Jump to content

மெய்வல்லுனர், டென்னிஸ், பெட்மிண்டன் உலகில் 2019ஐ கலக்கியவர்கள்


Recommended Posts

மெய்வல்லுனர், டென்னிஸ், பெட்மிண்டன் உலகில் 2019ஐ கலக்கியவர்கள்

 
Untitled-1-408-696x464.jpg
Sanga-mahela.gif

21ஆம் நூற்றாண்டின் முதாலவது தசாப்தமானது முடிவடைந்து அதன் இரண்டாவது தசாப்தத்துக்கு காலடி வைத்துள்ள நிலையில், கடந்த வருடம் விளையாட்டு உலகில் பிரகாசித்த ஒருசில முக்கிய வீரர்களை இந்தக் கட்டுரை ஆராயவுள்ளது.  

இதன்படி, மெய்வல்லுனர், டென்னிஸ், பெட்மின்டன், போர்முயூலா ஒன் போன்ற முக்கிய விளையாட்டுக்களில் சாதித்த வீரர்கள் பற்றிய விபரங்களை இங்கு பார்ப்போம்.

ஜனவரி

  • வருடத்தின் முதலாவது கிரான்ட்ஸ்லாம் தொடரான அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டி ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச் 6-3, 6-2, 6-3 என்ற நேர் செட்களில் நடாலை வீழ்த்தி  சம்பியன் பட்டம் வென்றார். மகளிர் பிரிவில் ஜப்பானின் நயோமி ஒஸாகா சம்பியன் பட்டம் வென்றார்

image-1-13.jpg

  • பிரித்தானியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரரான அண்டி மர்ரே, அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடருடன் ஓய்வுப் பெற்றார்.

பெப்ரவரி

  • செர்பியாவின் டென்னிஸ் வீரர் ஜோகோவிச் லோரஸ் உலகின் சிறந்த வீரர் விருதை 4ஆவது முறையாக வென்றார்

மார்ச்

  • 11 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் அமெரிக்காவின் நட்சத்திர கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் தனது 5ஆவது மாஸ்டர்ஸ் சம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
  • உலகின் நான்காம் நிலை டென்னிஸ் வீரரான ரொஜர் பெடரர், டுபாய் டென்னிஸ்  சம்பியன்ஷிப் தொடரில் சம்பியனானதன் தனது 100ஆவது தனிநபர் பட்டத்தைக் கைப்பற்றினார்.

image-2-5.jpg

  • மெய்வல்லுனர்களுக்கான புதிய உலக தரவரிசை முறைமை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனம் அறிவித்தது.

ஏப்ரல்

  • உலகின் முன்னணி கோல்ப் வீரரான அமெரிக்காவைச் சேர்ந்த டைகர் உட்ஸ், 11 வருடங்களுக்குப் பிறகு அமெரிக்க கோல்ப் சம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தார்

image-3-5.jpg

  • லண்டன் மரத்தன் ஓட்டப் போட்டியில் ஆண்கள் மற்றும் மகளிர் பிரிவில் கென்யாவின் எலியுட் கிப்சோகே, பிரிஜிட் கோஸ்கெய் சம்பியன் பட்டம் வென்று அசத்தினர்

மே

  • உடலில் உள்ள டெஸ்டர்டோன் ஹார்மோன் அளவு தொடர்பாக பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் ஒலிம்பிக் சம்பியன் தென்னாப்பிரிக்காவின் காஸ்டர் செமன்யாவின் முறையீட்டு மனுவை சர்வதேச மத்தியஸ்த நீதிமன்றம் நிராகரித்தது
  • இந்தியாவின் இளம் ஓட்டப்பந்தய வீராங்கனையான தூத்தி சந்த், மற்றொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறி விளையாட்டு உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்
  • அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் நடைபெற்ற 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட 18 வயதான மெத்யூ போலிங் என்ற மாணவன் போட்டியை 9.98 செக்கன்களில் கடந்து முழு உலகத்தின் கவனத்தையும் தன்பால் ஈரத்துக் கொண்டார்

image-4-3.jpg

  • இங்கிலாந்து டென்னிஸ் நட்சத்திரம் அண்டி மர்ரே அந்நாட்டின் உயரிய விருதான சேர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்
  • ஒலிம்பிக் நீச்சலில் 15 வயதில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த லித்துவேனிய வீராங்கனை ரூடா மெய்லுடைட் தனது 22ஆவது வயதில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்
  • பார்முலா – 1 கார்பந்தயத்தில் மூன்று முறை சம்பியன் பட்டத்தை வென்ற அவுஸ்திரியாவைச் சேர்ந்த நிகி லாதா நுரையீரல் நோய் காரணமாக தனது 70ஆவது வயதில் மரணம் அடைந்தார்.

