Jump to content

அரசியல் அசிங்கங்களை அம்பலப்படுத்திய ரஞ்சன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் அசிங்கங்களை அம்பலப்படுத்திய ரஞ்சன்

எம்.எஸ்.எம். ஐயூப்   / 2020 ஜனவரி 15
மாதிவெலயில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வீடமைப்புத் திட்டத்தில் அமைந்துள்ள, நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டில் இருந்து, கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் சில இறுவட்டுகள் தான், இன்று நாட்டின் பிரதான பிரச்சினை என்று கூறுமளவுக்கு, அவை ஊடகங்களில் இடம்பிடித்துக் கொண்டுள்ளன.  

அரசியல்வாதிகள், பொலிஸ் அதிகாரிகள், நீதிபதிகள், பெண்கள் ஆகியோருடன், ராமநாயக்க தொலைபேசி ஊடாகவும் நேரடியாகவும் நடத்தியதாகக் கூறப்படும் உரையாடல்களே, இந்த இறுவட்டுகளில் உள்ளன எனக் கூறப்படுகிறது.  

இந்த உரையாடல்கள் மூலம் அவர், தமது அரசியல் எதிரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு, பொலிஸ் அதிகாரிகளைத் துண்டி உள்ளதாகவும் முக்கியமான வழக்குகள் தொடர்பாக, நீதிபதிகளுடன் உரையாடி உள்ளதாகவும் தற்போது ஆளும் கட்சி அரசியல்வாதிகளும் ஆளும் கட்சியை ஆதரிக்கும் சில பிக்குகளும் கூறி வருகின்றனர்.  

அதற்குப் புறம்பாக, ஐக்கிய தேசிய கட்சியின் சில தலைவர்களுக்கு எதிராக, ரஞ்சன் வேறு சில அரசியல்வாதிகளுடன் உரையாடுவதையும் அந்த ஒலி இறுவட்டுகள் மூலம், கேட்கக் கூடியதாக இருக்கிறது.   

சில உரையாடல்கள் உண்மையாக இருந்தால், அவற்றின் மூலம், பெண்களுடன் எவ்வாறு தகாத உறவுகளை, அவர் வைத்திருந்தார் என்பதும் தெரிய வருகிறது.  

ஒரு இலட்சத்துக்கும் அதிகமான தொலைபேசி உரையாடல்களை, அவர் இவ்வாறு இறுவட்டுகளில் சேமித்து வைத்திருந்ததாகச் செய்திகள் கூறுகின்றன. ஆனால், அந்த எண்ணிக்கை சரியானதா என்ற சந்தேகமும் எழுகின்றது.   

ஏனெனில், சில உரையாடல்கள் 20, 30 நிமிடங்களாக நீடித்துச் செல்வதையும் அவதானிக்க முடிகிறது. ஓர் உரையாடல், ஐந்து நிமிடங்களாக இருந்தாலும் ஒரு இலட்சம் உரையாடல்கள் இருந்தால், அவர் இந்த உரையாடல்களுக்காக மட்டும், ஐந்து இலட்சம் நிமிடங்களைச் செலவிட்டு இருக்க வேண்டும்.  

 ஐந்து இலட்சம் நிமிடங்கள் என்றால், சுமார் 8,300 மணித்தியாலங்கள் ஆகும். ஒரு நாளுக்கு ஐந்து மணித்தியாலங்கள் அவர் இவ்வாறான உரையாடல்களைப் பதிவு செய்வதற்காக செலவழித்தார் என்று வைத்துக் கொண்டாலும், சுமார் 1,700 நாள்களாக அதாவது சுமார் நாலரை வருடங்களாகத் தொடர்ந்து அவர் இந்தத் தொலைபேசி உரையாடல்களைப் பதிவு செய்வதில், ஈடுபட்டு இருக்க வேண்டும்.   

ஆனால், அவரது சில உரையாடல்கள், அரை மணித்தியாலங்களாக நீடிக்கின்றன. எனவே, இலட்சக் கணக்கான உரையாடல்கள், பதிவு செய்யப்பட்டு இருக்குமோ என்று, நியாயமானதொரு சந்தேகம் எழுகிறது.   

