Jump to content

சில ஞாபகங்கள் -5


pri

Recommended Posts

வாழ்க்கை  கனவுகள் நிறைந்தது.

 
சிலசமயம் அது மெய்யாகிறது
 
முன்னொரு காலத்தில் நடந்தது.
 
கட்டிட திணைகளத்தில் வேலை கிடைத்த செய்தியோடு கடிதம் ஒன்று வீடு தேடி வந்தது.
 
முதன்மை  பொறியியளாரரை(chief engineer - ce) கண்டி அலுவலகத்தில் பார்த்தேன் .
படிப்புக்கும் வேலைக்கும் பெரிய இடைவெளி இருப்பதை சொன்னார்.
 
வில்கமுவவில் புதிதாக முளைக்கிற கட்டிடத்துக்கு தள பொறியாளர்(site engineer)வேலை.
பயணத்துக்கு அரசாங்க வாகனம் தரமுடியாது என்றார். தங்கியிருந்து வேலை செய்தாக வேண்டும். தங்குமிடம் தரமுடியாது என்றார்.
 
முதல் வேலையில் எல்லாவற்றுக்கும் தலையாட்ட வேண்டும் என்கிற  எழுதப்படாத விதி தெரியும். அப்படியே செய்தேன்.
 
நியமன கடிதம் கைக்கு வந்தது. முடிந்தவரை தெரிந்தவர்களுக்கு வேலை கிடைத்த கதையளந்தேன். கண்ணில்  படாதவர்களுக்கு நல்ல காலம். தப்பித்தார்கள்.
 
கண்டியில் மகியங்கனை பஸ் ஏறினால் மூன்று மணிநேரத்தில் வில்கமுவ வந்து சேரும். சாரதிக்கும் நடத்துனருக்கும் இடையில் வேறு சோலியிருந்தால் நாலோ ஐந்து மணித்தியாலமாக மாறினாலும்  ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
 
பதினெட்டு வளைவுகளோடு நீள்கிற மகியங்கனை வீதியில் முதன்முதலாக பயணிப்பது திகில் அனுபவம்.  180 பாகையில் திரும்புகிற வளைவுகள் கூடவே குத்தென இறங்கும். சாரதிகள் சாகசம் செய்வார்கள். பயணிகள் கடவுளை கூப்பிடுவார்கள். பயணித்தவர்களுக்கு புரியும். மற்றவர்கள் கூகில் மாமாவை கொஞ்சம் கேட்டுப்பாருங்கள்- Daha ata wanguwa (18 Bend Road).
 
வில்கமுவ தனி சிங்கள கிராமம். மருந்துக்கும் தமிழ் கிடையாது. அங்கு ஆமத்துருவுக்கும் கடவுளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. தபால்காரனும் கிராமசேவகரும் விரும்பிய நேரத்தில் வேலை செய்வார்கள். குளிப்பதற்கு குளம் இருந்தது. மரவள்ளி கிழங்கும் கட்ட சம்பலும் காலை சாப்பாடானது. இரவு முழுக்க நுளம்பு காதுக்குள் ரீங்காரமிடும். விரும்பினால் இடைக்கிடை கடித்தும் பார்க்கும். என்ன செய்வது. முதல் வேலை. எல்லாவற்றையும் பொறுத்தாக வேண்டும்.
 
விடிந்ததும் வேலைக்கு போனால் படித்ததில் பத்து வீதமும் வேலையில் உதவாது. பண்டாரவையும் செனிவரட்ணவையும் மேய்பதே பெரும்பாடு.
 
பண்டார முப்பது வருடங்களுக்கு மேலாக கட்டுமானதுறையில் இருப்பவன். எடுபிடியாக வேலைக்கு சேர்ந்து மேஸ்திரியாகி இப்போது சுப்பவைசராக  இருப்பதில் அவனுக்கு பெருமை. எனக்கு கொடுமை.  வேலை சூக்குமங்களை அனுபவம் சொல்லிகொடுத்திருந்தது.   யாரையும் பெரிதாக மதிக்கமாட்டான். இன்ஜினியர்மார் புத்தகபூச்சிகள் என்பது அவன் எண்ணம். சிலசமயங்களில் அதில் கொஞ்ச உண்மையும் இருந்தது.
 
