெரியாரின் கூற்றைப் பொய்யாக்க என்றாவது முயற்சித்தீர்களா? இந்துத்துவா என்ற போர்வையில் மக்களை ஏமாற்றி நீங்கள் மீண்டும் கொணர நினைப்பது வர்ணாசிரமப் பார்ப்பனியம் அல்ல என்று உங்கள் நெஞ்சில் கை வைத்துச் சொல்ல முடியுமா ? திராவிட இயக்கங்கள் தமிழகத்தில் உங்களைத் தட்டி வைத்த வரைக்குதானே அடங்கி இருந்தீர்கள்? காலத்தின் அலங்கோலத்தில் , மத்தியில் ஒரு இந்துத்துவா அரசு அமைந்ததும், மத்தியிலும் மாநிலத்திலும் அரை வேக்காடான உங்கள் ஆட்களின் கொக்கரிப்பு உங்களுக்கே சகிக்கிறதா? ஏன், தமிழகத்தில் வாட்ஸ் அப் குழுமங்களிலும் முகநூலிலும் உங்களின் ஆரவாரங்கள் பெரியாரின் கூற்றை மெய்ப்பிக்கின்றனவா, இல்லையா? எத்தனை காலத்திற்கு இந்த ஆர்ப்பரிப்பு சாத்தியம் என்று நினைக்கிறீர்கள்? சக்கரம் சுழலத்தானே வேண்டும் !

 

            உங்கள் மனதுடன் நான் பேச நினைத்தது இவ்வளவுதான். உங்கள் அடையாளத்துடன் வாழ உங்களுக்கு முழு உரிமை உண்டு. உயிரைக் கொடுத்தேனும் தமிழனின் அடையாளத்தைக் காக்கும் கடமையும் உங்களுக்கு உண்டு. போனது போகட்டும்.

                        “நின்னைச் செற்றனன் என்னைச் செற்றனன்

                         தீயரே ஆயினும் உனக்கு உற்றனன் எனக்கும் உற்றனன்”

என்று கம்ப நாடன் சொன்னது போல் நீங்கள் தமிழினத்திடம் கொள்ளும் உறவே மனித நீதியாக அமைய முடியும். தமிழனுடன் நில்லுங்கள், தோழர் ! அவன் என்றும் உங்களைத் தாங்கி நிற்பான். வந்தாரை வாழ வைப்பதே அவன் கண்ட அறம்.

 

Link to comment
Share on other sites

ஐயா சுப.சோமசுந்தரம் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்!

"மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் மட்டும் ஏன் பிராமணர்கள் இந்தளவிற்கு விமர்சிக்கப்படுகிறார்கள்?" என்ற வினாவுக்கு, இப்பதிவையே விடையாக, தமிழ் Quora தளத்தில் மீள்பதிவு செய்தேன்.

ஐயா சுப.சோமசுந்தரம் அவர்களின் விடையைக் காட்டிலும், சிறந்த விடையை, மேற்கண்ட Quora வினாவுக்கு, இப்பூமிதனில் யாங்கணும் யாம் கண்டதில்லை! உண்மை! வெறும் புகழ்ச்சியில்லை!

இவ்விடையில், வெறுப்பு இல்லை! தோழமை உண்டு! கனிவு உண்டு! பாசம் உண்டு! தவறைச் சுட்டிக்காட்டித் திருத்தும் நட்பு உண்டு! நடந்தவை போகட்டும். இனியாவது நன்மை நடக்கட்டும்.

மனம் திருந்தி வாருங்கள் பிராமணத் தோழர்களே! நாம் இணைந்து புதியதோர் உலகம் உலகம் செய்வோம்!

Link to comment
Share on other sites

தமிழ் Quora வில் ஐயா சோமசுந்தரம் அவர்களின் பதிவிற்கு, ஐயா அசோகன் அண்ணாவி சுப்பிரமணியன் அவர்கள் அளித்த பின்னூட்டம் சோமசுந்தரம் ஐயாவுக்கு உரியது என்பதால்,  இங்கு மீள்பதிவு செய்திருக்கிறேன். 