உண்மையிலேயே, ஒரு இலட்சத்துக்கு அதிகமான உரையாடல்களை, அவர் இவ்வாறு பதிவு செய்திருந்தால், அது ஒருவித மனநோய் என்றே கூற வேண்டும்.  

image_1490ed9468.jpg

இப்போது, பொலிஸ் அதிகாரிகள், நீதிபதிகள், அரசியல்வாதிகள், பெண்கள் ஆகியோருடன், ரஞ்சன் நடத்தியதாகக் கூறப்படும் தொலைபேசி உரையாடல்கள் எனக் கூறி, பல உரையாடல்களை, பல அரசியல்வாதிகளும் பிக்குகளும், ஊடகங்களின் முன்வந்து  ஒலிபரப்பிக் காட்டுகிறார்கள். ஆனால், தமக்கு, அவை எங்கிருந்து கிடைத்தன என்பதை, அவர்கள் கூறுவதில்லை. இவ்வாறு கூறும்போதுதான், அதனது நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்படும். 

தமது வீட்டில் இருந்து, பொலிஸார் கைப்பற்றிய இறுவட்டுகளை, பொலிஸார் நன்றாகப் பொதி செய்து, முத்திரையிட்டு, நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக வைத்துக் கொண்டதாகவும் அவை, இப்போது வழக்குகளுக்கான தடயப் பொருள்களாக இருக்கையில், பல அரசியல்வாதிகள், பிக்குகளிடம் அவை சென்றடைந்து உள்ளதாகவும் ரஞ்சன் குற்றஞ்சாட்டுகிறார்.   

இது தொடர்பாக, நீதிமன்றத்திடமும் அவர் முறைப்பாடு செய்திருக்கிறார். ஆனால், தாம் கைப்பற்றிய இறுவட்டுகளைத் தாம், எவரிடமும் கொடுக்கவில்லை என, பொலிஸார் அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளனர்.  

ஓட்டோ ஒன்றில், யாரோ நபரொருவர் தவறுதலாகக் கைவிட்டுச் சென்ற ஒரு பொதியிலேயே, இந்த இறுவட்டுகள் இருந்ததாகவும் அந்த ஓட்டோவின் சாரதி, அப்பொதியின் உரிமையாளரைத் தேடியும், அவரைக் கண்டுபிடிக்க முடியாத பட்சத்தில், பொலிஸாரிடம் அப் பொதியைக் கையளித்ததாகவும் இப்போது ஒரு கதை பரவி இருக்கிறது.   

இந்த நேர்மைக்காக, அந்த ஓட்டோச் சாரதிக்கு ஒரு மில்லியன் ரூபாய் பரிசாக வழங்க, ஓட்டோச் சாரதிகள் சங்கமொன்று முன்வந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.  

 இந்தக் கதை உண்மையானதா, ரஞ்சனின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட இறுவட்டுகளை, பொலிஸார் ஆளும் கட்சி அரசியல்வாதிகளிடம் கொடுத்துள்ளனர் என்ற குற்றச்சாட்டில் இருந்து, அவர்களைப் பாதுகாப்பதற்காகச் சோடிக்கப்பட்ட கதையா என்பது, இன்னமும் தெளிவாகவில்லை.   

அது, சோடிக்கப்பட்ட கதையாக இருந்தாலும், மீண்டும் பொலிஸார் அதே குற்றச்சாட்டுக்கு ஆளாகின்றனர். ஓட்டோக்காரர், பொலிஸாரிடம் கையளித்த பொதியில் இருந்தவை, அரசியல்வாதிகளிடம் எவ்வாறு சென்றடைந்தன?  

ஓட்டோக்காரர் கையளித்த பொதியில் இருந்தவை, இவ்வளவு சர்ச்சைக்கும் சட்டப் பிரச்சினைக்கும் உரியவை என்பதை, பொலிஸார் விளங்கிக் கொள்ளவில்லையா? 

அந்தப் பொதியில் இருந்தவை தான், இப்போது அரசியல்வாதிகளிடம் சென்றடைந்துள்ளன என்றால், அவை சர்ச்சைக்குரியவை என்பதாலேயே, அவ்வாறு அரசியல்வாதிகளிடம் சென்றடைந்துள்ளன. அவை, சாதாரண உரையாடல்களாக இருந்தால், அது செய்தியாக மாறியே இருக்காது.  

இந்தக் கேள்விக்கு, பொலிஸார் நம்பகமான பதில் வழங்கும் வரை, ரஞ்சனுக்கும் அவரோடு தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் எதிராகச் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கே, இப்போது இந்த இறுவட்டுகளை வைத்திருக்கும் அரசியல்வாதிகளும் பொலிஸாரும் ஆளாகின்றனர்.   

