Jump to content

‘கோட்டா ஜனாதிபதி; சஜித் பிரதமர்’ கனவு பலிக்குமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

‘கோட்டா ஜனாதிபதி; சஜித் பிரதமர்’ கனவு பலிக்குமா?
முகம்மது தம்பி மரைக்கார்   / 2020 ஜனவரி 14

பொதுத் தேர்தல் ஒன்றுக்கான காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்தநிலையில், “அடுத்த நாடாளுமன்றில், ஐக்கிய தேசிய முன்னணியின் ஆட்சியை அமைப்போம்” என்று, அதன் பங்காளிக் கட்சிகளின் சிறுபான்மைத் தலைவர்கள், அடிக்கடி சூழுரைத்து வருகின்றனர்.   

“நாடாளுமன்றத் தேர்தலின் பிறகு, கோட்டா ஜனாதிபதி; சஜித் பிரதமர்” என்று, முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்.  

இந்த நிலையில்தான், ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதான பங்காளிக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்குள், தலைத்துவப் பதவிகான ‘பாகப் பிரிவினை’ சூடு பிடித்திருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவிக்காக, ரணில் அணி ஒருபுறமாகவும் சஜித் தரப்பு மறுபுறமாகவும் கயிறிழுத்துக் கொண்டிருக்கின்றனர்.   

இந்த இலட்சணத்தில்தான், எதிர்வரவுள்ள பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று, சஜித் பிரேமதாஸவைப் பிரதமராக்கப் போவதாகச் சிறுபான்மைத் தலைவர்கள் சபதமிட்டு வருகின்றார்கள்.  

சிலரைத் தோற்கடிப்பதற்கு, எதிராளிகள் யாரும் தேவையில்லை. அவர்கள் தமக்குத் தாமே சொந்தச் செலவில், சூனியம் வைத்து, அந்தக் காரியத்தை முடித்து விடுவார்கள்.   

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸ, அந்தளவு ‘பாரிய’ தோல்வியை எதிர்கொள்வதற்கு, அவரின் ஐக்கிய தேசியக் கட்சியினர்தான் காரணமாக இருந்தனர். ‘யானை’ அடிப்பதற்கு முன்னராக, ‘தானே’ அடித்துக் கொண்டு, அவர்களை அவர்களே தோற்கடித்துக் கொண்டனர்.  

ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளரைக் களமிறக்குவதில் ரணில் தரப்புக்கும், சஜித் அணியினருக்கும் ஏற்பட்டிருந்த இழுபறிதான், அந்தக் தேர்தலில் சஜித் பிரேமதாஸ ‘பாரியளவில்’ தோல்வி அடைவதற்குப் பிரதான காரணமாக அமைந்திருந்தது.  

சஜித் பிரேமதாஸவின் வெற்றிக்காகக் களத்தில் இறங்கி வேலை செய்வதில், ரணில் தரப்பினர் காட்டிய அசமந்தம், புறக்கணிப்பு ஆகியவைதான், 13 இலட்சம் வாக்குகளால் தோற்றுப் போகும் நிலையை, ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஏற்படுத்தியது.  

சஜித் பிரேமதாஸவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதில், சிறுபான்மை இனத்தவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் காட்டிய அக்கறையில், பாதிளவைக் கூட, ஐக்கிய தேசியக் கட்சியின் பல சிரேஷ்ட அரசியல்வாதிகள் வெளிக்காட்டவில்லை என்பதுதான் களநிலைவரமாக இருந்தது.  

இவ்வாறான, கசப்பான அனுபவங்களின் சூடு தணிவதற்குள்தான், “சஜித் பிரேமதாஸவைப் பிரதமராக்கப் போகிறோம்” என்று, சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்கள், சூழுரைக்கத் தொடங்கி இருக்கின்றனர்.  

அரசியலில், சஜித் பிரேமதாஸவின் நிலை, கிட்டத்தட்ட ‘சேற்றில் நாட்டிய கம்பு’ போல உள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவி வழங்கப்படாது விட்டால், அவர் வேறு ஓர் அணியை உருவாக்கக் கூடும் என்று பரவலாகப் பேசப்படுகிறது.   

