Jump to content

பாலுணர்வு மிகுந்த 100 வயது ஆமை டீகோ: இனத்தை வளர்க்கும் பணி முடித்து காடு திரும்புகிறது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாலுணர்வு மிகுந்த 100 வயது ஆமை டீகோ: இனத்தை வளர்க்கும் பணி முடித்து காடு திரும்புகிறது

நூற்றுக் கணக்கில் வாரிசுகளை ஈன்று நூறுவயது டீகோ.படத்தின் காப்புரிமைEPA Image captionநூற்றுக் கணக்கில் வாரிசுகளை ஈன்று நூறுவயது டீகோ.

அதீத பாலுணர்வு மிக்க டீகோ என்ற ஆண் ஆமை, தன் இனத்தை அழியாமல் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு சுமார் 800 குஞ்சுகளை உருவாக்கிய பிறகு தற்போது தனது 100-வது வயதில் தன் சொந்தக் காடுக்கு திரும்புகிறது.

கிராண்ட் டார்ட்டாய்ஸ் எனப்படும் நில ஆமை வகையைச் சேர்ந்த டீகோவின் பூர்வீகம் அமெரிக்க கண்டத்தில், ஈக்வடார் தீவில் உள்ள கோலபாகோஸ் தீவுகள்.

சாந்தா குரூஸ் தீவில் இனப்பெருக்கத்தில் ஈடுபடும் திட்டத்துக்காக 1960களில் தேர்வு செய்யப்பட்ட 14 ஆண் ஆமைகளில் டீகோவும் ஒன்று.

இந்த இனப்பெருக்கத் திட்டத்தின் கீழ் 2000 தரை ஆமைகள் உருவாக்கப்பட்டு அந்த இனம் அழிவில் இருந்து மீட்கப்பட்டது. இந்த வெற்றியில் டீகோவின் அதீத பாலுணர்வுக்கு முக்கியப் பங்கு இருப்பதாகப் பாராட்டப்பட்டது.

டீகோ நூற்றுக்கணக்கான வாரிசுகளை உருவாக்கியது. சில கணக்குகளின்படி அந்த எண்ணிக்கை சுமார் 800.

இந்தத் திட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து, டீகோ தமது பூர்வீகத் தீவான கோலபாகோஸ் தீவுக் கூட்டத்தின் எஸ்பனோலா தீவுக்கு இந்த ஆண்டு திரும்பும் என்று கேலபாகோஸ் தேசியப் பூங்கா சேவை தெரிவித்துள்ளது.

40 சதவீத ஆமைகளுக்குத் தந்தை

1,800 ஆமைகள் கொண்டதாக அதன் சமூகம் அங்கே வலுவானதாக இருக்கிறது. இவற்றில் குறைந்தது 40 சதவீத ஆமைகளுக்கு டீகோதான் தந்தை என்கிறார்கள் தேசியப்பூங்காவின் வனச்சரகர்கள்.

டீகோபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionடீகோ

எஸ்பனோலாவுக்கு தாங்கள் அனுப்பிய ஆமைகளில் பெரும்பாலானவைக்கு பங்களித்தது டீகோதான் என்று பூங்காவின் இயக்குநர் ஜோர்ஜ் காரியோன் ஏ.எஃப்.பி. செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

தமது இயற்கையான வாழ்விடத்துக்கு டீகோ திரும்புவதால் மகிழ்ச்சி நிலவுவதாக அவர் மேலும் கூறினார்.

50 ஆண்டுகளுக்கு முன்பு எஸ்பனோலாவில் டீகோவின் இனத்தில் இரண்டு ஆண் ஆமைகளும், 12 பெண் ஆமைகளும் மட்டுமே இருந்தன. Chelonoidis hoodensis என்ற அறிவியல் பெயர் கொண்ட ஆமை இனத்தை பாதுகாக்கும் பணியில் அப்போதுதான் டீகோ ஈடுபடுத்தப்பட்டது. சொந்த இடத்துக்கு திரும்புவதற்கு முன்பாக தற்போது டீகோ தனிமையில் உள்ளது.

