Jump to content

பொங்கல் தொடர்ந்தாலும் நன்றி மறந்தாயிற்று


Recommended Posts

பொங்கல் தொடர்ந்தாலும் நன்றி மறந்தாயிற்று
 
20375.jpg
இன்று தைப்பொங்கல். பூமியில் பயிர்கள் விளைந்து மானிடர் உள்ளிட்ட ஜீவராசிகள் பசியாறுவதற்கு மூல காரணனாய் நிற்கின்ற சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் நாளாகத் தைப்பொங்கல் அமைகிறது.
 
நிலத்தை  உழுது பயிரை விளைவித்த விவசாயிகள் தங்களின் வேளாண் செய்கைக்கு உதவிய சூரியபகவானுக்குச் சர்க்கரைப் பொங்கல் செய்து முக்கனிகளும் பசும் பால், நெய், தேன் வகைகளும் சேர்த்துப் படையல் செய்து, சூரியபகவானுக்குத் தமது நன்றியைத் தெரிவிக்கின்ற நாளாகத் தைப்பொங்கல் திருநாள் அமைகிறது.
 
தமிழர் திருநாள் என்று போற்றப்படுகின்ற தைப்பொங்கல் தட்சணாய காலம் கடந்து, உத்தராயண காலம் தொடங்கும் தைமாதத்தை வரவேற்கின்ற பொங்கலாகவும் அமைகிறது.
 
அறுவடை செய்த தானியங்களைக் கொண்டு பொங்கல் செய்து சூரியபகவானுக்கு நன்றி பாராட்டுகின்ற உயர்ந்த பண்பாடு தமிழ் இனத்துக்குப் பெருமை தருவதாகும்.
 
எனினும் இன்றைய சமகாலத்தில் தைப்பொங்கல் என்பது வெறும் பொங்கலாகத் தொடர்கிறதேயன்றி, அதற்குள் இருக்கக் கூடிய நன்றி என்ற உணர்வு மறக்கப்பட்ட விடயமாயிற்று.
 
தவிர, தமிழர் திருநாள் என்ற பேரால் பாதணிகளுடன் நின்று பொங்கல் செய்கின்ற கலாசாரமும் மேலைத்தேய காற்சட்டைகள் அணிந்து கொண்டு பொங்குகின்ற பண்பாடும் எங்களிடம் ஊடுருவிவிட்டது.
 
உண்மையில் தைப்பொங்கல் என்பது புனிதமானது. சூரியபகவானைக் கடவுளாகப் போற்றுகின்ற தமிழ் மக்கள் அதிகாலையில் எழுந்து நீராடி தூயவஸ்திரம் அணிந்து சிவ தீட்சைக்கான அனுட்டானம் பார்த்து, கோல மிட்டு சாணத்தால் மெழுகி அடுப்பு வைத்து புதிய பானையில் பொங்கல் செய்து அதனைச் சூரியபகவானுக்குப் படைத்து தேவராத் திருமுறை ஓதி, தூப தீபங்களாலும் பூக்களாலும் சூரியனுக்குப் போற்றுதல் செய்து எங்கள் நன்றியைத் தெரிவிப்பதே சூரியப் பொங்கலாம்.
எனினும் இப்போது இவை எதிர்பார்க்க முடியாததாயிற்று.
 
பொட்டலம் செய்யப்பட்டு பொங்கல் பொதி என்று விற்க, அதனை வாங்கி வந்து ஆசாரம் ஏதுமின்றி அடுப்பேற்றி பொங்குவதும் பருவத்தால் பழுக்காத காய்களுக்கு மருந்து தெளித்து நஞ்சேற்றிப் பழுக்க வைத்து படையல் செய்கின்ற நாகரிகமும் வந்து விட்ட பின்பு சூரியன் தான் என்ன செய்ய முடியும். 
 
எதுவாயினும் தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழரின் நம்பிக்கை. எனவே இன்று தைப்பிறப்பு. பழையன கழிந்து புதிய உத்வேகத்தில் எங்கள் வாழ்வைத் தொடங்க தைப்பொங்கல் பொங்கட்டும்.
 
தமிழ் மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் சாந்தியும் நிலைக்கட்டும். இதற்கு கண்கண்ட கடவுளாய் - இயற்கையின் சாட்சியாய் விளங்கும் சூரியபகவான்  உதவட்டும்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப இருக்கிற சனத்துக்கு  பொங்கல் ஏன் என்னத்துக்கு எண்டே தெரியாது.ஹப்பி பொங்கல் எண்ட வாழ்த்து வேறை...😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வலம்புரி எப்போதும் கொஞ்சம் இடக்கு மடக்காகத்தான் எழுதும் போலுள்ளது ?

ஆசிரிய பீடத்தில் கொஞ்சம் விசாலமாகவும் கால மாற்றத்துடன் சிந்திக்கத் தெரிந்தவர்களையும் உள்ளடக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்வது ?/ குளில் காலத்தில் பொங்கல் வருவதனால் வெளிநாடுகளில் வாழும் தமிழர் காற்சட்டையுடனும் சப்பாத்துக்களுடனும் நின்று பொங்கவேண்டியுள்ளது. அப்படியாவது எமது சடங்காகவேனும் அடுத்த தலைமுறைக்கு இது கடத்தப்படுகிறது என்று மனத்தைத் தேற்றவேண்டியதுதான்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதைத் தான் நானும் விரும்புகிறேன். ஆனாலும் ஊழல் இல்லாமல் மக்களுக்கு சேவையாற்ற யார் இருக்கிறார்கள்? காட்டுங்க கை கோர்க்கிறேன் என்கிறார். இதுக்கு யாரிடமும் பதில் இல்லை. அடுத்தடுத்த தேர்தல்களில் தேவைகளை உணர்ந்து செயல்படலாம். இதுவரை நாம்தமிழர் வாக்குவங்கி கூடிக் கொண்டு தானே போகுது? எப்படி 3 வீதம் என்று கணித்தீர்கள்?
    • அவருக்கு பெரியமனசு. எப்படி அடித்தாலும் தாங்குவார்.
    • முதலில் நான் தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கும்,..எந்த தலைவருக்கும். எதிரானவன். இல்லை என்பதை  பணிவு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்  .....இங்கு எழுதுவது கருத்துகள் மட்டுமே  [அதாவது நடைமுறையில் சாத்தியம் எது என்று நான் கருதுவது ]. தமிழ்நாட்டில் எந்தவொரு தலைவரும் தனித்து நின்று வெல்ல முடியாது  ..இது சீமானுக்கும். பொருந்தும்    எந்த கட்சியும். வெல்ல வேணும் என்றால் கூட்டணி அவசியமாகும் ...செல்வாக்கு உள்ள கட்சிகளின் கூட்டணி அமைத்தால். மட்டுமே வெல்லலாம்.  சீமான் தலைமையில் எந்த கட்சியும். கூட்டணி அமைக்கப்போவதில்லை  ....சரியா? அல்லது பிழையா??   சீமான் வேறு கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்க முடியும்,.....ஆனால் அடுத்த அடுத்த தேர்தலில் அவரது   ஆதரவு   குறைத்து விடும்   3% கூட வரலாம்”      
    • நிச்சயம் பாதிப்பு இருக்கும். அதனால்த் தான் பெரும்தொகை பணத்தைச் செலவு செய்து இத்தனை பேரை களமிறக்கியுள்ளனர்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.