Jump to content

இலையுதிர்கால நினைவுகள் - வ.ஐ.ச.ஜெயபாலன்.


Recommended Posts

1989 இலையுதிர்கால முடிவில் நான் ஒஸ்லோ நகரில் இருந்தேன். விடைபெறும் இலையுதிர்காலம் கடைசி மஞ்சள் இலைகளை உதிர்த்தது. உள்ளே நுழையும் கூதிர் காலம் ஆரம்ப வெண்பனியை பெய்தது. பெரும்பாலான பறவைகள் குளிருக்குத் தப்பி என் தாய்நாட்டின் திசையில் பறந்துவிட்டன. மக்பை என்னும் காக்கை இனப்பறவைகள் மட்டும் என் அறை சன்னலுக்கு வெளியே அடிக்கடி தோன்றி வெண்பனியில் அலைந்தன.
உதிரும் இலைகளும் வாட்டும் குளிரும் மனசை நசிக்க நாட்டேக்த்தில் உளன்ற நாட்க்கள் அவை. அந்த நாட்க்களில்தான் இந்தக் கவிதையை எழுதினேன். இந்த புகழ் பெற்ற கவிதை புலம்பெயர்ந்த தமிழர் பற்றிய கட்டுரைகளில் அடிக்கடி எடுதாளப்படுகிறது.
.
Image may contain: one or more people and close-up
*
இலையுதிர்கால நினைவுகள்
- வ.ஐ.ச.ஜெயபாலன்.
*
இன்பக் கனவுபோல்
தோன்றி மறைந்தது கோடை.
காற்றுக் குதிரைகளில்
குளிர்
சாட்டை சொடுக்கி வரும்.
வெய்யிற் சுகம் தேடி
வடதுருவப் பறவைகளும்
என் தாய்நாட்டின் திசை நோக்கி
தங்களது சிறகசைக்கும்.
வான் நோக்கிக் கை உயர்த்தித் தொழுகின்ற
கறுப்பர்களைப்போல்
இலை உதிர்த்து நிற்க்கும்
ஓக் மரங்களின் கீழே
தனிதலையும் மக்பாய் இழிவாக எனை நோக்கும்.
 
”மக்பாய்! மக்பாய்!
எல்லாப் பறவைகளும்
என்னுடைய தாய்நாட்டின் திசைகளிலே
சூரியனைத் தேடிப் புலம் பெயரும்
குளிர் நாளில்
நீ மட்டும் இந்த துருவத்தில் தரித்ததென்ன?”
 
மக்பையோ உனக்கிவைகள் புரியாது
என்பதுபோல் தலை அசைக்கும்.
“எனக்கிவைகள் புரியாதா?”
“உனகெப்படிப் புரியும்?
துருவத்துப் பறவைகளே தேடுமுந்தன் தாய்நாட்டை
குண்டி மண்ணைத் தட்டுதல்போல்
தட்டிவிட்டு வந்தவன் நீ”
மக்பை சொல் தீக்கோலாய்
மனதில் குறிபோடும்.
“நில் மக்பை” என்றேன்.
”நாமறிவோம்
இலங்கைத் தமிழர் உங்கள் நாகரீகம்
பிறருடைய பேச்சுச் சுதந்திரத்தை
என்றேனும் ரசித்ததுண்டா நீங்கள்?
என்றபடி மக்பை எட்டப் பறந்து செல்லும்.
 
வானில் ஒரு பரதேசிபோல்
குளிர்ந்துபோன சூரியனின் பரிதாபம்.
மண்ணில்
மஞ்சளாய் தலை நரைத்த மரங்களின்கீழ்
பொன்னாய் இறகசைக்கும்
வணத்துப் பூச்சியாய் பகட்டி
பேர்ச் இலை பழுத்தல் ஒன்று
புல்லில் தரை இறங்கும்
ஒரு புது அகதி வந்துபோல்.
 
உலகெங்கும் உதிர்க்கும்
வாழ்வை இழந்து வசதி பொறுக்குகின்ற
மனிதச் சருகுகளாய் புரள்கின்றோம்.
என்ன நம் தாய்நாடு
ஓயாமல் இலை உதிர்க்கும்
உயிர்ப்பிழந்த முது மரமா?
 
யாழ்நகரில் என் பையன்
கொழும்பில் என் பெண்டாட்டி
வன்னியில் என் தந்தை
தள்ளாத வயதினிலே
தமிழ்நாட்டில் என் அம்மா
சுற்றம் பிராங்போட்டில்
ஒரு சகோதரியோ பிரான்ஸ் நாட்டில்
நானோ
வழிதவறி அலாஸ்க்கா வந்துவிட்ட ஒட்டகம்போல்
ஒஸ்லோவில்
என்ன நம் குடும்பங்கள்
காற்றில் விதிக் குரங்கு கிழித்தெறியும்
பஞ்சுத் தலையணையா?
 
பாட்டனார் பண்படுத்தி
பழமரங்கள் நாட்டி வைத்த
தோப்பை அழியவிட்டு
தொலை தேசம் வந்தவன் நான்.
என்னுடைய பேரனுக்காய்
எவன் வைப்பான் பழத் தோட்டம்.
 
கடந்த வசந்தத்தில்
கின்னரங்கள் மீட்டி
எழில்க் கன்னியர்கள் பாடுகின்ற
களியாட்டரங்குகளில்
கிண்ணங்கள் கொஞ்ச, மங்களம்கூறி
மனமுடைந்தேன் பரதேசி.
 
இது இயற்கையே விரக்தியுறும்
இலையுதிர் காலம்.
இனி நீர்க்கூடக் கல்லாகும்
நீண்ட குளிர்காலம்.
 
இன்னும் எத்தனை நாள்
இந்துக் கடல் மடியில்
வாடையும் தென்றலும் மீட்ட இசைக்கின்ற
மரகத வீணையென.
வடகிழக்காய் நீண்ட என் தாய்நாட்டை
நெஞ்சில் சுமந்துநான் ஏங்குவது?
நாட்டேக்கம் என் உயிரை
நஞ்சாய் சமிக்கிறதே.
 
நெஞம் கலங்காதே என்றபடி
நெருங்கி வந்த மக்பை
”அதோ தெரியுது பார்” என்று
விமான நிலையத்தின் வழிகாட்டும்.
1989.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/15/2020 at 3:14 PM, poet said:
வழிதவறி அலாஸ்க்கா வந்துவிட்ட ஒட்டகம்போல்
ஒஸ்லோவில்
என்ன நம் குடும்பங்கள்
காற்றில் விதிக் குரங்கு கிழித்தெறியும்
பஞ்சுத் தலையணையா?

அலைந்து உலையும்  வாழ்வை அழகாய் பாடும் பொயட்.அழகான கவிதை பல தடவை முன்பும் வாசித்திருக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நன்று அண்ணா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.