தனித்துவமான காட்டுயிர்கள், தாவரங்கள் கொண்ட கேலபாகோஸ் தீவுகள் யுனெஸ்கோ உலகப் பண்பாட்டுத் தலம் ஆகும். அதன் பல்லுயிர் வளம் காண உலகம் முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகள் அங்கு வருகிறார்கள்.

https://www.bbc.com/tamil/global-51115956

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீணனுக்குத் தெரிந்தால் தேடிப் பீடிச்சு, அடிச்சு, காயவைச்சு சூப்பாக்கி குடிச்சு முடிச்சுப் போடுவான். 

ஆமை கவனம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

பாலுணர்வு மிகுந்த 100 வயது ஆமை டீகோ: இனத்தை வளர்க்கும் பணி முடித்து காடு திரும்புகிறது

40 சதவீத ஆமைகளுக்குத் தந்தை

1,800 ஆமைகள் கொண்டதாக அதன் சமூகம் அங்கே வலுவானதாக இருக்கிறது. இவற்றில் குறைந்தது 40 சதவீத ஆமைகளுக்கு டீகோதான் தந்தை என்கிறார்கள் தேசியப்பூங்காவின் வனச்சரகர்கள்.

டீகோ

https://www.bbc.com/tamil/global-51115956

வெற்றிவாகை சூடிய தோழருக்கு வாழ்த்துக்கள்.😎

Link to comment
Share on other sites

3 hours ago, ஏராளன் said:

 

டீகோ

ஆமைச் சிங்கனே
ஆமைச் சிங்கனே

உனை வாழ்த்த வயதில்லை
உன்னுடையதை வாழ்த்தி வணங்குகின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்தனை காலத்தில் தான் முன்னர் வாழ்ந்த அந்தத் தீவை ஆமை நினைவில் வைததிருக்குமா என்ன ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இத்தனை காலத்தில் தான் முன்னர் வாழ்ந்த அந்தத் தீவை ஆமை நினைவில் வைததிருக்குமா என்ன ??

 இதெல்லாம் ஆளாளுக்கு அடிச்சு விடுவதுதான் செய்திக்கு இதில் மேலே ஒராள் வாழ்த்து சொல்லி இருக்கு இன்னொரு ஆள் கவித எழுதி இருக்கு 😎😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

 இதெல்லாம் ஆளாளுக்கு அடிச்சு விடுவதுதான் செய்திக்கு இதில் மேலே ஒராள் வாழ்த்து சொல்லி இருக்கு இன்னொரு ஆள் கவித எழுதி இருக்கு 😎😎

ஐயோ தம்பியா சிரிச்சு முடியல்ல 😂🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிழலி said:

ஆமைச் சிங்கனே
ஆமைச் சிங்கனே

உனை வாழ்த்த வயதில்லை
உன்னுடையதை வாழ்த்தி வணங்குகின்றேன்

Ähnliches Foto Ähnliches Foto

ப்ளீஸ் நிழலி.... ஆமையினுடையதை, நாவூறு படுத்தாதீர்கள்.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

Ähnliches Foto Ähnliches Foto

ப்ளீஸ் நிழலி.... ஆமையினுடையதை, நாவூறு படுத்தாதீர்கள்.  :grin:

இந்தத்திரிக்குள் இருவரையும்  எதிர்பார்த்தேன்😋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/16/2020 at 2:17 PM, விசுகு said:

இந்தத்திரிக்குள் இருவரையும்  எதிர்பார்த்தேன்😋

விசுகர்... வயது வட்டுக்குள்ளை போனாலும்,
இப்படியான திரிகளில், கருத்து ✍️ எழுதாமல்  விட்டால்...
சாப்பிட்டது, செமிக்காத மாதிரி... பெரிய குடைச்சலாய்  இருக்கும்.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/16/2020 at 2:17 PM, விசுகு said:

இந்தத்திரிக்குள் இருவரையும்  எதிர்பார்த்தேன்😋

விசுகு...... ஈழப்பிரியன், புங்கையூரான், நந்தன்... கோஸ்ட்டிகளை,  
இந்தப் பக்கம் காணவில்லை என்று, கவலையாயிருக்கப்பா.... 😥

