Jump to content

அஸ்ஹர் அணிக்கு எதிராக யாழ் மத்தி இன்னிங்ஸ் வெற்றி


Recommended Posts

அஸ்ஹர் அணிக்கு எதிராக யாழ் மத்தி இன்னிங்ஸ் வெற்றி

 
76a91046e2d73f68956ccb5b4210d52e-696x464
சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு 19 வயதுக்குட்பட்ட டிவிஷன் – III பாடசாலைகள் இடையில் இடம்பெறும் இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் போட்டியொன்றில், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி அக்குரணை அஸ்ஹர் கல்லூரிக்கு எதிராக இன்னிங்ஸ் மற்றும் 308 ஓட்டங்களால் அபார வெற்றியினைப் பதிவு செய்துள்ளது
 

நேற்று (13) அக்குரணை அஸ்ஹர் கல்லூரி அணியின் சொந்த மைதானத்தில் தொடங்கிய இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அஸ்ஹர் கல்லூரி அணி விருந்தினர்களாக வந்த யாழ். மத்திய கல்லூரியை முதலில் துடுப்பாடப் பணித்தது.  

இதன்படி முதலில் துடுப்பாடிய யாழ். மத்திய கல்லூரி அணிக்காக நிதுஷன் சதம் பெற்றார். இது தவிர இயலரசன், கவிதரசன் மற்றும் வியாஸ்காந்த் ஆகியோர் அரைச்சதம் பெற்றனர்.  

இந்த வீரர்களது துடுப்பாட்ட உதவியோடு யாழ். மத்திய கல்லூரி அணியானது 64.1 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 398 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது தமது துடுப்பாட்டத்தை இடை நிறுத்திக் கொண்டது. 

யாழ். அணியின் துடுப்பாட்டம் சார்பில் சதம் பெற்ற நிதுஷன் 138 ஓட்டங்கள் குவிக்க, இயலரசன் 75 ஓட்டங்கள் பெற்றிருந்தார். அதேநேரம், கவிதர்சன் 56 ஓட்டங்களையும், வியாஸ்காந்த் 53 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் எடுத்து களத்தில் நின்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

அஸ்ஹர் கல்லூரி அணியின் பந்துவீச்சு சார்பில் அம்மார் 3 விக்கெட்டுக்களையும், இரு கைளாலும் பந்துவீசக்கூடிய ஹாமிட் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர். 

பின்னர் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த அஸ்ஹர் கல்லூரி அணி மிகவும் மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி 37 ஓட்டங்களைப் பெற்று தமது முதல் இன்னிங்ஸை முடித்துக் கொண்டது.

அஸ்ஹர் கல்லூரியினை தனது வேகப் பந்துவீச்சு மூலம் நெருக்கடிக்கு உள்ளாக்கிய சகலதுறை வீரர் இயலரசன் 6 விக்கெட்டுக்களை கைப்பற்ற, விதுஷன் மற்றும் நியூட்டன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் விதுஷன் எந்தவித ஓட்டங்களையும் விட்டுக் கொடுக்காமலே இரண்டு விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.  

தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் பெற்ற ஓட்டங்கள் போதாது என்பதனால், 361 ஓட்டங்கள் பின்தங்கியவாறு பலோவ் ஓன் முறையில் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த அஸ்ஹர் கல்லூரி அணி இம்முறையும் துடுப்பாட்ட அனர்த்தம் ஒன்றினை வெளிப்படுத்தி 53 ஓட்டங்களை மாத்திரமே பெற்றதோடு போட்டியிலும் இன்னிங்ஸ் மற்றும் 308 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.  

இம்முறையும் அக்குரணை அஸ்ஹர் கல்லூரி அணிக்கு எதிராக பந்துவீச்சில் மிரட்டிய இயலரசன் 6 விக்கெட்டுக்களைச் சுருட்டி போட்டியில் மொத்தமாக 12 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்தார். 

