Jump to content

ரஞ்சனின் குரல்பதிவுகள் ஜெனிவா செல்லும் அவதானம்


Recommended Posts

ரஞ்சனின் குரல்பதிவுகள் ஜெனிவா செல்லும் அவதானம்

ரஞ்சனின் குரல்பதிவுகள் ஜெனிவா செல்லும் அவதானம்

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் குரல்பதிவுகள் ஊடாக தெரிய வந்துள்ள விடயங்கள் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக பயன்படுத்தும் அவதானம் காரணப்படுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் டி ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ரஞ்சனால் மேற்கொள்ளப்பட்டது ஒரு முட்டாள் தனமாக செயல் என தெரிவித்தார்.

அதேபோல், அநேகமானோர் இந்த குரல் பதிவுகளை தமது அரசியல் தேவைக்காக பயன்படுவத்துவதாக தெரிவித்த அவர், இதன் மூலம் தனிப்பட்ட விதத்தில் ஏற்படும் பாதிப்பை விட நாடு எதிர்கொள்ளவுள்ள மோசமான சூழ்நிலை குறித்து சுட்டிக்காட்டினார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சுவிஸ்சர்லாந்து தூதரக பெண் அதிகாரி கடத்தப்பட்ட சம்பவம் பதிவாகியதாகவும், குறித்த சந்தர்ப்பத்தில் சுவிஸ்சர்லாந்து அரசினால் இலங்கையின் நீதிமன்ற துறை தொடர்பில் அவதானம் செலுத்துவதாக அறிக்கை வௌியிட்டிருந்ததாக குறிப்பிட்டார்.

இந்நிலையில் இந்த சம்பவம் அதற்கு உதவியாக அமைந்துள்ளதாக ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த குரல்பதிவுகளை ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான ஆதாரமாக முன்வைக்கப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

http://tamil.adaderana.lk/news.php?nid=124608

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்பிடியெல்லாம் யோசிக்கிறானுகள்.  அது நாடு பத்தியெரிஞ்சாலும், வெளிநாடுகள் நாட்டிடை துண்டு துண்டாய் பங்கு பிரிச்சாலும் பரவாயில்லை.  என்ன ஆனாலும் தமிழருக்கு நல்லது நடக்காமல் செய்ய வேணும் எண்டு  ஒற்றைகாலில நிக்கிறான்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.