Jump to content

பாலுணர்வு மிகுந்த 100 வயது ஆமை டீகோ: இனத்தை வளர்க்கும் பணி முடித்து காடு திரும்புகிறது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாலுணர்வு மிகுந்த 100 வயது ஆமை டீகோ: இனத்தை வளர்க்கும் பணி முடித்து காடு திரும்புகிறது

நூற்றுக் கணக்கில் வாரிசுகளை ஈன்று நூறுவயது டீகோ.படத்தின் காப்புரிமைEPA Image captionநூற்றுக் கணக்கில் வாரிசுகளை ஈன்று நூறுவயது டீகோ.

அதீத பாலுணர்வு மிக்க டீகோ என்ற ஆண் ஆமை, தன் இனத்தை அழியாமல் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு சுமார் 800 குஞ்சுகளை உருவாக்கிய பிறகு தற்போது தனது 100-வது வயதில் தன் சொந்தக் காடுக்கு திரும்புகிறது.

கிராண்ட் டார்ட்டாய்ஸ் எனப்படும் நில ஆமை வகையைச் சேர்ந்த டீகோவின் பூர்வீகம் அமெரிக்க கண்டத்தில், ஈக்வடார் தீவில் உள்ள கோலபாகோஸ் தீவுகள்.

சாந்தா குரூஸ் தீவில் இனப்பெருக்கத்தில் ஈடுபடும் திட்டத்துக்காக 1960களில் தேர்வு செய்யப்பட்ட 14 ஆண் ஆமைகளில் டீகோவும் ஒன்று.

இந்த இனப்பெருக்கத் திட்டத்தின் கீழ் 2000 தரை ஆமைகள் உருவாக்கப்பட்டு அந்த இனம் அழிவில் இருந்து மீட்கப்பட்டது. இந்த வெற்றியில் டீகோவின் அதீத பாலுணர்வுக்கு முக்கியப் பங்கு இருப்பதாகப் பாராட்டப்பட்டது.

டீகோ நூற்றுக்கணக்கான வாரிசுகளை உருவாக்கியது. சில கணக்குகளின்படி அந்த எண்ணிக்கை சுமார் 800.

இந்தத் திட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து, டீகோ தமது பூர்வீகத் தீவான கோலபாகோஸ் தீவுக் கூட்டத்தின் எஸ்பனோலா தீவுக்கு இந்த ஆண்டு திரும்பும் என்று கேலபாகோஸ் தேசியப் பூங்கா சேவை தெரிவித்துள்ளது.

40 சதவீத ஆமைகளுக்குத் தந்தை

1,800 ஆமைகள் கொண்டதாக அதன் சமூகம் அங்கே வலுவானதாக இருக்கிறது. இவற்றில் குறைந்தது 40 சதவீத ஆமைகளுக்கு டீகோதான் தந்தை என்கிறார்கள் தேசியப்பூங்காவின் வனச்சரகர்கள்.

டீகோபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionடீகோ

எஸ்பனோலாவுக்கு தாங்கள் அனுப்பிய ஆமைகளில் பெரும்பாலானவைக்கு பங்களித்தது டீகோதான் என்று பூங்காவின் இயக்குநர் ஜோர்ஜ் காரியோன் ஏ.எஃப்.பி. செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

தமது இயற்கையான வாழ்விடத்துக்கு டீகோ திரும்புவதால் மகிழ்ச்சி நிலவுவதாக அவர் மேலும் கூறினார்.

50 ஆண்டுகளுக்கு முன்பு எஸ்பனோலாவில் டீகோவின் இனத்தில் இரண்டு ஆண் ஆமைகளும், 12 பெண் ஆமைகளும் மட்டுமே இருந்தன. Chelonoidis hoodensis என்ற அறிவியல் பெயர் கொண்ட ஆமை இனத்தை பாதுகாக்கும் பணியில் அப்போதுதான் டீகோ ஈடுபடுத்தப்பட்டது. சொந்த இடத்துக்கு திரும்புவதற்கு முன்பாக தற்போது டீகோ தனிமையில் உள்ளது.