வரைபடத்தை பார்த்து தூணுக்குள் வருகிற கம்பியின் அளவை சொல்வேன். பண்டார சிலசமயங்களில் பார்காமலே சரியாக சொல்வான். பிறகு என்னை பார்த்து சிரிப்பான். சிரிப்பில் நக்கல் தெரியும். முதல் வேலை பொறுத்தாக  வேண்டும். சந்தர்ப்பம் கிடைத்தால் தூக்க வேண்டியவர் பட்டியலில் முதலாக  இருந்தான்.
 
செனிவரட்ன இன்னொரு வகை. பண்டாரவுக்கு நேர்எதிர். ஒவ்வொரு வசனத்துக்கும் மாத்தையா சொல்லுவான். சொன்னதை மட்டும் செய்வான். அடிக்கடி சொன்ன வேலையில் சந்தேகம் கேட்பான்.  வேலையில் நேர்த்தி இருக்காது. இருந்தாலும் நிறைய மரியாதை தருவான். அவன் எல்லா மேலதிகாரிகளுக்கும் நல்ல பிள்ளை. தூக்கவேண்டியவர் பட்டியலில் இல்லை.
 
அன்றைக்கு ce க்கு காட்டு இறைச்சி சாப்பிடுகிற ஆசை வந்திருக்ககூடும். வில்கமுவுக்கு   அறிவிக்காமல் வந்தார். அன்றைய பின்னேரம் ce யுடன் நிறைய இறைச்சியும் கொஞ்ச தண்ணீரும்  சேர்ந்து  குடித்தேன். பழைய பேராதனை கதைகள் பேசி சிரித்தார்.சில பேராசியர்களின் பெயர்களை கேட்டார்.   கிடைத்த இடைவெளியில் பண்டார வேலைக்கு சரிபட்டுவராது  என்றேன் .
சிரித்துக்கொண்டு உனக்கு அனுபவம் போதாது என்றார்.
கட்டிடத்தின் பிரதான ஒப்பந்தக்காரர் அமைச்சரின் நண்பர் என்பது தெரியுமா எனக் கேட்டார். பண்டார ஒப்பந்தகாரரின் ஒரு கை என்றார். படிக்க நிறைய இருப்பது புரிந்தது.
 
பண்டாரவும் செனிவரட்ணவும் தொடர்ந்து வேலை செய்தார்கள். சைட் இன்ஜினியர்கள் அடிக்கடி மாறினார்கள்.
 
பின்னாளில் வேலையும் வேலையிடங்களும் மாறினாலும் முதல் வேலையும் வில்கமுவ கிராமும் பண்டாரவும் செனிவரட்ணவும்  இன்னும் ஞாபகத்தில் இருக்கிறார்கள்.
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, pri said:

பண்டார முப்பது வருடங்களுக்கு மேலாக கட்டுமானதுறையில் இருப்பவன். எடுபிடியாக வேலைக்கு சேர்ந்து மேஸ்திரியாகி இப்போது சுப்பவைசராக  இருப்பதில் அவனுக்கு பெருமை. எனக்கு கொடுமை.  வேலை சூக்குமங்களை அனுபவம் சொல்லிகொடுத்திருந்தது.   யாரையும் பெரிதாக மதிக்கமாட்டான். இன்ஜினியர்மார் புத்தகபூச்சிகள் என்பது அவன் எண்ணம். சிலசமயங்களில் அதில் கொஞ்ச உண்மையும் இருந்தது.