அதாவது, இந்த அரசியல்வாதிகளும் வழக்குகளின் தடயப் பொருள்களை, வழக்குகளோடு சம்பந்தப்பட்ட விடயங்களை, ரஞ்சனைப் போலவே பொலிஸாருடன் பரிமாறிக் கொண்டுள்ளனர் என்றே ஊகிக்க வேண்டியுள்ளது.  

நீதிபதிகள் நீதிமன்றத்துக்கு வெளியே எவருடனும் வழக்குகளைப் பற்றிக் கருத்துப் பரிமாறிக் கொள்வது குற்றமாகவே கருதப்படுகிறது. இந்த இறுவட்டுகளின் படி, ரஞ்சன் அவ்வாறு நீதிபதிகளுடன் உரையாடியுள்ளதாகத் தெரிகிறது.   

அதேவேளை, அவர் மூத்த பொலிஸ் அதிகாரிகளுடனும் முக்கியமான வழக்குகளைப் பற்றிக் கருத்துப் பரிமாறிக் கொண்டுள்ளார். அதன் மூலம், அவ்வழக்குகள் மீது அரசியல் செல்வாக்கைச் செலுத்துகிறார். அவர் பெண்களோடு தகாத உறவுகளை வைத்திருக்கிறார். தமது கட்சியைச் சேர்ந்த சில அரசியல்வாதிகளுடன் அதே கட்சியைச் சேர்ந்த சில தலைவர்களைப் பற்றி, மிக மோசமாகக் கருத்துப் பரிமாறிக் கொள்கிறார்.  

குற்றங்கள் அம்பலமானால் மட்டுமே, அவை குற்றங்களாகக் கருதப்படுகின்றன. படுபாதகச் செயல்களில் ஈடுபட்டாலும், அவை அம்பலமாகாத வரை, அவற்றைப் புரிந்தவர்கள் புனிதமானவர்களாகவும் மதிக்கப்படலாம். இதுவே இங்கும் நடைபெறுகிறது.   

இங்கே, ரஞ்சனை நியாயப்படுத்த முடியாது; அவர் நீதித்துறையில் தலையீடு செய்திருக்கிறார். ஆனால், மற்றவர்களும் புனிதமானவர்கள் அல்லர். இது எந்தக் கட்சி ஆட்சி செய்தாலும், பொதுவாக அரசியல்வாதிகள் நடந்து கொள்ளும் முறையையே வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது.  

இலங்கையில், நீதிபதிகளோடு தொடர்பு கொண்டு, வழக்குகளில் தலையீடு செய்த முதலாவது அல்லது, ஒரே அரசியல்வாதி ரஞ்சனா?   

தமக்கு வேண்டியவாறு, பொலிஸாரை வழிநடத்த முற்பட்ட முதலாவது அல்லது, ஒரே அரசியல்வாதி ரஞ்சனா?  

 தமது கட்சித் தலைவர்களை, ‘மடையர்கள்’ என்று திட்டிய முதலாவது அல்லது, ஒரே அரசியல்வாதி ரஞ்சனா?   

பெண்களுடன் தகாத உறவு வைத்திருந்த முதலாவது அல்லது, ஒரே அரசியல்வாதி ரஞ்சனா?  

மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக் காலத்தில், அலரி மாளிகையில் இருந்து, நீதிபதிகளுக்கு அடிக்கடி தொலைபேசி அழைப்புகள் சென்றதாக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பலமுறை கூறியிருக்கிறார்.   

தாம் கடமை முடிந்து வீடு செல்லும் வழியில், ஜனாதிபதியின் அழைப்பின் பேரில், அலரி மாளிகைக்குச் சென்றதாகவும் அப்போது ஜனாதிபதி தமக்குப் பதவியுயர்வு வழங்க உள்ளதை அறிவித்ததாகவும் ஒரு பெண் நீதிபதி, சில காலங்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.  

ஜனாதிபதியின் விருப்பத்துக்கு மாறாகத் தாம் நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளரை நியமித்தமையே, தாம் ஜனாதிபதியின் கோபத்துக்கு ஆளாவதற்குக் காரணம் என்றும், இறுதியில் வேறு பல காரணங்களும் சேர்ந்து, தாம் குற்றப் பிரேரணை மூலம் பதவிநீக்கம் செய்யப்பட்டதாகவும் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க, அண்மையில் வெளியிட்ட புத்தகமொன்றில் கூறியிருக்கிறார்.  