தனித்துவமான காட்டுயிர்கள், தாவரங்கள் கொண்ட கேலபாகோஸ் தீவுகள் யுனெஸ்கோ உலகப் பண்பாட்டுத் தலம் ஆகும். அதன் பல்லுயிர் வளம் காண உலகம் முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகள் அங்கு வருகிறார்கள்.

https://www.bbc.com/tamil/global-51115956

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீணனுக்குத் தெரிந்தால் தேடிப் பீடிச்சு, அடிச்சு, காயவைச்சு சூப்பாக்கி குடிச்சு முடிச்சுப் போடுவான். 

ஆமை கவனம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

பாலுணர்வு மிகுந்த 100 வயது ஆமை டீகோ: இனத்தை வளர்க்கும் பணி முடித்து காடு திரும்புகிறது

40 சதவீத ஆமைகளுக்குத் தந்தை

1,800 ஆமைகள் கொண்டதாக அதன் சமூகம் அங்கே வலுவானதாக இருக்கிறது. இவற்றில் குறைந்தது 40 சதவீத ஆமைகளுக்கு டீகோதான் தந்தை என்கிறார்கள் தேசியப்பூங்காவின் வனச்சரகர்கள்.

டீகோ

https://www.bbc.com/tamil/global-51115956

வெற்றிவாகை சூடிய தோழருக்கு வாழ்த்துக்கள்.😎

Link to comment
Share on other sites

3 hours ago, ஏராளன் said:

 

டீகோ

ஆமைச் சிங்கனே
ஆமைச் சிங்கனே

உனை வாழ்த்த வயதில்லை
உன்னுடையதை வாழ்த்தி வணங்குகின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்தனை காலத்தில் தான் முன்னர் வாழ்ந்த அந்தத் தீவை ஆமை நினைவில் வைததிருக்குமா என்ன ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இத்தனை காலத்தில் தான் முன்னர் வாழ்ந்த அந்தத் தீவை ஆமை நினைவில் வைததிருக்குமா என்ன ??

 இதெல்லாம் ஆளாளுக்கு அடிச்சு விடுவதுதான் செய்திக்கு இதில் மேலே ஒராள் வாழ்த்து சொல்லி இருக்கு இன்னொரு ஆள் கவித எழுதி இருக்கு 😎😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

 இதெல்லாம் ஆளாளுக்கு அடிச்சு விடுவதுதான் செய்திக்கு இதில் மேலே ஒராள் வாழ்த்து சொல்லி இருக்கு இன்னொரு ஆள் கவித எழுதி இருக்கு 😎😎

ஐயோ தம்பியா சிரிச்சு முடியல்ல 😂🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிழலி said:

ஆமைச் சிங்கனே
ஆமைச் சிங்கனே

உனை வாழ்த்த வயதில்லை
உன்னுடையதை வாழ்த்தி வணங்குகின்றேன்

Ähnliches Foto Ähnliches Foto

ப்ளீஸ் நிழலி.... ஆமையினுடையதை, நாவூறு படுத்தாதீர்கள்.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

Ähnliches Foto Ähnliches Foto

ப்ளீஸ் நிழலி.... ஆமையினுடையதை, நாவூறு படுத்தாதீர்கள்.  :grin:

இந்தத்திரிக்குள் இருவரையும்  எதிர்பார்த்தேன்😋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/16/2020 at 2:17 PM, விசுகு said:

இந்தத்திரிக்குள் இருவரையும்  எதிர்பார்த்தேன்😋

விசுகர்... வயது வட்டுக்குள்ளை போனாலும்,
இப்படியான திரிகளில், கருத்து ✍️ எழுதாமல்  விட்டால்...
சாப்பிட்டது, செமிக்காத மாதிரி... பெரிய குடைச்சலாய்  இருக்கும்.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/16/2020 at 2:17 PM, விசுகு said:

இந்தத்திரிக்குள் இருவரையும்  எதிர்பார்த்தேன்😋

விசுகு...... ஈழப்பிரியன், புங்கையூரான், நந்தன்... கோஸ்ட்டிகளை,  
இந்தப் பக்கம் காணவில்லை என்று, கவலையாயிருக்கப்பா.... 😥

இப்படி ஒரு திரி இருக்கு.... என்று,  அவர்களுக்கு..... தகவல் அனுப்பி விடுங்களேன்.
அவர்களும் வந்தால், வெள்ளிக்கிழமை  குசியாய் இருக்கும்.  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தமிழ் சிறி said:

விசுகு...... ஈழப்பிரியன், புங்கையூரான், நந்தன்... கோஸ்ட்டிகளை,  
இந்தப் பக்கம் காணவில்லை என்று, கவலையாயிருக்கப்பா.... 😥

இப்படி ஒரு திரி இருக்கு.... என்று,  அவர்களுக்கு..... தகவல் அனுப்பி விடுங்களேன்.
அவர்களும் வந்தால், வெள்ளிக்கிழமை  குசியாய் இருக்கும்.  🤣

அவர்களுக்கு அனுப்பி என்னத்தை காண்பது குளிருக்க எங்க இருக்குறாங்களோ தெரியல 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அவர்களுக்கு அனுப்பி என்னத்தை காண்பது குளிருக்க எங்க இருக்குறாங்களோ தெரியல 

இப்படியான நியூஸ், என்றால்... அவங்களுக்கு குளிராவது, கோதாரியாவது. 😀
கேள்விப்பட்ட  உடனே.... பதறியடிச்சு  ஓடி வந்திடுவாங்கள். 🥰

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமை நீண்டகாலம் வலுவாக வாழக்கூடியது...... 100 வயதெல்லாம் அதுக்கு மனிதனின் 35/40 வயது போன்றது....அதை அங்கு இன்னும் கெத்தாக டூயட் பாட விட்டிருக்கலாம்......என்பது என் கருத்து....!  😂

அப்பாடா இனி எனக்கும் சாப்பிட்டது செமித்திடும்.....!  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, suvy said:

ஆமை நீண்டகாலம் வலுவாக வாழக்கூடியது...... 100 வயதெல்லாம் அதுக்கு மனிதனின் 35/40 வயது போன்றது....அதை அங்கு இன்னும் கெத்தாக டூயட் பாட விட்டிருக்கலாம்......என்பது என் கருத்து....!  😂

அப்பாடா இனி எனக்கும் சாப்பிட்டது செமித்திடும்.....!  🤣

சுவியர்... 
அந்த ஆமை, வாழ்க்கை முழுவதும், இதே... தொழிலாக  "டூயட்" பாடிக்  கொண்டிருந்தால், 
குரல் கம்மி... வாய்  நோகும் தானே...  ஆமையும் பாவமெல்லோ.....  😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

அவர்களுக்கு அனுப்பி என்னத்தை காண்பது குளிருக்க எங்க இருக்குறாங்களோ தெரியல 

சிறுவர்கள் ஓரமாக  விளையாடலாம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

சுவியர்... 
அந்த ஆமை, வாழ்க்கை முழுவதும், இதே... தொழிலாக  "டூயட்" பாடிக்  கொண்டிருந்தால், 
குரல் கம்மி... வாய்  நோகும் தானே...  ஆமையும் பாவமெல்லோ.....  😍

எந்தத் தொழில் என்றாலும்  செய்யும் தொழிலை விரும்பி செய்தால் அலுப்பு வராது.....அதனால்தான் விஞ்ஞானிகள் எந்நேரமும் லாப்பிக்குள்ளேயே இருக்கிறார்கள். இது லவ்வுக்குள்ள திரியுது. மேலும் ஆமை என்ன அனிருத் மியூசிக்கில பாடவா போகுது, குரல் கம்மி வாய் நோக......!   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

சிறுவர்கள் ஓரமாக  விளையாடலாம்...

இல்லை.....அவரையும் எங்கடை இதுக்குள்ளை சேர்த்திட்டு பிறகு போட்டு கும்முவம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, விசுகு said:

சிறுவர்கள் ஓரமாக  விளையாடலாம்...

ஹாஹா

20 hours ago, குமாரசாமி said:

இல்லை.....அவரையும் எங்கடை இதுக்குள்ளை சேர்த்திட்டு பிறகு போட்டு கும்முவம். 