ஜூன்

  • பாரிஸில் நடைபெற்ற பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீம்மை வீழ்த்தி ஸ்பெய்னின் ரபேல் நடால் 12ஆவது முறையாக சம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். அத்துடன், மகளிர் ஒற்றையர் பிரிவில் ஆஸி. வீராங்கனை ஷ்லி பெர்டி 6-1, 6-3 என்ற நேர் செட்களில் மார்கெட்டாவை வீழ்த்தி முதன்முறையாக பட்டத்தைக் கைப்பற்றினார்.

image-5-3.jpg

  • பெட்மிண்டன் விளையாட்டில் உலகின் முன்னணி நட்சத்திர வீரராக திகழ்ந்த மலேசியாவின் லீ சாங், ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
  • 20 வயதுக்குட்பட்ட றக்பி உலகக் கிண்ணத்தில் அவுஸ்திரேலியாவை ஒரு புள்ளி வித்தியாசத்தில் வீழ்த்தி பிரான்ஸ் அணி சம்பியனாகத் தெரிவாகியது.

ஜூலை

  • லண்டனில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் சேர்பியாவின் நொவெக் ஜோகோவிச்சும், பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் ருமேனியாவின் சிமோனா ஹாலெப்பும் சம்பியன்களாகத் தெரிவாகினர்
  • இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் நடைபெற்ற 15ஆவது உலகக் கிண்ண வலைப்பந்தாட்டத் தொடரில் 11 தடவைகள் சம்பியனான அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி 5ஆவது முறையாகவும் சம்பியனாகியது

image-6-2.jpg

  • 106ஆவது பிரான்ஸ் சைக்கிளோட்டப் பந்தயத்தை கொலம்பியாவின் ஈகன் பெர்னல்ட் வெற்றி கொண்டார். இதன்மூலம் பிரான்ஸ் சைக்கிளோட்டத்தை வென்ற முதல் கொலம்பிய வீரராக இடம்பிடித்தார்

ஆகஸ்ட்

  • சுவிட்சர்லாந்தின் பேஸல் நகரில் நடைபெற்ற உலக பெட்மிண்டன் சம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார் பி.வி.சிந்து. 38 நிமிடங்களில் 21-7, 21-7 என்ற கணக்கில் நவோமி ஒஹராவை வென்றார்.

செப்டம்பர்

  • நியூயோர்க்கில் நடைபெற்ற அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியில் மகளிர் இறுதிச் சுற்றில் நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி கனடாவின் பியான்கா முதல்முறையாக சம்பியன் பட்டம் வென்றார். அதே போல் ஆடவர் பிரிவில் நடால் 4ஆவது முறையாக சம்பியன் பட்டம் வென்றார்.
  • இந்தியாவின் சிறந்த குத்துச் சண்டை வீராங்கனையான மேரி கோம் மற்றும் தென்கொரியாவின் நட்சத்திர கால்பந்து வீரரான சன் ஹியுங் மின் ஆகியோர் ஆசியாவின் அதிசிறந்த வீரர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

image-7-2.jpg

  • சீனாவில் நடைபெற்ற உலகக் கிண்ண கூடைப்பந்து தொடரில் ஆர்ஜென்டீனாவை வீழ்த்திய ஸ்பெயின் அணி, இரண்டாவது முறையாக உலக சம்பியன் பட்டத்தை வெற்றி கொண்டது.
  • ஒசாகாவில் நடைபெற்ற பான்பசிபிக் பகிரங்க டென்னிஸ் போட்டியில் ரஷ்யாவின் அனஸ்டாசியாவை வீழ்த்தி ஜப்பான் வீராங்கனை நயோமி ஒசாகா சொந்த மண்ணில் முதல்முறையாக பட்டத்தை வென்றார்.