 
வரைபடத்தை பார்த்து தூணுக்குள் வருகிற கம்பியின் அளவை சொல்வேன். பண்டார சிலசமயங்களில் பார்காமலே சரியாக சொல்வான். பிறகு என்னை பார்த்து சிரிப்பான். சிரிப்பில் நக்கல் தெரியும். முதல் வேலை பொறுத்தாக  வேண்டும். சந்தர்ப்பம் கிடைத்தால் தூக்க வேண்டியவர் பட்டியலில் முதலாக  இருந்தான்.
 
செனிவரட்ன இன்னொரு வகை. பண்டாரவுக்கு நேர்எதிர். ஒவ்வொரு வசனத்துக்கும் மாத்தையா சொல்லுவான். சொன்னதை மட்டும் செய்வான். அடிக்கடி சொன்ன வேலையில் சந்தேகம் கேட்பான்.  வேலையில் நேர்த்தி இருக்காது. இருந்தாலும் நிறைய மரியாதை தருவான். அவன் எல்லா மேலதிகாரிகளுக்கும் நல்ல பிள்ளை. தூக்கவேண்டியவர் பட்டியலில் இல்லை.
 
அன்றைக்கு ce க்கு காட்டு இறைச்சி சாப்பிடுகிற ஆசை வந்திருக்ககூடும். வில்கமுவுக்கு   அறிவிக்காமல் வந்தார். அன்றைய பின்னேரம் ce யுடன் நிறைய இறைச்சியும் கொஞ்ச தண்ணீரும்  சேர்ந்து  குடித்தேன். பழைய பேராதனை கதைகள் பேசி சிரித்தார்.சில பேராசியர்களின் பெயர்களை கேட்டார்.   கிடைத்த இடைவெளியில் பண்டார வேலைக்கு சரிபட்டுவராது  என்றேன் .
சிரித்துக்கொண்டு உனக்கு அனுபவம் போதாது என்றார்.
கட்டிடத்தின் பிரதான ஒப்பந்தக்காரர் அமைச்சரின் நண்பர் என்பது தெரியுமா எனக் கேட்டார். பண்டார ஒப்பந்தகாரரின் ஒரு கை என்றார். படிக்க நிறைய இருப்பது புரிந்தது.
 
பண்டாரவும் செனிவரட்ணவும் தொடர்ந்து வேலை செய்தார்கள். சைட் இன்ஜினியர்கள் அடிக்கடி மாறினார்கள்.

அருமை.... நல்ல தொரு, பதிவு. :)

Link to comment
Share on other sites

9 hours ago, தமிழ் சிறி said:

அருமை.... நல்ல தொரு, பதிவு. :)

நன்றி தமிழ் சிறி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு அனுபவக் கதை.......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரி ...இதுதான் நான் வாசிக்கும் உங்கள் முதல் பதிவு. 
வாசிக்க ஆர்வத்தை தூண்டும் விதத்தில் மிக அருமையாக எழுதி உள்ளீர்கள்.
போனஸாக இடைக்கிடை உங்கள் "மைண்ட் வாய்ஸ்". 
தொடர்ந்தும் எழுதுங்கள். ஆவலோடு காத்திருக்கிறோம். 👌

Link to comment
Share on other sites

உங்களுக்கு என்று ஒரு பிரத்தியேகமான எழுத்து நடையுடன் எழுதியிருக்கின்றீர்கள் பிரி. யாழுக்கு கிடைத்த இன்னுமொரு நல்ல புதிய எழுத்தாளர்! மேலும் மேலும் எழுதுங்கோ...வாசிக்க காத்திருக்கின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

நல்லதொரு அனுபவக் கதை.......!   😁

 

1 hour ago, Sasi_varnam said:

பிரி ...இதுதான் நான் வாசிக்கும் உங்கள் முதல் பதிவு. 
வாசிக்க ஆர்வத்தை தூண்டும் விதத்தில் மிக அருமையாக எழுதி உள்ளீர்கள்.
போனஸாக இடைக்கிடை உங்கள் "மைண்ட் வாய்ஸ்". 
தொடர்ந்தும் எழுதுங்கள். ஆவலோடு காத்திருக்கிறோம். 👌

 

53 minutes ago, நிழலி said:

உங்களுக்கு என்று ஒரு பிரத்தியேகமான எழுத்து நடையுடன் எழுதியிருக்கின்றீர்கள் பிரி. யாழுக்கு கிடைத்த இன்னுமொரு நல்ல புதிய எழுத்தாளர்! மேலும் மேலும் எழுதுங்கோ...வாசிக்க காத்திருக்கின்றோம்.