அப்படி நடந்தாலும் நடக்காமல் விட்டாலும், ரணில், சஜித் தரப்பினர்களின் ‘வெட்டுக் குத்து அரசியல்’, எதிர்வரவுள்ள பொதுத் தேர்தலில் உச்சத்தைத் தொடுவதற்கான அனைத்து அறிகுறிகளும் தெரிகின்றன.  

இவ்வாறான சூழ்நிலையில், ஐக்கிய தேசிய முன்னணியில் பங்காளிகளாக உள்ள சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்களுடைய நிலைதான் பரிதாபமாக உள்ளது.   

மிக நீண்ட காலமாகவே, ஐ.தே.கவுடன் கூட்டு வைத்துக் கொண்டு, தேர்தல்களில் யானைச் சின்னத்திலே களமிறங்கி வந்த சிறுபான்மைக் கட்சிகள், ரணில் - சஜித் இழுபறி காரணமாக, நெருக்கடிகளுக்கு உள்ளாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  

ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டு வைத்துக் கொண்டு, பொதுத் தேர்தலில் சிறுபான்மைக் கட்சிகள் களமிறங்குவது, அந்தக் கட்சிகளுக்குக் கடந்த காலங்களில் சாதகமாகவே அமைந்திருந்தது. ஆனால், இம்முறை ஐக்கிய தேசியக் கட்சியே இரண்டாகப் பிளந்து கிடக்கும் நிலையில், அந்தக் கட்சியுடன் கூட்டணி அமைத்து, பொதுத் தேர்தலொன்றில் களமிறங்கும்போது, கடந்த காலத்தில் பெற்றுக் கொண்ட சாதகங்களைப் போல், பெற்றுக் கொள்ள முடியுமா என்பது கேள்விக்குரியதாகும்.  

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்கதான் இந்தக் கணம் வரை இருந்து கொண்டிருக்கிறார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவை சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்கள் ஆதரித்துக் கொண்டு ரணில் விக்கிரமசிங்கவை மிகப் பகிரங்கமாகவே பல இடங்களில் விமர்சித்தமையை நாம் கண்டிருந்தோம்.   

இந்தப் பின்னணியில், எதிர்வரும் பொதுத் தேர்தலில், ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியுடன் சிறுபான்மைக் கட்சிகள் கூட்டணியமைத்துக் களமிறங்குவதில் பாரிய சிக்கல்கள் உள்ளன. சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை எல்லாம், எதிர்வரும் பொதுத் தேர்தலில், ரணில் தரப்பு நிறைவேற்றுமா என்பதும் கேள்விக்குரியதாகவே உள்ளது.  

எனவே, பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, ஐ.தே.கவின் தலைமைத்துவம், சஜித் பிரேமதாஸவின் கைகளுக்குக் கிடைப்பதுதான், ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன், மனோ கணேசன் போன்ற சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்களுக்கு, வாய்ப்பாக அமையும்.   

அப்படி நடக்கவில்லை என்றால், சஜித் பிரேமதாஸவின் அணியுடன் கூட்டணியமைத்து, மேற்படி தலைவர்களின் சிறுபான்மைக் கட்சிகள், பொதுத் தேர்தலில் புதியதொரு சின்னத்தில் போட்டியிட வேண்டும். அல்லது, சிறுபான்மைக் கட்சிகள் தத்தமது சின்னங்களில், தனித்துப் போட்டியிட வேண்டிய நிலை உருவாகும்.  

உற்சாகம் பெற்றுள்ள அதாவுல்லாஹ், கருணா தரப்புகள்  

ஐக்கிய தேசியக் கட்சியின் பங்காளிகளான சிறுபான்மைக் கட்சிகள், எதிர்வருகின்ற பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில், இத்தனை இடர்பாடுகள் காணப்படும். 

இத்தகைய சூழ்நிலையில், மறுபுறமாக, ஜனாதிபதியின் பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைத்துள்ள தமிழ், முஸ்லிம் சிறுபான்மைக் கட்சிகள், எதிர்வரும் பொதுத் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு, வெகு உற்சாகத்தோடு களத்தில் இறங்கிச் செயற்பட்டு வருகின்றன.   

