Jump to content

பொங்கல் இந்து பண்டிகை; இஸ்லாமிய மாணவர்கள் கொண்டாட கூடாது' - மலேசிய அரசின் சுற்றறிக்கையால் சர்ச்சை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பொங்கல் இந்து பண்டிகை; இஸ்லாமிய மாணவர்கள் கொண்டாட கூடாது' - மலேசிய அரசின் சுற்றறிக்கையால் சர்ச்சை

பொங்கல்படத்தின் காப்புரிமைAQABIZ VIA GETTY IMAGES Image captionகோப்புப்படம்

பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களில் இஸ்லாமிய மாணவர்கள் பங்கேற்கக் கூடாது என்று அறிவுறுத்தி மலேசிய கல்வித்துறை சார்பில் அந்நாட்டில் இயங்கும் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

பொங்கல் பண்டிகை இந்துக்களால் கொண்டாடப்படுவது என்றும், அதற்கும் இஸ்லாத்துக்கும் எந்தவகையிலும் தொடர்பில்லை என்றும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக மலேசிய ஊடகங்ககள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜனவரி 13ஆம் தேதியிட்ட இந்தச் சுற்றறிக்கை மலேசியக் கல்வி அமைச்சகத்தின் சார்பாக அனைத்து மாநில கல்வித்துறை இயக்குநர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இஸ்லாமிய வளர்ச்சித் துறை சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் பொங்கல் பண்டிகையானது ஒரு சமயப் பண்டிகை என்றும், அதில் இஸ்லாமியர்கள் பங்கேற்கக் கூடாது என்றும் முடிவெடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொங்கல் பண்டிகையை பள்ளிகளில் கொண்டாட எந்தவிதத் தடையுமில்லை என மலேசிய கல்வி அமைச்சகம் புதன்கிழமை (ஜனவரி 15) வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

"கடந்த 13 ஜனவரி 2020 தேதியிட்ட கல்வி அமைச்சகத்தின் சுற்றறிக்கைக் கடிதம், இதுபோன்ற கொண்டாட்டங்களில் தங்களின் பிள்ளைகள் பங்கு பெறுவது தொடர்பில் இஸ்லாமியப் பெற்றோர்கள் கொண்டிருந்த கவலையைத் தணிக்கும் விதத்திலேயே அனுப்பப்பட்டது. அந்தக் கடிதம் ஜாக்கிம் எனப்படும் மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டு இலாகாவின் நிலைப்பாடு மற்றும் வழிகாட்டுதல்கள் அடிப்படையிலேயே வெளியிடப்பட்டது," என்றும் கல்வி அமைச்சகத்தின் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.

இடைக்கால கல்வி அமைச்சராக பிரதமர் மகாதீர் மொஹமத்

மலேசிய கல்வி அமைச்சுக்குப் பொறுப்பேற்றிருந்த மஸ்லி அண்மையில் பதவி விலகினார். இதையடுத்து கல்வி அமைச்சுக்கு இடைக்கால அமைச்சராகக் கூடுதல் பொறுப்பேற்றுள்ளார் பிரதமர் மகாதீர் மொஹமத்.

பிரதமருக்குத் தெரியாமல் இப்படியொரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டதா எனும் கேள்வி எழுந்துள்ளது.

பிரதமர் மகாதீர் மொஹமத்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionபிரதமர் மகாதீர் மொஹமத்

சீனப் புத்தாண்டு நெருங்கி வரும் நிலையில் மலேசியா முழுவதும் அதற்கான கொண்டாட்டங்களுக்கு சீனர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளிக்கூடங்களில் சீனப் புத்தாண்டை வரவேற்கும் விதமாக லாந்தர் விளக்குகளை வைக்கக்கூடாது என அண்மையில் ஒரு தரப்பினர் வலியுறுத்தினர்.

அதற்கு முன்னதாக கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இஸ்லாமியர்கள் யாரும் வாழ்த்துத் தெரிவிக்க வேண்டாம் என்று மத போதகர் ஜாகிர் நாயக்கின் பழைய சமூக ஊடகப் பதிவு ஒன்றைச் சிலர் மறுபதிவு செய்தது சர்ச்சையானது.

'பிரதமருக்குத் தர்மசங்கடம் ஏற்படுத்தும் முயற்சியா?'

கல்வித்துறை சார்பாக சுற்றறிக்கை அனுப்பிய அதிகாரி தமது பதவியிலிருந்து விலகவேண்டும் என வலியுறுத்தி உள்ளார் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி.