இப்படி ஒரு திரி இருக்கு.... என்று,  அவர்களுக்கு..... தகவல் அனுப்பி விடுங்களேன்.
அவர்களும் வந்தால், வெள்ளிக்கிழமை  குசியாய் இருக்கும்.  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தமிழ் சிறி said:

விசுகு...... ஈழப்பிரியன், புங்கையூரான், நந்தன்... கோஸ்ட்டிகளை,  
இந்தப் பக்கம் காணவில்லை என்று, கவலையாயிருக்கப்பா.... 😥

இப்படி ஒரு திரி இருக்கு.... என்று,  அவர்களுக்கு..... தகவல் அனுப்பி விடுங்களேன்.
அவர்களும் வந்தால், வெள்ளிக்கிழமை  குசியாய் இருக்கும்.  🤣

அவர்களுக்கு அனுப்பி என்னத்தை காண்பது குளிருக்க எங்க இருக்குறாங்களோ தெரியல 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அவர்களுக்கு அனுப்பி என்னத்தை காண்பது குளிருக்க எங்க இருக்குறாங்களோ தெரியல 

இப்படியான நியூஸ், என்றால்... அவங்களுக்கு குளிராவது, கோதாரியாவது. 😀
கேள்விப்பட்ட  உடனே.... பதறியடிச்சு  ஓடி வந்திடுவாங்கள். 🥰

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமை நீண்டகாலம் வலுவாக வாழக்கூடியது...... 100 வயதெல்லாம் அதுக்கு மனிதனின் 35/40 வயது போன்றது....அதை அங்கு இன்னும் கெத்தாக டூயட் பாட விட்டிருக்கலாம்......என்பது என் கருத்து....!  😂

அப்பாடா இனி எனக்கும் சாப்பிட்டது செமித்திடும்.....!  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, suvy said:

ஆமை நீண்டகாலம் வலுவாக வாழக்கூடியது...... 100 வயதெல்லாம் அதுக்கு மனிதனின் 35/40 வயது போன்றது....அதை அங்கு இன்னும் கெத்தாக டூயட் பாட விட்டிருக்கலாம்......என்பது என் கருத்து....!  😂

அப்பாடா இனி எனக்கும் சாப்பிட்டது செமித்திடும்.....!  🤣

சுவியர்... 
அந்த ஆமை, வாழ்க்கை முழுவதும், இதே... தொழிலாக  "டூயட்" பாடிக்  கொண்டிருந்தால், 
குரல் கம்மி... வாய்  நோகும் தானே...  ஆமையும் பாவமெல்லோ.....  😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

அவர்களுக்கு அனுப்பி என்னத்தை காண்பது குளிருக்க எங்க இருக்குறாங்களோ தெரியல 

சிறுவர்கள் ஓரமாக  விளையாடலாம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

சுவியர்... 
அந்த ஆமை, வாழ்க்கை முழுவதும், இதே... தொழிலாக  "டூயட்" பாடிக்  கொண்டிருந்தால், 
குரல் கம்மி... வாய்  நோகும் தானே...  ஆமையும் பாவமெல்லோ.....  😍

எந்தத் தொழில் என்றாலும்  செய்யும் தொழிலை விரும்பி செய்தால் அலுப்பு வராது.....அதனால்தான் விஞ்ஞானிகள் எந்நேரமும் லாப்பிக்குள்ளேயே இருக்கிறார்கள். இது லவ்வுக்குள்ள திரியுது. மேலும் ஆமை என்ன அனிருத் மியூசிக்கில பாடவா போகுது, குரல் கம்மி வாய் நோக......!   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

சிறுவர்கள் ஓரமாக  விளையாடலாம்...

இல்லை.....அவரையும் எங்கடை இதுக்குள்ளை சேர்த்திட்டு பிறகு போட்டு கும்முவம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, விசுகு said:

சிறுவர்கள் ஓரமாக  விளையாடலாம்...

ஹாஹா

20 hours ago, குமாரசாமி said:

இல்லை.....அவரையும் எங்கடை இதுக்குள்ளை சேர்த்திட்டு பிறகு போட்டு கும்முவம். 

