Jump to content

செருக்கைத் துறந்த சுகர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

செருக்கைத் துறந்த சுகர்

 

நான் எனது என்ற செருக்குக் கொண்ட மனிதனை யாரும் அண்டுவதில்லை. செருக்குக் கொண்ட மனிதன் தனித்து விடப்படுகிறான். ஆனால் செருக்கு அகன்று தன்னை உணர்ந்து பிறரை மதிப்பவன் மேன்மகனாகப் போற்றப்படுவான். அப்படிச் செருக்குக் கொண்ட சுகரைப் பற்றியும் தன் செருக்கை அவர் அகற்றி மேன்மகனாக ஆனது பற்றியும் பார்ப்போம் குழந்தைகளே.
பதினெண்புராணங்களையும் இயற்றியவர் வேத வியாசர். அவர் ஒரு முறை பச்சைக்கிளி உருவில் இருந்த கிருதாசீ என்ற தேவ கன்னிகையின் மேல் விருப்பம் கொண்டதால் அவர்களுக்கு சுகப் பிரம்மர் என்ற குழந்தை பிறந்தது. தாயைப் போல சுகப் பிரம்மருக்கும் மூக்குக் கிளிமூக்குப் போல அமைந்து இருந்தது.
 
இளம் வயதிலேயே அறிவுக்கூர்மை மிக்கவராக விளங்கினார் சுகர். ஆயினும் அவருக்கு பிரம்ம ஞானம் என்றால் என்ன எனப் புரியவில்லை. இது பற்றி அவர் தன் தந்தை வியாசரிடம் கேட்கிறார்.


“தந்தையே பிரம்ம ஞானம் என்றால் என்ன ?”