-------------

வசைபாடி களை அறிவார்ந்த கருத்துக்களால் வெல்ல முடியும் என்பதை நீருபணம் செய்துள்ளீர்கள் சகோதரரே. நீண்ட நாளுக்கு பிறகு நீண்ட நெடிய பதிலை படித்ததில் பெரும் மகிழ்ச்சி நன்றி.

--------//
 
main-thumb-20486788-200-pwzsihofvmsgusvlbeatlvrakpsnvzbq.jpeg

ஐயா சோமசுந்தரம் அவர்கள் சார்பில், தங்கள் பாராட்டுகளை ஏற்றுக்கொண்டு, அவர்கள் சார்பிலும், என் சார்பிலும், தங்களுக்கு என் உளமார்ந்த நன்றிகள் ஐயா. அன்னாரை, தமிழ் குவாராவில் எழுதுங்கள் என்று பலமுறை அழைத்து விட்டேன். இன்னும் சற்று காலம் கழித்து வருகிறேன் என்பார்கள். இப்பதிவின் மூலம், ஐயா சோமசுந்தரம் அவர்களின் எழுத்தையும், ஆளுமையையும், நம் தமிழ் Quora அன்பர்களிடம் சேர்த்துவிட்டேன் என்பது கூடுதல் மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

இதற்கான உங்கள் பதில் குறித்து விவேகானந்தன் சபாபதி (Vivekanandhan S) கருத்து இட்டார்: ”மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் மட்டும் ஏன் பிராமணர்கள் இந்தளவிற்கு விமர்சிக்கப்படுகிறார்கள்?”
 

வரலாறு மற்றும் சமூக நீதி புத்தகங்கள் நூறு படித்து பெற்ற திருப்தி உங்கள் பதிலில் கிடைத்தது அய்யா,சோமசுந்தரம் அய்யா கண்டிப்பாக குவாராவில் எழுதும் நாள் கூடிய விரைவில் அமைய ஆவலாய் எதிர்பார்த்து காத்திருப்பேன்.

Link to comment
Share on other sites

இதற்கான உங்கள் பதில் குறித்து சண்முக சுந்தரம் துரைராசன் (Shanmuga Sundaram Durairajan) கருத்து இட்டார்: ”மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் மட்டும் ஏன் இந்தளவிற்கு பிராமணர்கள் விமர்சிக்கப்படுகிறார்கள்?”
 

என் உயிர் நண்பரும் பிராமணரே. மிகச் சிறந்த மனிதர் ஆயினும் அவர் மனம் நோகாமல் என் கருத்தை முன் வைக்க உங்கள் பதில் மிகவும் உதவியாக இருக்கும். மிக்க நன்றிகள் அய்யா.

Link to comment
Share on other sites

Quote

ஆனால் பிராமண சமூகத்தில் மட்டும் வட்டார எல்லைக்கு அப்பாற்பட்டு தமிழகம் முழுவதும் ஒரே வகையான தமிழ் வழங்குவதைக் காணலாம்

Quote

ஆயினும் தமிழகத்திலும் தமிழகத்திற்கு அப்பாலும் அவர்கள் வேறுபாடின்றி ஒரே மொழி (தமிழ்தான்) பேசுவது, அவர்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன் ஒட்டு மொத்தமாகவும், பின்னர் பல கால கட்டங்களில் வெவ்வேறு குழுக்களாகவும் வடக்கிருந்து வந்து பரவிய ஒரே இனக்குழு என்பதை மேலும் வரையறுக்கிறது.