பார்ரா கும்முற ஆட்களை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தனிக்காட்டு ராஜா said:

பார்ரா கும்முற ஆட்களை 

தம்பி ராசன் வேண்டாம்.....எங்களுக்கு அனுபவம் எக்கச்சக்கம்.....நீங்கள் இப்பதான் பம்பஸ் மாத்த பழகிக்கொண்டிருக்கிறியள்....பாக்கவே பாவமாய்க்கிடக்கு.....நாங்கள் கிழிஞ்சு கந்தலாகி வெட்டி ஒட்டி வைச்சிருக்கிறம். எங்களோடை மல்லுக்கட்டுறது நெருப்போடை விளையாடுற மாதிரி....பொழைச்சு போங்க.....😄
அன்பே சிவம்.😎

Bildergebnis für ANPE SIVAM

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

தம்பி ராசன் வேண்டாம்.....எங்களுக்கு அனுபவம் எக்கச்சக்கம்.....நீங்கள் இப்பதான் பம்பஸ் மாத்த பழகிக்கொண்டிருக்கிறியள்....பாக்கவே பாவமாய்க்கிடக்கு.....நாங்கள் கிழிஞ்சு கந்தலாகி வெட்டி ஒட்டி வைச்சிருக்கிறம். எங்களோடை மல்லுக்கட்டுறது நெருப்போடை விளையாடுற மாதிரி....பொழைச்சு போங்க.....😄
அன்பே சிவம்.😎

Bildergebnis für ANPE SIVAM

இதே ரொம்ப ரொம்ப குறைந்த அளவு எடுத்து விட்டிருக்கு ஃ

இந்த விஷயத்தில் குறைந்த அளவு எடுத்து விடுவது எவ்வளவு கடினமானது எங்களுக்கு என்று தெரியுமா??😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

தம்பி ராசன் வேண்டாம்.....எங்களுக்கு அனுபவம் எக்கச்சக்கம்.....நீங்கள் இப்பதான் பம்பஸ் மாத்த பழகிக்கொண்டிருக்கிறியள்....பாக்கவே பாவமாய்க்கிடக்கு.....நாங்கள் கிழிஞ்சு கந்தலாகி வெட்டி ஒட்டி வைச்சிருக்கிறம். எங்களோடை மல்லுக்கட்டுறது நெருப்போடை விளையாடுற மாதிரி....பொழைச்சு போங்க.....😄
அன்பே சிவம்.😎

எப்படி பார்த்திருப்பார் போல் தெரிகிறது  நம்ம ஆட்கள் விடுப்பு பார்த்து திரிவதே வழக்கம் 

 

3 hours ago, விசுகு said:

இதே ரொம்ப ரொம்ப குறைந்த அளவு எடுத்து விட்டிருக்கு ஃ

இந்த விஷயத்தில் குறைந்த அளவு எடுத்து விடுவது எவ்வளவு கடினமானது எங்களுக்கு என்று தெரியுமா??😍

