Jump to content

ஊழிக் கால நடனம் - நிழலி


Recommended Posts

பனியும் மழையும் இல்லா
குளிர் கால இரவொன்றை
கடும் காற்று
நிரப்பிச் செல்கின்றது

...

காற்றின் முனைகளில்
பெரும் வாள்கள்
முளைத்து தொங்குகின்றன
எதிர்படும் எல்லாக்
கனவுகளையும்
வெட்டிச் சாய்கின்றன

திசைகள் இல்லா
பெரும் வெளி ஒன்றில்
சூறைக் காற்று
சன்னதம் கொண்டு
ஆடுகின்றது
புல்வெளிகளும் நீரோடைகளும்
பற்றி எரிகின்றன
தீ சூழும் உலகொன்றில்
பெரும் காடுகள் உதிர்கின்றன

காலக் கிழவன்
அரட்டுகின்றான்
ஆலகால பைரவன்
வெறி கொண்டு
ஆடுகின்றான்
சுடலைமாடன் ஊழித்
தாண்டவத்தின் இறுதி
நடனத்தை ஆரம்பிக்கின்றான்

அறம் பொய்த்த உலகில்
அழிவுகள்
ஒரு பெரும் யானையை போல்
நடந்து செல்கின்றது
மதனீரில் பாவங்கள் கரைகின்றது
பிளிறல்களில் எல்லா பொய்களும்
அழிகின்றது

ஆதித்தாயின் கருப்பை
நெருப்பை சுமக்கின்றது
கோடானு கோடி பிள்ளைகளின்
கருவூலம்
தீயில் வேகின்றது

கால பைரவன்
எல்லாவற்றையும் தின்று
தீர்க்கட்டும்

புல் வெளிகளும்
மழைக்காடுகளும்
மூங்கில் தோட்டங்களும்
வயல் பரப்புகளும்
மானுட சரித்திரமும்
பற்றி எரியட்டும்

மனுசர் இல்லா பேருலகம்
இனியாவது வாய்க்கட்டும்

உலகம் பேரமைதி
கொள்ளட்டும்

 

-------------

நிழலி
ஜனவரி 12, இரவு 10

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நன்றாக வந்திருக்கின்றது......அதில் ஏன் இந்த விரக்தி......இன்றைய உலகம் போகின்ற போக்கைப்பார்த்து மனசு வேகின்றதுபோல......ஆயினும் ஒரு கவிஞன் கூடியவரை அறம் பாடுவதை தவிர்த்தல் நல்லது என நினைக்கின்றேன்.இறுதி இரண்டு பந்திகளையும் சொன்னேன்.......!  👍

Link to comment
Share on other sites

மனித அராஜகத்துக்கு இயற்கை  தான் தகுந்த பதிலடி கொடுக்கிறது என்பதை நானும் உணர்கிறேன். அப்பாவிகள்  ஏன் தண்டிக்கப்பட வேண்டும்??

Link to comment
Share on other sites

2 hours ago, suvy said:

கவிதை நன்றாக வந்திருக்கின்றது......அதில் ஏன் இந்த விரக்தி......இன்றைய உலகம் போகின்ற போக்கைப்பார்த்து மனசு வேகின்றதுபோல......ஆயினும் ஒரு கவிஞன் கூடியவரை அறம் பாடுவதை தவிர்த்தல் நல்லது என நினைக்கின்றேன்.இறுதி இரண்டு பந்திகளையும் சொன்னேன்.......!  👍

 

1 hour ago, nunavilan said:

மனித அராஜகத்துக்கு இயற்கை  தான் தகுந்த பதிலடி கொடுக்கிறது என்பதை நானும் உணர்கிறேன். அப்பாவிகள்  ஏன் தண்டிக்கப்பட வேண்டும்??

கடந்த சில தினங்களாக புவி வெப்பமடைதல் மற்றும் பருவநிலை மாற்றங்கள் பற்றி விவரணங்களை பார்த்துக் கொண்டிருந்தேன். மனித காரணங்களால் இயற்கை மிகழும் சிக்கலான போக்கில் நகர்ந்து கொண்டு இருக்கின்றதை உணர முடிந்தது. இங்கு கூட இப்ப கடும் பனிக்காலம் நடப்பதற்கு பதிலாக பெரும் மழை மட்டும் பொழிகின்றது, 

இந்த மாற்றங்களால் அதற்கு முக்கிய காரணமான மனித இனம் மட்டுமே சீரழியுமாயின் பரவாயில்லை. ஆனால் மற்ற உயிரினங்கள் தான் மிக அதிகமாக அழிகின்றன.அவுஸ்திரேலிய காட்டுத் தீயில் மிக மோசமாக பாதிக்கப்பட்டதும் இந்த சிறு உயிர்கள் தான். தாம் ஏன் அழிகின்றோம் என்பதை கூட அறிய முடியாமல் செத்து மடிகின்றன.