அக்டோபர்

  • ரஷ்யாவின் உலன் உடே நகரில் நடைபெற்ற உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று 8ஆவது பதக்கம் வென்ற ஓரே வீராங்கனை என்ற சாதனையை மேரி கோம் நிகழ்த்தினார்
  • 14 வயது சென்னை கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா 18 வயதுக்குட்பட்ட உலக சம்பியன் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.
  • அமெரிக்க ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை சிமோன் பைல்ஸ் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 25-ஆவது பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

image-8-2.jpg

  • கட்டாரில் நடைபெற்ற உலக மெய்வல்லுனர் போட்டியின் ஆடவர் 100 மீற்றர் ஓட்டத்தில் அமெரிக்க வீரர் கிறிஸ்டியன் கோல்மன் மற்றும் மகளிர் பிரிவில் ஜமைக்கா வீராங்கனை ஷெல்லி அன்பிரேசர் பிரைஸ் தங்கப் பதக்கங்களை வென்றனர்
  • உலக மெய்வல்லுனர் போட்டிகளில் கலப்பு அஞ்சலோட்டத்தில் தங்கம் வென்றதன் மூலம் ஜமைக்காவின் அதிவேக வீரர் உசைன் போல்ட்டின் 11 தங்கப் பதக்கங்கள் வென்ற சாதனையை அமெரிக்கா வீராங்கனை அலிஸன் பெலிக்ஸ் முறியடித்தார்
  • கட்டாரில் நடைபெற்ற உலக தடகள சம்பியன்ஷிப் தொடரில் பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட பஹ்ரைன் வீராங்கனை சல்வா ஈத் நாசர், முதல் ஆசிய வீராங்கனையாக தங்கப் பதக்கம் வென்றார்
  • நடப்பு ஒலிம்பிக் சம்பியனான கென்யாவைச் சேர்ந்த எலியுட் கிப்சோஜ் மரதன் ஓட்டப் போட்டியை 2 மணித்தியாலங்களுக்குள் ஓடி முடித்து உலக சாதனை படைத்தார்.  
  • உலக ஜிம்னாஸ்டிக் சம்பியன்ஷிப்பில் பெண்ணொருவரால் வெல்லப்பட்ட பதக்கங்களின் சாதனையை தனது 25ஆவது தஙகப் பதக்க்கத்துடன் அமெரிக்காவின் சிமோன் பைல்ஸ் முறியடித்துள்ளார்
  • சிக்காக்கோ மரதன் ஓட்டப் போட்டியில் பங்குகொண்டு 16 வருடங்கள் பழமையான பெண்கள் மரதன் ஓட்ட சாதனையை கென்யாவின் பிறிஜிட் கொஸ்கெய் முறியடித்துள்ளார்.

நவம்பர்

  • ஆறாவது தடவையாக போர்மியுலா வண் உலக சம்பியனாக, பிரித்தானியாவின் லூயிஸ் ஹமில்டன் முடிசூடிக் கொண்டார்.
  • ஜப்பானில் நடைபெற்ற 9ஆவது உலகக் கிண்ண ரக்பி இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 32-12 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி தென்னாபிரிக்கா அணி உலக ரக்பி சம்பியன் பட்டத்தை 3ஆவது தடவையாக வென்றது.
  • பெடரேஷன் கிண்ண மகளிர் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவை 3-2 என்ற கணக்கில் வீழ்த்திய பிரான்ஸ் அணி 16 வருடங்களுக்குப் பிறகு சம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது.
  • லண்டனில் நடைபெற்ற தொழில்முறை டென்னிஸ் வீரர்கள் சங்க இறுதிப் போட்டிகள் தொடரில், உலகின் ஆறாம் நிலை வீரரான ஸ்டெபனோஸ் சிட்டிபாஸ் சம்பியனானார்.

image-9-2.jpg

  • வருடத்தின் அதிசிறந்த ஆண் மெய்வல்லுனராக கென்யாவின் எலுய்ட் கிப்சாகேவும், அதிசிறந்த பெண் மெய்வல்லுனராக அமெரிக்காவின் டாலிலா முஹம்மத் ஆகியோர் தெரிவாகினர்
  • சவுதி அரேபியாவின் முதல் பெண் கார் பந்தய ஓட்டுனராக ரீமா ஜுபாலி அறிமுகமாகியுள்ளார்.
  • டென்னிஸ் உலகக் கிண்ணம் என்ற அழைக்கப்படுகின்ற டேவிஸ் கிண்ண டென்னிஸ் தொடரில் 6ஆவது தடவையாகவும் ஸ்பெய்ன் அணி சம்பியனாகத் தெரிவாகியது.
  • மோட்டார் ஜி.பி சைக்கிள் உலக சம்பியன் பட்டத்தை ஸ்பெய்னின் மார்க் மார்கெஸ் 6ஆவது தடவையாக வெற்றி கொண்டார்.