இத்தனை ஆண்டு காலமாக மலேசியாவில் பொங்கல் பண்டிகை எந்தவித சர்ச்சைக்கும் இடமளிக்காமல் கொண்டாடப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் திடீரென பிரச்சனை எழுப்பக் காரணம் என்ன, இது பிரதமருக்குத் தர்மசங்கடம் ஏற்படுத்தும் முயற்சியா என்று கேள்விகளை எழுப்புகிறார் பேராசிரியர் ராமசாமி.

பொங்கல்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

அக்குறிப்பிட்ட சுற்றறிக்கையைப் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள மலேசியக் கல்வித் துறை, இஸ்லாமிய வளர்ச்சித் துறை வல்லுநர்களை உள்ளடக்கிய குழு ஒன்று கடந்தாண்டு ஏப்ரல் மாதம் கூடி விவாதித்ததாகவும், அதில் பொங்கல் பண்டிகை இஸ்லாத்துக்கு எதிரானது என்பதால் அதில் இஸ்லாமியர்கள் பங்கேற்கக்கூடாது என முடிவு செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.

இஸ்லாமிய மாணவர்கள் பொங்கல் கொண்டாட்டங்களில் நிச்சயமாக பங்கேற்கக்கூடாது என்றும் அதே வேளையில் பண்டிகையைக் கொண்டாடுபவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க அனுமதிக்கப்படுவதாகவும் அந்தச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டும் ராமசாமி இன உணர்வுகளைத் தூண்டும் வகையிலான செயல்பாடுகளை ஏற்க இயலாது என்றார்.

மலேசிய மனிதவளத் துறை அமைச்சர் குலசேகரன் Image captionமலேசிய மனிதவளத் துறை அமைச்சர் குலசேகரன்

இந்த விவகாரம் குறித்து மலேசிய மனிதவளத் துறை அமைச்சர் குலசேகரனை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு பேசியது. அப்போது இதுகுறித்து அமைச்சரவையின் கவனத்துக்குக் கொண்டு செல்ல இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

"வேளாண்மைக்கு உதவிய இயற்கைக்கு உழவர்கள் நன்றி தெரிவிக்கும் பொங்கல் விழா மலேசியாவிலும் காலங்காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது," என்றார் அமைச்சர் குலசேகரன்.

'இந்து பண்டிகை அல்ல; தமிழர் பண்டிகை'

"பொங்கல் என்பது பெரும்பாலும் இந்துக்களால் கொண்டாடப்படுவது உண்மைதான் என்றும், அதில் ஓர் அங்கமாக சூரியனை வணங்கும் நிகழ்வும் உள்ளது என்றும் குறிப்பிட்ட அவர், அதற்காக இதை சமயம் சார்ந்த பண்டிகை என்று கூறிவிட இயலாது. இது தமிழர்களின் கலாசாரம் சார்ந்த பண்டிகையாகவே கருதப்பட வேண்டும்," என்று பிபிசி தமிழிடம் மலேசிய இந்து சங்கத் தலைவர் மோகன் ஷான் தெரிவித்தார்.

கடந்து செல்க யூடியூப் பதிவு இவரது BBC News Tamil
எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

முடிவு யூடியூப் பதிவின் இவரது BBC News Tamil

பெரும்பாலும் தமிழ்ப் பள்ளிகளில் மட்டுமே பொங்கல் விழா கொண்டாடப்படும். அப்படி இருக்கையில் எதற்காக அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்? அப்படியானால் தமிழ்ப் பள்ளிகளில் பொங்கலுக்காக விழா எடுக்கக்கூடாது என்கிறார்களா? அண்மைக் காலமாக நடப்பதை எல்லாம் பார்க்கும்போது மக்கள் மத்தியில் மோதல் ஏற்படுத்தும் நோக்கத்துடன் சிலர் ஒரு குழுவாகச் செயல்படுகிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது என்றார் மோகன் ஷான்.

சமத்துவப் பொங்கல்

முன்னாள் பிரதமர் நஜீப்பின் ஆட்சிக்காலத்தில் நாடு முழுவதும் அரசாங்கத்தின் ஆதரவுடன் 'ஒரே மலேசியா பொங்கல் விழா' (SATU MALAYSIA PONGAL) கொண்டாடப்பட்டது.

மேலும் நாடு முழுவதும் சமத்துவப் பொங்கல் என்ற பெயரிலும் கொண்டாடப்பட்டது. மலாய்க்காரர்கள், சீனர்களும் இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.

சர்ச்சைகளையும் மீறி வழக்கம் போல் இந்தாண்டும் மலேசியாவில் பொங்கல் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

மலேசிய பிரதமர் மகாதீர் மொஹமத் அந்நாட்டிலுள்ள இந்திய, தமிழ் வம்சாவளியினருக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்து மலாய் மொழியில் காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

https://www.bbc.com/tamil/global-51122179

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.