“மகனே, இதை நீ மிதிலை மன்னன் ஜனகனிடம் சென்று கேள் “ என்கிறார் தந்தை வியாசர். தன் தந்தைக்குத் தெரியாதது என்ன அந்த ஜனகருக்குப் பெரிதாகத் தெரிந்துவிடப் போகிறது என்று நினைக்கிறார் சுகர்.
தந்தைக்கு ஏதும் தெரியாமல் இருக்குமா. அதை மகன் இன்னொருவர் மூலம் அறிந்து தெளிவதே சிறப்பு என்று அனுப்புகிறார்.
ஜனகரின் அரண்மனைக்கு வரும் சுகப்பிரம்மர் அங்கே வாயிற்காப்போனிடம் “ சுகப் பிரம்ம மகரிஷி அவர்கள் வந்திருக்கிறார்கள் என்று மன்னரிடம் தெரிவி “ எனச் சொல்கிறார்.
அவனோ மன்னனிடம் அதைத் தெரிவிக்க ஜனகரோ “ அவருடன் வந்திருக்கும் நான்கைந்து ஆட்களை விட்டுவிட்டு அவரை மட்டும் வரச் சொல் “ என்கிறார்.
இதை வாயிற்காப்போன் சுகரிடம் ”உங்களுடன் வந்துள்ள நான்கைந்து பேரை விட்டு விட்டு வரச் சொல்கிறார் மகாராஜா “ என்று தெரிவிக்க சுகரோ குழம்புகிறார். பின்னர் தான் சொன்னதை யோசித்துப் பார்த்துவிட்டு வாயிற்காப்போனிடம் ”சுகப் பிரம்ம ரிஷி வந்திருக்கிறார் “ என்று சொல்லச் சொல்கிறார்.
அதையும் கேட்டுவிட்டு அரசர் ”இன்னும் இரண்டு மூன்று பேர் இருக்கிறார்களே அவர்களையும் விடச்சொல்” என்று கூறி அனுப்புகிறார். இதையும் காவலன் வந்து சொல்ல சுகர் கேட்டு விட்டு “ சுகப் பிரம்மம் வந்திருக்கிறேன் என்று சொல்” என்று கூறித் திரும்ப வாயிற்காப்போனை அனுப்புகிறார்.
மன்னரோ பின்னரும் “இன்னும் ஒருவர் இருக்கிறார். அவரையும் விட்டுவிட்டு வரச் சொல் “ என்க அதைக் கேட்டுச் சுதாரித்த சுகர் “சுகன் வந்திருக்கிறேன் “ என்று சொல் எனச் சொல்லி அனுப்புகிறார். அப்போதே சுகருக்கு சுய செருக்கு கொஞ்சம் அழிகிறது.
இப்போது மன்னன் உள்ளே வரச் சொல்ல சுகரும் அரசவைக்குச் செல்கிறார். அங்கே ஜனக மன்னன் சுகருக்குத் தகுந்த ஆசனம் அளித்து அமரச் சொல்கிறார். வேறு ஏதும் பேசவில்லை. உபதேசிக்கவும் இல்லை.
அங்கே ஒரு வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. அதில் மரணதண்டனைத் தீர்ப்பு விதிக்கப்பட்டவன் அங்கே நின்று கொண்டிருக்கிறான். இந்த வழக்கை உற்றுக் கவனிக்கிறார் சுகர். அந்தக் கைதியிடம் மன்னன் ஜனகர் கூறுகிறார். “ உன் மரணதண்டனையில் இருந்து தப்ப ஒரு வாய்ப்பு அளிக்கிறேன்”
என்ன வாய்ப்பு, சொல்லுங்கள் என்று கேட்க நினைத்து வாய்மூடிப் பயந்தபடி அந்த மரணதண்டனைக் கைதி நிற்கிறான். அதிலிருந்து தப்பித்தால் போதும் என்றிருக்கிறது அவனது பார்வை.
“ உன் தலையை மொட்டையடித்து அதன் மீது ஒரு தட்டை வைத்து அது நிரம்ப எண்ணெய் ஊற்றச் சொல்வேன். அந்த எண்ணெய் ஒரு சொட்டுக்கூடச் சிந்தாமல் சிதறாமல் நீ இந்த ஊரைச் சுற்றி வர வேண்டும். ஒரு சொட்டுச் சிதறினாலும் உன் தலை சிதறும். ஒரு சொட்டுக் கூடச் சிந்தாமல் வந்தால் உன் மரணதண்டனையை ரத்து செய்கிறேன். செய்கிறாயா ?” எனக் கேட்கிறார். அவனும் ஆமோதிக்க அவன் தலை மொட்டையடிக்கப்பட்டுத் தட்டு வைத்து எண்ணெய் ஊற்றப்படுகிறது.
ஊரெங்கும் கோலாகலம், வண்ண வண்ணப் பெண்கள், நடனக் கச்சேரிகள், இசை நிகழ்ச்சிகள், வண்ணக் கோலங்கள், வாண வேடிக்கைகள், நாவூறச் செய்யும் விருந்துக் கூடங்கள், இவை எவையும் அவன் சிந்தைக்குள் ஏறவில்லை. எண்ணெய் சிந்திவிட்டால் தன் தலை சிதறிவிடும் என்பதால் சிந்தையைக் குவித்து ஒரே மனதோடு கட்டுப்பாடாக ஊரைச் சுற்றி வந்து ஆசுவாசப் பெருமூச்சு விட்டான்.
மன்னன் ஜனகரும் அந்தக் கைதியின் தண்டனையை ரத்து செய்தார். பிரம்ம ஞானம் என்றால் என்ன என்று அவர் எந்தப் பாடமும் சுகருக்கு எடுக்கவில்லை. ஆனால் இந்த நிகழ்வைக் கண்டதன் மூலம் சுகர் பிரம்ம ஞானத்தை அடைந்ததோடு தன் செருக்கும் துறந்து மேன்மகனானார்.
நாமும் நம்மை அழிக்கும் செருக்கைத் துறந்து மேன்மக்களாவோம் குழந்தைகளே
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏராளன் இந்தக் கதையின் பின் பகுதிக்கும் செருக்குக்கும் என்ன தொடர்பு என்பது என் சிற்றறிவுக்குப் புரியவில்லையே.🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஏராளன் இந்தக் கதையின் பின் பகுதிக்கும் செருக்குக்கும் என்ன தொடர்பு என்பது என் சிற்றறிவுக்குப் புரியவில்லையே.🤔

செருக்கிழப்பும் மன ஒருமைப்பாடும் வந்தால் ஞானம் கிடைக்கும் என்று சொல்ல வருகினமோ தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேத வியாஸரின் மகன் சுகப்பிரமம் என்னும் சுகர்......இவர் பிறக்கும்போதே ப்ரம்ம ஞானியாக பிறந்தவர்.ஆயினும் விளக்கின் அடியில் இருக்கும் சிறு இருள்போல் இவரிடமும் சிறு கர்வம் (செருக்கு) இருந்ததை தந்தை வியாசர் கவனித்துள்ளார். பொதுவாக பெற்றோர் எவ்வளவுதான் படித்தவர்களாக இருந்தாலும் பிள்ளைகள் பொறுமையாக அவர்களிடம் படிக்க மாட்டார்கள். அவர்களும் எருமைகளாக பிள்ளைகளை முட்டுவார்கள். அதனால் இன்னொருவரிடம் டியூசனுக்கு சென்றுதான் பிள்ளைகள் கற்றுக்கொள்வார்கள். இது பொதுவான நியதி.அதனால் சுகர் ஜனகமன்னரிடம் ட்யூசன் எடுக்க செல்கிறார்.......!