நல்லா வருவீர்கள் இருவரும் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3 18 APR, 2024 | 11:56 AM   7 இலட்சம் சுற்றுலா பயணிகள் வருகை என்ற மைல்கல்லை இலங்கை 14  வாரங்களில் கடந்துள்ளது. ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மொத்தம்  718,315 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின்  தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. ஏப்ரல் மாதத்தின் முதல் 15 நாட்களில் 82,531 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இது நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வளர்ச்சி வேகம் சீராக இருப்பதை காட்டுகிறது. ஒரு வருடத்திற்கு முன்பு நாளாந்த சுற்றுலா பயணிகளின் வருகை 3000 ஆக குறைந்து இருந்த நிலையில், தற்போது ஏப்ரல் மாத்தில் 5,502 ஆக அதிகரித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் 168,539 ற்கும் 182,724 ற்கும் இடையில் சுற்றுலாப் பயணிகள் வருகையை இலங்கை இலக்காகக் கொண்டுள்ளது. இந்த இலக்கை அடைய நாளாந்தம் சராசரியாக 5,617 முதல் 6,090 வரை சுற்றுலாப் பயணிகள் வருகை தரவேண்டும். தற்போதைய வருகையின் வேகம் இலங்கை மாதத்திற்கான வருகை இலக்கின் கீழ் எல்லையை எட்டக்கூடும் என்பதைக் காட்டுகிறது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தால் கடந்த ஆண்டு  ஏப்ரல் மாதம்  பதிவு செய்யப்பட்ட 105,498 சுற்றுலா பயணிகளின் வருகையை நாடு விஞ்சும்.  2018 ஆம் ஆண்டில் சுற்றுலா பயணகளின் வருகையை நாடு  அடைய மேம்பட்ட வேகம் தேவை. ஏப்ரல் மாத்தில் 17 சதவீதமான சுற்றுலா பயணிகள்  இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். 11 சதவீதமான சுற்றுலா பயணிகள்  பிரித்தானியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். ஐக்கிய இராச்சியம் தனது பிரஜைகளுக்காக வெளியிட்டுள்ள இலங்கைக்கான பயண ஆலோசனையை (Travel Advisory) தளர்த்தியுள்ளமையினால் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளின் வருகை எதிர்பார்க்கப்படுகிறது. 10 சதவீதமான சுற்றுலா பயணிகள்  ரஷ்காவிலிருந்து  வருகை தந்துள்ளனர். ஜெர்மனி, பிரான்ஸ், அவுஸ்திரேலியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தரவரிசையில் நான்காவது, ஐந்தாவது, ஆறாவது மற்றும் ஏழாவது இடங்களைப் பிடித்துள்ளன. 14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை | Virakesari.lk
    • Published By: DIGITAL DESK 7 18 APR, 2024 | 03:43 PM   கடந்த வருடங்களில் அதிகளவில் உயிரிழப்புக்கள் ஏற்பட்டமைக்கு பிரதான காரணம் மாரடைப்பு என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அத்தோடு, 2010 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலும் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு பிரதான காரணமும் மாரடைப்பு என்று சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. அதுமட்டுமன்றி, மாரடைப்பு ஏற்படுவதற்கு பிரதான காரணங்களாக ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள், உடல்  உறுப்புகளின் செயற்பாடுகள் பற்றிய கவனமின்மை, புகையிலை , போதைப்பொருள் பாவனை மற்றும் மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களினால் மாரடைப்பு ஏற்படுவதாகவும்  சுகாதாரத் துறை திணைக்களம் சுட்டிகாட்டியுள்ளது.    இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம் மாரடைப்பு! | Virakesari.lk
    • Published By: DIGITAL DESK 7 18 APR, 2024 | 05:21 PM   ( எம்.நியூட்டன்) யாழ்ப்பாணத்தில் இருந்து நள்ளிரவு வேளை சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு திருகோணமலைக்கு கொண்டு செல்லப்படுவதாக மக்கள் என்னிடம் முறையிட்டுள்ளார்கள் இது தொடர்பில் மக்களால் முறையிடப்பட்ட இடங்களை பார்வையிட்டபோது அங்கு 20 முதல் 25 அடிவரை அகழப்பட்டு இருக்கிறது. அவ்வாறு  அகழப்பட்ட சுண்ணகற்கள் பிறிதொரு இடத்திற்கு கொண்டு சென்று சேர்த்த பின்னர் நள்ளிரவு வேளை  திருகோணமலைக்கு கொண்டுசெல்லப்படுகிறது. இந்த செயற்பாட்டிற்கு யார் அனுமதி வழங்கியது?   கற்களை அகழ்வதற்கு எந்த திணைக்களம் பொறுப்பு கூறுவது இராணுவம், பொலிஸாரின் அனுமதியுடன் இது நடைபொறுகிறதா? யார் தான்  பொறுப்பு கூறுவது? 12,14 கன்ரர், டிப்பர் வாகனங்களில்  கற்களை கொண்டு செல்கிறார்கள்.  