பிரி....  "வசிட்டர்  வாயால், பிரம்மரிஷி பட்டம்"  கிடைத்தது என்று சொல்வார்கள்.
அந்தத் தகுதி, உங்களுக்கும் கிடைத்து விட்டது.
இனியென்ன... பூந்து, விளையாடுங்கள்.  :)

Link to comment
Share on other sites

13 hours ago, suvy said:

நல்லதொரு அனுபவக் கதை.......!   😁

நன்றி suvy .

12 hours ago, Sasi_varnam said:

பிரி ...இதுதான் நான் வாசிக்கும் உங்கள் முதல் பதிவு. 
வாசிக்க ஆர்வத்தை தூண்டும் விதத்தில் மிக அருமையாக எழுதி உள்ளீர்கள்.
போனஸாக இடைக்கிடை உங்கள் "மைண்ட் வாய்ஸ்". 
தொடர்ந்தும் எழுதுங்கள். ஆவலோடு காத்திருக்கிறோம். 👌

நன்றி sasi _ varnam 
 

11 hours ago, நிழலி said:

உங்களுக்கு என்று ஒரு பிரத்தியேகமான எழுத்து நடையுடன் எழுதியிருக்கின்றீர்கள் பிரி. யாழுக்கு கிடைத்த இன்னுமொரு நல்ல புதிய எழுத்தாளர்! மேலும் மேலும் எழுதுங்கோ...வாசிக்க காத்திருக்கின்றோம்.

நன்றி நிழலி .

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 1/15/2020 at 1:05 AM, pri said:

பண்டாரவும் செனிவரட்ணவும் தொடர்ந்து வேலை செய்தார்கள். சைட் இன்ஜினியர்கள் அடிக்கடி மாறினார்கள்.

அருமையான பதிவு.

முதல் வேலை அனுபவம் படிக்க இன்னமும் அதிகம் இருக்கின்றது என்ற ஞானத்தைத் தரும்!

 

Link to comment
Share on other sites

  • 1 month later...
On 1/26/2020 at 8:19 AM, கிருபன் said:

அருமையான பதிவு.

முதல் வேலை அனுபவம் படிக்க இன்னமும் அதிகம் இருக்கின்றது என்ற ஞானத்தைத் தரும்!

 

நன்றி கிருபன்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

இன்றுதான் உங்களது இப்பதிவை வாசித்தேன்.  எழுத்துநடை அழகு. பிடித்துப் போனதால்் மற்றவைைைக ளையும் வாசித்துப் பாார்த்தேன். நல்ல பதிவுகள்.

தொடர்ந்தும் எழுதுங்கள்

சில ஞாபகங்கள் - 1ஐக் காணவில்லை. அதனால் அதை வாசிக்கவில்லை

Link to comment
Share on other sites

On 3/26/2020 at 1:29 PM, நாஞ்சில் said:

இன்றுதான் உங்களது இப்பதிவை வாசித்தேன்.  எழுத்துநடை அழகு. பிடித்துப் போனதால்் மற்றவைைைக ளையும் வாசித்துப் பாார்த்தேன். நல்ல பதிவுகள்.

