Jump to content

விக்னேஸ்வரன் ரஜினிகாந் சந்திப்பு : ஈழத் தமிழர்களின் நலன்களுக்கு எதிரானதா?


Recommended Posts

CV.jpg

வடக்கின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் க.வி. விக்கினேஸ்வரன் தமிழகத்திற்கு விஜயம் ஒன்றை மேற் கொண்டுள்ளார். தமிழர்கள் மாநாட்டில் பங்குபெறுதல், மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து பேசுதல், வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளை எடுத்துரைத்தல், இனப்படுகொலைக்கு நீதியைப் பெறும் போராட்டத்தில் ஆதரவை திரட்டுதல் என பல்வேறு நோக்கங்களுக்காக முன்னாள் முதல்வர் இவ் விஜயத்தை மேற்கொண்டுள்ளார். தனிப்பட்ட விஜயமாக அல்லாமல், ஈழத் தமிழ் மக்களின் மேம்பாடு கருதிய பயணமே இதுவாகும்.

தமிழகம் என்றும் ஈழத்துடன் நெருங்கிய பந்தத்தை கொண்டிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில், எத்தகைய சூழ்நிலையிலும் இந்திய ஆதரவு சக்திகளையும் குறிப்பாக, தமிழகத்தில் உள்ள ஆட்சியாளர்கள், ஈழ ஆதரவுக் கட்சிகளின் ஒத்துழைப்புக்கள் தொடர்ச்சியாக எதிர்பார்க்கப்பட்டது. எம்.ஜிஆர் அவர்கள் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு வழங்கிய உதவிகள் ஈழ விடுதலைப் போராட்டத்தின் சிறந்த பக்கங்களாக கருதப்படுகின்றன.

ஈழத்தில் உள்ள மக்கள் தமது குரலை வெளிப்படுத்த முடியாத சூழல் ஏற்படுகின்ற காலத்தில் எல்லாம், புலத்தில் இருந்தும் தமிழகத்தில் இருந்தும்தான் ஆதரவுக் குரல்கள் எழுகின்றன. ஈழ மக்களின் விடியலுக்காக தமிழகத்தவர்கள், உயிர் தியாகம் முதல், எத்தனையோ பங்களிப்புக்களை செய்திருக்கிறார்கள். ஈழமும் தமிழகமும் எப்போதும் உணர்வூர்வமான நெருங்கிய பந்தமான நிலங்கள் ஆகும். அத்துடன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் அரசு ஈழ மக்களுக்காக சட்ட சபையில் உருவாக்கிய தீர்மானங்கள் வரலாற்றுச் சிறப்பு மிக்கவை.

விக்கினேஸ்வரன் அவர்கள், வடக்கில் முதல்வராக இருந்தபோதும் சரி, அதற்குப் பின்னரும் சரி, வெளிநாட்டுப் பிரதிநிதிகளுடன் வடக்கு கிழக்கு மக்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பில் வலியுறுத்தி வந்துள்ளார். தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து, இன்றைக்கு தீர்க்கமான குரலை எழுப்பி வரும் முன்னாள் முதல்வரின் தமிழக பயணம் மிகவும் முக்கியத்துவமானது. காலம் காலமான ஈழ விடுதலைப் பயணப் பாதையை புதுப்பிக்கவும் செப்பனிடவும் உதவக்கூடியது.

இப் பயணத்தின்போது, வடக்கு முதல்வருக்கும் நடிகர் ரஜினிகாந்திற்கும் ஒரு சந்திப்பு ஏற்பாட்டாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது. விமர்சனங்கள் உள்ளபோதும் திரையில் பல ரசிகர்களை கொண்டிருக்கும் ஒரு நடிகருடனான சந்திப்பினை தவிர்க்காமல், அதன்போதும் ஈழ மக்களின் எதிர்பார்ப்புக்களை கூறி விக்கினேஸ்வரன் உரையாடியுள்ளார். ஈழத் தமிழ் மக்கள் இன்றுள்ள நிலையில், சிறுதுரும்பும் அவர்களுக்கு தேவையானது. அவ்வாறான நகர்வே இன்று தேவைப்படுகின்றது. அதுவும் தமிழ் நாட்டின் எதிர்கால முதல்வராக வருவார் என எதிர்பார்க்கப்படும், இந்தியாவின் ஆளும் அரசாங்கத்தின் பிரதமர் உட்பட முக்கிய தலைவர்களுடன் நெருக்கமான தொடர்பினைக் கொண்டிருக்கும் ஒருவருடனான சந்திப்பைத் தவிர்ப்பது என்பது அரசியல் முதிர்ச்சியற்ற செயற்பாடாகவே இருக்கும்.

