Jump to content

சீனாவின் 5G ஐ பிரிட்டன் பயன்படுத்துவது முட்டாள்தனம் : அமெரிக்கா எச்சரிக்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Huawei.jpg

சீனாவின் 5G ஐ பிரிட்டன் பயன்படுத்துவது முட்டாள்தனம் : அமெரிக்கா எச்சரிக்கை

பிரித்தானியாவின் 5G தொழில்நுட்பத்தில் ஹுவாவி (Huawei) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது முட்டாள்தனமானது என்று அமெரிக்கா,  பிரித்தானிய அரசாங்கத்தை எச்சரித்துள்ளது.

சீன நிறுவனத்தைப் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் பாதுகாப்பு அபாயங்கள் குறித்து அமெரிக்கக்குழு ஒன்று பிரித்தானியாவுக்கு புதிய ஆதாரங்களை வழங்கியுள்ளது.

இந்த விவகாரத்தில் பிரதமர் பொரிஸ் ஜோன்சனுக்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முயன்றுள்ளார் என்று தெரியவந்துள்ளது.

பிரித்தானிய வலையமைப்பில் ஹுவாவியின் நேரடி இணைப்பற்ற (non-core) பகுதிகளை அனுமதிக்கலாமா என்பது குறித்த முடிவு இந்த மாதம் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கத் தேசிய பாதுகாப்பின் துணை ஆலோசகர் மாற் பொற்ரிங்கர் தலைமையிலான தூதுக்குழு, நேற்றுத் திங்கட்கிழமை லண்டனில் அமைச்சர்களைச் சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தேசியப் பாதுகாப்புக்கு ஆபத்து இல்லாமல் ஹுவாவியின் 5G உட்கட்டமைப்பினைப் பயன்படுத்த முடியும் என்று பிரித்தானிய உளவுத்துறையின் தொழில்நுட்ப மதிப்பீட்டை கேள்விக்குள்ளாக்கி அமெரிக்க மூத்த அதிகாரிகள் தொழில்நுட்ப ஆதாரங்களைக் கொடுத்துள்ளனர்.

மேலும் இந்த விவகாரத்தின் உள்ளடக்கம் குறித்து கருத்துத் தெரிவிக்க அமெரிக்க வட்டாரங்கள் மறுத்துவிட்டன.

5G வலையமைப்பில் பிரித்தானிய அரசு தனது முடிவை எடுக்கத் தயாராகி வரும் நிலையில், அமெரிக்கக் குழுவின் வருகை ட்ரம்ப் நிர்வாகத்தின் தீவிர பரப்புரை முயற்சியின் சமீபத்திய வடிவமாகப் பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு, தேசிய பாதுகாப்புத் தொடர்பான விடயங்களைச் சுட்டிக்காட்டி, ஹுவாவி மற்றும் அதனோடு தொடர்புடைய 68 நிறுவனங்களுக்கு தொழில்நுட்பங்களை விற்பதற்கு அமெரிக்கா தடைவிதித்தது.

ஹுவாவியின் எந்தவொரு பயன்பாடும் உளவுத்துறைத் தகவல்களை பகிர்வதற்கு வழிவகுக்கும் என்று அமெரிக்கா ஏற்கனேவே எச்சரித்திருந்தது.

எனினும், உளவுத்துறைத் தகவல்கள் பகிரப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகத் தெரியவில்லை என்று பிரித்தானிய அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்.

MI5 இன் தலைவர் ஆன்ட்ரூ பார்க்கர் (Andrew Parker) பைனான்சியல் ரைம்ஸிடம் தெரிவிக்கையில்; பிரித்தானியா ஹுவாவியின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால் அமெரிக்காவுடனான உளவுத்துறை பகிர்வு பாதிக்கப்படும் என்று நினைக்க எந்தக் காரணமும் இல்லை என்று கூறியுள்ளார்.

Huawei-1.jpg

ஹுவாவி நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில்; இது ஒரு தனியார் நிறுவனம், 3G, 4G மற்றும் புரோட்பான்ட் உபகரணங்களை 15 ஆண்டுகளாக பிரித்தானியத் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது. எங்களது தொழில்நுட்பம் பாதுகாப்பு அபாயத்தை ஏற்படுத்தாது என்பது குறித்து பிரிட்டிஷ் நிபுணர்கள் தெளிவாக உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் கென்சர்வேற்றிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பொப் சீலி (Bob Seely) தெரிவிக்கையில்; ஹுவாவியின் அனைத்து நோக்கங்களுக்கும் சீன அரசின் ஒரு பகுதியாகும். எனவே அதனுடனான தொழில்நுட்ப ஒப்பந்தம் பிரித்தானியாவின் வலையமைப்பை பெய்ஜிங் அணுக அனுமதிக்கும் செயல் என்றும் கூறியுள்ளார்.

மேலும், பிரித்தானியாவில் 5G உட்கட்டமைப்பின் பொருத்தப்பாடு குறித்து உடனடி விசாரணையை ஆரம்பிக்க நாடாளுமன்றத்தின் வெளியுறவுக் குழுவுக்கு அவர் அழைப்புவிடுத்துள்ளார்.

அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில்; பிரித்தானியத் தொலைத்தொடர்பு வலையமைப்புக்களின் பாதுகாப்பும் நெகிழ்வுத்தன்மையும் மிக முக்கியமானது என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் அதிக ஆபத்து நிறைந்த நிறுவனங்கள் மீது சரியான நேரத்தில் ஒரு முடிவு எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

http://athavannews.com/சீனாவின்-5g-ஐ-பிரிட்டன்-பயன/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.