குறிப்பாக, கிழக்கு மாகாணத்தில் முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான ஏ.எல்.எம். அதாவுல்லாஹ், முன்னாள் அமைச்சர் கருணா அம்மான் போன்றோரை, அடிக்கடி களத்தில் காண முடிகிறது.  

ஜனாதிபதித் தேர்தலில், அதாவுல்லாஹ்,  கருணா அம்மான் போன்றோர், ஆதரவு வழங்கிய வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ வெற்றி பெற்று, ஆட்சிக்கு வந்துவிட்டார் என்பதன் அர்த்தம்,  அதாவுல்லாஹ்வும் கருணா அம்மானும் அரசியலில் வென்று விட்டார்கள் என்று ஆகிவிடாது.   

நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை இழந்துள்ள அதாவுல்லாஹ், கருணா அம்மான் போன்றோர், மீண்டும் நாடாளுமன்றுக்குச் செல்வதிலேயே, அவர்களின் வெற்றி தங்கியுள்ளது.  

முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற சிறுபான்மைக் கட்சிகள், ஜனாதிபதித் தேர்தலின் பின்னர், சற்று உசார் இழந்து போய் இருந்தாலும், அந்த நிலைவரமானது, அதாவுல்லாஹ், கருணா அம்மான் போன்றோரின் வெற்றிக்கு வழிவகுக்குமா என்கிற கேள்விகளும் இருக்கின்றன.  

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர், அதிகாரத்தின் பக்கமாகச் சிறுபான்மை மக்கள் சாய்வது போல், ஒரு தோற்றப்பாடு காணப்படுகின்றது. அந்த நிலைவரத்தை, தமக்கான வாக்குகளின் அதிகரிப்பாக அதாவுல்லாஹ்வும் கருணாவும் கருதுகின்றார்கள் போலவும் தெரிகிறது. இந்தக் கணிப்பீடு, சரியானதுதானா என்பதை, எதிர்வரும் பொதுத் தேர்தல் முடிவுகள்தான் வெளிப்படுத்தும்.  

முஸ்லிம்களும் பொதுஜன பெரமுனவும்  

ஜனாதிபதியின் பொதுஜன பெரமுன கட்சியில், முஸ்லிம்கள் எவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இல்லை என்பதும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கத்தில், முஸ்லிம்கள் எவரும் அமைச்சர்களாக இல்லை என்பதும் பாரிய குறைபாடுகளாகும்.   

குறிப்பாக, முஸ்லிம் நாடுகளுடன் கோட்டாவின் அரசாங்கம் நட்புறவை வளர்த்துக் கொள்வதில், இந்த நிலைவரமானது சிக்கலை ஏற்படுத்தும். எனவேதான், “எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சி சார்பாக, ஆகக் குறைந்தது 13 முஸ்லிம்களை நாடாளுமன்ற உறுப்பினர்களாகப் பெற்றுக் கொள்வோம்” என்று அந்தக் கட்சியின் முக்கியஸ்தர்கள் கூறியிருக்கின்றனர்.  

உண்மையில், 13 நாடாளுமன்ற உறுப்பினர்களை பொதுஜன பெரமுன பெற்றுக் கொள்வதற்கு சாத்தியங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. மேலும், பொதுஜன பெரமுன சார்பில், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்வதற்கு, அந்தக் கட்சி குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் எதையும் எடுத்ததாகவும் தெரியவில்லை.   

பௌத்த பெரும்பான்மைவாதத்தைத் தூக்கிப் பிடித்து, அந்தக் கோஷத்தின் ஊடாக, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிக் கொண்ட பொதுஜன பெரமுன, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் அந்தக் கோஷத்தையே முன்னிறுத்தும் என்பதற்கான நிலைவரங்கள்தான் காணப்படுகின்றன.   

இவ்வாறான சூழ்நிலையில், அதாவுல்லாஹ், கருணா அம்மான் போன்ற பொதுஜன பெரமுனவின் பங்காளிகள், எவ்வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்களாகப் போகின்றனர் எனத் தெரியவில்லை.  