ஜனக மகாராஜா, இவர் மிதிலை நாட்டிற்கு(சீதாப்பிராட்டியாரின் ஊர்.சீதைக்கு ஜானகி என்றும்,மைதிலி என்றும்  கூட  பெயர்கள் உண்டு.). மன்னராக இருந்தபோதிலும் ஒரு ஜீவன்முக்தராகவே வாழ்ந்து கொண்டிருப்பவர். இந்த ஜீவன்முக்தர் என்பது முனிவர், ரிஷி, பிரம்மரிஷி (வசிஷ்டர்,விசுவாமித்திரர்) ஸப்தரிஷி (அகத்தியர்,அத்ரி, பரத்வாஜர் போன்றவர்கள்)போன்றவர்களைவிடவும் மேலான நிலை. ஒரு அகில உலக உச்சநீதிமன்ற நீதிபதி என்று சொல்லலாம் என நினைக்கின்றேன்.....!

இந்த ஜனக மகாராஜாவிடம் ஏற்கனவே நாரதர், அகத்தியர் ஆகியோர் வந்து தமக்கு ஏற்படும் அற்பசொற்ப கர்வம், ஆணவம் களை  களைந்து விட்டு சென்றிருக்கின்றார்கள். அப்பேற்பட்டவரிடம் சுகர் வருகின்றார்.(சுகம் என்றால் கிளி. இவரது முகம் கிளி முகம் போன்று இருக்கும்). வந்தவர் வாயிற்காப்போனிடம் தனது பட்டங்கள், கப்புகள், மெடல்கள் எல்லாவற்றையும் சிறிது செருக்குடன் சொல்லி, சொல்லி விட்டதால் அவற்றை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு வரும்படி மகாராஜாவால் அறிவுறுத்தப்படுகிறார்.( பின்னாளில் அவர் ஆடைகளையும் துறந்து விட்டு பரிநிர்வாணமாகவே வாழ்ந்து வந்தார்).......!

அப்போதே அவரது செருக்கில் பாதி போய் விட்டது. அரசவைக்குள் செல்கிறார்.அங்கு வழக்கு நடைபெறுகின்றது.தீர்ப்பு கொடுக்கப் படுகின்றது. அதை  ஊண்றிக் கவனிக்கின்றார். அந்த குற்றவாளி தனது தலை சிதறப்போகின்றது என்ற நிலை வரும்போது ஆட்டம் பாட்டம் எதிலும் கவனம் செலுத்தாமல் தனது தலையில் உள்ள எண்ணெய் மீது மட்டுமே கவனத்தை குவித்து ஊரை சுற்றி வந்து தண்டனையில் இருந்து விலக்கு பெறுகிறான்......!

(இதே போன்றதொரு தண்டனையை மகாவிஷ்ணு நாரதருக்கும் கொடுத்திருக்கிறார்).

பிரம்மஞானத்தை பெறுவது அப்படியே. ஒருமுகபட்ட  சிந்தனையுடன் அதை தியானித்து,அதையே தியானித்து பெறவேண்டும் என்பதை சுகர் புரிந்து கொள்கிறார்.......!  😂

கல்லால மரத்தின் கீழ் குரு  தட்ஷணாமூர்த்தி வீற்றிருக்கின்றார். அவரிடம் கல்வி கற்க பிரம்மாவின் பிள்ளைகளான சனகர்,சனந்தனர்,சனாதனர்,சனத்குமாரர் ஆகியோர் வருகின்றனர்.யாரும் யாரோடையும் எதுவும் பேசவில்லை.காலம் செல்கிறது.கண்விழித்த குரு  பார்வையால் வினவுகிறார் புரிந்ததா என்று, அவர்களும் நன்றாக புரிந்தது என்று வணங்கி செல்கின்றனர்.....!

ஏதோ என் சிற்றறிவில் படித்தது, கேட்டதை கொண்டு சொல்லியிருக்கிறேன்.சுகரை பற்றி  மேலும் பல கதைகள் உள்ளன.....!  🤔

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • வருகை, கருத்துக்கு நன்றி. இரெண்டு வாரம் இல்லை. மாதம். ஆனால் இதை வைத்தும் கணிக்க முடியாதுதான். ஒரு ஊக கணிப்புத்தான். பேசிய பலரும் யாருக்கும் வாக்களிக்காத மனநிலையில், ஒதுங்கி போவதாகவே இருந்தார்கள். இவர்கள் வீட்டில் இருக்க, சலுகை அரசியலை விரும்புவோர் வாக்களித்தால் யாழில் தமிழ் தேசிய எம்பிகள் அளவு குறையும் என நினைக்கிறேன்.  ஜேவிபி க்கு முன்னர் இல்லாத ஆதரவு யாழில் உள்ளது. பிள்ளையார் இன்னில் அண்மையில் கூட்டம் வைத்து, உள்ளூர் பிரமுகர்கள் பலரும் சமூகமாகி இருந்தனர்.
    • சிறப்பான கவிதை... மகிழ்ச்சியாக இருங்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.