Jump to content

விஜய் சேதுபதி: எளிய தோற்றம், வித்தியாசமான கதாபாத்திரங்கள் - சுவாரஸ்ய தகவல்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விஜய் சேதுபதி: எளிய தோற்றம், வித்தியாசமான கதாபாத்திரங்கள் - சுவாரஸ்ய தகவல்கள்

விஜய் சேதுபதிபடத்தின் காப்புரிமை96/VIJAYSETHUPATHI

எளிமையான பேச்சு, இயல்பான தோற்றம் என சமீபக் காலங்களில் அதிக ரசிகர்களை பெற்ற ஒரு நடிகர் விஜய் சேதுபதி. இன்று அவருக்கு பிறந்தநாள். அவர் குறித்த 10 சுவாரஸ்ய தகவல்களை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

  • தனது ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒரு வித்தியாசம் காட்டும் நடிகர் பட்டியலில் முக்கிய இடத்தில் இவர் உள்ளார்.
  • 2010ஆம் ஆண்டு சீனு ராமசாமி இயக்கத்தில், தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முதன்முதலாக படத்தின் கதாநாயகனாக நடித்தார். தென்மேற்கு பருவக்காற்று சிறந்த படத்திற்காக தேசிய விருதை பெற்றது.
  • சீனு ராமசாமி இயக்கம், தேசிய விருது படம் என்றாலும் விஜய் சேதுபதியை பெரிதும் கவனிக்க வைத்தது 2012ஆம் வெளிவந்த பீட்சா மற்றும் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் திரைப்படங்களே ஆகும்.
  • நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் திரைப்படம் நண்பர்களின் கூட்டு முயற்சியாக மிக குறைந்த பணச்செலவில் ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட படம். அதில் ஞாபகங்களை மறந்த கதாபாத்திரத்தில் வரும் விஜய் சேதுபதியின் ’பா’ என்னும் வசனம் அனைவரிடத்திலும் சென்று சேர்ந்தது என்று சொல்லலாம்.
  • வயதான கேரக்டர், நடுத்தர வயது நபர், மருத்துவக் கல்லூரி மாணவர், வில்லன், போலீஸ் என எந்த கதாபாத்திரத்திலும் அப்படியே பொருந்தி போவார் விஜய் சேதுபதி. சமீபத்தில் அவர் நடித்த ’96’ படத்தில் ராமாகவே வாழ்ந்திருப்பார். பலரும் தங்கள் பள்ளி காதல் குறித்து அசைப்போட வைத்தது. இம்மாதிரியான கதாப்பாத்திரங்களை தேர்வு செய்வதில் திறமையானவர் விஜய் சேதுபதி.

இளமை வயதை எட்டியதை விழாவாக கொண்டாடும் ஜப்பானியர்கள்

பட்டாஸ் - சினிமா விமர்சனம்

  • விஜய் சேதுபதி, நளன் குமாரசாமி, அருண் குமார், கார்த்திக் சுப்புராஜ் என குறும்படங்கள் மூலம் சினமாவுக்குள் நுழைந்த இயக்குநர்களுடன் கைகோர்த்து பெரும் வெற்றிகளை கொடுத்துள்ளார்.
  • பலதரப்பட்ட கேரக்டரில் அசத்திய விஜய் சேதுபதி, ரஜினி நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ’பேட்டை’ படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்திருப்பார். பேட்டை ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் சேதுபதி ’தான் காணாத கனவு ஒன்று நினைவானதாக’ ரஜினியுடன் நடித்தது குறித்து பேசியிருந்தார்.
  • சமீபத்தில் ஃபிலிம் கம்பானியன் சவுத்தில் நடைபெற்ற ஒரு கலந்துரையாடலில், நீங்கள் பாலிவுட்டில் நடிப்பதில் உள்ள சிக்கல் என்ன என்று கேட்டபோது, மொழி மற்றும் அங்குள்ள கலாசாரம் எனக்கு தெரியாது, நான் பெரிதும் இந்தி படங்கள் பார்த்ததில்லை, அங்கு நடிக்க வேண்டும் என்றால் அங்குள்ள கலாசாரம் எனக்கு புரிந்திருக்க வேண்டும் என்று வெளிப்படையாக தெரிவித்தார்.
  • தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தில் எடுக்கப்பட்ட ஆரஞ்சு மிட்டாய் படத்தில் கதாநாயகன் மட்டுமின்றி வசனகர்த்தா அவதாரமும் எடுத்தார். நடிகர் விக்ராந்த் நடிக்கும் படம் ஒன்றிற்கு வசனம் மற்றும் திரைக்கதையும் எழுதவுள்ளார் விஜய் சேதுபதி.
  • விஜய் சேதுபதியின் அடுத்த படமான யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் முதல் போஸ்டர் நேற்று பொங்கலன்று வெளியாகியது.

https://www.bbc.com/tamil/arts-and-culture-51130803

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.