தங்காலையில், ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த பிரிட்டிஷ் பிரஜை ஒருவர், அரசியல்வாதி ஒருவரால் தாக்கப்பட்டு, கொல்லப்பட்டு, அவரது காதலி, பலர் முன், பலரால் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்று, ஒரு வருடம் வரை, சம்பந்தப்பட்ட அரசியல்வாதி கைது செய்யப்படவில்லை. இறுதியில் அவரைக் கைது செய்ய, பிரிட்டிஷ் இளவரசர் சார்ள்ஸ் தலையிட வேண்டி ஏற்பட்டது.   

அக்காலத்தில், மற்றோர் அரசியல்வாதி, நூறு பெண்களை வல்லுறவுக்கு உள்ளாக்கியதைத் தமது நண்பர்களுடன் ஹோட்டல் ஒன்றில் கொண்டாடியதாகவும் செய்திகள் மூலம் வெளியாகி இருந்தது.  

ஒரு காலத்தில், அரசியல்வாதிகள் சட்டத்துக்குப் பயந்து இருந்தார்கள். ரஞ்சன் செய்தவை கையும் மெய்யுமாக மாட்டிக் கொண்டுள்ளன. மற்றவர்களும் இதையே செய்தனர் என்பது, சகலருக்கும் தெரியும். ஆனால், அவர்கள் இதைப் போல் ஆதாரங்களை வழங்கவில்லை; வேறுபாடு அவ்வளவு தான்.    

ரஞ்சனைக் குறை கூறுபவர்கள் புனிதமானவர்களா?

 இலங்கை அரசியலினதும் சமூகத்தினதும் அநாகரிகத் தன்மையை அம்பலப்படுத்தியதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு சன்மானம் வழங்க வேண்டும் எனப் பிரபல ஊடகவியலாளரான விக்டர் ஐவன் கூறியிருக்கிறார்.   

உண்மைதான்! ரஞ்சனும் அவரது வீட்டில் இருந்து கைப்பற்றியதாகக் கூறப்படும் இறுவட்டுகளில் பதியப்பட்டு இருப்பதாகக் கூறப்படும் உரையாடல்களில் ஈடுபட்டவர்களும்தான், வரலாற்றில் முதன் முறையாகக் குற்றம் இழைத்துள்ளனர் என்பதைப் போல், அரசியல்வாதிகளும் சில பிக்குகளும் சில ஊடகங்களும் பிரசாரம் செய்து வருகின்றனர். ஆனால், நிலைமை அதுவல்ல என்பதை, வரலாற்றைச் சற்றுப் புரட்டிப் பார்த்தால் தெளிவாகும்  

ஜனாதிபதி ஜே. ஆர் ஜெயவர்தனவின் காலத்தில், அவருக்கும் பிரதம நீதியரசர் நெவில் சமரகோனுக்கும் இடையே, பெரும் கருத்து மோதல் ஒன்று ஏற்பட்டது. அப்போது, பிரதம நீதியரசரைப் பதவிநீக்கம் செய்ய, ஜே.ஆர் குற்றப் பிரேரணை ஒன்றைக் கொண்டு வந்தார்.   

ஜே. ஆருக்குப் பிடிக்காத தீர்ப்புகளை வழங்கிய சில உயர்நீதிமன்ற நீதியரசர்களின் வீடுகளுக்கு, ஆளும் கட்சியின் குண்டர்கள் கல்லெறிந்தனர். ஜெயவர்தனவின் ஆலோசனைப்படி பொலிஸார், நடிகரும் சந்திரிகா குமாரதுங்கவின் கணவருமான விஜய குமாரதுங்கவுக்கு எதிராக, அரசாங்கத்துக்கு எதிராகக் கிளர்ச்சி நடத்தியதாக வழக்கொன்றைச் சோடித்தனர்.  

ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் காலத்தில், அவருக்கும் முன்னாள் நிதியமைச்சரான ரொனி டி மெல்லுக்கும் இடையே, கருத்து மோதல் ஒன்று ஏற்பட்டது. பொலிஸார், ரொனிக்கு எதிராக, நிதி மோசடி தொடர்பாக வழக்கொன்றைத் தாக்கல் செய்தனர்.   

ரொனி, வெளிநாடொன்றுக்குச் சென்று தங்கிவிட்டார். ஒரு வருடத்துக்குப் பின்னர் இருவரும் சமாதானமாகி விட்டனர். ரொனி, நாடு திரும்பினார். தாம் வழக்கைத் தொடர்வதில்லை என, சட்ட மாஅதிபர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.  