வடக்கில் இருந்து வந்தவர்கள் தமிழ்நாட்டில் தமிழ் பேசுகிறார்கள். தமிழ்நாட்டுக்கு வெளியிலும் தமிழ் பேசுகிறார்களா? அது எப்படி தமது மொழியை கைவிட்டார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிராமணரின் மனச்சாட்சியை கேட்பதைவிட

தமிழரின் மனச்சாட்சியை முடியுமென்றால் தட்டி எழுப்புங்கள்.

திரைத்துறைக்கும் அப்பப்ப பணத்துக்கும் அடிமையாகிப் போன தமிழினத்தை தட்டி எழுப்பினாலே பிராமணர் அடங்கிப் போய்விடுவர்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 1/13/2020 at 3:03 PM, சுப.சோமசுந்தரம் said:

ஆயினும் தமிழகத்திலும் தமிழகத்திற்கு அப்பாலும் அவர்கள் வேறுபாடின்றி ஒரே மொழி (தமிழ்தான்) பேசுவது, அவர்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன் ஒட்டு மொத்தமாகவும், பின்னர் பல கால கட்டங்களில் வெவ்வேறு குழுக்களாகவும் வடக்கிருந்து வந்து பரவிய ஒரே இனக்குழு என்பதை மேலும் வரையறுக்கிறது

பிராமணர்களின் பேச்சு வழக்கு தமது அடையாளத்தைத் தக்க வைக்கும் நோக்கமாக இருக்கலாம். அத்துடன் அதிகாரத்தைத் தக்கவைக்க branding தேவைதானே.

ஆனால் பேச்சுவழக்கைக் கொண்டு பரவிய இனக்குழு என்பதை அறுதியிட்டுக் கூறமுடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

ஆனால் பேச்சுவழக்கைக் கொண்டு பரவிய இனக்குழு என்பதை அறுதியிட்டுக் கூறமுடியாது.

உண்மை. பேச்சு வழக்கு இடத்தைப் பொறுத்தே மாறுபடும். நெல்லைத் தமிழ், குமரி மாவட்டத் தமிழ், மதுரைத் தமிழ் ......என்று. ஆனால்  பிராமணர்கள் (சவுராட்டிரர்கள் கூட) தமிழகம் முழுவதும் ஒரே தமிழ் பேசுவதில் அவர்கள் பரவிய இனக்குழு என்பதற்கான முகாந்திரம் உள்ளது. அதுவே வலுவான காரணமாக முன்வைக்கப்பட வேண்டியதில்லை. ஏனெனில் மாறுபாடாகவும் நிகழ்கிறது.  உதாரணமாக திருநெல்வேலி சைவ வேளாளர் தஞ்சைத் தரணியிலிருந்து புலம் பெயர்ந்திருக்க வேண்டும் என்று அவர் காலத்து மக்களிடம் நடத்திய ஆய்வின் மூலம் இராபர்ட் கால்டுவெல் 'History of Tirunelveli' என்ற தமது வரலாற்று ஆய்வு நூலில் குறிப்பிடுகிறார். ஆனால் இன்று  தஞ்சை வேளாளரும் திருநெல்வேலி வேளாளரும் தமது இல்லங்களில் ஒரே மாதிரியான சில பழக்க வழக்கங்கள் கொண்டிருப்பினும், ஒரே மாதிரியான தமிழ் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா சோமசுந்தரம் அவர்களே,

உங்கள் தமிழ் புலமை கண்டு நான் முன்பே பலதடவை வியந்தது உண்டு. 

ஆனால் உங்களுக்குள் இப்படி ஒரு உலகமகா நகைச்சுவை உணர்வும் இருப்பது தெரியாமல் போய்விட்டது ஐயா😂.

பிராமணியத்திடம் போய் மனச்சாட்சியை தேடுறீங்களே ஐயா அவங்க என்ன வச்சு கொண்டா வஞ்சகம் செய்யுறாங்க.😂

large.41B2CEB1-4FAF-4FD9-A095-7DDECD7F0273.jpeg.e0ff82681145544706123dfac62df2f4.jpeg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.