தாங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகுவதற்கு, பொதுத் தேர்தலொன்றில் போட்டியிடுவதை விடவும், தேசியப்பட்டியல் ஊடாகச் சந்தர்ப்பங்களைப் பெற்றுக் கொள்வதே அதாவுல்லாஹ், கருணா அம்மான் போன்றோருக்கு நல்லதாக அமையும்.  

இதேவேளை, முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு முன்னணி போன்ற கட்சிகள், கடந்த பொதுத் தேர்தலில் பெற்றுக்கொண்ட எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களை, எதிர்வரும் தேர்தலில் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவடைந்துள்ளதையும் களநிலைவரங்கள் காட்டுகின்றன.   

மேற்படி கட்சிகள் ஆதரித்த வேட்பாளர், ஜனாதிபதித் தேர்தலில் தோற்றுப்போனமை, மேற்படி கட்சிகளின் எதிராளிக் கட்சிகள், ஆட்சியாளர்களுடன் கைகோர்த்திருக்கின்றமை, கோட்டாபய ராஜபக்‌ஷவின் ஆட்சியை, இன்னும் பல ஆண்டுகளுக்கு அசைக்க முடியாது என்று தமிழர், முஸ்லிம் மக்களிடத்தில் கூட, ஏற்பட்டுள்ள மனநிலை போன்றவை, மேற்படி சிறுபான்மைக் கட்சிகளுக்கான ஆதரவில் வீழ்ச்சியை ஏற்படுத்தக் கூடும்.  

சிறுபான்மையினரின் முடிவு  

இந்த எதிரும் புதிருமான சூழ்நிலைகளுக்கு மத்தியில்தான், எதிர்வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பொருத்தமான முடிவை எடுக்க வேண்டிய நிலைக்கு, சிறுபான்மையின சமூகங்கள் தள்ளப்பட்டுள்ளன.  

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில், ஜனாதிபதி ஒரு கட்சியைச் சார்ந்தவராகவும் பிரதமர் வேறொரு கட்சியைச் சார்ந்தவராகவும் இருந்தமையால் ஏற்பட்ட இழுபறி குறித்து நாம் அறிவோம்.   

அரசாங்கம் நடத்தியதை விடவும், ஜனாதிபதியும் பிரதமரும் அதிகாரக் கயிறிழுப்பில்தான் கடந்த ஆட்சியில் அதிகம் ஈடுபட்டனர். எனவே, தற்போது ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவாகியுள்ள நிலையில், அடுத்து அமையவுள்ள அரசாங்கத்தை, ஜனாதிபதிக்கு எதிரானதொரு தரப்பின் கையில் கொடுப்பது, சாதுரியமான செயற்பாடாக அமையுமா என்கிற கேள்வி, கணிசமானோரிடத்தில் உள்ளது.  

“கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியானால், இந்த நாட்டில் சிறுபான்மையினர் வாழவே முடியாது”  என்று, கடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசார மேடைகளில், தமிழ், முஸ்லிம் தலைவர்கள், சிறுபான்மை மக்களிடத்தில் மிக மோசமானதொரு பீதியை ஏற்படுத்தியிருந்தனர்.   

ஆனால், அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. நல்லாட்சி அரசாங்கத்தில், முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருந்த அச்சம், ஆபத்துகளின் குறைந்தபட்சம் கூட, கோட்டாவின் ஆட்சியில் இப்போதைக்கு ஏற்படவில்லை என்பதுதான் ஆறுதலான விடயமாகும்.  

மஹிந்த ராஜபக்‌ஷவின் கடந்த ஆட்சியில் விடப்பட்ட பிழைகளை, இப்போது அவர்கள் உணர்ந்திருக்கக் கூடும். தங்கள் முன்னைய தோல்விக்கு, எவையெல்லாம் காரணமாக அமைந்திருந்தன என்பதை, நிச்சயமாக அவர்கள் புரிந்திருப்பார்கள்.   

எனவே, கோட்டாவின் ஆட்சியில் அந்தப் பிழைகளையெல்லாம் தவிர்க்க வேண்டுமென, அவர்கள் நினைப்பார்களாயின், நல்லாட்சியை விடவும் நல்லதோர் ஆட்சியாகச் சிறுபான்மையினருக்கு, கோட்டாவின் ஆட்சி அமையும் என்று நம்பலாம்.  