ஆனால் தமிழர்களை துண்டு துண்டாக தாயகத்தில் பிரித்தவர்களும், விக்கினேஸ்வரன் அவர்களால் தமது தனிப்பட்ட பதவிகளுக்கும் கட்சி நலன்களும் பாதிப்பேற்பட்டு மக்களால் தூக்கி வீசப்பட்டுவிடுவோம் என அஞ்சுபவர்களும், இந்த பயணத்தின்போது முன்னாள் முதல்வர்மீது அவதூறுகளையும் பொய்களையும் தமது இயலாமைகளாக வெளிப்படுத்துகின்றனர். எந்த விதமான காரண காரியங்களுமற்ற அவதூறுகளை சமூக வலைத்தளங்களில் பரப்பி மகிழ்கின்றனர்.

இவ்வாறு பரப்பி மகிழுகின்ற விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் இணைந்திருக்கின்றது. தனிப்பட்ட அரசியல், கட்சி நலன்கள் என்ற விடயத்தில் இவர்கள் இவ்வாறான சந்தர்ப்பங்களின்போது ஒன்றிணைவது வழமையானது. மக்களுக்கு உண்மைகளை வெளிப்படுத்தவும் உதவக்கூடியது. கடந்த காலத்தில் திரு இரா. சம்பந்தன் அவர்களுடன் இந்திய ஆட்சியாளர்களின் முன்னால் கைகட்டி நின்றவர்களில் திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் ஒருவர். இவர்களுக்கான ஆசனம் மறுக்கப்படும் வரையில் இத்தகைய நிலையே காணப்பட்டது.

எவ்வாறாயினும் இரா. சம்பந்தன், விக்னேஸ்வரன் போன்றவர்கள் வெளிப்படையாக அறிவித்தே, இந்தியாவுக்கு செல்கின்றனர். அதேபோன்று வெளிநாட்டு பிரதிநிதிகளை சந்திக்கின்றனர். இனப்பிரச்சினையை தீர்க்க இந்தியாவின் உதவியை வெளிப்படையாகவே கோருகின்றனர். இது சம்பிரதாயபூர்வமான நிகழ்வு. தவிர்க்க முடியாத அரசியல் தேவைப்பாடு. ஆனால் திரு கஜேந்திரகுமார் தரப்பினர் இதுவரை யாரை சந்தித்துள்ளார்கள்? தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் யாருடன் என்ன உரையாடியுள்ளனர்? குறைந்தது, தமிழ் மக்களை சந்தித்தாவது அவர்களின் மனநிலைகளையும் குறைநிலைகளையும் கேட்டிருப்பார்களா?

வெறுமனே ஊடக மையத்தில் உரையாற்றுவதும், சமூக வலைத்தளங்களில் பத்திரிகை துணுக்குகளை வெட்டி ஒட்டி அரசியல் செய்வதும் எதற்காக? தமிழ் மக்களின் எதிர்த்தரப்பை பலப்படுத்தி, தமிழ் மக்களின் இலட்சிய பயணத்தை பலவீனப்படுத்தவா? தமிழர்களின் எல்லா செயற்பாடுகளையும் குழப்பி, தலமைகளை சிதைத்து, தமிழர்களை பின்நோக்கி இழுக்க விரும்புகிறார்களா? இதுதான் அவர்களின் ஒற்றை நோக்கமாக இருக்கின்றதா? ஆனால் அது மாத்திரம் ஒருபோதும் நிகழாது.

அன்றைக்கு ஈழத்தில், தலைவர் அவர்கள், இந்திய கலைஞர்கள், திரைக்கலைஞர்கள், தலைவர்களை எல்லாம் ஈழம் வரவழைத்து சந்தித்து அவர்களின் ஒத்துழைப்புக்களை கேட்டார். உறவுகளை பலப்படுத்தினார். ஆனால் இன்று தமிழகத்துடனான உறவையும் அதன் ஆதரவுக் குரலையும் அற்பத்தனமான வார்த்தைகளைப் பயன்படுத்தி கொச்சைப்படுத்தி, எல்லாவற்றையும் நாசப்படுத்த முனைபவர்கள், யாருக்கு எதிரான, யாருக்கு ஆதரவான செயலை செய்ய முனைகின்னறனர் என்பதை ஈழத் மக்களுக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை. அது வெளிப்படையானது.