அண்மையில் பத்து வருடங்களுக்கு முன், சுனாமியினால் அணுக்கதிர் ஆலைகள் பாதிப்படைந்தமையால் மக்கள் வெளியேறிய ஜப்பானின் ஒரு தீவை விஞ்ஞானிகள் ஆராய்ந்து பார்க்கும் போது, மனிதர்கள் இல்லாமையால் அணுக்கதிர் வீச்சைக் கூட சமாளித்துக் கொண்டு பல மிருகங்கள் தம் இனத்தை பெருக்கிக் கொண்டு சிறப்பாக வாழ்வதை கண்டுள்ளனர். ஆக மனிதன் தான் இயற்கையின் மிகப் பெரும் எதிரி.

மனிதர்களே இல்லாததாக பூமி ஆகும் போதுதான் மனிதர்கள் தவிர்ந்த மிச்ச எல்லா உயிரினமும் வாழும் சூழல் உருவாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கையை நாம் பாதுகாப்பதா ? 

இயற்கையின் சீற்றத்திலிருந்து நம்மைத்தான் பாதுகாக்க வேண்டும். இதற்கு நாம் இயற்கையை சீண்டாமல் இருந்தாலே போதும்.

ஆகவே மனித குலத்தை பாதுகாப்பது எப்படி என யோசிப்பதே சிறந்தது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நிழலி said:

நிழலி
ஜனவரி 12, இரவு 10

மனிசி பிள்ளையள் நித்தாவுக்கு போனாப்பிறகு சிங்கனுக்கு ஞானோதயம் பிறந்திருக்கு. 😂

7 hours ago, நிழலி said:

மனுசர் இல்லா பேருலகம்
இனியாவது வாய்க்கட்டும்

உலகம் பேரமைதி
கொள்ளட்டும்

ஒரு சில சமுதாயம் செய்யும் தவறுக்காக ஒட்டுமொத்த மனித குலத்தையும் சபிக்கக்கூடாது.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலேயே நிழலி எழுதியது போல கற்பனையில் கரைந்து போகிறேன் 
மனிதர் இல்லா பூமி  .... ஒரு வெறும் 10 ஆண்டுகள்..
பூமி தன்னை ஆரோக்கியப்படுத்திக்கொள்ளும் , அழகு படுத்திக்கொள்ளும்
ஆரவாரம் இல்லாத அதிசயம் !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூமியில் உயிரினங்கள் அழிய மனிதன்தான் காரணம். மனிதன் இறுதியில் எல்லாற்றையும் அழித்து தானும் அழிந்துபோவான்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீதியின் அச்சில் இந்த உலகம் சுற்றவில்லை ,அநீதி ,அக்கிரமம், சமத்துவமின்மை ,சுரண்டல், யுத்தம் ,இவை அனைத்தோடும் போராடும் காலம் இப்போ .சமூக ஒப்பந்த கோட்ப்பாடுகளை எல்லாம் மனிதன் மறந்து ஆதி கால மனித வாழ்வுக்கு திரும்பி விடுவான் போல் தான் தெரிகிறது.நல்ல கவிதை உங்கள் கோபத்தின் வெளிப்பாடு புரிகிறது.

Link to comment
Share on other sites

கருத்திட்டவர்களுக்கும் ஊக்குவிப்புப் புள்ளிகள் இட்டவர்களும் என் நன்றிகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/13/2020 at 4:25 PM, நிழலி said:

ஆதித்தாயின் கருப்பை
நெருப்பை சுமக்கின்றது
கோடானு கோடி பிள்ளைகளின்
கருவூலம்
தீயில் வேகின்றது

கால பைரவன்
எல்லாவற்றையும் தின்று
தீர்க்கட்டும்

புல் வெளிகளும்
மழைக்காடுகளும்
மூங்கில் தோட்டங்களும்
வயல் பரப்புகளும்
மானுட சரித்திரமும்
பற்றி எரியட்டும்

மனுசர் இல்லா பேருலகம்
இனியாவது வாய்க்கட்டும்

உலகம் பேரமைதி
கொள்ளட்டும்

-------------

நிழலி
ஜனவரி 12, இரவு 10

Ähnliches Foto

Ähnliches Foto

Bildergebnis für australien feuer tiere

Bildergebnis für australien feuer tiere

Bildergebnis für australien feuer tiere

அவுஸ்திரேலிய தீயால், மனம் வெதும்பி  எழுதிய கவிதை. 😥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பணமே எல்லாவற்றையும் தீர்மானிக்கும்

இன்றையநிலையை மாற்றமுடியுமா?

மாற்றமுடியாதுவிட்டால்  

இந்தப்போட்டி  தொடருமானால்???

எதுவும் தேவையில்லை  மனிதரே  மனிதனை  அழித்து  முடிப்பான்

கவிதைக்கு  நன்றி  தம்பி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.