எனவே, இலங்கையில் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் போக்கு, என்ன என்பதை விளங்கி, அதற்கு ஏற்றால்போல் சிறுபான்மையின சமூகங்கள், தமது அரசியல் வியூகங்களை வகுத்துக் கொள்ளுதல் அவசியமாகும்.   

குறிப்பாக, ஏப்ரல் 21 ஈஸ்டர் தாக்குதலின் பின்னரான அரசியலைப் புரிந்து கொண்டு, செயலாற்ற வேண்டியது முஸ்லிம்களுக்குள்ள பாரிய சவாலாகும். எதிர்வரும் பொதுத் தேர்தல், முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் மிகப் பெரும் சோதனைக் காலமாகும்.  

அதிரடிகள் மட்டும் போதாது

புதிய ஜனாதிபதியின் நடவடிக்கைகளில் அநேகமானவை அதிரடியாக உள்ளன.   

“கோட்டாபய ராஜபக்‌ஷ ஆட்சிக்கு வந்தால், நாடு குட்டிச் சுவராகி விடும்” என்று தேர்தல் காலத்தில் தொண்டை கிழியப் பிரசாரம் செய்தவர்கள் கூட, இப்போது ஜனாதிபதி எடுக்கும் முடிவுகள் பற்றியும் நடவடிக்கை குறித்தும் புல்லரித்துப் பேசியும் எழுதியும் வருகின்றார்கள்.  

மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சி பற்றி, மக்களிடமிருந்த புகார்கள் என்ன என்பது குறித்து, இப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அறிவார்.   

மஹிந்த ஏன் தோற்றுப் போனார் என்பதற்கான விடை, கோட்டாவுக்கு மிக நன்றாகவே தெரியும். அதனால், எதையெல்லாம் தனது ஆட்சியில் தவிர்க்க வேண்டும்; எவற்றையெல்லாம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டு, அவர் செயற்பட்டு வருகின்றார். அவ்வளவுதான்.  
மஹிந்த ராஜபக்‌ஷ, தனது ஆட்சியில் படாடோபத்தைக் கடைப்பிடித்து வந்தார். ஒரு வெளிநாட்டுப் பயணம் என்றால், கிட்டத்தட்ட ஓர் ‘ஊரை’யே தன்னுடன் அழைத்துச் சென்றார். அதற்காகத் தனி விமானத்தைப் பயன்படுத்தியும் வந்தார். இவையெல்லாம், எதிர்க்கட்சியினரின் விமர்சனத்துக்கு உள்ளானவை. மக்கள் இவற்றைக் கண்டு, முகம் சுழித்தார்கள்.  

இந்தப் பின்னணியில்தான், கடந்த காலத்தில் தனது சகோதரரின் ஆட்சியில் நடந்த தவறுகளையெல்லாம் தவிர்த்து, அதிரடியான நடவடிக்கைகள் மூலம், தனது ஆட்சியின் ஆரம்பத்தையே அட்டகாசமாக்கிக் கொண்டிருக்கிறார், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ.  

நாடாளுமன்றுக்கு அக்கிராசனர் உரையை நிகழ்த்துவதற்காக வருகை தந்த போது, தனக்கான பாதுகாப்பு அணிவகுப்பைத் தவிர்த்ததோடு,  சம்பிரதாய பூர்வமாக ஜனாதிபதி ஒருவருக்கு வழங்கப்படும் மரியாதையைக் கூட, “வேண்டாம்” என்று ஜனாதிபதி கூறியிருந்தார்.  

டி.ஏ. ராஜபக்‌ஷ பரம்பரையினர் அரசியலுக்குள் நுழையும் போது அணியும் குரக்கன் நிறத்துச் ‘சால்வை’யைத் தவிர்த்ததையும் ஜனாதிபதியின் மற்றோர் அதிரடியாகவே பார்க்க முடிகிறது.