தமிழ்க் குரலுக்காக தாயகன்

http://thamilkural.net/?p=22316

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி தாயகன்

முதலில் தமிழகத்தின் அனைத்துப்பகுதிகளிலுமுள்ள  அகதிமுகாம்களில் தங்கியிருக்கும் எமது உறவுகள் கிரிமினல்கள்போல் நடாத்துவதைத்தவிர்த்து, அவர்களுக்கு அகதி அந்தஸ்துக்கொடுத்து உலகில் அகதிகளுக்காக இருக்கக்கூடிய மனித உரிமை நடைமுறைகளைக் கைக்கொள்ள விக்கிபோன்றோர் குரல்கொடுக்கவேண்டும் என உங்கள் கோரிக்கைகளை வையுங்கள். இப்போது அவர்களை சட்டவிரோத குடியேறிகளாகத்தான் இந்திய நடுவண் அரசும் தமிழ்நாடு அரசும் கருதுகின்றது என்பதை மறந்து விடாதீர்கள்

தவிர 

பண்டிகைக்காலங்களில் ரஜனிகாந்தின் திரைப்படம் வெளிவருவதற்கும் ஏனைய நாதளில் அவரது திரைப்படம் வெளிவருவதற்கும் மிகப்பெரிய வருமான வித்தியாசம் இல்லை ஆனால் தான் சார்ந்த திரைப்படத்துறையிலேயே சிறிய பட்யட் படங்கள் இரண்டாம் மூன்றாம் நிலை நடிகர்கள் அரிமுக இயக்குனர் தயாரிப்பாளர்களது படங்களை வெளியிடத் தடையாய் தனது திரைப்படங்களை வெளியிட்டு பட்டைகிடங்கு வத்தும் மட்டும் உறிஞ்சி தண்ணிய எடுப்பார்களே அதுபோல் காசை உறிஞ்சிப் பிடுங்கும் தான் சார்ந்த துறையிலேயே அறம் இன்றிச் செயற்படும் பொறுக்கி ரஜனிக்கு ஈழத்தமிழர் பிரச்சனையைப்பற்றித் தெரிந்தென்ன தெரியாமல் இருந்தென்ன.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அவர் இந்த வயதிலும் சும்மா இருக்க மாட்டார்  அங்கே இங்கே என்று ஒடித் திரிவார். வெள்ளம்  தன்ரை வேலையை காட்டி விட்டது போலும்” 🤣😀🤣 குறிப்பு,....சும்மா பகிடிக்கு   அவர் இங்கே   வருவதில்லை தானே??  
    • தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளை வைத்தே கேள்விகள் கேட்டுள்ளேன். ( புதுச்சேரி மக்களவைத் தொகுதி சேர்க்கப்படவில்லை)  முதல் 35 கேள்விகளுக்கு தலா 2 புள்ளிகள் கேள்வி இலக்கம் 1 - 23 பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனையாம் இடம் பிடிப்பார்கள்?  1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன்  5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 15) தயாநிதிமாறன் திமுக) 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 18)ரி ஆர் பாலு ( திமுக) 19)எல் முருகன் (பிஜேபி) 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக  விஜயகாந்தின் மகன்) 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்?    1) 5% க்கு குறைய   2) 5% - 6%   3) 6% - 7%   4) 7% - 8%   5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்?  35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 43) 23 தொகுதிகளில்  பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)
    • அந்த மனிசனுக்கு என்ன குறை?.....அங்க ஜாலியாய் கலக்கிறார் 😂
    • தடுப்பூசிகளுக்கு எதிராக முழங்கி விட்டு தனது மகனுக்கு மட்டும் மாசாமாசம்  போடுற எல்லாத் தடுப்பூசிகளையும் போட்டுவிட்டு தம்பிகளின் அன்புக்கட்டளையை மீற முடியவில்லை என்று பம்பினாரே. அதையும் சேர் த்துக்கொள்ளுங்கள். 
    • எழுதுங்க தம்பி.....இன்னும் எழுதுங்க..... உங்களால் முடியாதது எதுவுமில்லை.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.