பார்ரா கும்முற ஆட்களை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தனிக்காட்டு ராஜா said:

பார்ரா கும்முற ஆட்களை 

தம்பி ராசன் வேண்டாம்.....எங்களுக்கு அனுபவம் எக்கச்சக்கம்.....நீங்கள் இப்பதான் பம்பஸ் மாத்த பழகிக்கொண்டிருக்கிறியள்....பாக்கவே பாவமாய்க்கிடக்கு.....நாங்கள் கிழிஞ்சு கந்தலாகி வெட்டி ஒட்டி வைச்சிருக்கிறம். எங்களோடை மல்லுக்கட்டுறது நெருப்போடை விளையாடுற மாதிரி....பொழைச்சு போங்க.....😄
அன்பே சிவம்.😎

Bildergebnis für ANPE SIVAM

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

தம்பி ராசன் வேண்டாம்.....எங்களுக்கு அனுபவம் எக்கச்சக்கம்.....நீங்கள் இப்பதான் பம்பஸ் மாத்த பழகிக்கொண்டிருக்கிறியள்....பாக்கவே பாவமாய்க்கிடக்கு.....நாங்கள் கிழிஞ்சு கந்தலாகி வெட்டி ஒட்டி வைச்சிருக்கிறம். எங்களோடை மல்லுக்கட்டுறது நெருப்போடை விளையாடுற மாதிரி....பொழைச்சு போங்க.....😄
அன்பே சிவம்.😎

Bildergebnis für ANPE SIVAM

இதே ரொம்ப ரொம்ப குறைந்த அளவு எடுத்து விட்டிருக்கு ஃ

இந்த விஷயத்தில் குறைந்த அளவு எடுத்து விடுவது எவ்வளவு கடினமானது எங்களுக்கு என்று தெரியுமா??😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

தம்பி ராசன் வேண்டாம்.....எங்களுக்கு அனுபவம் எக்கச்சக்கம்.....நீங்கள் இப்பதான் பம்பஸ் மாத்த பழகிக்கொண்டிருக்கிறியள்....பாக்கவே பாவமாய்க்கிடக்கு.....நாங்கள் கிழிஞ்சு கந்தலாகி வெட்டி ஒட்டி வைச்சிருக்கிறம். எங்களோடை மல்லுக்கட்டுறது நெருப்போடை விளையாடுற மாதிரி....பொழைச்சு போங்க.....😄
அன்பே சிவம்.😎

எப்படி பார்த்திருப்பார் போல் தெரிகிறது  நம்ம ஆட்கள் விடுப்பு பார்த்து திரிவதே வழக்கம் 

 

3 hours ago, விசுகு said:

இதே ரொம்ப ரொம்ப குறைந்த அளவு எடுத்து விட்டிருக்கு ஃ

இந்த விஷயத்தில் குறைந்த அளவு எடுத்து விடுவது எவ்வளவு கடினமானது எங்களுக்கு என்று தெரியுமா??😍