டிசம்பர்

  • 2020 ஒலிம்பிக், 2022 பிபா உலகக் கிண்ணம் உள்ளிட்ட அனைத்து சர்வதேச விளையாட்டுகளிலும் ஷ்யா பங்குகொள்வதற்கு 4 வருடத் தடையை உலக ஊக்கமருந்து தடுப்பு நிறுவனம் விதித்தது.

image-10-2.jpg

  • சீனாவில் நடைபெற்ற உலக பெட்மிண்டனில் உலக சம்பியனான ஜப்பான் வீரர் கென்டோ மொமோட்டா சம்பியன் பட்டம் வென்று ஒரு பருவத்தில் அதிக பட்டங்கள் வென்றவர் என்ற மலேசியாவின் லீ சோங் வெய்யின் சாதனையை முறியடித்தார்.
  • சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்தின் உலக சம்பியன் விருதுகள் ஆடவர் பிரிவில் ரபேல் நடாலுக்கும், மகளிர் பிரிவில் ஷ்லி பார்டிக்கு வழங்கப்பட்டன.
  • உலக அதிபார குத்துச்சண்டை சம்பியன் பட்டத்தை பிரித்தானியாவின் அன்தனி ஜோசுவா கைப்பற்றினார்
  •  

http://www.thepapare.com/international-sports-review-of-2019-tamil/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
    • நூறாவ‌து சுத‌ந்திர‌ தின‌த்தின் போது இந்தியா என்ற‌ நாடு இருக்காது என்று ப‌ல‌ர் சொல்லி கேள்வி ப‌ட்டு இருக்கிறேன்.............மோடியே போதும் இந்தியாவை உடைக்க‌............இந்தியாவில் வ‌சிக்கும் முஸ்லிம்க‌ளும் இந்திய‌ர்க‌ள் ஆனால் மோடி முற்றிலும் முஸ்லிம்க‌ளுக்கு எதிராக‌ இருக்கிறார் ......................நீங்க‌ள் சொன்ன‌து போல் சோவியத் யூனியன் ம‌ற்றும் முன்னால் யூகேசுலோவியா உடைந்த‌து போல் இந்தியாவும் உடையும்.......................இன்னும் 10வ‌ருட‌ம் மோடி என்ற‌ கேடி ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்து ஆட்சியை பிடித்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் ஆயுத‌ம் தூக்கி ச‌ண்டை பிடிப்பின‌ம் பிற‌க்கு ஜ‌ம்மு க‌ஸ்மீர் போல் எல்லா மானில‌மும் வ‌ந்து விடும்.......................
    • ஆரம்பத்தில் புலிகளை சாடியே தொடர் சென்றது, ஆனால் அதில் வந்த காலபதிவுகள்  பெரும்பாலும் உண்மையாகவே இருந்ததினால் புலம்பெயர் நாடுகளில் அதற்கான வாசகர்கள் படிப்படியாக அதிகமாயினர். தொடரின் ஆரம்பத்தில் எந்த கிட்டுவை சாடி வெளிவந்ததோ பின்னாளில் அதே கிட்டுவை ஆஹா ஓஹோ எனு புகழ்ந்து அற்புதன் எழுத தொடங்கினார் படிப்படியாக புலிகள் சார்பு செய்திகளை வெளியிட  தொடங்கினார் அற்புதன், ஒருகட்டத்தில் புலிகளின் உத்தியோகபூர்வ பத்திரிகை ரேஞ்சுக்கு புலி சார்புநிலைக்கு  வந்தது தினமுரசு. தினமுரசு இதழின் கடல்கடந்த விற்பனை எகிற தொடங்கியது,  காலப்போக்கில்  ஐரோப்பிய அமெரிக்க தமிழர்கள் தினமுரசு பத்திரிகையின் வரவுக்காக தவம் கிடக்க தொடங்கினர், புலம்பெயர் தேசத்தில் இலங்கையிலிருந்து வரும் ஒரு நாளிதழுக்காக  மக்கள் அலை மோதியது முதலும் கடைசியும் தினமுரசுக்கு மட்டுமேயாகதான் இருக்க முடியும். கொஞ்சம் லேற்றா போனால் விற்று முடிந்துவிடும் நிலைக்கு இருந்தது. ஜெயசிக்குறு ஆரம்ப காலகட்டத்தில் அசரடிக்கும் துல்லியமான கணிப்புக்களை வெளியிட்டார் அற்புதன், அந்த காலகட்டத்திலேயே கொல்லப்பட்டார். அற்புதனின் புலி