அதேநேரம், போட்டியின் முதல் இன்னிங்ஸில் யாழ். மத்திய கல்லூரிக்காக சதம் பெற்ற நிதுஷன் பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்டு 2 விக்கெட்டுக்களைப் கைப்பற்றி தனது தரப்பு வெற்றியினை உறுதி செய்திருந்தார்.

போட்டியின் சுருக்கம்

யாழ். மத்திய கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 398/7d (64.1) நிதுஷன் 138, இயலசரன் 75, கவிதர்சன் 56*, வியாஸ்காந்த் 53*, அம்மார் 3/108, ஹாமிட் 2/47

அஸ்ஹர் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 37/10 (15.1) இயலசரன் 6/17, விதுஷன் 2/00, நியூட்டன் 2/19 

அஸ்ஹர் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – f/o – 53/10  (18.4) இயலசரன் 6/32, நிதுஷன் 2/03

முடிவு – யாழ். மத்திய கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 308 ஓட்டங்களால் வெற்றி

http://www.thepapare.com/u19-division-iii-schools-cricket-jaffna-central-college-vs-akurana-azhar-college-2020-report-tamil/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://online.srilankaevisa.lk/ யாராவது முயற்சி செய்து பார்த்தீர்களா? எனக்கு சரிவர வேலை செய்யவில்லை.
    • சர்கரை இல்லாங்கால்லிலுப்பை அஃதுபோல் சொல் ஒன்றின்றி நகைக்க லொல். உடான்ஸ்சுவாமி உரை எவ்வாறு சர்க்கரை இல்லாதவிடத்து, இனிப்பு சுவைக்கு இலுப்பை உபயோகிக்கப்படுகிறதோ, அதே போல,  சிரிப்பதை, நகைப்பு என சொல்லால் எழுதாமல், குறியீடாக லொல் எனவும் எழுதலாம்.  
    • வீசா பெறுவது இலகுவாக்கபடுவது முக்கியம். இழுபறி கூடாது. மற்றும்படி கட்ணங்கள் சம்மந்தமாக குறை சொல்ல ஏதும் இல்லை. அது எல்லாருக்கும் பொதுவானது தானே.  ஆனால் இங்கே என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் நாங்கள் வீசா பெற்று சென்று இறங்கும்போது விமானநிலையத்தில் இலங்கை குடிவரவுப்பகுதி கையூட்டு/கைவிசேடம் கேட்டு எங்களுக்கு கரைச்சல் தரக்கூடாது. 
    • ஓம்….இடையிடே இச்சையின்றி வரும் yeah, தோள் குலுக்கல், கண் மேலே உருட்டல், பிறகு கடையில் வாய்தவறி £இல் விலை கேட்பது… எதையும் 100% மறைக்க முடியாது…. ஆனால் அப்பட்டமாய் ஜொலி ஜொலித்தால்…..ஏமாறும் சதவிகிதம் எகிறும். அதே போல் வெளிநாடு என தெரிந்தாலும், ஏமாற்ற முடியாது, விசயம், விலை தெரியும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் கைகொடுக்கும். எந்த வளர்முக நாட்டுக்கு போனாலும் உதவும் உத்திகள்தானே இவை.     நன்றி🙏
    • நான் இதன் மறுவளமாகவே பார்க்கிறேன். அங்கே மண்னெணை, முதல், மா, சகலதும் மானிய விலையில்தான் மக்களுக்கு தரப்படுகிறது.  ஏன் என்றால் அதை விட கூட விலைக்கு விற்றால் அந்த மக்களால் வாங்க முடியாது. அதே போலவே வடையும். அங்கே இவற்றுக்கான விலை அந்த மக்களின் வாங்கு திறனை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நாம் ஒரு பிரிதானியா வாங்கு திறனோடு போய், இலங்கை வாங்குதிறனுக்குரிய விலையில் பொருட்களை வாங்குவது - ஒரு வகையில் அந்த மக்களிடம் அடிக்கும் கொள்ளையே. ஆனால் எம் அந்நிய செலவாணி வரவால் அதை விட அதிகம் கொடுக்கிறோம் என்பதால் நன்மையே அதிகம். இது எல்லா 3ம் உலக நாட்டுக்கும் பொருந்தும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.