பார்க்கும் இடமெல்லாம் சால்வைகளும் சால்வைகளின் ஆட்சி மீது, ஒரு கட்டத்தில் மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பும், மஹிந்தவின் தோல்விக்கான காரணங்களில் ஒன்றாகும் என்பதை இங்கு குறிப்பிடுதல் அவசியமாகும்.  

ஆக, எதிரணியினர் ‘கோட்டா’ பற்றி ஏற்படுத்திய அச்சத்துக்கு அப்பாலானதோர் ஆட்சியொன்றை அவர் தொடங்கியுள்ளமை, சந்தோசமானதொரு விடயமாகும்.  

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ஒழுங்கையும் துப்புரவையும் விரும்புகின்ற ஒருவர். அவரின் இராணுவ வாழ்க்கை, அவற்றை அவருக்குக் கற்றுக் கொடுத்திருக்கும். அதனால், தூய்மையான ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு, அவரால் இலகுவாக முடியும் என்கிற நம்பிக்கை பலரிடமும் உள்ளது.  

அரச நிறுவனங்கள் எவ்வாறு செயற்படுகின்றன என்பதை, களத்துக்கே சென்று நேரடியாகப் பார்த்து, மக்களின் குறைகளுக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் ஒரு நடைமுறையை, ஜனாதிபதி தொடர்ந்து வருகிறார். இது மக்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது.  

கோட்டாபய ராஜபக்‌ஷவை மிகக்கடுமையாக, ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் விமர்சித்த ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன் போன்றோரும், ஜனாதிபதியின் இந்த நல்ல நடவடிக்கைகளைப் பாராட்டிப் பேசியுள்ளனர்.  

ஆனால், பல தசாப்தங்களாகத் தமது உரிமைகளுக்காகப் போராடி வருகின்ற சிறுபான்மை மக்களுக்கு, ஜனாதிபதியின் இந்த அதிரடிகள் மட்டும் போதுமானதாக இருக்கப் போவதில்லை.  

கோட்டாபய ராஜபக்‌ஷவுக்குக் கிடைத்துள்ள இந்த வாய்ப்பைக் கொண்டு, அவர் தமிழ், முஸ்லிம் மக்களின் அரசியல் அபிலாசைகளையும் தீர்த்து வைத்தல் அவசியமாகும். 

சிறுபான்மை மக்களின் வாக்குகள் கிட்டத்தட்ட இல்லாமலேயே, ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்‌ஷ வெற்றி பெற்றமையானது, இலங்கை அரசியலில் ஓர் அதிசயமாகும்.   

ஆனால், அதிசயங்கள் எப்போதும் நிகழ்வதில்லை என்பதையும் ஜனாதிபதி புரிந்து கொள்ளுதல் வேண்டும். அரசியலில் அதிசயங்கள் நிகழாத போதெல்லாம், சிறுபான்மை மக்களிடம்தான் தமது வெற்றிக்காகச் சிங்களத் தலைவர்கள் இறங்கி வந்திருக்கின்றனர்.  

எனவே, சிறுபான்மை மக்களின் மனங்களை வெல்லும் திட்டங்களை, ஜனாதிபதி தொடங்க வேண்டும். அந்தத் திட்டங்கள், அரசியலுக்கு அப்பாலானதாகவும் நேர்மை மிக்கதாகவும் இருத்தல் அவசியமானதாகும்.  

அப்படி அவர் செய்வாரானால், சிங்கள மக்களின் வாக்குகளை மட்டும் பெற்று, ஜனாதிபதியானவர் என்கிற கறையிலிருந்து, எதிர்காலத்தில் அவர் விடுபடலாம். தனது தேசத்தின் இரண்டு சமூகங்கள், ஜனாதிபதித் தேர்தலில், தன்னைப் புறக்கணித்தமையை கோட்டா போன்ற ஆளுமை மிக்க ஒருவர், சிறியதொரு விடயமாக எடுத்து கொள்ள மாட்டார். 

எனவே, தமிழ், முஸ்லிம் சமூகங்களை அரவணைக்க வேண்டிய தேவை, அவருக்கு உள்ளது. அதைச் செய்வார் என்று நம்புவோம்.  
 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கோட்டா-ஜனாதிபதி-சஜித்-பிரதமர்-கனவு-பலிக்குமா/91-244002

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.