சார்பு நிலை தொடருக்கு புலம்பெயர் தேசத்தில் தினமுரசுக்கு எதிர்பாராமல் கொட்டிய வெளிநாட்டு காசுதான் பிரதானமான காரணம். அதனால் டக்ளசினால் எச்சரிக்கப்பட்டதாகவும், கட்சிவேறு பத்திரிகை தொழில்வேறு என்று அற்புதன் டக்ளசுடன் முரண் பட்டதாகவும் அதனாலேயே டக்ளஸ் குழுவினால் சுட்டுகொல்லப்பட்டதாகவும் கதை உலாவியதுண்டு. அதை உறுதிப்படுத்தும் விதமாக ஜெயசிக்குறு சமரில் புலிகளின் வீரம்பற்றி வந்த தொடர் , அற்புதன் கொல்லப்பட்ட பின்னர் வந்த இதழ்களில் ’’ பூனையொன்றை ஒரு அறையில் மூடிவிட்டு ஒரு ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டு மிரட்டினால், அது ஜன்னல் வழியாக ஓடிவிடும்,  படையினரின் பின்வாங்கலுக்கு அதுதான் காரணம்’’ மற்றும்படி புலிகள் வீரம் என்றெல்லாம் கிடையாது என்ற அர்த்ததில் செய்தி வந்தது, அத்துடன் புலி சார்பாக செய்தி வெளியிடுவதும் நின்று போனது கூடவே தினமுரசு வியாபாரமும் படுத்துக்கொண்டது, அதன்போதே புரிந்துவிட்டது அற்புதன் என்ன காரணத்துக்காகவும் யாராலும் கொல்லப்பட்டிருப்பார் என்பது, உலவிய வதந்தியும் ஓரளவு உண்மையாக போனதாகவும் பேசிக்கொண்டார்கள். ஆனால் புலிகள் அற்புதன் புலிசார்பு நிலையில் தொடர் எழுதினாலும் அதை கண்டுகொள்ளவேயில்லை,  அதனால்தான் அவர் கொல்லப்பட்டபோது புலிகளின் குரல் செய்தியில் ‘’பாராளுமன்றத்தில்  அவசரகாலநிலை சட்டத்துக்கு ஆதரவாக கையுயர்த்திவிட்டு வெளியே வந்து போராட்டத்திற்கு ஆதரவாக எழுதும் அற்புதன் கொல்லப்பட்டார் ‘’ எனு செய்தி பகிர்ந்தார்கள்.  
    • உற‌வே நானும் ப‌ல‌ வ‌ர‌லாறுக‌ளை தேடி தேடி ப‌டிச்ச‌ நான் ஆனால் நான் ஒரு போதும் இல‌வ‌ச‌ அறிவுறை சொல்வ‌து கிடையாது................அதுக்காக‌ உங்க‌ளை த‌ப்பா சொல்லுகிறேன் என்று நினைக்க‌ வேண்டாம் பொதுவாய் சொல்லுறேன்................. 500வ‌ருட‌த்துக்கு முத‌ல் உல‌க‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று பாட‌சாலையில் ப‌டித்த‌ கால‌த்தில்  டெனிஸ் வாத்தியார் எங்க‌ளுக்கு சொல்லி த‌ந்த‌வ‌ர்................. நானோ புல‌வ‌ர் அண்ணாவோ இந்தியா மீது இருக்கும் கோவ‌த்தில் எழுத‌ வில்லை கேடு கெட்ட‌ ஆட்சியால‌ர்க‌ளால் இந்தியா என்ற‌ நாடு நாச‌மாய் போச்சு அத‌க்கு முத‌ல் கார‌ண‌ம் இந்திய‌ அள‌வில் ஊழ‌ல்...............ஊழ‌ல் இருக்கும் நாடு சிறு முன்னேற்ற‌த்தை கூட‌ காணாது................. ஒரு சில‌ சிற‌ப்பு முகாமில் வ‌சிக்கும் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு க‌ழிவ‌ரை இல்லை அதுக‌ள் காட்டுக்கு போக‌ வேண்டிய‌ நிலை.............இது தான் திராவிட‌ம் ஈழ‌ ம‌க்க‌ளை  க‌வ‌ணிக்கும் ல‌ச்ச‌ன‌ம்.................
    • கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பற்றி சில வரிகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்து, மறந்துவிட்டேன். நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.........👍
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.