தொடர்ந்தும் எழுதுங்கள்

சில ஞாபகங்கள் - 1ஐக் காணவில்லை. அதனால் அதை வாசிக்கவில்லை

நன்றி  நாஞ்சில்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 02:36 PM   (எம்.நியூட்டன்) போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பெரிய முதலையை பிடியுங்கள். பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. யாழ். மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரது இணைத்தலைமையில் இன்று வியாழக்கிழமை (19) நடைபெற்றது. இதன்போது, பொலிஸாரால் போதைப்பெருள் கடத்தல் தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக ஹெரோயின் தற்போது கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்து வில்லைகளே பயன்படுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக மன்னாரில் சிலரை கைது செய்து சட்ட நடவடிக்கைக்குட்படுத்தியுள்ளோம். மேலும், கஞ்சா போதைப்பொருள் இந்தியாவில் இருந்தே வடபகுதிக்கு கடத்தப்படுகிறது. இங்கிருந்தே  தென் மாகாணங்களுக்கு கடத்தப்படுகிறது. இது தொடர்பில் பல ஆய்வுகள் விசாரணைகள் மேற்கொண்டுவருகிறோம். சிலரை கைது செய்யக்கூடியதாக இருக்கிறது. பெரும்புள்ளிகள் அகப்படவில்லை. எனினும், தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றோம். பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என பொலிஸார் தெரிவித்தனர்.  குறித்த விடயம் தொடர்பில்  பொது அமைப்புகள் சார்பில் கலந்து கொண்டிருந்த நபர்  கருத்து தெரிவிக்கையில், சில கிராம் கணக்கில் வைத்திருப்பவர்களையே கைது செய்துள்ளார்கள். பெரும் முதலைகள் எவரும் கைது செய்யப்படவில்லை. அப்பாவிகளை கைது செய்து விட்டு கைது செய்கிறோம் என கூறகூடாது. போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும்  பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் கதைகள் வருகிறது. எனவே பொலிஸார் அவதானமாக செயல்பட்டு வடக்கில் போதைப்பொருளை தடுப்பதற்கு  பொலிஸார் பூரண ஒத்துழைப்பை தரவேண்டும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181451
    • இலங்கையின் முன்னாள் மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் தனது 89 ஆவது வயதில் அமெரிக்காவில் காலமானார். உயரம் பாய்தல் வீரரான நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் 1952 மற்றும் 1956 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை சார்பாக பங்கேற்ற பெருமையை பெற்றுள்ளார். 1958 ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் உயரம் பாய்தலில் 1.95 உயரத்திற்கு ஆற்றலை வௌிப்படுத்தி புதிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம் சர்வதேச மெய்வல்லுநர் அரங்கில் இலங்கைக்கு தங்கப்பதக்கம் ஈட்டிக்கொடுத்த முதல் வீரர் என்ற வரலாற்று சிறப்பும் நாகலிங்கம் எதிர்வீரசிங்கத்திற்கு உள்ளது. 1962 ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் உயரம் பாய்தலில் வௌ்ளிப்பதக்கம் வென்றுள்ளார். யாழ்ப்பாணம் பெரியவிளானில் 1933 ஓகஸ்ட் 24 ஆம் திகதி பிறந்த இவர் யாழ். மத்திய கல்லூரியின் பழைய மாணவராவார். பாடசாலை பருவத்திலேயே உயரம் பாய்தலில் அகில இலங்கை சாதனையை முறியடித்த பெருமையும் அவருக்கு உள்ளது. இலங்கை, சியேரா லியோன், பப்புவா நியூ கினியா, நைஜீரியா ஆகிய நாடுகளில் பல்கலைக்கழக விரிவுரையாளராக பணியாற்றியுள்ள நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் யுனெஸ்கோவிலும் 5 ஆண்டுகள் கடமையாற்றியுள்ளார். https://thinakkural.lk/article/299654
    • 2016 இல் போனபோது 1000 ரூபாய் கேட்டு போராடி கொண்டிருந்தனர். 1000 ரூபாய் ஆக்கிய கையோடு, அதன் பெறுமதி 300 ஆகிவிட்டது. இப்போ 1700…. பாவப்பட்ட சனங்கள். இதில் ஆட்சியில் அமைச்சராக இருக்கும் கட்சியே போராட்டம் நடத்தும் கண்துடைப்பு வேற.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.