நல்லா வருவீர்கள் இருவரும் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
    • அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி Published By: DIGITAL DESK 7   16 APR, 2024 | 02:42 PM   நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் அவரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திக்கு இன்று வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லவுள்ள ஊர்தியானது இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்ட பந்தலுக்கு முன்பாக அஞ்சலிக்காக கொண்டுவரப்பட்டது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்க தலைவி கா. ஜெயவனிதா ஈகைச்சுடரினை ஏற்றி வைத்ததுடன் மற்றும் தாயார் மலர்மாலை அணிவித்து அடுத்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/181216
    • Published By: DIGITAL DESK 3    16 APR, 2024 | 12:07 PM யாழ்ப்பாணத்தில் இருந்து புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசிக்கும் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி சுமார் 50 இலட்ச ரூபாயை மோசடி செய்ததாக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசித்து வருகின்றார். அவருக்கு திருமணமாகி பிள்ளைகள் உள்ள நிலையில் சுவிஸ் நாட்டில் கணவனை பிரிந்து பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றார்.  இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் குறித்த பெண் யாழ்ப்பாணம் வந்திருந்த போது, பெண்ணின் பூர்வீக சொத்துக்கள் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடுகள் தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ய சென்று இருந்தார்.  முறைப்பாடு செய்ய சென்ற நேரத்தில் பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த தமிழ் பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  அந்த பழக்கம் பெண் வெளிநாடு சென்ற பின்னரும் தொடர்ந்து உள்ளது. ஒரு கட்டத்தில் அது காதலாக மலர்ந்துள்ளது. அதனை அடுத்து சுவிஸ் நாட்டு பெண், இங்குள்ள பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு பணம், நகை என்பவற்றுடன் அன்பளிப்பு பொருட்கள் என பலவற்றை வழங்கி வந்துள்ளார்.  ஒரு கட்டத்தில் பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தரை சுவிஸ் நாட்டிற்கு எடுப்பதற்கான முயற்சிகளையும் அப்பெண் மேற்கொண்டுள்ளார். அதற்கு பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தர் மறுப்பு தெரிவித்து, தான் நாட்டை விட்டு வர மாட்டேன் என கூறியுள்ளார்.  அதனால் அப்பெண் மீண்டும் யாழ்ப்பாணம் வந்து தன்னை திருமணம் செய்யுமாறு வற்புறுத்திய வேளை , அதற்கு அவர் உடன்படாத நிலையில், அது தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார்.  அதனை அடுத்து, இப்பெண்ணிடம் இருந்து பெற்றுக்கொண்ட ஒரு தொகை நகை, பணம் என்பவற்றை மீள அளித்துள்ளார். மிகுதியை சிறு கால இடைவெளியில் மீள கையளிப்பதாக உறுதி அளித்துள்ளார்.  அதன் பிரகாரம் உரிய காலத்தில் மிகுதி பணம் நகையை மீள கையளிக்காததால், அப்பெண் குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார். https://www.virakesari.lk/article/181215
    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 11:19 AM   கொவிட் தொற்று பற்றிய உலக சுகாதார நிறுவனம் மற்றும் இலங்கை சுகாதார அமைச்சின் ஆலோசனைகள் தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெளிவுபடுத்தியுள்ளார். யாழ் மாவட்டத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் கொவிட்தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளநிலையில், மக்கள் மத்தியில் தேவையற்ற சந்தேகங்களை தீர்க்கும்வகையில் குறித்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதன்படி 2023 ஒக்டோபர் 10ம் திகதி முதல் கீழ்வரும் 7 விடயங்கள் சுகாதார அமைச்சினால் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டு பின்பற்றப்படுகிறது. 1. கொவிட் தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஏனைய சுவாசத் தொற்று நோய்கள் ஏற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகின்ற அதே உரிய பாதுகாப்பும் பராமரிப்பும் வழங்கப்பட வேண்டும். பொருத்தமான சிகிச்சையும் வைத்தியசாலையில் வழங்கப்படும்.  (பொதுவாக சுவாச தொற்று வருத்தம் இன்னொருவருக்கு இலகுவாக பரவலாம். ஆகவே சுவாசத் தொற்று உடையவர்கள் உரிய அடிப்படை சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறே தொற்று உடையவருக்கு அருகில் இருப்பவர்கள் மற்றும் பராமரிப்பவர்கள் உரிய சுகாதார பழக்கவழக்கங்களைப்  பேண வேண்டும்.) 2. எதாவது நோய் ஒன்றின் சிகிச்சைக்கு முன்னர் அல்லது சத்திர சிகிச்சை ஒன்றிற்கு முன்னர்  கொவிட் தொற்றும் இருக்கின்றதா என பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 3. கொவிட் தொற்று உடையவரிற்கு அருகில் இருந்தவர்களிற்கு அல்லது அவருக்கு அருகில் சென்று சிகிச்சை அளித்தவர்களுக்கு கோவிட் தொற்று இருக்கின்றதா என பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. 4. இருமல் மற்றும் தடிமன் போன்ற சுவாசத் தொற்று ஏற்பட்டவர்கள் இன்னொருவருக்கு தொற்று ஏற்படாத வகையில் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக அதிகளவில் ஒன்றுகூடும் இடங்களில் உரிய முறையில் நடந்து கொள்ள வேண்டும். 5. கொவிட் இறப்பு ஏற்படும் போது உரிய சுகாதார விதிகளைக் கடைப்பிடித்து வீடுகளில் இறுதிச் சடங்கை செய்யமுடியும். 6. சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் சமுதாயத்தில் கொவிட் தொற்று இருக்கின்றதா என பலருக்கு பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 7. தனியார் சிகிச்சை நிலையங்களும் இந்த நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். https://www.virakesari.lk/article/181205
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.