நள்ளிரவில் இந்த வேலைகளை செய்வதால் இரவு கடமையில் நிற்கும் பொலிஸார் இராணுவத்தினர் இதனை கொண்டு செல்வதற்கு அனுமதி வழங்கிறார்களா? ஒருங்கிணைப்பு   குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் இணைத்தலைவர்களில் ஒருவராகிருக்கிறார்.  அமைச்சரும் இணைத்தலைவர்களில் ஒருவராக இருக்கிறார். எனவே இந்த விடயத்தில் யாரால் இந்த செயற்பாடு நடைபெறுகிறது. இதனை நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார். இதன்போது வடக்கு மாகாண ஆளுநர் பொலிஸார் இராணுவத்தினரிடம் இவை தொடர்பில் நள்ளிரவு வேளை கடமையில் இருக்கின்றபோது வீதியில் செல்லும் கனரக வாகனம், டிப்பர் வாகனங்களை சேதனைக்குட்படுத்தி உரிய அனுமதிகளை சோதனை செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டார். யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு திருகோணமலைக்கு கடத்தப்படுகிறதா ? சிறிதரன் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கேள்வி | Virakesari.lk
    • Published By: DIGITAL DESK 7 18 APR, 2024 | 05:29 PM   யாழ்ப்பாணத்தில் குழாய்க்கிணறுகளைத் தோன்றுவது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு முடிவெடுப்பது என யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் ஆகியோரின் இணைத்தலைமையில்  யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.  அதன்போது யாழ்ப்பாணத்தில் அனுமதியற்ற முறையில் அதிகளவான குழாய்க்கிணறுகள் அடிக்கப்பட்டு வருவதாகவும் , அதனால் நிலத்தடி நீர் அற்று போகும் அபாயம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது  அதனை தொடர்ந்து கூட்டத்தில் வாத பிரதிவாதங்கள் எழுந்தன. அதனை அடுத்து குழாய்க்கிணறு அடிப்பதால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு ,அதன் அடிப்படையில் அவற்றை கட்டுப்படுத்துவது தொடர்பில் முடிவெடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது. அதேவேளை யாழ்ப்பாணத்தில் நடைபெறும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பிலும் அது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தி அவற்றை முற்றாக கட்டுப்படுத்துவது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் கூட்டத்தில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.  யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து ஆய்வு செய்ய நடவடிக்கை | Virakesari.lk
    • Published By: DIGITAL DESK 7 18 APR, 2024 | 05:27 PM   வடக்கு மாகாணத்தில் காணி உறுதிப்பத்திரங்களை கைமாற்றும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தபட்டுள்ளதாக யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஆளுநர் தெரிவித்துள்ளார். காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கல், மீள் குடியேற்றம், புதிய வீட்டுத்திட்டம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கையில், இந்த வருட இறுதிக்குள் மீள் குடியேற்ற நடவடிக்கை நிறைவு செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி வழங்கியுள்ள பணிப்புரைக்கு அமைய, மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. யாழ் மாவட்டத்தில் ஆயிரத்து 500 குடும்பங்களை சேர்ந்தவர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர். அவர்களை மீள்குடியேற்றுவது தொடர்பில் விசேட கூட்டம்  நடத்தப்பட வேண்டும். அத்துடன் ஏற்கனவே மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வீடுகளுக்கான மின்சார விநியோகம் தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன் . இதேவேளை, வடக்கு மாகாணத்தில் காணி உறுதிப் பத்திரங்களை கைமாற்றும் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.  "உரித்து" காணி உறுதிகளை வழங்கும் நடவடிக்கையை துரிதப்படுத்துவதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமையை மே மாத நிறைவுக்குள்  வடக்கு மாகாணத்தில் 60 ஆயிரம் பேருக்கான  காணி உறுதிப் பத்திரங்கள் கையளிக்கப்படவுள்ளன. வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள வீட்டுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்கள் மற்றும் திட்டமிடல்கள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த திட்டத்தில் நெடுந்தீவு மக்களுக்கான 76 வீடுகளும் உள்வாங்கப்பட்டுள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார்.  மே மாத இறுதிக்குள் வடக்கில் 60 ஆயிரம் பேருக்கு காணி உறுதி வழங்கப்படும் - வடக்கு ஆளுநர் | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.