Jump to content

HS2 திட்டம் ஈடுசெய்ய முடியாத இயற்கை வாழ்விடங்களை அச்சுறுத்துகிறது


Recommended Posts

HS2 திட்டம் ஈடுசெய்ய முடியாத இயற்கை வாழ்விடங்களை அச்சுறுத்துகிறது

 

by : shiyani

110085990_436440c6-3733-44f6-8635-cc9851

108 பண்டைய வனப்பகுதிகள் உட்பட ஈடுசெய்ய முடியாத இயற்கை வாழ்விடங்களை அழிக்கும் அபாயங்கள் HS2 திட்டத்தில் காணப்படுவதாக அறிக்கையொன்றில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

லண்டன் மற்றும் வடக்கு இங்கிலாந்தை இணைக்கும் அதிவேக ரயில் பாதையான HS2 அரிய உயிரினங்களை அழிக்கக்கூடும் என வனவிலங்கு அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

தற்போது இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த திட்டம் முன்னோக்கிச் சென்றால் பசுமையான அணுகுமுறை தேவைப்படும் எனவும் இந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

ஆனாலும் அதன் ரயில்வே பாதையில் பசுமை தாழ்வாரத்தை உருவாக்குவதன் மூலம் சுற்றுச்சூழலை மதிக்கும் என இந்த திட்டத்தை முன்னெடுக்கவுள்ள HS2 Ltd தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் ஓகஸ்ற் மாதத்தில் HS2 திட்டம் குறித்து மறுஆய்வு செய்த அரசாங்கம், இந்த திட்டத்தை தொடரலாமா என்பது குறித்து அடுத்த வாரங்களில் முடிவு செய்யவுள்ளது.

HS2 திட்டத்தால் பாதிக்கப்படும் 14 உள்ளூர் அறக்கட்டளைகளின் தரவைப் பயன்படுத்தி வெளியிடப்பட்டுள்ள வனவிலங்கு அறக்கட்டளையின் அறிக்கை அதிவேக ரயில் பாதை ஏற்படுத்தக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்பு பற்றிய மிக விரிவான மதிப்பீடாகும்.

நூற்றுக்கணக்கான இயற்கை இருப்புக்கள், சிறப்பு அறிவியல் ஆர்வத்தின் தளங்கள் மற்றும் பண்டைய வனப்பகுதிகளில் HS2 குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என இந்த அறிக்கை எச்சரித்துள்ளதுடன் இந்த திட்டத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு அரசாங்கத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

http://athavannews.com/hs2-திட்டம்-ஈடுசெய்ய-முடியா/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.