அதேகாலத்தில், அரசாங்கத்துக்கு அவப் பெயர் ஏற்படும் வகையில் நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டில், முன்னாள் பிரதிப் பொலிஸ் மாஅதிபரில் ஒருவரான பிரேமதாஸ உடுகம்பல என்பவருக்கு எதிராக, வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அவருக்கு எதிராகப் பிடிவிராந்தும் பிறப்பிக்கப்பட்டது.   

உடுகம்பல, இந்தியாவுக்குச் சென்று அங்கேயே தங்கிவிட்டார். ஜனாதிபதி பிரேமதாஸ, கொல்லப்பட்டதன் பின்னர், அவர் நாடு திரும்பினார். பிடி விராந்தின்படி, அவர் கைது செய்யப்படவில்லை; வழக்கு விலக்கிக் கொள்ளப்பட்டது. அவருக்கு, துறைமுகத்தில் உயர் பதவியொன்றும் வழங்கப்பட்டது.  

ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் ஸ்தாபகத் தலைவர் பத்மநாபாவுக்கு எதிராக, அரசாங்கத்துக்கு எதிராகச் சதி செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், 1987ஆம் ஆண்டளவில், வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் கீழ், கிளர்ச்சித் தலைவர்களுக்கு எதிரான வழக்குகள் நீக்கிக் கொள்ளப்பட்டன. அதன்படி, பத்மநாபாவுக்கு எதிரான வழக்கும் வாபஸ் பெறப்பட்டது.   

ஆனால், புலிகளுக்கும் பிரேமதாஸ அரசாங்கத்துக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்ற காலத்தில், புலிகளின் நெருக்குதலால் பத்மநாபாவுக்கு எதிரான வழக்கு, மீண்டும் தொடுக்கப்பட்டது. இவை, மிகவும் பிரசித்தி பெற்ற சம்பவங்களாகும்.   

எனவே, நீதித்துறையிலும் பொலிஸ் திணைக்கள விவகாரங்களிலும் அரசியல்வாதிகள் தலையீடு செய்வதானது, நீண்டகாலமாக நடைபெற்று வரும் நிகழ்வாகும்.   

அது சட்ட விரோதமானது; அநாகரிகமானது என்பதில் விவாதத்துக்கு இடமில்லை. ஆனால், ரஞ்சன் தான் வரலாற்றில் முதல் முறையாக இது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார் என்பதைப் போல், ஆளும் கட்சியினர் தற்போது பேசுகின்றனர்; அது கேலிக்கூத்தாகும். அதேவேளை, ரஞ்சனின் செயலை நியாயப்படுத்தவும் முடியாது.  

பெண்களுடன், ரஞ்சன் தகாத உறவு வைத்திருந்தார் என்பதற்கான, ஆதாரங்களையும் இந்த உரையாடல்கள் மூலம், ஆளும் கட்சி அரசியல்வாதிகள் முன்வைக்கின்றனர். அரசியல் ஆதாயத்துக்காகவே, அவர்கள் இந்த உரையாடல்களை அம்பலப்படுத்துகின்றனர்.  

அதுவல்லாது, தாம் புனிதமானவர்கள் என்று அவர்களால் கூற முடியுமா? தமக்கு இது போன்ற சந்தர்ப்பங்கள் கிடைத்தால், அவற்றைத் தாம் பயன்படுத்தாமல் விட்டுவிடுவோம் என்று, அவர்களில் எத்தனை பேரால் தான் கூற முடியும்?   

ரஞ்சனின் உரையாடல்களின் மூலம் தெரியவரும் நிலைமைதான், நாட்டின் சாதாரண நிலைமை. அதை ஆதாரபூர்வமாக அவர் நிரூபித்துள்ளார். அவ்வளவு தான்.

விந்தை என்னவென்றால், இந்த உரையாடல்களால் நீதித்துறை மீதும் பொலிஸார் மீதும் வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் இழப்பார்கள் என்று கூறிக் கொண்டே, ஆளும் கட்சி அரசியல்வாதிகளும் பிக்குகளும் ஆளும் கட்சியை ஆதரிக்கும் சில ஊடக நிறுவனங்களும் அவற்றைப் பகிரங்கப்படுத்துகிறார்கள்.  
 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அரசியல்-அசிங்கங்களை-அம்பலப்படுத்திய-ரஞ்சன்/91-244050

Link to comment
Share on other sites

Quote

அரசியல் அசிங்கங்களை அம்பலப்படுத்திய ரஞ்சன்

றஞ்சன் தனது அசிங்கங்களையும் வெளிப்படுத்தி உள்ளார். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.