Jump to content

ஈரான் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதற்கு, அப் பிரதேசத்தில் அமெரிக்காவின் நடவடிக்கையும் ஒரு காரணம் – ட்றூடோ


Recommended Posts

ஈரான் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதற்கு, அப் பிரதேசத்தில் அமெரிக்காவின் நடவடிக்கையும் ஒரு காரணம் – ட்றூடோ

 

 

” மத்திய கிழக்கில் அமெரிக்காவின் படைநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமல் இருந்திருந்தால் அந்த யூக்கிரேனிய விமானத்தில் பயணம் செய்தவர்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்குச் சென்றிருப்பார்கள்”

– கனடியப் பிரதமர் ட்றூடோ
Justin-Trudeau.jpg
கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்றூடோ

சுட்டு வீழ்த்தப்பட்ட யூக்கிரேனிய விமானத்தில் பயணம்செய்து உயிரிழந்த அனைவருக்குமான ஞாபகார்த்த நிகழ்வு இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசும்போது கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்றூடோ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனவரி 8 இல் நடைபெற்ற இச் சம்பவத்தின்போது, 57 கனடியர்கள் உட்பட 176 பேர் கொல்லப்பட்டிருந்தார்கள்.

ஏவுகணைகள் ஏவப்படும் காணொளி

“யூக்கிரேனிய விமானம் சுட்டுவீழ்த்தப்பட்ட சம்பவம் ஒரு பக்க விளைவாக (collateral damage) என நீங்கள் நினைக்கிறீர்களா? என ஊடகவியலாளர் கேட்டதற்கு ” அப் பிரதேசத்தில் சமீபத்தில் இராணுவ நடவடிக்கைகள் அதிகரிக்கப்படாமல் இருந்திருப்பின் அத்தனை கனடியர்களும் இன்று அவர்கலது குடும்பங்களுடன் இருந்திருப்பார்கள் என நான் எண்ணுகிறேன்” என அவர் பதிலளித்திருந்தார்.

“நடைபெற்றது மிகத் துயரமான சம்பவம், மன்னிக்கப்பட முடியாத தவறு” என ஈரான் குற்றத்தை ஒத்துக்கொண்டதுடன் மன்னிப்பும் கோரியிருந்தது. ஈரானிய தளபதி சொலைமானியின் கொலையைத் தொடர்ந்து ஈராக்கிலுள்ள அமெரிக்கப் படை முகாம்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியிருந்தது. இதற்குப் பழிவாங்கும் முயற்சியாக 52 ஈரானிய கலாச்சார நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்றம்ப் எச்சரித்திருந்ததைத் தொடர்ந்து ஈரான் தனது விமான எதிர்ப்பு நிலைகளை உசார் நிலையில் வைத்திருந்தது.

சுட்டு வீழ்த்தப்படுவதற்கு முன் யூக்கிரெயின் விமானம் ஈரானிய இராணுவத் தளத்துக்கு மிக அண்மையாகப் பறந்ததெனவும் அவ்வேளையில் தகவல் தொடர்பு சாதனங்கள் வேண்டுமென்றே குழப்பநிலையில் (jamming) வைக்கப்பட்டிருந்ததனால் விமானியுடன் தொடர்புகொள்ள முடியவில்லை எனவும் இதனால் அவ் விமானம் அமெரிக்க ஏவுகணையெனத் தவறாகக் கருதப்பட்டு சுட்டு வீழ்த்தப்பட்டது எனவும் ஈரான் கூறுகிறது.

இன்றய செய்திகளின்படி விமானத்தை நோக்கி இரண்டு ஏவுகணைகள் ஏவப்பட்டதற்கான காணொளிகள் வெளியிடப்பட்டுள்ளனவெனவும் அவற்றைப் படம் பிடித்தவருட்பட மேலும் சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் ஈரான் கூறுகிறது.

அதே வேளை, ஈரானியத் தளபதி சொலைமானியைக் கொல்வதென அமெரிக்கா எடுத்த முடிவு பற்றி, நட்பு நாடு என்ற ரீதியில் கனடாவுக்கு அறிவிக்கப்படவில்லை என கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்றூடோ தெரிவித்திருக்கிறார்.

https://marumoli.com/ஈரான்-விமானத்தைச்-சுட்டு/?fbclid=IwAR2U_YSINNVoML8X6grw2FC1zxKNSErB5dq7hYJ-PfPooFkUGOypcatjFsY

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையை உரக்க சொல்லி இருக்கிறார் 
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.